நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 16, 2018

தேவி தரிசனம் 3

இன்று மங்கலங்களை அருளும் மஹாலக்ஷ்மி தரிசனம்..

திருஅரங்கத்தில் அருளாட்சி புரியும் அரங்கநாயகியின் அருட்திருக்கோலங்கள்..

இன்றைய பதிவில் -
ஸ்ரீரங்க அரங்கம் - எனும் Fb இணைப்பில் இருந்து பெறப்பட்ட படங்கள்...

அன்னையின் திருக்காட்சிகளை
வலையேற்றிய அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி...


தேவேந்திரன் தனது இன்னல்கள் எல்லாம் தீர்வதற்காக
திருமகளைப் போற்றித் துதித்த
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்...
***
நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..



சர்வக்ஞே சர்வ வரதே சர்வதுஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..


ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..



பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..  
* * *

நவராத்திரி வைபவங்களின் போது
இடைநிற்கும் மூன்று நாட்களும்
ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு உரியன..

அஷ்ட ஐஸ்வர்யங்களாகத் திகழும் 
அன்னை அன்பர்கள் அனைவரையும்
அல்லல்களில் இருந்து காத்தருள்வாளாக..

ஓம் 
மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம்
சக்தி சக்தி
ஓம்
ஃஃஃ 

7 கருத்துகள்:

  1. காலை வணக்கம். மஹாலக்ஷ்மி தரிசனம் ஆயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  3. மஹாலக்ஷ்மி தரிசனம் கிடைத்தது.
    நான் வெள்ளிக்கிழமை தோறும் பாடும் பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      எளிமையும் இனிமையும் உடைய அஷ்டகம் இது...
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. ரங்க நாச்சியாரின் திருவடி தரிசனம் நவராத்திரியில் தான் கிடைக்கும். ஆனால் போக முடிவதில்லை. கூட்டத்தை நினைத்து பயம்! :( முகநூலில் நண்பர்கள் போடுவதில் பார்ப்பது தான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..