நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 13, 2018

மார்கழிக் கோலம் 29

தமிழமுதம்

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை..(400) 
***
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 29 - 30


சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்..


பாக்களால் நேசித்தவள் - வண்ணப்
பூக்களால் பூஜிக்கின்றாள்..
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை 
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப்பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் 
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே 
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
திருவடிகள் போற்றி!.. 
*


திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே 
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே 
உயரரங்கற்கே கண்ணியுகந் தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே 
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே..
*

தித்திக்கும் திருப்பாசுரம்


தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.. (2344)
-: பேயாழ்வார் :-  

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம் 

திருத்தலம்
தஞ்சையம்பதி 


இறைவன் - ஸ்ரீ பெருவுடையார்   
அம்பிகை - ஸ்ரீ பெரிய நாயகி 
  

தல விருட்சம் - வில்வம் 
தீர்த்தம் -  சிவகங்கை, மண்டூக தீர்த்தம்..

தஞ்சை மாநகர் என்றாலே
பெரிய கோயில் தான்..

ஆனாலும்,
கீழ ராஜவீதியில் ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர்
தெற்கு ராஜவீதியில் கோட்டை ஸ்ரீ காசி விஸ்வநாதர்


கோட்டை ஸ்ரீ விஸ்வநாதர்
ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமி
ஸ்ரீ பாலாம்பிகை
கௌரி - ஸ்ரீ சங்கர நாராயணர் - லக்ஷ்மி
மேல ராஜவீதியில்
ஸ்ரீ சங்கர நாராயணர், ஸ்ரீ கொங்கணேஸ்வரர், 
ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ நாகநாதர்,


ஸ்ரீ கொங்கணேஸ்வரர்
ஸ்ரீ கொங்கண சித்தர்
வடக்கு ராஜவீதியில்
ஸ்ரீ வெள்ளியங்கிரீஸ்வரர், ஸ்ரீ சிவேந்திரர்,
ஸ்ரீ கேசவதீஸ்வரர் 

புறம்பாடியாகிய கீழவாசல் பகுதியில்
ஸ்ரீ வைத்யநாதர், ஸ்ரீ நாகநாதர்,
மகர்நோன்புச் சாவடி ஸ்ரீ தியாகராஜர்

கரந்தையில்
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர்,
ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ நாகநாதர், 
ஸ்ரீ சிதானந்தேஸ்வரர்,

வெண்ணாற்றங்கரையில்
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர், ஸ்ரீ தளிகேஸ்வரர் என, 
பத்தொன்பது திருக்கோயில்கள்
விளங்குகின்றன..

புது ஆற்றங்கரையிலுள்ள
சிவா விஷ்ணு ஆலயம்
மங்களபுரத்தில்
ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் 
இவை தனி..

ஒவ்வொரு கோயிலிலும் 
ஒரு அபூர்வ செய்தி என்பது சிறப்பு..

இந்த கோயில்களைப் பற்றி
பல பதிவுகள் எழுதலாம்..
இருப்பினும் காலம் கனியட்டும்..

இந்த மார்கழித் திருவாதிரையின்போது
ஒன்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து
நடராஜர் திருவுலா கோலாகலமாக 
ராஜவீதிகளில் நடந்துள்ளது..

அந்த வைபவத்தின்
படங்களுள் சில
கீழே வழங்கப்பட்டுள்ளன..






நன்றி - திரு. ஞானசேகரன், தஞ்சை..
*** 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம் 


நம சிவாயவே ஞானமும் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நாநவின் றேத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே..(5/90) 
***

ஸ்ரீ மாணிக்க வாசகர் அருளிய
திருவாசகப் பாடல்கள்


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே..

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் 
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே..
***

இந்த அளவில்
சிந்திக்கவும் வந்திக்கவும் செய்த
ஈசன் எம்பெருமான் திருவடிகள் போற்றி.. போற்றி!..



பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.. 
***

அன்பின் நண்பர்களுக்கு
மார்கழி முழுதும் தொடர்ந்து வந்து 
உற்சாகமும் ஊக்கமும் அளித்த
தங்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி...

தங்களுடைய கருத்துரைகளுக்கு 
கடந்த இரண்டு மாதங்களாக
என்னால் பதிலளிக்க இயலவில்லை...

இணைய வேகம் ஒருபுறம் இருந்தாலும்
அடுத்தடுத்து பதிவுகளை எழுதி விட்டு
 மீதமிருக்கும் குறுகிய நேரத்துக்குள் 
சமைத்து சாப்பிட்டு உறங்கி விழித்து
வேலைக்கு ஓடும்படியான சூழ்நிலை...

அதையெல்லாம் கடந்து 
கடந்த பதினைந்து நாட்களாக 
வேறொரு பிரச்னையும்
சேர்ந்து கொண்டது...

அதனை இன்னொரு சமயத்தில்
பகிர்ந்து கொள்கிறேன்..

இன்று போகி..
எங்கெங்கும்
புன்மைகள் விலகி
நன்மைகள் பெருகட்டும்..



அனைவருக்கும் 
அன்பின் இனிய
பொங்கல் நல்வாழ்த்துகள்.. 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

11 கருத்துகள்:

  1. பெரியவுடையார், பெரிய நாயகி தரிசனம் அருமை!!

    இறைவனுடன்... இற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்...

    தாழ்சடையும்..நீள் முடியும் மனப்பாடம்...பாசுரத்தைக் கற்ற போது அப்படியே மனப்பாடம் ஆகவில்லை ஆனால் எம் எஸ் அவர்களின் குரலில் கேட்டு மனப்பாடம் ஆனது.

    கீதா

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! அனைவருக்குமே!!

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  2. தமிழமுதம் பருகி, நான் அடிக்கடி சென்று வந்துள்ள பெருவுடையாரைத் தரிசனம் செய்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. என்ன அந்த இன்னொரு பிரச்னை என்று உடனே அறிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் போலுள்ளதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் துரை சகோ ஏதோ பிரச்சனையில் இருப்பது தெரிந்தது...பல நாட்களாய்...அவருக்கு அனுப்பிய மின் அஞ்சலில் கூட இதை அப்படியே கேட்காமல் கேட்டிருந்தேன்...அவரும் ஆம் என்று சொல்லியிருந்தார். ஆனால் என்ன என்று தெரியவில்லை...இப்போது அவரே பகிர்கின்றேன் என்று சொல்லியிருக்கிறார்...

      ஆமாம் எனக்கும் என்ன பிரச்சனை என்று அறியவேண்டும் என்று தோன்றுகிறது என்றாலும....நாம் அனைவரும் அவரது பிரச்சனை தீர்ந்திட இறைவனைப் பிரார்த்திப்போம்...

      கீதா

      நீக்கு
    2. //நாம் அனைவரும் அவரது பிரச்சனை தீர்ந்திட இறைவனைப் பிரார்த்திப்போம்...//

      அஃதே அஃதே ...

      __/\__

      நீக்கு
  4. போகிப் பொங்கல் வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  5. தங்களது பிரச்சனைகள் விரைவில் தீரும் ஜி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் வணங்கும் தெய்வங்கள் துணை நிற்கும். பிரச்னைகள் எளிதில் தீரும். அரிதின் முயன்று தொடர்ந்து இம்மாதப் பதிவுகளை மிகவும் சிறப்பாக வழங்கியமைக்கு மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா!

    அற்புதத் திருக்காட்சிகள் கண்டு உள்ளம் சிலிர்த்தது!
    கோயிக்கே வந்து தரிசனம் செய்வதாய் மனம் மகிழ்ந்தேன்!

    பொங்கல் வாழ்த்திற்கு மிக்க நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும்
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    போகியோடு உங்களுக்கும் ஏற்பட்டுள்ள சங்கடங்கள் பிரச்சனைகள் எல்லாம் நீங்கிட வேண்டுமென்று
    மனதார இறை அருளை வேண்டுகிறேன்!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  8. திருப்பாடல் இனிமை.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா!
    உங்கள் பிரச்சனைகள் விலகிட நிம்மதி வந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..