நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தஞ்சை
ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில்
ஸ்ரீ மஹா சிவராத்திரியன்று
மூன்றாம் காலத்தில்
அம்மையும் அப்பனும்
ரிஷப வாகனத்தில்
எழுந்தருளிய திருக்காட்சி..
அபிஷேக ஆராதனை - என,
நான்கு காலங்களிலும்
சிறப்புடன் நிகழ்ந்த
வழிபாடுகளின் போது
ஒரு லட்சம் பக்தர்கள்
தரிசனம் செய்ததாக
செய்தி..
இவ்வேளையில்
அம்மையப்பனைத் தரிசித்து
நாடெங்கும்
நலமும் நல்லறமும் தழைப்பதற்கு
வேண்டிக் கொள்வோம்..
***
கீழுள்ள படம்
பெரிய கோயிலை அடுத்துள்ள
சிவகங்கைக் குளத்தின்
நடுத்திட்டில் அமைந்திருக்கும்
சிறு கோயிலில் விளங்கும்
சிவமூர்த்தி..
இது தான்
அப்பர் பெருமான் பாடியருளிய தஞ்சைத் தளிக்குளத்தார்
திருக்கோயில் என்று
தற்போது சொல்கின்றனர்..
இத்திருக்கோயிலில் இருந்து
தட்சிண மேருவின்
தரிசனம்..
தஞ்சை வெட்டாற்றின்
கரையிலுள்ள நெடார்
திருக்கோயிலில்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்
ஸ்ரீ மங்களாம்பிகை
தரிசனம்..
ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி
திருக்கோயிலில்
ஸ்ரீ சந்திரசேகரர்
ஸ்ரீ மனோன்மணி அம்மை
திருக்காட்சி..
திரு ஐயாறு
ஸ்ரீ செம்பொற்சோதி
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
தரிசனம்..
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!..
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ















