நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 8
ஞாயிற்றுக்கிழமை
பல்வேறு சிறப்புகள் உடைய தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருந்திருவிழா 18 நாட்கள் நடைபெறும்..
![]() |
| முளைப்பாரி |
இதன்படி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா
கடந்த பங்குனி 24 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலா
நடைபெற்றது..
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று சித்திரை ஏழாம் நாள் (20/4) சனிக்கிழமை காலை 7 மணியளவில் ஸ்ரீ அல்லியங்கோதையுடன் தஞ்சை விடங்கப் பெருமானாகிய ஸ்ரீ தியாகராஜர் திருத்தேரில் எழுந்தருளினார்..
ஆரூரா தியாகேசா.. முழக்கத்துடன் அடியார்கள் வடம் பிடிக்க ராஜ வீதிகளில்
திருத்தேரோட்டம் வெகு சிறப்புடன்
நடைபெற்றது..
தேரோட்டத்தின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..
காத லாகிக்
கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை
நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்
மெய்ப்பொருல் ஆவது
நாதன் நாமம்
நம சிவாயவே.. 3/1/1
-: திருஞானசம்பந்தர் :-
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***










































