ஐக்கிய அரபு அமீரகம்..
United Arab Emirates - UAE.,
சீர்மிகும் அரபியில் - தவ்லத் அல் - இமாரத் அல் - அராபியா..
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் - அபுதாபி..
ஐக்கிய அரபு அமீரகம் என்பது - ஏழு நாடுகளின் கூட்டமைப்பு..
கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடுகள் -
துபாய்
ஷார்ஜா
அஜ்மான்
புஜைரா
உம் அல் குவைன்
ராஸ் அல் கைமா -
- என்பன..
இவற்றின் அடிப்படை வளம் - பேரீச்சை.. அது மட்டுமே!..
பின்னாளில் கண்டறியப்பட்டதே - பெட்ரோலியம் மற்றும் எரிவாயு!..
இவற்றைக் கொண்டு - தன்னை வளப்படுத்திக் கொண்டதோடு -
பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வையும் வளப்படுத்திய பெருமை
அனைத்து அரபு நாடுகளுக்கும் உரியது..
அரபு தேசத்தின் வளத்தால் -
எத்தனை எத்தனையோ - உள்ளங்களும் இல்லங்களும்
ஒளி பெற்றிருக்கின்றன - என்பதை மறக்கவோ மறுக்கவோ இயலாது!..
பொதுவாக அரபு நாடுகளில் அங்கும் இங்கும் அறியக்கூடியதாக -
தவறுகள்.. இன்னல்கள்.. இடையூறுகள்..
ஆயினும்,
வேலை தேடுவோரின் நெஞ்சங்களில் விளக்காகத் தென்படுபவை -
வளைகுடாவின் பாலைவனச் சோலைகளே!..
அந்த வகையில் - இந்த மண்ணுக்கு அன்பின் வணக்கங்கள்!..
அபுதாபியில் தான் என் மருமகன் பணிபுரிகின்றார்..
செல்லத்தின் செல்லத்தைக் காண வேண்டும்..
அவர்கள் இல்லத்தில் சில நாட்கள் தங்கவேண்டும். அதற்காகவே விடுமுறை..
கடந்த சனிக்கிழமை (10 அக்டோபர்) நள்ளிரவு குவைத்திலிருந்து - அபுதாபிக்கு வந்து சேர்ந்தபின்,
நேற்றைய மாலைப் பொழுது அழகாக இருந்தது..
அபுதாபிக்கு வந்த இரவுப் பொழுதில் -
மிகக் கடுமையான - ருத்துபா எனும் புழுக்கம் நிலவியது.. செல்லும் வழி புலப்படவில்லை.. அந்த அளவுக்கு அடர்த்தியான நீராவி போன்ற காற்று..
ஆனால் - நேற்று புழுதிக்காற்று வீசவில்லை..
வெப்பத்துடன் கூடிய புழுக்கமும் காணப்படவில்லை..
வழிநெடுக - சிலு சிலு.. என்று, இளங்காற்று!..
காரணம் -
இனியதொரு சந்திப்பு நிகழ இருந்தது - அபுதாபியில்!..
முன்னதாகவே சொல்லியிருந்தபடி - எங்கள் பயணம்..
மதீனா ஸையத் எனும் (Madinat Zayed Shopping Mall) அங்காடி வளாகத்தினைச் சென்றடைந்தோம்..
25 நிமிட தாமதம்..
ஆனாலும் - மாறாத புன்னகையுடன் அவர்கள் வரவேற்றனர்..
அவர்கள் என்றால் -
அன்புக்குரிய கில்லர் ஜி மற்றும் அன்புக்குரிய சே. குமார் ..
அவர்களைக் கண்டதுமே - என் கண்கள் பனித்தன..
ஏதோ ஆயிரம் காலம் பழகியதைப் போன்றதொரு உணர்வு..
அன்பின் மிகுதியால் வார்த்தைகள் தடுமாறின..
ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்தோம்..
அப்படிச் சொல்வதை விட -
நாந்தேன்.. பேசிக் கொண்டிருந்தேன்!.. - என்று சொல்வதே பொருந்தும்..
சற்றே இடைவெளி..
அங்கிருந்த - சரவண பவன் உணவகத்தில் சிற்றுண்டி.. எளிமையாக!..
நாங்கள் பேசிக் கொண்ட விஷயங்களை நூறு பதிவுகளாகத் தரலாம்..
ஆயினும், இப்போதைக்கு - இதோ, சில காட்சிகள்!..
அன்பின் கில்லர் ஜி அவர்களும் குமார் அவர்களும் பரிசுகளுடன் என்னை மகிழ்வித்தது - எதிர்பாராத சிறப்பு..
அவர்களுடைய அன்பு எனும் வலைதனில் சிக்கிக் கொண்டேன்..
எங்கள் சந்திப்பினை எதிர்நோக்கியே - அந்த வளாகம் முழுதும்,
மின் விளக்குகளால் ஜொலித்தது என்பதனைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்!..
(ஏ.... சாமீய்.... சதாசிவோம்!?....)
இரவுப் பொழுதும் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் -
பிரிவதற்கு மனமில்லாமல் விடை பெற்றுக் கொண்டோம்..
நவராத்திரி வைபவம் அனுசரிக்கப்படும் வேளையில் அனைவரும் அம்பிகையிடம் ஆயிரமாயிரம் வரங்களைக் கேட்டுக் கொண்டிருப்பர்..
அது நியாயமும் கூட!..
ஆனால், நாம் வேண்டுவதெல்லாம் -
ஆன்றோர்கள் குறித்தபடி - நல்ல நட்பினையே.. நல்ல உறவுகளையே!..
அந்த வரங்களையே - அம்பிகை நமக்கும் அருளியிருக்கின்றனள்!..
United Arab Emirates - UAE.,
சீர்மிகும் அரபியில் - தவ்லத் அல் - இமாரத் அல் - அராபியா..
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் - அபுதாபி..
ஐக்கிய அரபு அமீரகம் என்பது - ஏழு நாடுகளின் கூட்டமைப்பு..
துபாய்
ஷார்ஜா
அஜ்மான்
புஜைரா
உம் அல் குவைன்
ராஸ் அல் கைமா -
- என்பன..
இவற்றின் அடிப்படை வளம் - பேரீச்சை.. அது மட்டுமே!..
பின்னாளில் கண்டறியப்பட்டதே - பெட்ரோலியம் மற்றும் எரிவாயு!..
இவற்றைக் கொண்டு - தன்னை வளப்படுத்திக் கொண்டதோடு -
பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வையும் வளப்படுத்திய பெருமை
அனைத்து அரபு நாடுகளுக்கும் உரியது..
அரபு தேசத்தின் வளத்தால் -
எத்தனை எத்தனையோ - உள்ளங்களும் இல்லங்களும்
ஒளி பெற்றிருக்கின்றன - என்பதை மறக்கவோ மறுக்கவோ இயலாது!..
பொதுவாக அரபு நாடுகளில் அங்கும் இங்கும் அறியக்கூடியதாக -
தவறுகள்.. இன்னல்கள்.. இடையூறுகள்..
ஆயினும்,
வேலை தேடுவோரின் நெஞ்சங்களில் விளக்காகத் தென்படுபவை -
வளைகுடாவின் பாலைவனச் சோலைகளே!..
அந்த வகையில் - இந்த மண்ணுக்கு அன்பின் வணக்கங்கள்!..
அபுதாபியில் தான் என் மருமகன் பணிபுரிகின்றார்..
செல்லத்தின் செல்லத்தைக் காண வேண்டும்..
அவர்கள் இல்லத்தில் சில நாட்கள் தங்கவேண்டும். அதற்காகவே விடுமுறை..
கடந்த சனிக்கிழமை (10 அக்டோபர்) நள்ளிரவு குவைத்திலிருந்து - அபுதாபிக்கு வந்து சேர்ந்தபின்,
நேற்றைய மாலைப் பொழுது அழகாக இருந்தது..
அபுதாபிக்கு வந்த இரவுப் பொழுதில் -
மிகக் கடுமையான - ருத்துபா எனும் புழுக்கம் நிலவியது.. செல்லும் வழி புலப்படவில்லை.. அந்த அளவுக்கு அடர்த்தியான நீராவி போன்ற காற்று..
ஆனால் - நேற்று புழுதிக்காற்று வீசவில்லை..
வெப்பத்துடன் கூடிய புழுக்கமும் காணப்படவில்லை..
வழிநெடுக - சிலு சிலு.. என்று, இளங்காற்று!..
காரணம் -
இனியதொரு சந்திப்பு நிகழ இருந்தது - அபுதாபியில்!..
முன்னதாகவே சொல்லியிருந்தபடி - எங்கள் பயணம்..
மதீனா ஸையத் எனும் (Madinat Zayed Shopping Mall) அங்காடி வளாகத்தினைச் சென்றடைந்தோம்..
25 நிமிட தாமதம்..
ஆனாலும் - மாறாத புன்னகையுடன் அவர்கள் வரவேற்றனர்..
அவர்கள் என்றால் -
அன்புக்குரிய கில்லர் ஜி மற்றும் அன்புக்குரிய சே. குமார் ..
அவர்களைக் கண்டதுமே - என் கண்கள் பனித்தன..
ஏதோ ஆயிரம் காலம் பழகியதைப் போன்றதொரு உணர்வு..
அன்பின் மிகுதியால் வார்த்தைகள் தடுமாறின..
ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்தோம்..
அப்படிச் சொல்வதை விட -
நாந்தேன்.. பேசிக் கொண்டிருந்தேன்!.. - என்று சொல்வதே பொருந்தும்..
சற்றே இடைவெளி..
அங்கிருந்த - சரவண பவன் உணவகத்தில் சிற்றுண்டி.. எளிமையாக!..
நாங்கள் பேசிக் கொண்ட விஷயங்களை நூறு பதிவுகளாகத் தரலாம்..
ஆயினும், இப்போதைக்கு - இதோ, சில காட்சிகள்!..
அன்பின் கில்லர் ஜி அவர்களும் குமார் அவர்களும் பரிசுகளுடன் என்னை மகிழ்வித்தது - எதிர்பாராத சிறப்பு..
அவர்களுடைய அன்பு எனும் வலைதனில் சிக்கிக் கொண்டேன்..
எங்கள் சந்திப்பினை எதிர்நோக்கியே - அந்த வளாகம் முழுதும்,
மின் விளக்குகளால் ஜொலித்தது என்பதனைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்!..
(ஏ.... சாமீய்.... சதாசிவோம்!?....)
இரவுப் பொழுதும் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் -
பிரிவதற்கு மனமில்லாமல் விடை பெற்றுக் கொண்டோம்..
நவராத்திரி வைபவம் அனுசரிக்கப்படும் வேளையில் அனைவரும் அம்பிகையிடம் ஆயிரமாயிரம் வரங்களைக் கேட்டுக் கொண்டிருப்பர்..
அது நியாயமும் கூட!..
ஆனால், நாம் வேண்டுவதெல்லாம் -
ஆன்றோர்கள் குறித்தபடி - நல்ல நட்பினையே.. நல்ல உறவுகளையே!..
அந்த வரங்களையே - அம்பிகை நமக்கும் அருளியிருக்கின்றனள்!..
இந்த இனிய சந்திப்பு -
அன்பின் இனிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை!..
வாழ்க நலம்!..
* * *














































