நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

களப்பணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
களப்பணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 06, 2015

அன்பின் சங்கமம்

நன்றி என்ற வார்த்தைகள் மட்டும் போதுமோ!..




இலக்கியத் தென்றல் தேசமங்கையர்க்கரசி
உனக்கும் பசிக்குமே..

மக்கள் பணியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்




சமயங்களைக் கடந்த மனிதநேயம்









Shalini AjithKumar

We are preparing some fresh and hot food to help out the folks in Chennai. 
We will be able to feed about 400 or more people. 

If you are hungry or want to help distribute food to the hungry - Please contact Us.

Phone : (044) 24642625, 24642525, 9840544441, 9003299994.

Address: 

Sri Lalith Mahal, 
10/Venkatakrishna Road, (Opp Mandaveli Bus Depot) 
Mandaveli, 
Chennai - 28..

Spread the word. It's time to give.. 

பதிவில் உள்ள தகவல்கள் FB வழியே பெறப்பட்டவை.. 

ஆற்றை - அதன் கரைகளை அழித்ததும்
ஏரி குளங்களைத் தூர்த்ததும் 
நீர்வழிகளை ஆக்ரமித்ததும்
கழிவு நீர் வடிகால் வாய்க்கால்களை அடைத்ததும் 
குவியும் குப்பைகளை அகற்ற மறந்ததும் 

அனைத்தையும் முறையாக கண்காணிக்கத் தவறியதும் 

- ஆகிய இவைதான், இன்றைய அவலங்களுக்குக் காரணம்..

இனியும் இவற்றை - மக்களும், அரசு ஊழியர்களும் அலுவலர்களும் அதிகாரிகளும் தொடர்வார்களா!?..


தெரியவில்லை!..

இவை இனியும் தொடருமானால்
காலம் மறுபடியும் பதில் சொல்லும்!..
* * *.

சனி, டிசம்பர் 05, 2015

கண்ணீரில் கடலூர்

தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகின்றது கடலூர்..
சென்னையைவிட கடலூருக்குத்தான் அதிக நிவாரணப் பொருட்கள் தேவை..

சென்னையில் வெள்ளம் வந்தால் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடையலாம்.
.
கடலூரில் குடிசைகளுக்கு மேல் வெள்ளம் போகிறது.. 
மக்கள் எங்கு சென்று அடைக்கலம் தேடுவர்?..

எல்லாத் தொலைக்காட்சிகளும் கேமராவுடன் சென்னையையே சுற்றிக் கொண்டுள்ளன..

விவசாய நிலங்கள் அனைத்தும் தண்ணீரில்...
கடலூரை யாரும் கண்டுகொள்ளவில்லை
அல்லலுற்று தவிக்கும் கடலூருக்கும் கரிசனம் காட்டுங்கள்..

கீழ்க்காணும் படங்கள் தமிழ்ச் சமுதாயம் - எனும் FB  வழியாக பகிரப்பட்டவை.. 



குடிசை எனினும் மக்களின் உடைமை தானே







கடலூரை கைவிட்டன ஊடகங்கள்.. 
எதிலும் குறை சொல்வோர் சென்னையை மட்டுமே கையில்எடுத்துக் கொண்டுள்ளனர்...

தற்போது கடலூரில் அரசுத் துறையினரும் தன்னார்வத் தொண்டர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இருக்கின்றனர்.


மக்கள் முற்றிலும் தன் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்..

சூழ்ந்திருக்கும் தண்ணீர் இன்னும் வடியவில்லை.
கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணியே மிகப் பெரிய போராட்டம்..

அரசிடம் தகுந்த நிவாரணத்தை எதிர்பார்த்து தவிக்கின்றனர் .
அரசு துரித நடவடிக்கையாக நிவாரணங்களை வழங்கி மக்களை காக்கவேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கையாக இருக்கிறது.





கடலூரும் தமிழகத்தில் தானே உள்ளது..
அங்கே தத்தளிக்கும் மக்களும் நம்மவர்களே!..
அங்கும் அரசின் பார்வையும் பரிவும் தேவை!.



சீரழிவிற்குள் சிறப்பாகப் பணியாற்றும் 
அனைவருக்கும் தலைதாழ்ந்த வணக்கங்கள்!..
* * *