நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 16, 2021

கோவிந்த தரிசனம் 5

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி மாதத்தின் ஐந்தாவது
சனிக்கிழமையாகிய இன்று 
ஸ்ரீ திருமங்கையாழ்வார்
அருளிச் செய்த
திருப்பாசுரங்களுடன்
ஸ்ரீ வேங்கடேசப் பெருமான்
திவ்ய தரிசனம்..

முந்தைய நான்கு வாரங்களிலும்
உற்ற துணை நல்கிய
ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கும்
உற்சாகம் அளித்த
அன்பு நண்பர்கள்
அனைவருக்கும்
நன்றி.. நன்றி..


ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச் செய்த 
பெரிய திருமொழி
ஒன்றாம் பத்து ஒன்பதாம் திருமொழி..
-:-

தாயே தந்தை யென்றும் தாரமே கிளை மக்களென்றும்
நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பதோரா சையினால்
வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியா ளென்னைக் கொண்டருளே. 9.1 (1028)

மானேய் கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவம்செய்தேன்
தேனேய் பூம்பொழில்சூழ் திருவேங்கட மாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.9.2 (1029)


கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோ ளொன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாமலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.3 (1030)

குலந்தா னெத்தனையும் பிறந்தே யிறந்தெய்த் தொழிந்தேன்
நலந்தா னொன்றுமிலேன் நல்லதோரற ம்செய்துமிலேன்
நிலம்தோய் நீள்முகில்சேர் நெறியார்த் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.4 (1031)

எப்பாவம் பலவும் இவையே செய்திளைத் தொழிந்தேன்
துப்பா நின்னடியே
தொடர்ந்தேத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார்த் திண்வரைசூழ்  திருவேங்கட மாமலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.5 (1032)


மண்ணாய் நீரெரி கால் மஞ்சுலாவு மாகாசமுமாம்
புண்ணாராக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்தெய்த் தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார்த் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.6 (1033)

தெரியென் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே யுழைத் தேழையானேன்
கரிசேர்ப் பூம்பொழில்சூழ்  கனமாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.7 (1034)


நோற்றேன் பல்பிறவி உன்னைக் காண்பதோ ராசையினால்
ஏற்றேனிப் பிறப்பே யிடருற்றன னெம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.8 (1035)

பற்றேலொன்று மிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றே லொன்றறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல்தேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட்கொண்டருளே. 9.9 (1036)


கண்ணா யேழுலகுக்கு உயிராய வெங் கார்வண்ணனை
விண்ணோர் தாம்பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திருமங்கையர்க் கோன் கலியன்
பண்ணார்ப் பாடல் பத்தும் பயில்வார்க் கில்லை பாவங்களே.9.10 (1037)
-:-
கோவிந்தோ.. கோவிந்த..
கோவிந்தோ.. கோவிந்த..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

4 கருத்துகள்:

  1. கடைசி புரட்டாசி சனிக்கிழமை! பாடல்களும் பதிவும் சிறப்பு துரை அண்ணா. புரட்டாசி சனிக்கிழமையும் முடிந்து நவராத்திரியும் முடிந்துவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நிறைவான பதிவு . புரட்டாசி கடைசி சனிக்கிழமை பதிவு.

    மிக அருமயான் படங்கள், பாடல்கள் எல்லாம் சிறப்பு பதிவுக்கு.
    கோவிந்த தரிசனம் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..