நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 17, 2019

மார்கழி தரிசனம் 01

உலகம் சிவமயம்

தமிழமுதம்


அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.. (0001)
* * * 

பாலும்தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஔவையார் :-


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின்
சேவடி செவ்வித் திருக்காப்பு..

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!..
-: பெரியாழ்வார் :-

மாதங்களில் நான் மார்கழி!..
- என்றுரைக்கின்றான் - ஸ்ரீகிருஷ்ணன்..

அந்த அளவுக்கு
மங்கலகரமானவை மார்கழியின் நாட்கள்..

மார்கழியின் முதல் விடியலிலிருந்து
தேவர்களுக்கு வைகறைப் பொழுது..

ஆலயங்கள் தோறும் திருப்பள்ளி எழுச்சி!..
தனுர் மாத வழிபாடுகள்!..  

தமிழ் மரபின் பாரம்பர்ய வாழ்க்கை முறையுடையோர் தம்
இல்லங்களின் தலைவாசலில் எழில்மிகும் கோலங்கள்!.. 
வண்ண வண்ணப் பூக்கள்!. . சுடர் விடும் அகல் விளக்குகள்!..


மீண்டும் - 
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை தேவாரம் ஆகிய
தெய்வப் பனுவல்களின் திருப்பாடல் பதிவுகளை வழங்குவதற்குப் பெரும்பேறு பெற்றேன்..

மங்கலகரமான மார்கழி முழுதும்
தெய்வீக திருப்பாசுரங்களும் திருப்பதிகங்களும்
நம்மை வழிப்படுத்துகின்றன...

அனைத்து மங்கலங்களுக்கும் காரணியாய் பூரணியாய்
அதோ - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்!..

 அவள் நம்மை அழைக்கின்றாள் - மார்கழி நீராடலுக்கு!.. 
வாருங்கள் - அவள் துணையுடனே செல்வோம்!..
* * *

அருளமுதம் 

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 01 
* * *

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்குப் பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!..
***
ஆழ்வார் அமுதம்



வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.. (2082)
-: பொய்கையாழ்வார் :-

திருப்பாசுரங்கள் பெறப்படும் தளம்
நாலாயிரத் திவ்ய ப்ரபந்தத் திருப்பாடல்கள்
இணையத்தில் வைத்தோர்க்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஓம் ஹரி ஓம்!..
 ***

சிவ தரிசனம்


தீர்த்தனைச் சிவனை சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப் 
பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக்கொடியேன் மறந்துய்வனோ..(5/2) 
- திருநாவுக்கரசர் - 
* * *


அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!.. (6/95)
-: திருநாவுக்கரசர் :-
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 01


போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள்மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் என்னை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!.. 
* * *

தேவி தரிசனம்

ஸ்ரீ அபிராமவல்லி - திருக்கடவூர் 
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!.. (001) 
-: அபிராமி பட்டர் :-  
***
தேவார - திருவாசகத் திருப்பாடல்கள்

எனும் தளத்தில் இருந்து பெறப்படுகின்றன..

சிவஜோதியுள் ஐக்கியமாகிநிற்கும்
தருமபுரம் ஸ்ரீ குருமகாசந்நிதானம் 
இத்தளத்தினை அமைத்தவர்கள்
தருமபுர ஆதீனத்தார்..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...

இன்று முதல் நமது தளத்தில்
தங்கள் அனைவரது ஆதரவுடன் 
எட்டாவது ஆண்டாக 
மார்கழிப் பதிவுகள் தொடர்கின்றன..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
***

17 கருத்துகள்:

  1. தேவர்களின் வைகைறைப்பொழுதைக் கொண்டாடுவோம்.  பக்தி சூழ் பதிவுகள் இனி முப்பது நாட்களுக்கு அணிவகுக்கும். எல்லாம் ஏற்கெனவே தயாராய் இருக்கும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      தங்களுக்கு நல்வரவு....

      முதல் வாரத்துக்கு மட்டுமே ஆயத்தப்படுத்தி இருக்கிறேன்....

      அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது இணையம்...

      பல்கலைக்கழகத்திற்கு ஒருமாத விடுமுறை ஆயினும்

      சிறப்பு வகுப்புகளுக்காக உணவகம் திறந்திருக்க வேண்டும்...

      இச்சமயத்தில் வேலைநேரம் எட்டு மணி நேரமாக குறைந்திருக்கிறது...

      இவ்வேளையில் இது மிகவும் மகிழ்ச்சியானது....

      வாருங்கள்... தொடர்வோம்...

      நீக்கு
  2. அருமையான மார்கழி தரிசனம். பகிர்வுக்கு நன்றி. ஆதீனம் அவர்களின் படத்தை வெளியிட்டமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  3. // இணையத்தில் வைத்தோர்க்கு நெஞ்சார்ந்த நன்றி //

    இதயத்தில் வைத்தோர்க்குக் கோடானுகோடி வணக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்..
      வணக்கம்.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இனிய துவக்கம். அனைத்துப் பாடல்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

  6. மார்கழி தரிசனம் மிக சிறப்பு ...

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபிரேம்...
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. எட்டாவது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான துவக்கம்.
    பாடல்கள், படங்கள் எல்லாம் மேலும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. மார்கழியின் தொடக்கம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. மார்கழி தரிசனம் சிறப்பாக இருக்கிறது. முதலில் இடம் பெற்றிருக்கும் பிள்ளையார் வெகு அழகு. 

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..