நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 24, 2017

அதோ அந்த ஆப்பிள் - 1

இன்று காலையில் GMB ஐயா அவர்களின்
இது ஒரு புதுக் கதம்பம் எனும் பதிவினில் -

An Apple a Day keeps the Doctor away..  
ஆனால், An Apple a Day Coasts Rs.1000/- a Month..
டாக்டருக்கு அதை விடக் குறைவாகச் செலவாகலாம்.. 
பிராக்டிகலாகச் சிந்திக்க வேண்டும்...

- என்ற வரிகளைப் படித்ததும் -
எனது மனம் பள்ளி நாட்களின் நினைவுகளுக்குள் புகுந்து கொண்டது...

காஷ்மீர் ஆப்பிள்
பத்தாம் வகுப்பு..

முற்பகலில் இடைவேளை முடிந்ததும் முதல் பாடவேளை...

பொது அறிவியல்...

ஆப்பிளைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்
எங்கள் வகுப்பாசிரியர் திரு K.குஞ்சிதபாதம் B.Sc.,B.Ed.,(Sci) அவர்கள்..

சுருக்கமாக - திரு K.K. சார்!.. 
காலையில் முதல் பாடவேளையில் ஆங்கில ஆசிரியர்..


ஏடன் தோட்டத்தில் சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிந்திருந்த
ஆதாம் ஏவாள் ஆகிய இருவரின் சந்தோஷமும்
அன்றோடு தொலைந்து போவதற்குக் காரணமாக இருந்தது 
ஆப்பிள் கனி தான்!.. - என்றும்

அதனால் -
பைபிளில் Forbidden Fruit என்று ஆப்பிள் குறிக்கப்படுவதாகவும்

முன்னொரு காலத்தில் ஆப்பிள் காதலின் குறியீடாகத் திகழ்ந்ததாகவும்
பாடத்தை - சுவையுடன் நடத்திக் கொண்டிருந்தார்..

தொடர்ந்து -
மனிதனின் தொண்டைக் குழாயில் குரல்வளையின் குருத்தெலும்பு
ஆடம்ஸ் ஆப்பிள் ( Adams Apple) என்று சொல்லப்படுவதையும்

ஆப்பிள் பழம் தருகின்ற ஆரோக்கியத்தைப் பற்றியும் -
மேலை நாட்டவர் அதிகமாக ஆப்பிள் சாப்பிடுவதைப் பற்றியும் சொல்லி விட்டு,

An Apple a Day keeps the Doctor away!.. 

- என்று குறிப்பிட்டார்..

அந்தவேளையில், நான் சும்மா என்று இருக்காமல் -

சார்.. அப்படியானால் மேலை நாட்டில் நோய் நொடி ஏதும் வராதா?.. ஆஸ்பத்திரி எல்லாம் கிடையாதா?..

- என்று கேட்டேன்..

உடனே அருகில் இருந்தவன் - அவன் பெயர் ஞானசேகரன்.. - எழுந்தான்!..

அன்றைக்கு அந்த ஆப்பிளைத் திங்காமல் இருந்திருந்தால் -
இன்றைக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருந்திருக்காது!..
முக்கியமா துணி துவைக்கிற கஷ்டம்!..

- என்றான், மிகவும் வருத்தத்துடன்...

ஏனென்றால், பள்ளி நாட்களில் சீருடை
வெள்ளை மேல் சட்டையும்
அழுத்தமான காக்கி கால் சட்டையும்!..

உடனே, பெண் பிள்ளைகள் எல்லாரும்,
கலகல!.. - என்று சிரித்தார்கள்...

சிரிக்கும் அளவிற்கு அதில் என்ன நகைச்சுவையைக் கண்டார்கள் என்பது இன்றுவரை புரியவில்லை..

ஏன்டா.. எருமைகளா!.. 
உங்களுக்கு மட்டும் எங்கே இருந்துடா இந்த மாதிரி சந்தேகமெல்லாம் வருது!?..

- என்றவாறு சிரித்தார்...

மீண்டும், அந்தப் பெண் பிள்ளைகள் எல்லாரும் -
கலகல!.. - என்று வெகு நேரத்திற்குச் சிரித்தார்கள்...

எங்களை எருமைகள் என்று, 
சொல்லக் கேட்டதில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்!..


அந்த நாட்களில் அவ்வளவாக ஆப்பிள் தின்றதில்லை..
அதற்கான வாய்ப்புகளும் ஏதுமில்லை!...

இங்கே குவைத்திற்கு வந்த பிறகு தான்
விதவிதமான ஆப்பிள் பழங்கள் காணக் கிடைத்தன...

சர்வ சாதாரணமாக ஒரு நாளைக்கு மதியம் இரவு என,
இரண்டு வேளைகளிலும் இரண்டாயிரம் ஆப்பிள் பழங்கள் கையாளப்படும்..

ஏனெனில், Catering நிறுவனத்தில் வேலை அல்லவா!..

சிலி, கலிபோர்னியா, பிரான்ஸ், நியூஸிலாந்து, ஈரான் - என,
பல நாட்டின் பழங்களையும் உண்டு மகிழ்ந்திருக்கிறேன்..

ஆனால், நாளாக நாளாக ஆப்பிளின் மீதிருந்த ஈர்ப்பு குறைந்து போயிற்று...

அதன் புளிப்பு பிடிக்கவில்லை.. குறிப்பாக பச்சை நிற ஆப்பிள்...

தவிரவும், இப்போதெல்லாம் மெழுகுப் பூசப்பட்டு வருகின்ற ஆப்பிள்கள்..

அந்த மெழுகு நல்லதல்ல.. உடலுக்குக் கேடு!.. - என்பதான செய்திகள்...

இன்னும் கூட சந்தேகம் தான்..

An Apple a Day keeps the Doctor away!.. 

அப்படியானால் -
ஆப்பிளை பலவகையிலும் உண்ணுகின்ற மேலை நாட்டினருக்கு நோய்கள் வருவதில்லையா!..

பெரும்பாலான பழங்களும் காய்களும் மரபணு மாற்றப்பட்டு விட்ட நிலை...

முளைப்புத் திறன் அற்ற விதைகளுடன் கூடிய பழங்களும் காய்களும்
எந்த வகையில் மனிதனுக்கு நன்மை விளைவிக்கக் கூடும்?...

அது ஒருபுறம் இருந்தாலும் ஆப்பிளின் மீது பூசப்பட்டிருக்கும் மெழுகு?...

விடை தேடினேன்...

http://foodwatch.com.au

- எனும் தளத்தில் கிடைத்த செய்திகள் - இதோ தங்களுக்காக!.....

Are waxed Apples harmful to eat?..

Q. Can you tell me if the wax on the skin of apples is bad for me?..
A. Not as far as I know.
Apples are a fruit with a high water content. However they naturally produce their own wax which coats the fruit, reduces moisture loss, and keeps them fresher for longer. After the apples are picked, growers wash the apples to remove leaf litter and any field dirt.
Of course some of the wax is also washed away so they reapply a small amount (around 2 drops per apple) of a natural wax to make up for it.
The most commonly used wax is Carnauba wax (code number 903) which is sourced from the leaves of a Brazilian palm tree Copernicia prunifera. This is a wax that has been widely used in fruits, vegetables, sweets, pastries and other foods since the 1920s - and it is safe to eat. 
In Australia, growers are also permitted to use four other approved waxes:
1.     Beeswax 901
2.    Shellac 904
3.    White mineral oil 905a or
4.    Petroleum jelly 905b.

But Carnauba is the main one used.
Due to its low allergenicity and great shine, Carnauba has been exported from Brazil in huge quantities and is also used in many non-food products 

eg: In skincare products, sunscreens, lipsticks, lip gloss, mascara, as well as a glossy coating for many tablets to help people swallow them. 

It is the main wax used to surfboards.. So it's not just apples that you'd have to avoid if you wished to avoid the wax.
Alternatives
If you don't wish to eat any wax, you can buy unwaxed apples (often at farmers' markets or direct from the grower when the apple season is in swing). Or you can simply peel a waxed apple and discard the peel.  

Of course, you will be discarding most of the fibre and some of the vitamins and minerals too which is a shame.

Written by Catherine Saxelby on Friday, 04 April 2014.. 

வேறொரு கருத்தும் சொல்லப்படுகின்றது..

Carnauba எனப்படும் பனை இனத்திலிருந்து பெறப்படும்
(தாவர) மெழுகு வயிற்றில் செரிப்பதில்லையாம்!..

Carnauba or Shellac wax that are completely safe to consume and are not harmful. 
This edible wax is not digested, but is passed out through the digestive system.. 

மெழுகு வெளியே போய்விட்டால் சரி!..
போக மாட்டேன்!.. - என்று அடம் பிடித்தால்?... 

ஒழுங்காகப் படித்துப் பட்டம் வாங்கிய டாக்டரிடம் போக வேண்டியதுதான்!..

(இருந்தாலும் சும்மா ஒரு பேச்சுக்கு!..)

ஆனால்,
இதற்கு Edible wax க்கு மாறாக Petroleum wax பூசப்பட்டிருந்தால் -
ஆபத்து தான்!..

ஈரான் ஆப்பிள்
நம்முடைய வாழைப் பழத்தினைப் போல
எல்லாக் காலங்களிலும் ஆப்பிள் கிடைக்கின்றது..

இன்றைய நாட்களில் மிகுந்த அளவில் ஆப்பிள்கள் இறக்குமதியாகி அங்காடிகளை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன..

பற்பல வண்ணங்களில் மேலும் செறிவூட்டப்பட்டு
பளபளப்பாகக் கண்களைக் கவர்கின்றன..

ஆனாலும், மேற்பூச்சு இல்லாமல் ஆப்பிள்கள் வருவதில்லை..

உண்ணும் பொருட்களின் மீது - கடுமையான தரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் நாடுகளின் வரிசையில் நம் நாடு இல்லை!.. 
- என்பது சிந்திக்கத்தக்கது...

இயற்கையைக் கொடுத்தவன் இறைவன்..
அதை அடுத்துக் கெடுத்தவன் மனிதன்!..

என்றாலும்,
நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில்
நமக்குத் தான் மிகுந்த கவனம் வேண்டும்!..

ஆப்பிளின் மேற்பூச்சு மெழுகினைப் 
பற்றிய தகவல்கள் 
அடுத்த பதிவிலும் தொடரும்...

இந்தப் பதிவிற்கான வித்து
திருமிகு GMB ஐயாஅவர்களுடைய
பதிவில் இருந்து கிடைத்தது..
அவர்தமக்கு மனமார்ந்த நன்றி..

ஆயிரம் தான் இருந்தாலும், நம்முடைய - 
மாங்கனி, நாவற்பழம், இலந்தைப்பழம், 
நெல்லிக்கனி, விளாம்பழம் இவற்றுக்கு 
ஈடாக வேறொன்றில்லை என்பதே எண்ணம்!..

நலம் நம் கையில்..
வாழ்க நலம்!.. 
***

12 கருத்துகள்:

  1. ஆப்பிளைப் பற்றிய வெகு அருமையான அலசல்கள்.

    ஆதாம்-ஏவாளில் ஆரம்பித்து .... தங்களின் பள்ளி வாழ்க்கை வழியாக .... இன்றைய பஞ்சமில்லாத கேட்டரிங் நிறுவனம் வரை அனைத்தையும் அழகாகச் சொல்லி மகிழ்வித்துள்ளீர்கள்.

    ஆப்பிளின் மேல் பூச்சு மெழுகினால் வரும் ஆபத்துக்களையும் சொல்லி எச்சரிக்கையையும் விழிப்புணர்வினையும் கொடுத்துள்ளீர்கள்.

    கடைசி வரிகளில் சொல்லியுள்ள மாங்கனி, நாவற்பழம், நெல்லிக்கனி முதலிய செய்திகளும் சிறப்பாகவே உள்ளன.

    பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு என்னவோ இந்த ஆப்பிள்கள் மேல் விருப்பம் இல்லை. சுவை ஒன்றும்பிரமாதமாக இல்லை.எனக்கு விருப்பம் குறாஐவு என்பதாலும் விலை மிக அதிகம் என்பதாலும் அதைத் தவிர்க்கிறோம் தொண்டைக் குழலில் இருக்கும் முழைக்கு சிவனின் நீலகண்டம் என்று பேர் அல்லவா

    பதிலளிநீக்கு
  3. சிந்திக்க வேண்டிய தகவல்கள்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  4. ஆப்பிள் குறித்து அறியாதன
    சில அறிந்தேன்
    விரிவான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியில் நான்கு ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் தலைமை ஆசிரியர் கூறுவார், ஆப்பிள் வாங்கிச் சாப்பிட முடியாதவர்கள் தினமும் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிடுங்கள் என்று.

    பதிலளிநீக்கு
  6. அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  7. நம்மூரில் தரக்கட்டுப்பாடு இல்லை என்பது மிகவும் வேதனையான விஷயம் தான். ஆப்பிளை வாங்கிவிட்டு அதனை சற்று சுடு நீரில் போட்டுக் கழுவினால் மேலுள்ள வேக்ஸ் போய்விடுகிறது. ஏனென்றால் தடவப்பட்டிருக்கும் வேக்ஸ் எடிபிளா அல்லது பெட்ரோலிய வேக்சா என்று தெரியாதே...
    நீங்கள் சொல்லியிருப்பது போல் தோல் எடுத்தும் சாப்பிடலாம்....இல்லை சுரண்டிவிட்டுச் சாப்பிடலாம் சுரண்டினால் மெழுகு வருவது நன்றாகத் தெரியும்.

    ஆப்பிள் எ டே கீப்ஸ் த டாக்டர் அவே என்பதை விட நெல்லிக்காயாய்ச் சொல்லலாம் என்றே தோன்றுகிறது. ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்காய்தான்.

    அருமையான கட்டுரை பல தகவல்களுடன.

    ---துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  8. நல்ல விழிப்புணர்வு பதிவு.
    ஆப்பிள் சாப்பிடுவது தங்கள் தரத்தை காட்டும் என்றும், டாக்டர் தேவை இல்லை என்றும் பரப்ப பட்டு வந்த பொய்.
    அதியமான் நெல்லிக்காயை ஒளவைக்கு கொடுத்து பலகாலம் வாழலாம் என்று அன்றே சொல்லி விட்டார் . நெல்லிகனியும் இப்போது எல்லா காலங்களிலும் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. நல்லதோர் பகிர்வு. தரக்கட்டுப்பாடு என்பது நம் ஊரில் வெறும் கண் துடைப்பு தான் என்பதில் சோகம் உண்டு! பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகிவிட்ட இக்காலத்தில் பயன்படுத்துவோரின் நலம் குறித்து எவருமே கவலை கொள்வதில்லை....

    இரண்டாம் பகுதிக்கு இதோ செல்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. ஆடை என்று ஒன்று வந்ததே ஆதாம், ஆப்பிளைச் சாப்பிட்டதனால்தானே. அது குழந்தைகளுக்குப் புரிந்திருக்கலாம்.

    ஆப்பிள் வாக்ஸ் என்றால், திராட்சை நேரடியாக விஷம் (பெஸ்டிசைட்) கலக்கப்பெறுகிறது. இது இன்னும் உடம்புக்குக் கெடுதி. இதேபோல், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் - இவைகளை பூச்சிக்கொல்லி மருந்தில் நேரடியாக முக்கி எடுக்கிறார்கள். நம்ம ஊர் மாங்கனிகளிலும் பூச்சிக்கொல்லி ஏற்றப்படுகிறது. காம்புப் பகுதியில் நிறைய மருந்து ஏற்றப்படுகிறது. கல்லினால் மாங்காய்கள் பழுக்கவைக்கப்படுகிறது என்பது தெரிந்ததுதானே. இந்தத் தரக்கட்டுப்பாடு, எங்கேயுமே கிடையாது (நம்ம நாட்டில் மட்டுமல்ல) வாழைப்பழங்களும் ஆரஞ்சும் நல்லன. ஆனால் அவற்றிலும் மருந்து செலுத்தப்படுகிறது. நம்ம ஊரில் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும் வாழைப்பழம், ஓரிரண்டு வாரங்களுக்கும் கலர் மாறாமல் கெடாமல் இருக்கும். இது இம்போர்டட் வெரைட்டி. உடலுக்கு நல்லதல்ல.

    ஆப்பிளோ, திராட்சையோ, நல்ல உப்பு கலக்கப்பட்ட சுடு நீரில் (கொதிக்கற நீரில்) 1/2 மணி நேரம் வைத்துவிட்டு பின்பு ஆறினபின், அலம்பிச் சாப்பிடலாம். இதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது என்று நினைத்தால், தோலை எடுத்துவிட்டு கொஞ்சமாகச் சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..