நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 29, 2014

கந்த சஷ்டி கவசம்

இன்று கந்த சஷ்டி!..

சிவபாலனாகிய திருமுருகன் - 

சிக்கலிலே வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்த நாள்..
ஆறுமுகமான பொருள் வான் மகிழ - நின்ற நாள்.. 
ஆணவ கன்ம மாயா மலங்களை வீழ்த்தியருளிய திருநாள்!..

இந்த நன்னாளில் அவன் திருப்புகழினைப் பாடுவோம்!..

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்!.. 

நூற்பயன் கொண்டு தொடங்கும் அற்புதப் பனுவல்!..
கந்த சஷ்டிக் கவச பாராயணத்தினால் விளையும் நன்மைகளைக்கூறுதற்கு வார்த்தைகளே இல்லை!..

சுமார் முந்நூறு ஆண்டுக்ளுக்கு முன் விளைந்த ஞான நூல்.
கந்த சஷ்டிக் கவசம் சித்தியாகி விட்டால் - கோள்கள் குறித்து அஞ்ச வேண்டியதில்லை. 

ஏனெனில்,

நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் !.. - என்பது நூற்குறிப்பு.


நமது கால சூழ்நிலைகளை உத்தேசித்தால் -
நமக்கு கந்த சஷ்டிக் கவசமே காப்பு!.. பாதுகாப்பு!..



ஸ்ரீதேவராய ஸ்வாமிகள் அருளிய 
கந்த சஷ்டி கவசம்.

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் 
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் 
கதித்து ஓங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.




சஷ்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி ஆட
மையல் நடனஞ்செய்யும் மயில்வாகனனார் 
கையில் வேலால் எனைக் காக்க என்றுவந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவணபவனார் சடுதியில் வருக




ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோ நம
நிபவ சரவண நிறநிற நிறென         
வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாசா ங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க         
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலைபெற் றென்முன் நித்தம் ஒளிரும்         
சண்முகன் ஸ்ரீயும் தணியொளி ஒவ்வும்
குண்டலி யாம் சிவகுகன் தினம் வருக



ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்        
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்         
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்         
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண         
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து         
முந்து முந்து முருகவேள் முந்து



என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று         
உன்திரு வடியை உறுதி என்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க         
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க         
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க



கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க         
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க         
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க         
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க



ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க        
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க         
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும் பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க         
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க



தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க         
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்         
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்         
கனபூசை கொள்ளும் காளியோடனை வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட



ஆனை அடியினில் அரும்பாவைகளும்         
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்         
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட         
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய         
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு




குத்து குத்து கூர்வடி வேலால்         
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோட         
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்         
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்        



எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்         
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம்ஒழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்        
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா         
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா




பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே         
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை        
நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாகவேலா யுதனார்        
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்         
வாழ்க வாழ்க வாரணத் துவசம்




வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்        
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய        
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்       
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு




ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்       
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை        
வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி       
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்       
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி        
திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் அரசே        
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.. (238)



சரணம் சரணம் சண்முகா சரணம்!..

***

19 கருத்துகள்:

  1. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு காசிராஜலிங்கம்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் க்ண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நாங்கள் தினமும் சொல்லும் கந்தசஷ்டிக் கவசம்! அதனைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! ஐயா! கந்த குரு கவசமும் சொல்வோம்! கேட்டுக் கொண்டே-சூலமங்கலம் அவர்களின் குரலில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. வணக்கம் ஐயா!

    அருமையான பகிர்வு!

    தினமும் இவரருகில் காலை மாலையில் தவறாது ஒலிக்கவிட்டு
    நானும் கேட்டு மனம் ஒன்றித்திளைக்கும் கந்தசஷ்டிக் கவசம் ஐயா!

    அவ்வேளையில் உளத்தில் தோன்றும் அமைதியைக்
    கூற வார்த்தை இல்லை!..

    பகிர்விற்கு நன்றியுடன் அனைவருக்கும் அழகன் முருகனருள்
    கிட்டிட வேண்டிப் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி..
      தாங்கள் கூறுவது போல - கந்த சஷ்டி கவசம் கேட்கும் போது மனதில் தோன்றும் அமைதியைக் கூற வார்த்தைகளே இல்லை..

      தங்கள் அன்பு வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. கந்த சட்டி கவசம்
    ஒரு பொக்கிஷம்.

    சுப்பு தாத்தா.

    www.vazhvuneri.blogspot.com
    www.kandhanaithuthi.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      நன்றி ஐயா..

      நீக்கு
  5. வணக்கம் ஐயா

    சூலமங்கலம் அவர்களின் குரலில் கவசத்தை கேட்க கேட்க மனம் மாயமாகிவிடும். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

    நன்றி
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் உமையாள் காயத்ரி ..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி...

      நீக்கு
  6. ஆஹா....
    கந்தர் சஷ்டியே முழுப்பகிர்வாய்...
    அருமை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கந்தசஷ்டி சிறப்புப் பதிவு மிக அருமை. நேற்று இங்கே மலை மந்திர் கோவிலுக்குச் செல்ல நினைத்திருந்தேன் - அலுவலகத்திலேயே அதிக நேரமாகி விட்டது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      முருகன் முன்னின்று காத்தருள்வான்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. கந்த சஷ்டி கவசம் பகிருகளுக்குப் பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  9. அழகிய குமரனின் அடிதொழ
    வழங்கிய சஷ்டி கவசம்
    கேட்பவர்க் கெல்லாம்
    காலம் முழுதும் கவசம் ஆகும்!

    நன்றி வாழ்த்துக்கள் சகோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      காலம் முழுதும் கவசம் ஆவது - கந்த சஷ்டி கவசம்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  10. கந்தசஷ்டி விழா சிறப்பு பதிவு அருமை.
    பாடலும், படங்களும் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..