நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 25
செவ்வாய்க்கிழமை
ஸ்ரீவைகுண்டம்..
மூலவர்:
ஸ்ரீ வைகுந்தநாதன்
உற்சவர்: கள்ளபிரான்,
தாயார்:
ஸ்ரீ வைகுண்டவல்லி, ஸ்ரீ பூதேவி நாச்சியார்
தீர்த்தம்:பிருகு தீர்த்தம், தாமிரபரணி
தல விருட்சம் பவளமல்லி
சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு திருக்கரங்களுடன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார்...
ஆவணி இரண்டாவது வாரம் புதன் கிழமை பிற்பகல்..
நாங்கள் ஸ்ரீ வைகுண்டம் கோயிலுக்குச் சென்ற போது மாலை மணி நான்கு..
எக்காலத்தும் சந்தனக் காப்புடன் திகழ்கின்ற ஸ்ரீ கருடாழ்வார் இத்தலத்தில் சிறப்பு
இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் இத்தலம் சூரியனுக்கு உரியதாகத் திகழ்கின்றது..
இக்கோயிலில் ராஜ கோபுரத்தை அடுத்திருக்கின்ற திருவேங்கடமுடையான் சந்நிதியின் முன் மண்டபம் கலைக் களஞ்சியம்..
நேரில் காணும் போது தான் அந்த மண்டபம் பராமரிக்கப்பட்டுகின்ற அழகு புரியும்..
நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் அணி செய்கின்றன..
திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி சாலையில் 31 கிமீ..
கோயிலுக்கு அருகிலேயே பேருந்து நிலையம்..
இங்கும் ஐந்து மணிக்குத் தான் நடை திறப்பு. மேக மூட்டத்துடன் விரைவாக இருள் சூழ்ந்து கொண்டது..
.திருவேங்கடமுடையான் மண்டபத்தில் மங்கலான மின் விளக்குகள்..
பிரம்மாண்டமான கோயில் ..
பெரிய பெரிய மண்டபங்கள்..
மங்கலான மின் விளக்குகள்..
மேற்கொண்டு
நீங்களே கற்பனை செய்து கொள்ளவும்..
முன்னிரவுப் போதில் உறியடி வைபவம்.. கள்ளர் பிரான் தேவியருடன் திருவீதி எழுந்தருளினார்..
மனதாரத் தொழுது வணங்கி விட்டு திருநெல்வேலியை வந்தடைந்தோம்..
நவ கயிலாயத் தலங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது ஸ்ரீ வைகுண்டம்....
நாரணன் தமரைக் கண்டுஉகந்து நல்நீர்முகில்
பூரண பொன்குடம் பூரித்தது உயர்விண்ணில்
நீரணி கடல்கள் நின்றுஆர்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர்உலகே 3872
தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை
பொழிவனர் பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே
எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர் முனிவர்கள்
வழிஇது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே.. 3873
-: ஸ்ரீ நம்மாழ்வார் :-
நன்றி
நாலாயிரத் திவ்யப்ரபந்தம்
ஓம் ஹரி ஓம்
***




















