நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சோயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 19, 2024

சோயா 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 3 
வியாழக்கிழமை


சோயா பீன்ஸ்

இதய ஆரோக்கியம் காக்கின்ற தானியம்...
மொச்சை வகையைச் சேர்ந்தது..

சைவ உணவை மட்டுமே உண்பவர்களுக்கு, சோயா பீன்ஸ் சந்தேகத்திற்கு இடமின்றி அதிக அளவு புரதத்தை வழங்குகிறது.  

மேலும், சோயாவில் அனைத்து அத்தியாவசிய அமினோ  அமிலங்களும் உள்ளன. 


சோயா பீன்ஸ் முழுமையான புரத ஆதாரமாக அமைகிறது.. நமது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை சோயா உற்பத்தி செய்கிறது..

சோயா பீன்ஸின்  புரதத்தை புலால் உணவுடன் ஒப்பிடும் போது, சோயாவில் கொலஸ்ட்ரால் அளவு குறைவாக உள்ளது. இது நார்ச்சத்து நிறைந்தது  மேலும், எலும்புகளை வலுப்படுத்துகின்றது.


சோயா பீன்ஸில் குறைந்த அளவு ஒமேகா 3,  கொழுப்பு அமிலங்கள், இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற  தாதுக்களும் உள்ளன.


சோயா பீன்ஸில் உள்ள புரோட்டீன் நமது இதயத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. 

இது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


இந்த ஆய்வுகளில் சோயாவின் புரதத்தால் கெட்ட கொழுப்புகள், ட்ரை கிளிசரைடு கொழுப்புகள் இரத்தத்தில் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது..
தகவல் தொகுப்பு : நன்றி விக்கி  

குவைத்தில் இருந்த போது எத்தனையோ நாள் சோயா பீன்ஸ் எனது சமையலில் இடம் பெற்றிருக்கின்றது..

இத்தனை நலங்களும் சோயா பீன்ஸையும் அதன் என்ணெயையும் பயன்படுத்துகின்ற போது தான்..

எதற்கும் உதவாத சோயா பீன்ஸின் சக்கையை உணவுப் பொருள் என்று பயன்படுத்தும் போது?...

இன்றைக்கு Veg Mutton என்றும் Veg Chicken 
என்றும் உணவு வியாபாரிகளிடம் புழங்குவது சோயா பீன்ஸின் சக்கை தான்..

நல்லவேளை... 
வேறு விதங்களில் வேஷம் கட்டப்பட வில்லை சோயா சக்கைக்கு!..

சோயா சக்கை மனிதருக்கு நல்லதா... 
கெட்டதா?..

நலம் தருமா?..
நலிவைத் தருமா?..

இன்று வரை உறுதி செய்யப்படவில்லை..

தொடர்ந்து வேறொரு பதிவில் இதனைக் காண்போம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

இயற்கையே இறைவன்
 இறைவனே
இயற்கையே
***