நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கண்ணதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 24, 2018

தமிழும் இசையும்

மங்கலம்...

மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவனவற்றுள் முதலில் இருப்பது....

மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ததும்பும் உள்ளம்
ஆயுளும் ஆரோக்கியம் நிறைந்திருக்கும் இல்லம்...

இதனால் தான்,
மங்கலம் என்ப மனை மாட்சி - என்றார் வள்ளுவப் பெருந்தகை...

மனை மாட்சியைத் தந்திடும் மங்கலத்தை
எப்படியெல்லாம் வரவேற்கிறார் - கவியரசர்!...


ஜூன் 24 - 1927 
இன்று கவியரசர் பிறந்த நாள்...
கூடவே - அவருடைய அன்புத் தோழர்
மெல்லிசை மன்னருக்கும் பிறந்த நாள்..


ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது - இந்த
உலகம் பாடும் பாடல் ஓசை
காதில் விழுகிறது...

ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது...

நால்வகை மதமும் நாற்பது
கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானில் இருந்தே
பூமழை பொழிகின்றார்...

மாலை சூடி எங்கள் செல்வி
ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க
என்றவர் பாடுகின்றார்...

ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது...

குங்குமச் சிலையே குடும்பத்து
விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோயிலில் வாழும் காவல் தெய்வம்
கண்ணகியே வருக...

மங்கலச் செல்வி அங்கயற்கண்ணி
திருமகளே வருக..
வாழும் நாடும் வளரும் வீடும்
வளம் பெறவே வருக!...

ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது - இந்த 
உலகம் பாடும் பாடல் ஓசை
காதில் விழுகிறது...

ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது!...
***


காலத்தால் அழியாத
இந்தப் பாடல் 
இடம் பெற்ற திரைப்படம் 
பச்சை விளக்கு

மங்கலகரமான இந்தப் பாடலில்
மகிழ்ச்சி வெள்ளம் ததும்பும்படிக்கு
இசையமைத்திருப்பவர்
மெல்லிசை மன்னர்..

ஜூன் 24 - 1928
கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய இனிய பாடல்கள் 
இன்றைய நாளில் அதிகமாகப் பேசப்படுகின்றன...

இது தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருஞ்சிறப்பு..

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!.. - என்றார் கவியரசர்..

அந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..

அவ்வண்ணமாகிய 
மாபெரும் வித்தகர்களை 
நெஞ்சம் மறப்பதில்லை..
நெஞ்சம் மறப்பதேயில்லை!..  
***

சனி, ஜூன் 24, 2017

சொல்.. சொல்.. சொல்!..

அக்கா.. அக்கா..வ்!..

வாம்மா.. தாமரை.. உள்ளே வா!.. வீட்ல.. அத்தை மாமா.. சௌக்கியமா!..

ம்ம்.. எல்லாரும் சௌக்கியந்தான்!.. ஆமா.. நீங்க என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?.. பழைய சினிமா பாட்டு புத்தகத்தை எல்லாம் வெச்சுக்கிட்டு!..



இன்னைக்கு கவியரசர் பிறந்த நாள் இல்லையா.. அத்தோட மெல்லிசை மன்னரோட பிறந்த நாளும் .. அதனால.. அத்தானோட இலக்கிய வட்டத்தில சின்னதா கலை நிகழ்ச்சி இருக்கு...

அப்போ.. நானும் வரட்டுமா?.. கலை நிகழ்ச்சி எங்கே நடக்குது?..

ஓ!.. தாராளமா வா.. தாமரை!... 
நம்ம தமிழ்க் கல்லூரி கலையரங்கத்தில தான்.. 
சாயங்காலம் ஆறு மணிக்கு!..

அக்கா.. நீங்க என்ன செய்யப் போறீங்க!..

கவியரசர் எழுதுன பாட்டு ஒன்றைப் பற்றிப் பேசப் போகிறேன்!..

ஹை!.. ஜாலி.. ஜாலி!.. அக்கா பேச்சை மேடையில கேட்கப் போறேன்.. அக்கா.. என்ன பாட்டுக்கா அது!.. சொல்லுங்களேன்!..

வாழ்க்கைப் படகு...ங்கற படத்தில..

ஆயிரம் பெண்மை மலரட்டுமே!.. - அப்படிங்கற பாட்டு தானே!..

எப்படி...மா கண்டுபிடித்தாய்!?..

அக்கா.. உங்க மனசு எனக்குத் தெரியாதா!..
அந்தப் படத்தில அந்தப் பாட்டு தானே சூப்பர் பாட்டு!..

அக்கா.. அந்தப் பாட்டோட முதல் சரணத்தில -

காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமனம் அங்கே ஒருமனம் என்றே
சொல் சொல் சொல் தோழி.. சொல் சொல் சொல்!..

- அப்படி..ங்கற வரிகள்!... சும்மா சொல்லக் கூடாது...க்கா!..
கவியரசர்..ன்னா கவியரசர் தான்!..

அந்த பாட்டுக்குள்ள ஒரு ரகசியம் இருக்கு சொல்லட்டுமா!..

சொல்லுங்களேன்!..

பல்லவியிலயும் முதல் சரணத்திலயும் -
சொல்.. சொல்.. சொல்.. தோழி.. சொல்.. சொல்.. சொல்!..
- அப்படி..ன்னு, கவியரசர் சொல்லியிருப்பார்!..

ஆமாம்!..

ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி.. சொல் சொல் சொல்!..

தன் நிலையை மட்டுமல்லாது பெண்மையின் நிலையையே 
அந்தக் கதாநாயகி சொல்வதாக கவிஞர் சொல்லியிருப்பார்..

தோழி!.. சொல்!..

எதைச் சொல்வது?.. எவரிடத்தில் சொல்வது?..

இதோ.. இதைச் சொல்!..

ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல்!..

இது தான் சொல்!.. இதையே அவனிடத்தில் சொல்!..
அவனிடத்தில் மட்டுமல்ல.. அனைவரிடத்தும் சொல்!..

இது தான் சொல்!.. இதையே சொல்!..

இது கண்ணுக்குள் புகுந்த காதலனுக்கு மட்டுமல்ல..
காவல் நிலை தவறி மனம் தடுமாறும் மன்னனுக்கும் தான்!..

மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
நில் நில் நில் மன்னா.. நில் நில் நில்!...

-  அப்படி..ன்னு,  கம்பீரமாக விரல் நீட்டி
நாடாளும் மன்னனை எச்சரிக்கும்போது
பெண்மை பேருவகை கொண்டு நிற்கிறதே!..
அங்கே தான் கவித்துவம் கொடிகட்டிப் பறக்கின்றது!..

அக்கா!..

பொன்னுக்கும் பொருளுக்கும் மயங்காத பெண்மையை
பெருஞ்சினம் கொண்டு கொடுங்கை வாள்நுனியில் நிறுத்தி
வக்கிரம் தலைக்கேற அக்கிரமம் செய்யத் துணியும் மன்னனே!..
நீ வாரி எடுத்தது ஒரு பெண்ணை என்றா நினைக்கின்றாய்?..

குழி கண்ட விழி கொண்டு உற்றுப் பார்!..

சுடு விரல் நுனி கொண்டு தொட்டுப் பார்!..
உணர்வு இற்றுப் போன உடம்பு!..
உயிர் அற்றுப் போன உடம்பு!..

உண்மையான பெண்மைக்கு இது தான் நிலை..
பொய்மைக்கு யாதொன்றும் சொல்வதற்கு இலை!..

இப்படி மறைவான பொருள் -
இந்தப் பாட்டிற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது!..

ஓ!.. - என்று கைகளைத் தட்டினாள் தாமரை..

என்ன தாமரை!.. என்ன ஆயிற்று?..

அருமை அக்கா!.. அருமை!..
மறைவான பொருள் மட்டுமல்ல..
நிறைவான பொருளும் தானே அக்கா!..

நிஜம் தான்!.. 
இதற்கு மேலும் பெண்மையை சிறப்பித்துக் கூற யாராலும் முடியாது..

தேவிகா அவங்களோட நல்ல நடனம்..
சுசிலா அம்மாவோட இனிமையான குரல்..
அற்புதமான இசை - மெல்லிசை மன்னர்..
பாடல் காலத்தை வென்றிருக்கின்றது!..



மெல்லிசை மன்னர் எத்தனை எத்தனையோ சிறப்பான பாடல்களைத் தந்தவர்.. அவருடைய புகழைச் சொல்லும் பாடல்களுள் இதுவும் ஒன்று..

மெல்லிசை மன்னரும் கவியரசரும் 
நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.. இல்லையா அக்கா!..

அது உண்மைதானே!.. 

சரி அக்கா.. நான் புறப்படுகின்றேன்..

சாயங்காலம் அஞ்சு மணிக்கு இங்கேயிருந்து கிளம்பறோம்..
நீயும் மறக்காம வந்துடு!.. 

சரி.. அக்கா!..

இரு.. தாமரை.. ஒரு கப் காபி குடிக்கலாம்!..

ஓ.. குடிக்கலாமே!..
***

ஆயிரம் பெண்மை மலரட்டுமே..
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே..
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி.. சொல் சொல் சொல்!..

ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய்ச் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமனம் அங்கே ஒருமனம் என்றே
சொல் சொல் சொல் தோழி.. சொல் சொல் சொல்!..

மன்னவனே ஆனாலும் பொன்னளந்து கொடுத்தாலும்
பெண் மனதை நீ அடைய முடியாது..
வாள் முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும்
உடல் அன்றி உள்ளம் உன்னைச் சேராது..
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
நில் நில் நில் மன்னா.. நில் நில் நில்!...

ஆயிரம் பெண்மை மலரட்டுமே..
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே..
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி.. சொல் சொல் சொல்!..




***

கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய இனிய பாடல்கள் நாளும் நாளும் அனைவராலும் பேசப்படுகின்றன...

அது தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருஞ்சிறப்பு..

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!.. - என்றார் கவியரசர்..

அந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..

அவ்வண்ணமாகிய 
மாபெரும் வித்தகர்களை 
நெஞ்சம் மறப்பதில்லை..
நெஞ்சம் மறப்பதேயில்லை!..  
***

செவ்வாய், அக்டோபர் 18, 2016

கவியரசர்

அக்கா.. அக்காவ்!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா!..

என்னக்கா.. நேத்து வீட்டில இல்லையே!.. எங்கே போயிருந்தீங்க?..

ஆமம்மா!.. நேத்து நானும் அத்தானும் இலக்கிய பேரவை நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம்!..  கவியரசர் நினைவு நாளில்லையா!..

ஓ!...



விழாவுக்கு நிறைய பேர்.. அதுவும் சின்ன வயசுப் பையன்களும் பொண்ணுங்களும் .. எல்லாம் கவியரசரோட ரசிகர்களாம்!.. ஆச்சர்யமா இருக்கு!..

ஏங்..க்கா?..

நாற்பது வருஷத்துக்கு முன்னால வந்த சினிமா பாட்டுகளை ரசித்து அதோட அழகுல ஆழ்ந்து அதப் பத்திப் பேசறது.. பாடுறதுன்னா சின்ன விஷயமா?...

ம்!..

அந்தப் பாட்டை அக்கு வேற ஆணி வேறயா பிரித்து அர்த்தம் சொல்றது.. ன்னா.. அந்தப் பாடலோட வெற்றி தானே!.. அதை எழுதுன கவியரசரோட வெற்றி தானே!..

நீங்க சொல்றது சரிதா...ங்கா!..

நேத்து விழாவில பேசுனது எத்தனை எத்தனை பாட்டு.. தெரியுமா!..

அதெல்லாம் இருக்கட்டும்.. நீங்க சொல்லுங்களேன்.. கவியரசர் பாட்டுகளைப் பற்றி!..

ஒன்னா... ரெண்டா?.. எந்தப் பாட்டைப் பற்றிச் சொல்றது!..

ஏதாவது!.. ஏன்.. நீங்களும் அத்தானும் அந்தக் காலத்தில ரசித்திருப்பீர்கள் தானே!.. அந்தப் பாடல்கள்..ல ஏதாவது!..

ஆகா.. கடைசி..ல நம்ம கதைக்கே வந்து விட்டாயா?...

அக்கா.. அக்கா.. சொல்லுங்க.. அக்கா!.. அத்தான் உங்களையே சுத்திச் சுத்தி வந்திருக்கார்!.. உங்களுக்கு குஞ்சம் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கார்!..

அதை ஏம்மா கேட்கிறாய்!?..

சொல்லுங்க..க்கா!..



ஹைஸ்கூல்..ல படிச்சுக்கிட்டு இருந்தப்போ.. ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை.. கூப்பிட்டு அனுப்பினார்..ன்னு நம்ம வீட்டு வாண்டுகளை அழைச்சிக்கிட்டு கிளித் தோப்புக்கு போனேன்... வாண்டுங்க கேட்டதுக்கு கிளிப்பிள்ளை பிடிக்கிறதுக்கு..ன்னு சொல்லிட்டேன்.. அங்கே போனா...

ம்!..

அவர் கையில ஒரு புத்தகம்... நீ கேட்டியே அந்தப் புத்தகம்..ங்கிறார்.. நான் எப்போ புத்தகம் கேட்டேன்.. ந்னு எனக்கே சந்தேகம்.. எனக்கு உடம்பு வெலவெலத்துப் போச்சு. பக்கத்துல இருந்த வாண்டுங்க எல்லாம் கிளிக் கூட்டைப் பார்க்கிறோம்..ன்னு ஓடிப் போச்சுங்க!..

என்னக்கா.. நீங்க பயங்கர திகில் படம் மாதிரி.. சொல்றீங்க!..

அப்போ.. உங்க அத்தான் என்ன பாட்டு பாடுனார் தெரியுமா?..

.....!?

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்..
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்!.. - அப்படின்னு!..

உடனே நீங்க - 
நீயில்லாமல் யாரோடு உறவாட வந்தேன்..
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்!.. ன்னு பாடலையா!..

நீ வேற!.. பயத்துல முகமெல்லாம் வேர்த்துப் போச்சு!.. என்ன சொல்றதுன்னே.. தெரியலை...

சரிதான்!..

இவரு.. அந்த நேரம் பார்த்து காது ஜிமிக்கியை சுண்டி விட்டார்.. பாரு.. அவ்வளவு தான் அவர் கையில இருந்த புத்தகத்தைப் பிடுங்கிக்கிட்டு.. ஒரே ஓட்டம்.. வீட்டுக்குள்ள வந்து தான் நின்னேன்..

என்னக்கா.. நீங்க.. அத்தானை ஏமாத்தீட்டீங்களே!..

வேர்க்க விறுவிறுக்க புத்தகத்தைத் திறந்து என்னான்னு பார்த்தால் - அந்தப் பாட்டை அப்படியே எழுதி வெச்சிருக்கார்!..

அட!.. கிளி விடு தூது, குயில் விடு தூது மாதிரி உங்களுக்கு பாட்டு ஒரு தூது ஆயிடிச்சா?..

அப்புறம் இந்தப் பாட்டு இலங்கை வானொலியால மனப்பாடம் ஆச்சு!..

ஆமாமா!.. இதெல்லாம் சீக்கிரமே மனப்பாடம் ஆயிடும்!..



அதுக்கப்புறம் - வேண்டாத தெய்வம் இல்லை!..
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற!.. 
- ங்கிற வரிகளை கோடு போட்டு புத்தகத்தைக் கொடுத்து விட்டேன்!..

ஓஹோ!.. அதுக்கப்புறம்!?..

அதுக்கப்புறம் என்ன!.. குஞ்சம் கொடுத்தவனே குங்குமம் கொடுப்பான்..ன்னு சாமி வந்து சொன்னதா!.. அத்தோட வீட்டுக்கு உண்மை எல்லாம் தெரிஞ்சு பந்தக்கால் நட்டுட்டாங்க!.. அக்காளுக்கும் அத்தானுக்கும் கல்யாணம் நடந்துடுச்சு!...

கொடுத்து வெச்சவங்க.. நீங்க!.. அதுசரி.. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பாட்டு பாடினீங்க!..

இது வேறயா!..

சொல்லுங்க..க்கா!..

கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனையோ பாட்டு பாடியிருந்தாலும் அந்தப் பாட்டு மட்டும் இன்னும் கூடவே வருது!..

எந்தப் பாட்டு அக்கா?..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்!..

ஆகா!.. அக்கா..ன்னா அக்கா தான்!.. எனக்கும் இந்தப் பாட்டு தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!..

அதுல பாரு.. தாமரை!..
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்..
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்!.. 
- அப்படி..ன்னு பாடுறப்போ - நான் பாதி.. நீ பாதி..ன்னு கூட இல்லை.. நான் வேறு இல்லை.. நீ வேறு இல்லை..ன்னுதான் அர்த்தமாகுது!..

ஆமாங்..க்கா!.. 
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்.. உனக்காக வேண்டும்..
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும்.. பசியாற வேண்டும்!..
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்.. நானாக வேண்டும்..
மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்.. நீயாக வேண்டும்!..

நீ கூட அருமையா பாடுறியே!..

போங்க..க்கா... உங்களை விடவா!..

சரி.. மீதியையும் நீயே பாடு.. கேட்போம்!.. 


சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை.. பொருளென்றும் இல்லை..
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.. 
விலையேதும் இல்லை!..
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே..
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை.. வேறேதும் இல்லை!..

அடடே!.. என்னம்மா... தாமரை.. கண்ணு கலங்குது?..

ஒன்னுமில்லே..க்கா!..

அதான்!.. டார்லிங் நினைப்பு வந்துடுச்சு!..

....அவங்களுக்கும் இந்தப் பாட்டு ரொம்பவும் பிடிக்கும்!..

யாருக்குத் தான் இந்தப் பாட்டைப் பிடிக்காது?.. கண்ணைத் துடைச்சிக்கோ.. என்ன இது சின்ன புள்ளையாட்டம்!..

அவர் பாட்டுக்கு எல்லாத்துக்கும் பாட்டு எழுதி வெச்சுட்டுப் போய்ட்டார்.. இருக்கிறவங்க மனசு தான் கிடந்து அடிச்சுக்குது!.. 

அதெல்லாம் அவருக்குக் கிடைச்ச வரம்.. அவரு எங்கே போய்ட்டாரு.. ன்னு நினைக்கிறே!.. எங்கேயும் போகலை.. நம்ம கூடவே இருக்கிறார்.. அதான் அவரே சொல்லிட்டாரே!.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!.. - அப்படின்னு!..

உண்மைதான்.. அக்கா!.. கவியரசருக்கு மரணமே இல்லை!..




அந்த வேளையில் ஈசான்ய மூலையில் திடு..திடு.. என்று இடி முழக்கம்..
மழை வருவதற்கு அறிகுறியாய் சில்லென்று காற்றும் வீசியது..

சரிக்கா.. நான் கிளம்புகின்றேன்.. மழை வரும் போல இருக்கு!..

கொஞ்சம் இரு.. தாமரை.. துளசி கஷாயம் தர்றேன்.. மழைக் காலத்துக்கு நல்லது.. சளி ஜூரம் கிட்டே வராது!..

* * * 



நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!..
* * *

சனி, ஜூன் 25, 2016

தாழையாம் பூ முடித்து

தந்ததன.. தானனனா..  ஆஆ...

- என, தொலை தூரத்துத் தெம்மாங்கு சத்தம்...

அந்தத் தெம்மாங்கு - அது ஒன்றே - நீண்டு விரிந்து விளைந்திருக்கும் வயற்காட்டினைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது..

நன்றி - ஓவியர் திரு. மாதவன்
தெம்மாங்கினைத் தொடர்ந்து -
தென்னங்கனி பிளந்தாற்போல,
காளை ஒருவனின் கம்பீரமான குரல்..
அவனருகில் இளங்கன்னி ஒருத்தி!..

இருந்தும் -  சிறிது சோகமும் கூட!..

ஏன்!.. எதற்கு?..

தொடர்ந்து கேட்போம் வாருங்கள்..

ஒட்டுக் கேட்பது தவறில்லையா?..

வீட்டுக் கதவில் காதை வைத்துக் கேட்பது தான் தவறு.. பெருந்தவறு!..
இங்கே வெட்டவெளியில் காற்றலையில் அல்லவா தெம்மாங்கு தவழுகின்றது... கேட்டு மகிழ்வதில் தவறே இல்லை!..

தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
வாழை இலை போல வந்த பொன்னம்மா!..
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?..

அதென்னங்க தாழையாம் பூ முடிச்சி?...

இருங்க... இந்தப் பையனோட பாட்டுக்கு அந்தப் பொண்ணும் இசைப்பாட்டு பாடுது.. முதல்ல பாட்டைக் கேட்போம்.. அப்புறமா.. அர்த்தத்தைப் பார்ப்போம்!..

பாளை போல் சிரிப்பிருக்கு.. பக்குவமா குணமிருக்கு..
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா...
இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா!..

ஆகா!...

தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும்பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா.. அது
மானாபிமானங்களைக் காக்குமா?..
மானாபிமானங்களைக் காக்குமா?..

மானமே ஆடைகளாம் மரியாதை பொன்னகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப்பெருமை தோன்றுமே!..
நாட்டு மக்கள் குலப்பெருமை தோன்றுமே!..

அடடா!...

அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா?. வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா!..
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா!..

மண்பார்த்து விளைவதில்லை.. மரம் பார்த்து படர்வதில்லை..
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா... அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா!...
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா!...


தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
வாழை இலை போல வந்த பொன்னம்மா!..
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?..

அற்புதம்.. அற்புதம்!.. ஆனா.. அவங்க ரெண்டு பேரும் அப்படியே மாடு கன்றை ஓட்டிக்கிட்டு போறாங்களே?..

ஆமாம்.. சாயங்காலப் பொழுதாச்சே... வயக்காட்டு வேலைய முடிஞ்சது.. வீட்டுக்குப் போக வேணாமா?... கம்புக்கு களை எடுத்தாச்சு.. தம்பிக்கும் பொண்ணு பார்த்தாச்சு.. அப்படிங்கற மாதிரி... வரப்போட வரப்பா வேலையும் பார்த்தாச்சு.. வருங்காலத்துக்கு பேசவேண்டியதையும் பேசியாச்சு!..

அப்போ - ரெண்டு பேருக்கும் காதல் தானே!..

காதல் தான்... ஆனா, அதுக்கும் மேலே!... அதனால தான் - தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து.. ந்னு வார்த்தை வந்தது!...

அதுக்கு என்னங்க அர்த்தம்?...

மல்லிகை முல்லை - இந்த மாதிரி பூவெல்லாம் ரெண்டு நாள்ல வாடிப் போனா -  வாசமும் சேர்ந்து காணாப் போயிடும்.. ஆனா, இந்த தாழம்பூ இருக்கே - அது ஒரு தனி ரகம்.. நாளாக நாளாகத் தான் அதனோட மடல்கள்..ல இருந்து வாசம் வீசும்...

அது சரி!... 

அந்தக் காலத்தில சின்ன பெண்ணுங்களுக்கு சடை அப்படின்னாலே - தாழம்பூ சடை தான்.. குஞ்சம் தான்!.. போற பக்கமெல்லாம் வாசம் கமகம...ன்னு!..

சரி.. அதுக்கும் இதுக்கும் என்னாங்க சம்பந்தம்?..

இருக்கே!... தாழையாம் பூ முடிச்சி.. அதுக்கப்புறம்?...

தடம் பார்த்து நடை நடந்து!...

அப்படின்னா.... பாதையைப் பார்த்து நடக்கிறது... கிராமங்கள்..ல சொல்வாங்க... வயக்காட்டுத் தடம்... ஒத்தையடித் தடம்... வண்டித் தடம்..

ஆமாங்க... நானும் படிச்சிருக்கேன்... ரயில் தடம் புரண்டது.. அப்படின்னு போடுவானுங்க... அதுக்கு இது தானா அர்த்தம்!... நல்லாயிருக்கே!...

பாதையைப் பார்த்து நடக்கிறது..ன்னா.. எல்லா பாதையும் பாதையில்லை... நல்லவங்க நடந்த தடம்.. அந்தத் தடம் பார்த்து நடப்பது தான் வாழ்க்கை!...

அடடா!.. நீங்க என்னா தமிழ் வாத்தியாருக்குப் படிச்சீங்களா?...

படிக்கலாம்..ன்னு தான் போனேன்... லஞ்சம் அதிகமா கேட்டானுங்க..கொடுக்க முடியலே.. அதனாலே படிக்க முடியாமப் போச்சு!...

அப்பவே.. லஞ்சமெல்லாம் உண்டா?...

அப்ப ஆரம்பிச்ச வியாதி தானே!... இன்னைக்குப் புரையோடிப் போய் நாறிக் கிடக்குது...

சரி.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. அப்படின்னா!..

பொன்னம்மா..ன்றது அந்தப் பொண்ணோட பேரு.. பொன் - தங்கம்..ன்னு தெரியும்.. அதோட பெருமையும் புரியும்... அப்படி குணமுடைய பொண்ணு வாழையில போல வந்தாளாம்!...

அது தான் எப்படி..ங்கறேன்!..



பச்சைப் பசுந்தளிரா வாழைக் குருந்து மேல வந்து - அப்படியே மயில் தோகை மாதிரி விரிஞ்சும் விரியாம ரொம்பவும் மென்மையா இருக்கும்.. தொட்டாலே கிழிஞ்சு போயிடும்.. இதுக்கு தான் தலை வாழை இலை..ன்னு பேரு...

அடடா!..

இப்படி எந்த ஒரு குறையும் இல்லாம முன்னவங்க போன தடம் பார்த்து காய்ந்தாலும் காயாத தாழம்பூவை சூடிக்கிட்டு வர்றவளே!... என் வாசலுக்கு என்ன வாங்கிக்கிட்டு வந்தாய்?... அப்படின்னு கேக்கிறான்!... புரிஞ்சுதா!...

இதுக்கும் மேல புரியாம இருக்குமா!...

அதுக்குத் தான் அந்தப் பொண்ணு சொல்லுது... தென்னம்பாளையைப் போல சிரிப்பிருக்கு.. பக்குவமா குணமிருக்கு.. ஆளழகும் சேர்ந்திருக்கு... இதுக்கு மேல என்ன வேணும் - ஏழையாப் பொறந்த எங்களுக்கு!...

ஆகா!... என்னா ரசனை!... ஒருத்தரோட மனசு அவரோட சிரிப்பில தெரியும்.. அப்படி..ன்னு சொல்லுவாங்க.. அதுபோல கன்னையோட மனசு அவனோட தென்னம்பாளைச் சிரிப்பில தெரியுது... இல்லீங்களா!..

அதுல பாருங்க!... பொன்னும் பொருளும் பூந்தட்டு சீதனமும் ஒரு மானம் மரியாதையான வாழ்க்கைக்கு போதுமா!.. அப்படின்னு.. கேக்குறதுக்கு - அந்தப் பொண்ணு சொல்லுது -

தன் மானம் தான் இடுப்புச் சேலை... சுயமரியாதை தான் என்னோட நகைநட்டு.. என்னோட வழித்துணை பரம்பரையா வர்ற நாணம்!.. இதெல்லாம் இருந்த போதுமே.. எங்களோட குலப்பெருமை எட்டுத் திசையும் கொடி கட்டித் தோன்றுமே!... - அப்படின்னு!... என்ன அருமையா இருக்கு!..

அந்த நாணம் இல்லாதது தான் - நாட்டுல நடக்கிற எல்லா தப்புக்கும் காரணம்!..  நாணம் இருக்கிற எவருமே ஒழுக்கம் தவறி நடக்க மாட்டாங்க!.. கழிவறைக்கு வெளியே ஒன்னுக்கு போறதில இருந்து அடுத்தவன் பொண்டாட்டிய புள்ளை குட்டிகளோட இழுத்துக்கிட்டு ஓடறது வரைக்கும் - வெட்கம் கெட்டவங்க செய்யிற வேலை தானே!..

சரியாச் சொன்னீங்க!.. இருந்தாலும் கன்னையனுக்குச் சந்தேகம் வருது.. பொன்னம்மா நம்மைப் பார்த்து ஆளழகு ..ன்னு சொல்லிடிச்சு.. அதுக்கு நாம தகுதியா?.. நமக்குத் தான் ஒரு கையும் காலும் வெளங்காதே!.. அவளை எப்படி நாம காப்பாத்த போறோம்!... அதனால அவனே கேட்கிறான்...

கைகால் விளங்காதவன் மேல யார் இஷ்டப்படுவாங்க!.. நீ என்ன தான் எம்மேலெ இஷ்டப்பட்டாலும் உங்க வீட்டில சம்மதிப்பாங்களா!... முடவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படறது யாருக்குத் தான் சந்தோஷமா இருக்கும்?..

மனக்குறை இருக்கும் தானே!...

அதுக்கு பொன்னம்மா சொல்லுது பாருங்க... மண்ணைப் பார்த்தா பயிர் வளருது?.. மரத்தைப் பார்த்தா கொடி படருது?. அந்தப் பயிர்லயும் கொடியிலயும் குத்தம் குறை உண்டா?..

என்னோட கண்ணு ரெண்டையும் பாருங்க... அதுல ஒரு களங்கமும் உண்டா.. சொல்லுங்க!.. என்னைப் புரிஞ்சுகிட்டது அவ்வளவுதானா?...

பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்கிறதே - ஒரு புண்ணியம்!..

அதுக்கு மேல கன்னையனுக்கு கேள்வி ஏதும் இல்லை!.. நாம காப்பாற்றலே.. ன்னாலும் அவ நம்மளைக் காப்பாற்றிடுவா... ன்னு நம்பிக்கை பிறக்குது... அப்புறம் என்ன!... கள்ளச் சிரிப்பு தான்.. குறும்புப் பார்வைதான்!...

இந்தப் பாட்டுல - களங்கமில்லாத அன்பு தான்.. வாழ்க்கைக்கு அடிப்படை.. ன்னு சொல்றாங்க..

இப்படியெல்லாம் தான் அன்றைக்கு வாழ்ந்தாங்க... ஆனா இன்னிக்கு நடக்கிறதெல்லாம் கேள்விப்பட்டா...

ரத்தம் கொதிக்குது... வேணாம்!... அந்தப் பேச்சை விடுங்க... ஏதோ இன்னைக்கு சாயங்காலப் பொழுது நல்லபடியா ஆனது... இன்னொரு சமயம் சந்திப்போம்!...

நல்லது.. மறுபடியும் பார்ப்போம்!..
* * *


ஜூன் 24..

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கும்
மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் அவர்களுக்கும் - பிறந்த நாள்..


கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய பாடல்களுள் -
மண் மணக்கும் பாடல் ஒன்றினை - என்னளவில் வழங்கியுள்ளேன்..

காலத்தை வென்று நிற்கும் - தாழையாம் பூ முடித்து - எனும் இனிய பாடலை
இங்கே - கேட்டு மகிழுங்கள்..

மெல்லிசை மன்னரின் இசையில் பாடியவர்கள் -
T.M. சௌந்தரராஜன், P. லீலா..

நடித்து வண்ணம் கூட்டியவர்கள் -
சிவாஜி கணேசன், சரோஜாதேவி..

இந்தப் பாடல் பெரும் சிறப்பு எய்துவதற்குக் காரணமான - 
மகத்தான கலைஞர்களையும் நினைவு கூர்தல் மகிழ்ச்சி..



நேற்றே இந்தப் பதிவினை வழங்கியிருக்க வேண்டும்..

வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று 18 மணி நேர வேலை..
ஆறு மணி நேர ஓய்வில் மீண்டும் சனிக்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும்..

தவிரவும் இணைய இணைப்பு சொல்லும்படியாக இல்லை..

எனவே தான் தாமதம் ஆகிவிட்டது..

மேலும் - அவர்கள் இன்று இல்லை என்று நினைக்கவே முடியவில்லை..

அவர்கள் வழங்கிய இனிய பாடல்களுடன் தான் நாளும் பொழுதும் விடிகின்றது..

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. - என்றார் கவியரசர்..

அந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..

அவ்வண்ணமாகிய 
அந்த மாபெரும் வித்தகர்களை 

நெஞ்சம் மறப்பதில்லை..
நெஞ்சம் மறப்பதேயில்லை!..  
***

திங்கள், ஜூன் 23, 2014

கவியரசர்

ஜூன் - 24.

கவியரசர் கண்ணதாசன் (24 ஜூன் 1927) அவர்களின் பிறந்த நாள்.
மேலும் கவியரசருடன் -  கிருஷ்ணகானம் இசைத்த மெல்லிசை மன்னர்  M.S.விஸ்வநாதன் (24 ஜூன் 1928) அவர்களின் பிறந்த நாள். 

தமிழ்த் திரை உலகம் எத்தனை எத்தனையோ -  மகத்தான கலைஞர்களைக் கொண்டிருந்தாலும்,

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு இணையான ஒருவரைக்  கண்டதும் இல்லை.. இனிக் காணப்போவதும் இல்லை!..

அவர் அளித்தவற்றுள் முத்துக்கும் முத்தான பாடல்கள் ஆயிரம்.. ஆயிரம்!..

அவற்றுள், இன்றைய காலகட்டத்திற்கென சிந்திக்கத் தகுந்தது எனக் கருதிய ஒரு பாடல் - இன்றைய பதிவில்!..


உயிர் ஒன்று நிம்மதியாகத் தூங்குவதற்காக -  எந்த உயிர் தன் தூக்கத்தை துறக்கின்றதோ - அந்த உயிர் தான் தாய்மை!..  

நம்மை உறங்கச் செய்வதும்,  நம்மை நம்முள்ளிருந்து உயிர்த்தெழச் செய்வதும் தாய்மையே!..

அந்தத் தாய்மை  தனித்துவமாக நின்று - தான் வளர்க்கும் கன்றுக்கு நல்லுரை கூறும் போது எப்படியிருக்கும்!?..

அப்படிப்பட்ட தாயாகி நின்று - தங்கத் தமிழ் கொண்டு - தமிழ் கூறும் நல்லுலகிற்கு கவியரசர் அளித்த கொடை!..

இதோ - அந்தப் பாடல்!..

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்லை..
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரீராரீரீ ஆரீராராரோ ராரீஆரீராரோ.. ஓ..
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீரோ..

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச்
சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்

எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி - தீராத தொல்லையடி..

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே

மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கம் என்பதேது?

தான் நினைத்த காதலனை சேர வரும் போது
தான் நினைத்த காதலனை சேர வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது?
கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன்
வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது? - கண்ணுறக்கம் ஏது?

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே!..

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும் போதும்
அன்னை என்று வந்த பின்னும்
கண்ணுறக்கம் போகும் - கண்ணுறக்கம் போகும்

கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து தேடும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம்
தானாக சேரும் - தானாக சேரும்

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே - தூக்கமில்லை மகளே!..

ஆரீராரீரீ ஆரீராராரோ ராரீஆரீராரோ.. ஓ..
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீரோ..
ஆரீராரீராரோ..

சித்தி எனும் திரைப்படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்.

அழும் குழந்தை உறங்குதற்குத் தேவை ஒரு தாலாட்டு தான்!..

ஆனால், அதை தத்துவப் பெட்டகமாகத் தந்தவர் கவியரசர்.

வாரியார் ஸ்வாமிகளுடன்
தாலாட்டுப் பாடலையும் - நுட்பமான அர்த்தங்களுடன் நூற்றுக் கணக்கான சுவை முத்துக்கள்  நிறைந்த மாதுளங்கனி எனத் தந்தவர் கவியரசர்.

பெண்களுக்குத் தூக்கம் என்பது குழந்தைப் பருவத்தில் மட்டுமே!.. 

பெண் வளர வளர - அவளுக்கு வகுக்கப்பட்ட பருவங்கள் ஏழிலும் அவளது தூக்கம் தொலைந்து விடுகின்றது!..

பெண் எப்படியெல்லாம்  குடும்பத்திற்காக தூக்கத்தைத் தொலைக்கிறாள்!..

- என்பதை,  கவியரசர்  தானே அனுபவித்தது போல  சித்தரித்தார்.

மெல்லிசை மன்னருடன்
அந்தச் சித்திரத்துக்கு இசையாலும் இனிய குரலாலும் உயிரூட்டியவர்கள் -  மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவர்களும் திருமதி P. சுசீலா அவர்களும்..

பாடலின் முழுப் பொருளும் இயக்குனர் திலகம் K.S.கோபாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் அற்புத நடிப்பில் வெளிப்பட்டிருக்கும். 


குழந்தைக்குப் பாடிய தாலாட்டில் - அந்தக் குடும்பத்தின் மூத்தவரான (சுந்தரி பாய்) மூதாட்டியும்  தூக்கத்தில் ஆழ்வதாகக் காட்சியமைத்து (5.33) மகிழ்ச்சி கொண்டார்  இயக்குனர் திலகம். 

இப்பாடலைக் கேட்கும் எவருக்கும் அவரவர் தாயின் முகம் நிச்சயம் நினைவுக்கு வரும்.

பக்தி இலக்கியங்களில் கூட - நாயகி பாவத்தில் பற்பல பாடல்களை நாம் காணலாம். 

அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே 
இரவுமுண்ணாது உறங்கிநீபோய் இன்றுஉச்சி கொண்டதாலோ 
வரவும் காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய 
திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே!..
இரண்டாம் பத்து/ இரண்டாம் திருமொழி

 - என, பெரியாழ்வாரும் தானொரு தாயாகி - இளங்கண்ணனை அமுது உண்ண அழைத்துக் கொஞ்சுகின்றார். 

அப்படியொரு பாவனையில் - 

இப்போதே தூங்கிக் கொள்ளடி என் மகளே!. இதை விட்டால் - இனி தூங்குதற்கு நேரம் கிடைக்காது?.. 

- என்று  இனிமையான தாலாட்டுப் பாடலில் எடுத்துரைத்தார் - கவியரசர்.

இப் பாடலின் பொருள் உணர்ந்து கேட்கும் எவர்க்கும் - எந்த சூழ்நிலையிலும் பெண்மைக்கு இடையூறு செய்ய எண்ணம் வரவே வராது என்பது திண்ணம்.


கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள் ஜூன் 24.. 
கவியரசரை நினைவில் கொள்ளும் வேளையில்,

அவருக்கு உற்ற தோழனாக இருந்த 
மெல்லிசை மன்னர் அவர்களுக்கும் ஜூன் 24 பிறந்த நாள்!..
அவர்கள் பூரண நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்!.. 

தூக்கம் துறந்த தூய்மை!.. 
அதுவே உன்னதமான தாய்மை!.. 
அதுவே உலகத்தின் வாய்மை!.. 

அதனை நாம் உணரும்படி செய்த  
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் புகழ் வாழ்க!..


நீ நிரந்தமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை!..
* * *

திங்கள், ஜூன் 24, 2013

கவியரசர் கண்ணதாசன்



கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள் (24 ஜூன் 1927) இன்று.

வாழ்க்கையின் ஓட்டத்தோடு  திருக்குறள் வருவதைப் போல கண்ணதாசன் அவர்களின் திரைப்படப்பாடல் வரிகளும் கூடவே வரும்.

காவியத் தாயின் இளையமகன் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைந்தவர்.

ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களையும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும்  - அவர் எழுதியதாக சொல்லப்படுகின்றது.

அவர் எழுதியவற்றுள் எத்தனை எத்தனையோ மேற்கோள்கள் காட்டலாம்!..

இருப்பினும் - ஒன்றே ஒன்று!...

பாடல் இடம் பெற்ற திரைப்படம் - சாந்தி நிலையம். இயக்குநர் - திரு.ஸ்ரீதர்.
மெல்லிசை மன்னர் இசையமைப்பில் சுசிலாஅம்மா பாடிய பாடல் இது.


கடவுள் ஒருநாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்!


கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது!
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது?
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது!
இன்பம் துன்பம் என்னும் எண்ணம் ஏன் வந்தது?

இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்!


பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம்
பச்சைப் பிள்ளை மழலை மொழியில் தன்னைக் கண்டாராம்
உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பைத் தந்தாராம்
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றாராம்!...


கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளுடன் தான் 
பொழுது விடிகின்றது!

தமிழ் அறிந்தோர் - உள்ளங்களிலும் இல்லங்களிலும்!..