நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

உறியடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறியடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 14, 2024

உறியடி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி  29
சனிக்கிழமை





தஞ்சை மேல ராஜவீதி ஸ்ரீ க்ருஷ்ணன் கோயிலில் ஸ்வாமி திருவீதி எழுந்தருள கோகுலாஷ்டமி    வழுக்கு மரம் உறியடி
உற்சவம் கடந்த வாரத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.. 

இன்றைய நாளில்
காட்சிப் பதிவாக  -

தஞ்சை நடுக்காவேரி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் சிறப்பாக நடத்தப்பெற்ற கோகுலாஷ்டமி  உறியடி உற்சவம்..

காணொளிக்கு
நெஞ்சார்ந்த நன்றி..


உழந்தாள் நறுநெய்  ஒரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால்  ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்ச  பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
      முகிழ்முலையீர் வந்து காணீரே.. 26

வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறு போல்  தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு  நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
ஒளியிழையீர்! வந்து காணீரே.. 30

வண்டு அமர் பூங்குழல்  ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற  கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
காரிகையீர்! வந்து காணீரே.. 35
-:- பெரியாழ்வார் :-
 நன்றி
நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம்

ஓம் ஹரி ஓம் 
***

சனி, செப்டம்பர் 16, 2023

உறியடி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 30
சனிக்கிழமை

குருவாயூர்
க்ஷேத்திரத்தில்
நடைபெற்ற உறியடித் திருவிழா..


சிறு வயதில் உறியடி வைபவங்களைப் பார்த்ததுண்டு..

தமிழகத்தில் உறியடித் திருவிழா இப்போது நடத்தப்படுகின்றதா..

தெரியவில்லை..


Fb ல் கிடைத்த காணொளி..
நெஞ்சார்ந்த நன்றி..

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே..14

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர்  நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல்  அவிழத் திளைத்து  எங்கும் 
அறிவு அழிந்தனர்  ஆய்ப்பாடி ஆயரே.. 16
-: பெரியாழ்வார் :-
***

ஓம் ஹரி ஓம்

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்
***