நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 29, 2026

தேரோட்டம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை 16
புதன்கிழமை


சித்திரை 14 (27/4) திங்களன்று தஞ்சை பெரியகோயிலின் திருத்தேரோட்டம் 
பல்லாயிரக்கணக்கான மக்கள் வரவேற்க கோலாகலமாக நிகழ்ந்தது...


வெயிலின் தாக்கத்தை அனுசரித்து சற்று முன்னதாகவே  திட்டமிடப்பட்டது...

அதன்படியே வடம் பிடிக்கப் பெற்று
திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நிகழ்ந்து தேர் நிலைக்கு வந்தது...

ராஜ வீதிகள் நான்கிலும் சிறப்பான முறையில் நீர் மற்றும் மோர் சித்ரான்னங்கள் வழங்கப்பட்டன..

தஞ்சை தேரோட்டத்தின் படக்காட்சிகள்..

இவை அனைத்தும் ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயிலின் அருகில் எடுக்கப்பட்டவை..




















கூட்ட நெரிசலில் தேர் இழுக்கப்பட்ட அழகைக் காண முடியவில்லை...

கோயிலின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அழகு தான் இவ் வருடம்..

தேர்த்திருவிழாவின் நெரிசல் இயல்பானது... அதனுள் நுழைந்து வந்ததே பெரிய விஷயம்..

இயன்றவரை காட்சிப்படுத்தியுள்ளேன்...

எல்லாம் அம்மையப்பன் அருள்...

ஓம் நம சிவாய
***

4 கருத்துகள்:

  1. தேர்த்திருவிழா காட்சிகள் சிறப்பு.  இவ்வளவு வெயிலிலும் மக்கள் கூடி இருப்பதும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இருந்தாலும் கலாச்சாரம் பக்தி இவை விட்டுப் போகுமோ

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  2. தேரோட்டம் - சிறப்பு. இங்கே இன்னும் சித்திரை தேர் முடியவில்லை. பூச்சாற்று வைபவம் நடந்து கொண்டிருக்கிறது. சித்திரைத் தேருக்கான காத்திருப்பில் நாங்களும்.

    உங்கள் பதிவு/படங்கள் வழி, நாங்களும் தஞ்சையின் தேரோட்டக் காட்சிகளை கண்டு ரசித்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் மேல் விவரங்களும்
      மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..