நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
முதல் திங்கள்
புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..
எல்லாருக்கும் தெரிந்தவை தான்...
எனினும் கண்டதும் கொண்டதும் இனி வரவிருக்கின்ற திங்கள்
பதிவுகளில்..
சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருள்கள்
பச்சரிசி
வெல்லம்
நெய் தேவையான அளவு
முந்திரிப் பருப்பு 100 gr
உலர் திராட்சை 100 gr
ஏலக்காய் 5
பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை
பச்சரிசியை நன்றாக அலசி விட்டு நான்கு பங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை இட்டு.
வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
வெல்லம் கரைந்து கொதித்த பிறகு தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெல்லம் சுத்தமாக இருப்பின் பாகாக ஆக்கிக் கொள்ளவும்.
பச்சரிசி வெந்து குழைந்து வருகின்ற பக்குவத்தில் சாதத்துடன் வெல்லப்பாகு சேர்த்து கிளறி. ஏலக்காயைத் தூளாக்கி சேர்க்கவும்.
சுத்தமான வாணலியில் தரமான நெய் விட்டு முந்திரிப் பருப்பு உலர் திராட்சை இவற்றை வறுத்துக் கொள்ளவும்.
இதனை சர்க்கரை பொங்கலில் சேர்த்து தேவையெனில் மேலும் சிறிது நெய் சேர்த்து பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்..
பாரம்பரிய
சர்க்கரை பொங்கல் .
ஒரு பங்கு -
கொதிக்கின்ற பாலைச் சேர்த்தும்
சிலர் செய்வர்.
ஓம் ஹரி ஓம்
**
சிறப்பு. சமீப காலங்களில் சர்க்கரைப் பொங்கலில் பச்சை கற்பூரம் சேர்ப்பது எங்களையும் அறியாமல் நிறுத்தி உள்ளோம். இந்த முறை செய்யும்போது சேர்க்க வேண்டும்.
பதிலளிநீக்கு