நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
சனிக்கிழமை
கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்து - ஸ்ரீ முஷ்ணம் தரிசனம் (உத்தேசமாக 25 கிமீ)..
ஸ்ரீ பூவராக ஸ்வாமி திருக்கோயிலுக்குப் பயணம்..
மேற்கு நோக்கிய ஸ்வயம்வியக்த க்ஷேத்திரம்..
ஸ்ரீ மகாவிஷ்ணு, இத்தலத்தில் வராக மூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் இரு திருக்கரங்களுடன் திகழ்கின்றார்...
கைகளை இடுப்பில்
வைத்த திருக்கோலம்..
திரு மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருமேனி.. தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்..
தாயார் அம்புஜவல்லி.. கிழக்கு நோக்கியவாறு தனிச் சந்நிதி..
கருட மண்டபம் அற்புத கலா நிலையமாகப் பொலிகின்றது..
சிற்பங்களின் அழகினைக் காண்பதற்கு போதுமான வெளிச்சம் அமையாதது நமது துரதிர்ஷ்டம்..
இயன்ற வரை படம் பிடித்துள்ளேன்..
படங்களின் வழியே கோவிலின் அழகை ரசித்தோம். சிற்பங்களையும் ரசித்தேன். நடுவில் உடைந்திருக்கிறதா என்ன...
பதிலளிநீக்குராமர் கோவிலை கவனிப்பர் யாரும் இல்லையா.. நான் என் மச்சினர்களிடம் சொல்லிப் பார்க்கிறேன். அதேபோல் முகநூலில் ஸ்ரீவத்சன் என்று ஒருவர் இருக்கிறார். அவரும் தேடித்தேடி உழவாரப் பணிகள் செய்கிறார்.
அந்நியர் படையெடுப்பால் சிலைகள் சேதமடைந்துள்ளன
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்..
பதிவு வழி நாங்களும் ஆலயம் கண்டோம். சிற்பங்கள் மனதைக் கவர்ந்து இழுக்கின்றன. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி
நன்றி வெங்கட்..
ஸ்ரீ பூவராக ஸ்வாமி திருக்கோவில் தரிசித்தோம்.
பதிலளிநீக்குகோபுரம் பெரிதாக உள்ளது .
கற்சிப்பங்கள் அனைத்தும் கவர்கின்றன.
குறிப்பாகஅ ந்தப் பெண்ணின் முடிப் பின்னலையும் மிக அழகாக செதுக்கி உள்ளார்கள்.
அருமையான கலை மண்டபம்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றியம்மா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஸ்ரீ முஷ்ணம் வராக மூர்த்தி கோவிலைப் பற்றிய பதிவும், படங்களும் மிக அருமையாக உள்ளது. கோவிலிலுள்ள சிற்பங்கள் அனைத்தையும் பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.கோவில் வாசலில் உள்ள கருடாழ்வார், பின்னல் அலங்கார சிற்பம் ஏனேய சிற்பங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.
பட்டாபிராமர் கோவிலை சீர் செய்தால், அனைவரும் மகிழ்வுடன் தரிசனம் செய்வர். விரைவில் அக்காலம் கூடி வர இறைவன் அருள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி
பதிலளிநீக்குநன்றியம்மா