நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 7
ஞாயிற்றுக்கிழமை
குறளமுதம்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.. 34
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்... 7
நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்
ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.. 7
ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
திருத்தாண்டகம்
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 7
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃ
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
ஹரி ஓம் நமச்சிவாய...
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
ஓம் ஹரி ஓம்
திருப்பாவை பாடல், திருபள்ளியெழிச்சி பாடல், திருதாண்டக பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன். பட பகிர்வும் அருமை.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் பிரார்த்தனையும்
நீக்குமகிழ்ச்சி
நன்றி
ஓம் ஹரி ஓம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய குறளமுதம் நன்று. ஸ்ரீ கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரமும், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் பாடி மகிழ்வடைந்தேன். ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம். 🙏.
மார்கழி முதல் நாள் முதல் தவறாமல் வந்தேன். இன்று ஒரு சிறு தடை. மன்னிக்கவும். இனி தவறாமல் தொடர இறைவன் அருள வேண்டும். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் பிரார்த்தனையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி
நன்றி
ஓம் ஹரி ஓம்
ஆண்டாள் பாதம் சரணம்.
பதிலளிநீக்குகயிலை மலையானே போற்றி.
அன்பின் பிரார்த்தனையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி
நன்றி மாதேவி
ஓம் ஹரி ஓம்