நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 26, 2019

வெள்ளி மலர் 2

தெய்வீக மணம் கமழும் ஆடி மாதத்தின் சிறப்புகளில் மற்றொன்று!..

இந்த மாதத்தின் கிருத்திகை...

வெள்ளிக் கிழமையும் வளர்பிறை சஷ்டியும் கிருத்திகையும்
முருகனருள் பெறச் சிறந்தவை!.. 

ஏன்!.. எப்படி?.. - என்று கேட்டால் -

வாரத்தின் ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை. திதிகளில் ஆறாவது சஷ்டி...

கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தின் அம்சம் தேவ மங்கையர் அறுவர்... 

திருமுருகனைத் தோற்றுவித்தபோது சிவபெருமானுடைய திருமுகங்கள் - ஆறு...


அருவமும் உருவம் ஆகிஅநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
கந்தபுராணம்.

இப்படி உலகம் உய்ய வேண்டி -
திருமுருகன் உதிப்பதற்கு  - பரம் பொருளாகிய சிவபெருமான்
தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் எனும் ஐந்து முகங்களுடன் அதோ முகமும் கொண்டு திருவருள் புரிந்தார். 

ஐயனின் ஆறுமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின...
அவற்றை வாயுவும் அக்னியும் சேர்ந்து கங்கா நதியில் விட -
கங்கை அவற்றை சரவணத்தினில் சேர்த்தனள். 

சரவணத்தின் கமலங்களிலிருந்து ஆறு குழந்தைகள் தோன்றின. 

அந்த ஆறு குழந்தைகளையும் தேவ மங்கையர் அறுவர் தம் திருக்கரங்களில் ஏந்தி சீராட்டி பாராட்டி பாலூட்டி வளர்த்தனர். 

அது கண்டு மகிழ்ந்த ஐயனும் அம்பிகையும் ரிஷப வாகனராக  அறுவருடன் விளையாடும் தன் அன்புச் செல்வங்களைக் காண வந்தருளினர். 

அம்பிகையை நோக்கிய ஐயன் -
நின் மகன்தனைக் கொண்டு வருக!.. என்றார்...


சரவணந்தனில் தனதுசேய் ஆறு உருத் தனையும் 
இருகரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமுகங்கள் ஓராறு பன்னிருபுயம் சேர்ந்த 
உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகம் ஈன்றுடையாள்.

அந்த வேளையில் - கந்தன் என்று பேர் பெற்றனன் கௌரியின் குமரன்.

கந்தனை வாரி அணைத்து திருத்தனபாரங்களில் சுரந்த அமுதினை -
அன்பு மிக ஊறியவளாக - தன் மகற்கு அன்பினால் அருத்தினாள் கௌரி.

சிவபெருமானின் திருமுன் திருக்குமரனை இறைஞ்சுவித்திட - ஐயனும் மகனை அன்புடன் அணைத்து மகிழ்ந்து  தன்னருகில் இருத்திக் கொண்டான்.


ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் 
பாலனாகிய குமரவேள் நடுஉறும் பான்மை 
ஞாலமே லுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் 
மாலையா னதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்..
-: கந்த புராணம் :-

அற்புதக் காட்சியினைக் கண்டு அகமகிழ்ந்த தேவ மங்கையர் அறுவரும் ஐயனையும் அம்பிகையையும் பேரன்புடன் பணிந்து வணங்கினர்.  

தாள் பணிந்த மங்கையர் அறுவருக்கும் பெருமான் தண்ணளி புரிந்தான்.

கந்தன்தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கள் 
மைந்தன் எனும் பெயர் ஆகுக மகிழ்வால் எவரேனும் 
நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர் 
தந்தம் குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான்!.. 
 -:கந்தபுராணம்  - சரவணப்படலம் :-

" கந்தனாகிய இவனுக்கு நீங்கள் அறுவரும் அன்புடன் பாலூட்டி வளர்த்த காரணத்தால் - இது முதல் இவன் உங்கள் மைந்தன் எனும்படி கார்த்திகேயன் என அழைக்கப்படுவான்...

நீங்களும் சிறப்புற வானில் விண்மீண்கள் எனத் திகழ்வீர்களாக!.. உங்களுக்குரிய கார்த்திகை நாளில் விரதம் இருப்பவர் எவராயினும்
அவர்தம் குறைகளை நீக்கி நல்வாழ்வினை அளித்து முக்தியும் அளிப்போம்!.." 

- என சிவபெருமான் கருணையுடன் மொழிந்தார்.. - என்பது கச்சியப்ப சிவாச்சார்யரின் திருவாக்கு!..

இத்தனை சிறப்புடையது  கார்த்திகை விரதம்...

ஸ்ரீ தேவகுஞ்சரி மணாளன் 
கார்த்திகை விரதத்தினை அனுசரிப்போர் -
முதல் நாள் இரவில் ஏதும் உண்ணாதிருந்து கந்தனின் நினைவுகளுடன் துயின்று - கிருத்திகை நட்சத்திரத்தன்று விடியற்காலையில் எழுந்து நீராடி தூய உடையினை உடுத்து - திருநீறு தரித்து திருக்கோயிலில் சென்று வணங்கி வழிபட்டு - 

தண்ணீர் மட்டும் அருந்தி இயன்றவரை திருப்புகழ் திருப்பாடல்களைப் பாராயணம் செய்வதும் முருக மந்திரங்களைத் தியானம் செய்து  

மாலையில் மீண்டும் நீராடி நித்ய வழிபாடுகளைச் செய்தபின் எளிய உணவுடன் விரதத்தினை நிறைவு செய்வர்.

ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனை, அர்ச்சனைகளில் பங்கு கொள்வதும் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதும்  சிறப்புடையன. 

திருச்செந்தில் நாதன்
முருகனின் அருள் பெறுதற்கு எளிய விரதங்கள் ஏற்றவை. 

தன்னுடலைத் தானே வருத்திக் கொள்ளும்படிக்கு
எந்த ஒரு குறிப்பும் மக்களுக்கு அளிக்கப்படவில்லை!.. 

கந்தனின் அருளைப் பெறுவதற்கு
அவனை சரணடைதலே பெரியோர்கள் நமக்குக் காட்டியவழி..  

பழனியம்பதியின் பாலகுமாரன் 
தேவர்களின் இரவுப் பொழுதான தட்சிணாயனத்தின்
முதல் மாதமான ஆடி பிரதோஷ நேரமாகக் கருதப்படுகின்றது. 

எனவே  - ஆடி மாதம்  விளக்கேற்றும் பொழுது என்றாகின்றது .


எந்தனை ஆளும் ஏரகச் செல்வன்
எனவே தான்  - ஆடி மாத வழிபாடுகளும்
ஆடிக் கிருத்திகையும்  சிறப்பாகச் சொல்லப்படுகிறது. 


தணிகை மலைச் செல்வன் 
அறுபடை வீடுகளிலும் மற்றுமுள்ள முருகன் திருச்சந்நிதிகளிலும்
ஆடிக் கிருத்திகை சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது...

குன்று தோறாடும் குமரவேலன்
அறவழி நின்றால்  - அறுமுகனின் அருள் பெறலாம்!..
- என்பதே திருக்குறிப்பு.


அறம் செய்றது.. - என்றால் எப்படி?...

மலையைப் புரட்டிப் போட்டு
கடலில் கழுவி எடுக்கின்ற மாதிரி இருக்குமோ!..

அதெல்லாம் இல்லை..

அறம் செய்ய விரும்புவதே பெரிய அறம்...

வையிற்கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் !.. 

- என்பது கந்தர் அலங்காரம். 

அது என்ன நொய்யின் பிளவு!?..

ஒரு அரிசி இருபாதியாக உடைந்தால் அது நொய் எனப்படும். 
அந்த நொய் இரு பிளவாக ஆனால் - அது குறு நொய்!.. 

திரண்ட செல்வத்திலிருந்து அந்த குறு நொய்யின் அளவாவது அற்றார்க்கும் அலந்தார்க்கும் உதவுங்கள் என்பது அருணகிரியாரின் அருள்வாக்கு!..



வேலுண்டு வினையில்லை..
மயிலுண்டு பயமில்லை!..
குகனுண்டு குறைவில்லை மனமே..
குகனுண்டு குறைவில்லை மனமே!..

கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
கார்த்திகை மைந்தா சரணம்.. சரணம்!..
* * *

33 கருத்துகள்:

  1. அடடே... முருகன்தான் எனது...

    வேண்டாம்.. நெல்லை கிண்டல் செய்வார்! உங்களுக்கே தெரியும்!

    குட்மார்னிங்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      வாழ்க நலம்..

      நீக்கு
  2. ஆறுமுகமாக என்று தொடங்கும் சூலமங்கலம் சகோதரிகள் பாடல் நினைவுக்கு வருகிறது. தொடரும் வரிகள் சட்டென நினைவுக்கு வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      ஆற்முகமான பொருள் வான் மகிழ வந்தான்..
      அழகன் இவன் முருகன் என இனிய பெயர் கொண்டான்..

      எனும் இனியபாடல்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அதே... அதே... நன்றி.. நன்றி...

      என்ன மறதியோ!

      நீக்கு
  3. ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன் இவன் முருகன் என இனிய பொருள் கொண்டான் என்ற பாடல் நினைவுக்கு வருது. ஸ்ரீராமுக்கு வந்தது போல்.
    கார்த்திகை பெண்கள் சீராட்டும் பாடல். மிக அருமையாக இருக்கும் காட்சிகள்.
    நீங்கள் இங்கு பகிரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    2. அதே... அதே... நன்றி.. நன்றி...

      நீக்கு
  4. பதில்கள்
    1. >>> இனிய பெயர் கொண்டான்..<<<

      உண்மைதான்..

      அமிழ்தினும் இனிய பெயர் கொண்டான்...

      நீக்கு
  5. வெள்ளி மலர் அருமை.
    படங்களும் செய்தியும் மிக அருமை. மாலை தான் கார்த்திகை வருகிறது. நாளையும் கார்த்திகை.
    நொய் விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்காட்டிகள் இன்றே ஆடிக் கிருத்திகை என்கின்றன..

      அந்திப் பொழுதில் கார்த்திகை இருப்பதால்
      இன்றே கார்த்திகை எனவும் கொள்ளலாம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆறுமுகன் அருள் மிக , அருமையாகக் கந்தனின் சஷ்டியை
    விளக்கி
    எங்கள் ஆடி வெள்ளியை அரியதொரு தரிசனத்துக்கு
    வழி செய்தீர்கள்.
    ஆறுமுகன் ஆன பொருள் வான் மகிழ வந்தான்.
    இந்தப் பாடலா ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சியம்மா...

      நீக்கு
    2. ஆமாம் அம்மா. அதே... அதே... நன்றி.. நன்றி...

      என்ன மறதியோ எனக்கு...!

      நீக்கு
  7. வெள்ளி மலரின் அலங்காரம் அழகு ஜி
    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  8. அன்பின் ஜி..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  9. அருமையான விளக்கம் ஐயா...

    // அறம் செய்ய விரும்புவதே பெரிய அறம்... //

    ஆகா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. படங்கள் அருமை.

    நொய்யின் பிளவேனும் - அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அழகன் முருகன் தரிசனம் கண்டேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
  13. இந்த வாரமும் ஆடி வெள்ளியில் மிகச் சிறப்பாக ஒரு பதிவு. தேர்ந்தெடுத்து சேர்த்திருக்கும் படங்கள் சிறப்பாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  14. அருமையான விளக்கங்களுடன் கூடிய ஆடிக்கிருத்திகைப் பதிவு. முன்னெல்லாம் விரதம் இருந்த நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன. "நொய்யின் பிளவேனும்" அழகான விளக்கம். முதல் முறையாகக் கேள்விப் படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  15. வாசித்த பல பக்கங்களில் முருகன் பகிர்வே...
    நான் வணங்கும் தினமும் பலமுறை நாமத்தைச் சொல்லும் முருகன்.
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  16. நான் தாமதமாகத்தான் வருகிறேன் இருந்தாலும் வெள்ளி மலர் வாடாது மணம் வீசிக் கொண்டிருக்கிறது! முருகனின் பதிவு அல்லவா...இப்போதுதான் வாசித்து முடித்தேன்..

    ஆடிக்கிருத்திகை குறித்த விளக்கங்கள் சிறப்பு. தரிசனம் கண்டேன் அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..

      எல்லாம் அவன் செயல்.. முருகன் திருவருள் முன்னின்று காக்கட்டும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..