நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

அம்மன் தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மன் தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 26, 2023

காமாட்சி தரிசனம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 11
 திங்கட்கிழமை

வீட்டிற்கு அருகில் அம்மன்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று ஞாயிறன்று காலை நடைபெற்றது..

மூலஸ்தானத்தில் ஸ்ரீ காமாட்சியம்மன்..

ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் சந்நிதிகளுடன்
ஸ்ரீ கருப்பர், ஸ்ரீ வீரனார் என தனித்தனி சந்நிதிகள்.. 

குல தெய்வமாகக் கொண்டாடுபவர்களின் சீரிய திருப்பணி.. சிறப்பான குடமுழுக்குடன் அன்னதானமும் நடைபெற்றது..

இயன்றவரை நான் எடுத்த நிகழ்வுகள் இன்றைய பதிவில்..









































மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே...
-: அபிராமிபட்டர் :-

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, டிசம்பர் 11, 2022

ஸ்ரீ காத்தாயி அம்மன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 25
  ஞாயிற்றுக்கிழமை

இன்றொரு தரிசனம்..

கோயிலா!.. கோயில்களா?.. 
நீங்களே தீர்மானம் செய்து கொள்ளுங்கள்..
 
கோயில் வளாகத்தின் முன்பாகவே -
சப்பாணி வீரன்பத்ர காளி, முன்னோடியார்,
பட்டவர் - எனும் சந்நிதிகள்..

கூடவே,
காவல் நாய்களுடன் இரண்டு குதிரைகளும் 
ஒரு யானையும்..

அகன்று விரிந்த வேம்பும் நெடிதுயர்ந்த கூந்தல் பனையும் சுற்றுப் புறத்தை அழகாக்குகின்றன..









புற்று



இந்த சந்நிதிகளைக் கடந்ததும் - இரண்டாம் வரிசையில் -
மதுரை வீரன், நாக கன்னி, வீரனார்,
அகோர வீரபத்ரர், காத்தவராயன், சங்கிலிக் கருப்பர் - சந்நிதிகள்..

சங்கிலிக் கருப்பர் சந்நிதிக்குப் பக்க் வாட்டில் -
பேச்சியம்மன், காடேறியம்மன் சந்நிதிகள்..

எல்லா சந்நிதிகளிலும் அழகும் சாந்தமும் ததும்பும் சுதை சிற்பங்கள்..

இவை தவிர,
பட்டவர் சந்நிதிக்கு எதிரில் மேலும் இரண்டு சந்நிதிகள்
திருப்பணி ஆகிக் கொண்டிருக்கின்றன..

சங்கிலிக் கருப்பருக்கு எதிரில்







கோயிலுக்கு வடபுறமாக மிகப்பெரிய திருக்குளம்..

வெளிச் சுற்றில் பரிவார மூர்த்திகளைத் தரிசனம் செய்து விட்டு திருக்கோயிலினுள் நுழைகின்றோம்..

யாளி சிலைகளுடன் கூடிய தூண்கள்.. மண்டபத்தின் அழகு கண்களைக் கவர்கின்றது.. 

தென்புறத்தில் விநாயகர்.. வடபுறத்தில் பாலமுருகன்..

முன்மண்டத்தின் இருபுறமும் சுதை சிற்பங்கள்.. மூலஸ்தானத்தில் கையில் குழந்தையுடன் ஸ்ரீ காத்தாயி அம்மன்..

பச்சைப் பட்டு உடுத்தியவளாக
வெள்ளிக் கவசத்துடன் கண்கொள்ளாக் காட்சி.
தீப ஆராதனையில் கருணை ததும்புகின்றது.. 

விபூதி குங்குமம் பெற்றுக் கொண்டு உள் சுற்றில் வலம் வருகின்றோம்..

கருவறை முன்மண்டபத்தில் கண்ட சுதை சிற்பங்களும் திருச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ளன..

அவற்றின் நடுவே ஸ்ரீ காளி, ஸ்ரீ துர்கா, ஸ்ரீ மாரியம்மன் - ஏக பீடத்தில் காட்சி தருகின்றனர்..


திருச்சுற்றில் வலம் வந்து சந்நிதி முன்பாக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தாயிற்று..

மேலும் சில காட்சிகள் - சப்த முனீஸ்வர தரிசனத்துடன் - அடுத்த பதிவில்..

சரி.. 
இந்தக் கோயில் எங்கேயிருக்கின்றது?.
சொல்லவில்லையே!..

செவ்வாய்க் கிழமை பதிவில் விவரம் காணலாம்!..

ஓம் சக்தி ஓம் 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***