நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 30, 2025

ஸ்ரீமுஷ்ணம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
சனிக்கிழமை

கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்து - ஸ்ரீ முஷ்ணம் தரிசனம் (உத்தேசமாக 25 கிமீ)..

ஸ்ரீ பூவராக ஸ்வாமி திருக்கோயிலுக்குப்  பயணம்..

மேற்கு நோக்கிய ஸ்வயம்வியக்த க்ஷேத்திரம்.. 

ஸ்ரீ மகாவிஷ்ணு, இத்தலத்தில் வராக மூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் இரு திருக்கரங்களுடன்  திகழ்கின்றார்...
கைகளை இடுப்பில்
வைத்த திருக்கோலம்..

 நன்றி இணையம்

திரு மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருமேனி.. தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்..

தாயார் அம்புஜவல்லி.. கிழக்கு நோக்கியவாறு தனிச் சந்நிதி..

கருட மண்டபம் அற்புத கலா நிலையமாகப் பொலிகின்றது.. 

சிற்பங்களின் அழகினைக் காண்பதற்கு போதுமான வெளிச்சம் அமையாதது நமது துரதிர்ஷ்டம்..

இயன்ற வரை படம் பிடித்துள்ளேன்.. 




திருப்பதியில் இருக்கின்ற மாதிரி - சாலை நடுத்திட்டில் கருடன் சிற்பம்..

















திருக்கோயிலினுள் அமைந்திருக்கும் ஸ்ரீ சப்த கன்னியர் சந்நிதி..









திருக்கோயிலுக்கு எதிரில் கிழக்கு முகமாக ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் திருக்கோயில்..

சந்நிதி தரிசனம் மட்டுமே.. ராமர் கோயிலை வலம் வருவதற்கு இயலாதவாறு முட்புதர்கள்.. 

அவனருளாலே அவன் தாள் வணங்கிய பிறகு ஜெயங்கொண்டம் கீழப் பழுவூர் வழியே நல்லபடியாக தஞ்சை வந்து சேர்ந்தோம்..


ஓம் ஹரி ஓம்
**

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2025

சோழேச்சரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை




ஒன்பதாம் திருமுறை

சுருதி வானவனாம் திருநெடு மாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர்சடை முக்கட்
பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருது வாகனனாம் எயில்கள்மூன் றெரித்த
ஏறு சேவகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்டசோ ழேச்சரத்தானே..
-: சித்தர் கருவூரார் :-


வேதங்களை ஓதும் பிரமனாகவும்  நீள்வடிவு எடுத்த திருமாலாகவும் அழகிய வானத்தின் தலைவனாகிய இந்திரனாகவும் சூரிய தேவனாகவும் விரிந்து படர்ந்த சடைமுடியுடன் மூன்று கண்களை உடையவனாகவும் உலகத்தில் உயிர்களைத் தழைப்பிக்கும் அமுதமாகவும் காளை வாகனனாகவும், மும்மதில்களையும் அழித்த
மாவீரனாகவும், இவற்றைத் தவிர வேண்டுவார்க்கு வேண்டும் வடிவத்தில் வரம் அளிப்பவனாகவும் கங்கை கொண்ட சோழேச்சரத்தில் வீற்றிருக்கின்ற ஈசனே விளங்குகின்றான்..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், ஆகஸ்ட் 28, 2025

தரிசனம் 2

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வியாழக்கிழமை

தமிழ் வாழ்வியலின் படி வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் புனிதத் தலம் கங்கை கொண்ட சோழபுரம்..







அன்பின் ஸ்ரீராம் அவர்களது கவனத்திற்கு
சிதைவுகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருமேனிகள் வடக்குப் பகுதியில் வெட்ட வெளியில் 
வரிசைப்படுத்தப் பட்டுள்ளன..




கொள்ளையர் அழித்தது போக -  திருமாளிகைச் சுற்றின் மிச்சம்





நாகலிங்க விருட்சம்





இந்த அளவில்
ஆலயத்தில் இனிதே தரிசனம் நிறைவுற்றது..

கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி நன்கறிவோம்..
அதனால் தான் மேல் விவரங்கள் அதிகம் சொல்லவில்லை..

இருப்பினும் 
தட்டச்சு செய்வதில் பிரச்னை.. இந்தப் பதிவிற்கே இரு வாரங்கள் ஆகி இருக்கின்றன..


அங்கைகொண்டு அமரர் மலர்மழை பொழிய
அடிச்சிலம் பலம்பவந் தொருநாள்
உங்கைகொண்டு அடியேன் சென்னிவைத்து என்னை
உய்யக்கொண்டு அருளினை மருங்கிற்
கொங்கைகொண்டு அனுங்குங் கொடியிடை காணிற்
கொடியள்என்று அவிர்சடைமுடிமேற்
கங்கைகொண்டு இருந்த கடவுளே கங்கை
கொண்ட சோழேச்சரத் தானே..
-: சித்தர் கருவூரார் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**