நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 23, 2025

மார்கழி 8

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 8 

குறளமுதம்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.. 8

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.. 8

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி


முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. .8
 
ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு

திரு நெய்த்தானம்

மையாடிய கண்டன்மலை மகள்பாகம் அது உடையான்
கையாடிய கேடில்கரி உரிமூடிய ஒருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானம் எனீரே.. 1/15/1
**
ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

திங்கள், டிசம்பர் 22, 2025

மார்கழி 7

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 7

குறளமுதம்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.. 7

அருளமுதம்


ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசம் உடையாய் திறவேலோர் எம்பாவாய்.. 7

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 7

ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு

திருப்பழனம்

வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்
நாதாவெனவு நக்காவெனவு நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.. 1/67/1
**

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

ஞாயிறு, டிசம்பர் 21, 2025

மார்கழி 6

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 6

குறளமுதம்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.. 6

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.. 6

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 6

ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு

திருந்துதேவன்குடி

மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.. 3/25/1
**
ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

சனி, டிசம்பர் 20, 2025

மார்கழி 5

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 5

குறளமுதம்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.. 5

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.. 5


ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 5

ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு

திருவலிவலம்


பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.  1/123/5


ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

வெள்ளி, டிசம்பர் 19, 2025

மார்கழி 4

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 4

குறளமுதம்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.. 4

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்            
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 4
**

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 4
**

ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு

திரு சாய்க்காடு
(சாயாவனம்)

நீநாளும் நன்னெஞ்சே
  நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும்
  சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப்
  புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப்
  பெறலாமே நல்வினையே.  3

 நன்றி
பன்னிரு திருமுறை

இன்று
ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி


ஓம் தத்புருஷாய வித்மஹே வாயு புத்திராய தீமஹி
தந்நோ: ஹனுமத் ப்ரசோதயாத்

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

வியாழன், டிசம்பர் 18, 2025

மார்கழி 3

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 3

குறளமுதம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.. 3

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.. 3


ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 3

ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு

திருக்கோலக்கா

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்   
உடையுங் கொண்ட உருவ மென்கொலோ.. 1/23/1
**

ஓம் ஹரி ஓம்
நம சிவாய ஓம்
**

புதன், டிசம்பர் 17, 2025

மார்கழி 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 2

குறளமுதம்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.. 2

அருளமுதம்


ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.. 2
**

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.. 2

ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு

திரு பிரமபுரம்
சீர்காழி

தோடுடைய செவியன்விடை 
யேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் 
தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய 
பெம்மானிவ னன்றே.. 1/1/1
**

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

செவ்வாய், டிசம்பர் 16, 2025

மார்கழி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி முதல் நாள்


ஓம் கம் கணேசாய மங்கலம்

குறளமுதம்

அகர முதல எழுத்தெல்லாம ஆதி
பகவன் முதற்றே உலகு.. 1


ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.. 1


ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

போற்றி என் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 1

ஸ்ரீ ஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக் காப்பு

திரு அண்ணாமலை

பூவார்மலர்கொண்டு அடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார்
தூமாமழைநின்று அதிரவெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணைவந்து அணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.. 1/69/1
**

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

திங்கள், டிசம்பர் 15, 2025

சோம வாரம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கார்த்திகை
திங்கட்கிழமை

இன்று
ஐந்தாம் சோமவாரம்


திருநாவுக்கரசர் அருளிச் செய்தவை

ஆறாம் திருமுறை
திருத்தாண்டகத் திருப்பாடல்கள்

திரு ஆரூர்

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
    ஓருருவே மூவுருவ மான நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
    காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
    மான்மறிகை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
    திரு ஆரூர் கோயிலாக் கொண்டநாளே.. 6/34/1

திரு ஐயாறு

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
    உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
    திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1

திருப்பூவணம்

வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
    வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
    காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
    எழில்திகழுந் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.. 6/18/1

திருமறைக்காடு

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
    மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 6/23/1

திருக்கோடிக்கா


வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.. 6/81/2

திருப்புள்ளிருக்கு வேளூர்

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே.. 6/54/8

தில்லை திருச்சிற்றம்பலம்

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
    அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6/1/1

திருச்சிற்றம்பலம்

நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் சிவாய நம
**

வெள்ளி, டிசம்பர் 12, 2025

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
சுவாமிமலை


தானதன தந்த தானன தானதன தந்த தானன
     தானதன தந்த தானன ... தனதான

ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன
     ஆரமுது கண்டு தேனென ... இதழூறல்

ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென
     ஆனையுர மெங்கு மோதிட ... அபிராம

மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்
     மாயுமனு வின்ப வாசைய ... தறவேயுன்

வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக
     வாசகம்வ ழங்கி யாள்வது ... மொருநாளே..

ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்
     ஈடழிய வென்று வானவர் ... குலசேனை

ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர
     ராசதம றிந்த கோமள ... வடிவோனே

சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு
     தோளுடைய கந்த னேவய ... லியில்வாழ்வே

சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு
     சுவாமிமலை நின்று லாவிய ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி 
கௌமாரம்


முருகா முருகா
முருகா முருகா
**

புதன், டிசம்பர் 10, 2025

அழகே அழகு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
கிழமை 

அமரர் சில்பி அவர்களது
கை வண்ணம்..
சில ஓவியங்கள்

தஞ்சை



மதுரை



தில்லை


திருப்பரங்குன்றம்


திரு அண்ணாமலை


 நன்றி
 
நன்றி

ஓம் நம சிவாய
**

திங்கள், டிசம்பர் 08, 2025

சோம வாரம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கார்த்திகை
திங்கட்கிழமை
நான்காவது சோமவாரம்


இன்று
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருக்கடைக்காப்பு

இரண்டாம் திருமுறை
திருப்பதிக எண் 40

திருப்பிரமபுரம்  - சீர்காழி


எம்பிரான் எனக்கமுதம் ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.. 1

தாமென்றும் மனந்தளராத் தகுதியரா உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்தன் உடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.. 2

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமா முருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை யியல்பாக அறிந்தோமே.. 5

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே.. 6

தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்தும் இவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.. 11

திருச்சிற்றம்பலம்
 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் சிவாய நம
**

ஞாயிறு, டிசம்பர் 07, 2025

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ வீரமாகாளியம்மன் 
திருக்கார்த்திகை தரிசனம்






யாதுமாகி நின்றாய் காளி!..

ஓம் சக்தி ஓம்
**


சனி, டிசம்பர் 06, 2025

ஓம் ஹரி ஓம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
சனிக்கிழமை


மச்சநாதா   கூர்மநாதா   
வராக  நாதா  நரசிம்மா
நச்சி வந்த  வாமனனே 
பரசுராமா  ரகுராமா
மெச்சு  புகழ்  பலராமா  
ஸ்ரீ க்ருஷ்ண  கல்கியனே
இப்புவியில் வேங்கடவா  
வைகுந்தா சரண் புகுந்தேன் 
சரண் புகுந்தேன் சரண் புகுந்தேன் 
நினதடியைச் சரண் புகுந்தேன்...
**
(வேங்கடேச சுப்ரபாதம் தமிழ் ஆக்கத்தின் சில வரிகள் )


நோய் தீர்க்கும்
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்லோகம்

ஓம் நமோ பகவதே 
வாஸுதேவாய
தன்வந்த்ரயே 
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய 
த்ரைலோக்ய நாதாய 
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:

ஓம் ஹரி ஓம்
**

வெள்ளி, டிசம்பர் 05, 2025

திருப்புகழ்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வெள்ளிக்கிழமை


திருப்புகழ்
திரு அருணை
(அண்ணாமலை)

அகத்துறையில்
அமையப்பெற்றது

தனனத் தனதானன தனனத் தனதானன
     தனனத் தனதானன ... தனதான

இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரும்
     இறுதிச் சிறுகால்வரு ... மதனாலே

இயலைத் தருகானக முயலைத் தருமேனியில்
     எரியைத் தருமாமதி ... நிலவாலே

தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
     தொலையத் தனிவீசிய ... கடலாலே

துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
     துவளத் தகுமோதுயர் ... தொலையாதோ..

வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
     மடியச் சுடஏவிய ... வடிவேலா

மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
     மகிழப் புனமேவிய ... மயில்வீரா

அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வயல்
     அருணைத் திருவீதியி ... லுறைவோனே

அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
     அமரர்க் கரசாகிய ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்



முருகா  முருகா
**