நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 10, 2025

அழகே அழகு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
கிழமை 

அமரர் சில்பி அவர்களது
கை வண்ணம்..
சில ஓவியங்கள்

தஞ்சை



மதுரை



தில்லை


திருப்பரங்குன்றம்


திரு அண்ணாமலை


 நன்றி
 
நன்றி

ஓம் நம சிவாய
**

திங்கள், டிசம்பர் 08, 2025

சோம வாரம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கார்த்திகை
திங்கட்கிழமை
நான்காவது சோமவாரம்


இன்று
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருக்கடைக்காப்பு

இரண்டாம் திருமுறை
திருப்பதிக எண் 40

திருப்பிரமபுரம்  - சீர்காழி


எம்பிரான் எனக்கமுதம் ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.. 1

தாமென்றும் மனந்தளராத் தகுதியரா உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்தன் உடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.. 2

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமா முருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை யியல்பாக அறிந்தோமே.. 5

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே.. 6

தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்தும் இவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.. 11

திருச்சிற்றம்பலம்
 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் சிவாய நம
**

ஞாயிறு, டிசம்பர் 07, 2025

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ வீரமாகாளியம்மன் 
திருக்கார்த்திகை தரிசனம்






யாதுமாகி நின்றாய் காளி!..

ஓம் சக்தி ஓம்
**


சனி, டிசம்பர் 06, 2025

ஓம் ஹரி ஓம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
சனிக்கிழமை


மச்சநாதா   கூர்மநாதா   
வராக  நாதா  நரசிம்மா
நச்சி வந்த  வாமனனே 
பரசுராமா  ரகுராமா
மெச்சு  புகழ்  பலராமா  
ஸ்ரீ க்ருஷ்ண  கல்கியனே
இப்புவியில் வேங்கடவா  
வைகுந்தா சரண் புகுந்தேன் 
சரண் புகுந்தேன் சரண் புகுந்தேன் 
நினதடியைச் சரண் புகுந்தேன்...
**
(வேங்கடேச சுப்ரபாதம் தமிழ் ஆக்கத்தின் சில வரிகள் )


நோய் தீர்க்கும்
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்லோகம்

ஓம் நமோ பகவதே 
வாஸுதேவாய
தன்வந்த்ரயே 
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய 
த்ரைலோக்ய நாதாய 
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:

ஓம் ஹரி ஓம்
**

வெள்ளி, டிசம்பர் 05, 2025

திருப்புகழ்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வெள்ளிக்கிழமை


திருப்புகழ்
திரு அருணை
(அண்ணாமலை)

அகத்துறையில்
அமையப்பெற்றது

தனனத் தனதானன தனனத் தனதானன
     தனனத் தனதானன ... தனதான

இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரும்
     இறுதிச் சிறுகால்வரு ... மதனாலே

இயலைத் தருகானக முயலைத் தருமேனியில்
     எரியைத் தருமாமதி ... நிலவாலே

தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
     தொலையத் தனிவீசிய ... கடலாலே

துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
     துவளத் தகுமோதுயர் ... தொலையாதோ..

வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
     மடியச் சுடஏவிய ... வடிவேலா

மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
     மகிழப் புனமேவிய ... மயில்வீரா

அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வயல்
     அருணைத் திருவீதியி ... லுறைவோனே

அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
     அமரர்க் கரசாகிய ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்



முருகா  முருகா
**

வியாழன், டிசம்பர் 04, 2025

தீபஜோதி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வியாழக்கிழமை




தீப மங்கல ஜோதி நமோ நம

அண்ணாமலையாருக்கு
அரோஹரா
**

புதன், டிசம்பர் 03, 2025

தீபத்திருநாள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
புதன்கிழமை


 திருக்கார்த்திகை
தீபத் திருநாள்

அண்ணாமலை தரிசனம்

முதலாம் திருமுறை
திருப்பதிக எண் 10


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.. 1

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.. 2


பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல் நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே..3

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே..11
-: திருஞானசம்பந்தர் :-
திருச்சிற்றம்பலம்

 நன்றி
பன்னிரு திருமுறை

தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்


அண்ணாமலைக்கு அரோஹரா
அண்ணாமலைக்கு அரோஹரா
அண்ணா மலைக்கு அரோஹரா..
**

திங்கள், டிசம்பர் 01, 2025

அண்ணாமலை

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
திங்கட்கிழமை

இரண்டாம் சோமவார தரிசனம்


எதிர்வருகின்ற
கார்த்திகை கிரிவலம்
அனைவருக்கும் நலம் தருவதாக!..


காணொளிக்கு நன்றி

அண்ணாமலைக்கு அரோஹரா


இன்று
திங்கட்கிழமை காலை 6:45 மணியளவில்
கும்பகோணம்
ஸ்ரீமங்களாம்பிகை சமேத
ஸ்ரீ கும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் 
திருக்குடமுழுக்கு

துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே..
-: திருநாவுக்கரசர் :-

சிவ சிவ
**

ஞாயிறு, நவம்பர் 30, 2025

வருக வருக

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
ஞாயிற்றுக்கிழமை

கும்பகோணம்
ஸ்ரீ கும்பேஸ்வரர் கோயில் திருக்குட முழுக்கு வைபவத்திற்காக யாகசாலை பூஜைக்கு காவிரி நீர்  எடுத்து வரப்பட்ட நிகழ்வு..
 
நன்றி
நம்ம ஊரு கும்பகோணம்












 நன்றி 
துரை மனோகரன்

நாளை
திங்கட்கிழமை காலை 6:45 மணியளவில்
கும்பகோணம்
ஸ்ரீமங்களாம்பிகை சமேத
ஸ்ரீ கும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் 
திருக்குடமுழுக்கு

கும்பேஸ்வரர் போற்றி போற்றி
**

சனி, நவம்பர் 29, 2025

இதய கீதம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
சனிக்கிழமை


ஐயப்ப பக்தர்களின் இதய கீதமாகிய ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் கீர்த்தனம் பற்பல ஆண்டுகளுக்கு முன்னர்
கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் அவர்களால் பாடப்பட்டதாகும்..

நூறு ஆண்டுகளுக்கு முன் - 
மாதாந்திர நடை திறப்பின் போது மழை பிடித்துக் கொண்டது.. இரவாகியும் விடவில்லை.. அப்போது கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் அவர்கள் ஐயப்பனை நினைந்து மனமுருகிப் பாடினார்...

சிறு பொழுதில் மழை நின்றது.. அன்றைய
சம்பிரதாயங்கள்  தடையின்றி நிறைவேறின...

அதற்குப் பின்  சந்நிதி நடை அடைக்கப்படுகின்ற போதெல்லாம் பாடப்படுவதாயிற்று..

பக்தர்களது மனதை உருக்கிய கீர்த்தனையின் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்கப்படுவதாயின.

கீர்த்தனை - சாஸ்தாவின் துதி என்றும் ஸ்வாமியின்
கீர்த்தனம் என்றும்  புகழடைந்தது...

ஸ்வாமி ஐயப்பன் என்ற திரைப் படத்தின் வாயிலாக தமிழ் நெஞ்சங்களிலும் இந்தக் கீர்த்தனம் இடம் பிடித்தது..

எத்தனையோ பேர் பாடியிருப்பினும் திரு K.J.யேசுதாஸ் அவர்கள் பாடிய ஹரிவராசன கீர்த்தனையுடன் தான் இன்றளவும் ஐயப்பன் சந்நிதி நடை அடைக்கப்படுகின்றது.. 


ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

ஹரியாகிய திருமாலின் ஆசிகள் நிறைந்தவர், பேரண்டத்தை இயக்குபவர், ஹரியின் அருட்சாரமாக இருப்பவராகிய தங்களது  பாதங்களை வணங்குகிறோம்.  தீய சிந்தனைகளை அழிப்பவரே, இந்த அண்டத்தை ஆள்பவரே, ஹரி  ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்..

சரண கீர்த்தனம் பக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலயம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

சரணடைவோரின் பாடலை விரும்புபவர். பக்தர்களின் மனதில் நிறைந்தவர், பக்தர்களை ஆள்பவர், ஆடலை விரும்புபவர். உதிக்கும் சூரியனாக பிரகாசிப்பவர். உயிர்களின் நாயகராகிய ஹரி  ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்..

பிரணயசத்யகம் பிராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

உண்மையின் உணர்வாக இருப்பவர். எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவர். பேரண்டத்தைப் படைத்தவர். சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவர். 'ஓம்' எனும் மந்திர வடிவானவர். பக்தர்களின் பாடல்களை விரும்புபவராகிய ஹரி ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..

துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் தேவவர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்பிரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

குதிரை வாகனம் உடையவர் அழகிய திருமேனி கொண்டவர் ஆசிர்வதிக்கப்பட்ட தண்டாயுதத்தை ஏந்துபவர். ஒய்யாரமானவர். எமது குரு ஆனவர். பக்தர்களின் பாடல்களை விரும்புபவராகிய ஹரி ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..

திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்
திரிநயனம் பிரபும் திவ்யதேசிகம்
திரிதச பூஜிதம் சிந்திதப்பிரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

மூவுலங்களாலும் வணங்கப்படுபவர், தேவர்களின் ஆன்மாவாகத் திகழ்பவர்.சிவனின் உருவமாக இருப்பவர். தேவர்களால் வணங்கப்படுபவர். தினந்தோறும் உங்களை
மூன்று முறை வணங்குகின்றோம். எங்கள் மனம் நிறைந்த ஹரி ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..

பவபயாபகம் பாவுகாவகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாகனம் திவ்ய வாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

அச்சத்தை அழிப்பவர். செழிப்பைக் கொணர்பவர். இந்த அண்டத்தை ஆள்பவர். திருநீற்றை ஆபரணமாக அணிந்தவர். வெள்ளை யானையை வாகனமாகக் கொண்ட ஹரி  ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..

களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களபகோமளம் காத்ரமோகனம்
களபகேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

இனிமையான, மிருதுவான புன்முறுவல் உடையவர். அழகிய திருமுகத்தை உடையவர். இளமையும், மென்மையும் உடையவர். சொக்க வைக்கும் பேரழகையும், யானை, சிங்கம், குதிரை - இவற்றை வாகனமாகவும் கொண்ட - ஹரி  ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..

பக்தர்களால் நேசிக்கப்படுபவர், பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்பவர், வேதங்களால் துதிக்கப்படுபவர், ஞானியரை ஆசிர்வதிப்பவர். வேதங்களின் சாரம் ஆனவர். தெய்வீக இசையை விரும்புகின்ற ஹரி  ஹரனின் புதல்வரே உம்மைச் சரணடைந்தோம்!..

 நன்றி
ஐயப்ப பக்தஜன சபா

சாமியே சரணம் ஐயப்பா

ஓம் நம சிவாய
**

வெள்ளி, நவம்பர் 28, 2025

திருப்புகழ்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
பொது
(முத்தி நலம்)


தத்ததன தானத் ... தனதான

இத்தரணி மீதிற் ... பிறவாதே
எத்தரொடு கூடிக் ... கலவாதே
முத்தமிழை யோதித் ... தளராதே
முத்தியடி யேனுக் ... கருள்வாயே..

தத்துவமெய்ஞ் ஞானக் ... குருநாதா
சத்தசொரு பாபுத் ... தமுதோனே
நித்தியக்ரு தாநற் ... பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

முருகா  முருகா
**

வியாழன், நவம்பர் 27, 2025

சதய விழா

            

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வியாழக்கிழமை

ஐப்பசி சதயத்தன்று
தஞ்சை பெரிய கோயிலில்
நடைபெற்ற நாட்டியாஞ்சலி



காணொளிக்கு
நெஞ்சார்ந்த நன்றி


சிவாய நம ஓம்
**

ஞாயிறு, நவம்பர் 23, 2025

மங்கலம்

  

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
ஞாயிற்றுக்கிழமை


இன்று 
புதியதொரு இல்லத்திற்கு  செல்கின்றோம்...

அனைவரது நல்லாசிகளையும் பிரார்த்தனைகளையும்
வேண்டுகின்றேன்..

இன்றைய பதிவில் இனியதொரு பாடல்

திரைப்படம் 
இருளும் ஒளியும்
பாடல் 
கவியரசர்
இசை
K.V. மகாதேவன்
பாடியிருப்பவர்
P.சுசீலா


 
நன்றி
இணையம்

யாதேவி சர்வ பூதேஷூ 
லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம:

ஓம் நம சிவாய
**

சனி, நவம்பர் 22, 2025

பாயசம்

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை

பாயசம்
(நாலு வகை)


பாயஸான்ன ப்ரியாயை நம

தேவியின் அஷ்டோத்திர நாமங்களில் ஒன்று.

1/ ஷெமாய் பாயசம்
(சேமியா பாயசம்)

தேவையான பொருட்கள்:
சேமியா  200 gr
பால்  500 ml
சர்க்கரை  150 gr
நெய் 2 Tb sp
முந்திரி 150 gr
திராட்சை 50 gr
ஏலக்காய் 5

செய்முறை:

வாணலியில் நெய்யை ஊற்றி
முந்திரி, திராட்சையை  வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

சேமியாவையும்  வறுத்துக் கொண்டு. பாலில் கொதிக்க விடவும்.

முதல் கொதி வந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
இறக்குவதற்கு முன்
 ஏலக்காய் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
அவ்வளவு தான்!..

வங்கத்து ஷெமாய் தான் நம்ம ஊரில் சேமியா..


2/ குறுநொய் பாயசம்
(குறுணைப் பாயசம்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி குறுநொய் 50 gr
ஜவ்வரிசி 25 gr
பசும் பால்  ½ ltr
சர்க்கரை 100 gr
ஏலக்காய் தூள்  சிறிதளவு
நெய்  1 Tb sp
முந்திரி, திராட்சை விருப்பமான அளவு

செய்முறை
பச்சரிசியை கழுவி சிறிது நெய்யில் வறுக்கவும்.
பாலை சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.

அரிசி நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
 குறுநொய் பாயசம் தயார்

விருப்பத்திற்கு ஏற்ப, இதனை
 சிறு தானிய பாயசமாக மாற்றிக் கொள்வது உங்கஎ திறமை..

3/ தேங்காய்ப் பால் பாயசம் 

தேவையான பொருட்கள்:
பச்சரிசி குறுநொய் 150 gr
வெல்லம் 150 gr

தேங்காய்ப்பால்  முதல் நிலை
100 ml
தேங்காய்ப்பால் இரண்டாம்  நிலை  150 ml
ஏலக்காய்த் தூள் சிறிது
நெய் 1Tb sp
முந்திரி திராட்சை 

செய்முறை
அரிசியை சற்று ஊற வைத்து அலசிக் கொள்ளவும்..

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
 
அரிசியுடன் இரண்டாம் நிலை
தேங்காய்ப் பால் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும், முதல் நிலை தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும். ஏலக்காய், முந்திரி திராட்சை சேர்த்துக் கிளறவும்.
நெய் வாசத்துடன்  தேங்காய்ப் பால் பாயசம்
 
பாயசம் இறுக்கமாக இருந்தால் சற்று தளதளப்பாக வைத்துக் கொள்வது உங்கள்
திறமை

4/ சிறு பருப்புப் பாயசம்

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு 450 gr
வெல்லம் 200 gr
தேங்காய்ப் பால்  250 ml
ஏலக்காய்த் தூள் ¼ tsp
நெய் 2 Tb sp
முந்திரி 100 gr
திராட்சை  50 gr
தேவையான அளவு

செய்முறை :
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

பாசிப் பருப்பை சுத்தம் செய்து கொண்டு நெய்யில் வறுத்து சரியான அளவு தண்ணீருடன் வேக வைக்கவும்.

பக்குவமாக வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி இதனுடன் ஊற்றி
  மிதமான சூட்டில் வைத்து சற்றே நீர் வற்றும் போது தேங்காய் பால் சேர்க்கவும்.

'தள தள ' என கொதித்து வருகின்ற போது
 வறுத்த முந்திரி, திராட்சை
ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும்..

நிவேதனமாக சமர்ப்பிக்க ஏற்ற பாரம்பரிய பாயசம்..

சர்க்கரை என்றால் பாரம்பரியம் தான்.. சீனி அல்ல...

இனிப்பு என்றால் 
மகிழ்ச்சி.. இருப்பினும் அளவில் கவனம் தேவை..

நமது பாயசம்  இயற்கை  உணவுகளில் ஒன்று.

நமது நலம்
நமது கையில்

ஓம் சிவாய நம
**

வெள்ளி, நவம்பர் 21, 2025

திருப்புகழ்

           

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வெள்ளிக்கிழமை

இன்று 
திருப்புகழ்


தையதன தானத் ... தனதான

துள்ளுமத வேள்கைக் ... கணையாலே
தொல்லைநெடு நீலக் ... கடலாலே

மெள்ளவரு சோலைக் ... குயிலாலே
மெய்யுருகு மானைத் ... தழுவாயே

தெள்ளுதமிழ் பாடத் ... தெளிவோனே
செய்யகும ரேசத் ... திறலோனே

வள்ளல்தொழு ஞானக் ... கழலோனே
வள்ளிமண வாளப் ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்
-::--::--::-

முருகா முருகா
சிவாய நம ஓம்
**

வியாழன், நவம்பர் 20, 2025

இயற்கை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வியாழக்கிழமை


நாம் நமது பழக்கங்களை திருத்திக் கொள்வதன் மூலமாக  நம்மை நாமே  சரி செய்து கொள்ளலாம்:

அதிகாலையில் எழுங்கள்!

மலம் கழித்து உடலை சுத்தமாக்கிக்  கொண்டு

சூரிய ஒளியை எட்டு மணிக்குள் பெற்றுக் கொள்ளுங்கள்!

தூய காற்றில் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்!

ஓரளவுக்கு வியர்க்கும்படி வேலை அல்லது உடற்பயிற்சி சிறிது நேரம் செய்யுங்கள்..

தினம் இருமுறை சூழ்நிலையை கருத்தில் கொண்டு இயல்பான அல்லது வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்..

மனதில் நல்ல எண்ணங்களுடன்  இருங்கள்..
சூழ்நிலையைச் சார்ந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு மறக்காதீர்கள்..

முடிந்த வரை (சமைக்காத) இயற்கை உணவுகளை மட்டும் உண்ணுங்கள்..

முதலில் சாப்பிட்ட உணவு  செரித்த பிறகு மட்டுமே மீண்டும் சாப்பிடுங்கள்..

தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்!..

மாலை ஆறு மணிக்கு மேல் கைத் தலபேசியின் பயன்பாட்டையும் தொ. கா. நிகழ்ச்சிகளைப்
பார்ப்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள்..
தவிருங்கள்..

உறங்கச் செல்வதற்கு முன்பு சிறிது நேரம் அமைதியாய் இருங்கள. 

தியானம் செய்யுங்கள்! 

சீக்கிரமாக உறங்குங்கள்..
குறைந்த பட்சமாக எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுங்கள்!

இந்தப் பழக்கங்களைத் தவறாமல் கடைபிடித்து வாருங்கள்! 
உங்கள் உடல் நலத்தை நீங்களே உணருவீர்கள்!..

இயற்கை உணவே உண்மையான மருந்து! 

இயற்கையே கனிவான மருத்துவர்! 

இயற்கைச் சூழலே நம்பிக்கையான ஆரோக்கியம்!

நன்றி..
இயற்கை நலம்

நமது நலம்
நமது கையில்..
**