நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 28, 2025

சஷ்டி 7

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை


பொதுவாக சிவாலயங்களின் திருவிழா மரபுகள் எப்படி இருப்பினும் கந்த சஷ்டிக்கு அடுத்த நாள் முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது..

அந்த வகையில் இன்றைய
திருப்புகழ்..

இப்பாடலின் தொடக்கத்தில் தேவகுஞ்சரியும் நிறைவில் வள்ளி நாயகியும் குறிப்பிடப்படுகின்றனர்..


திருமகள் உலாவும் இருபுயமு ராரி
திருமருக நாமப் ... பெருமாள் காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் ... பெருமாள் காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் ...... பெருமாள் காண்

மணிதரளம் வீசி அணியருவி சூழ
மருவுகதிர் காமப் ... பெருமாள் காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் ... பெருமாள் காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் ... பெருமாள் காண்

இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் ... பெருமாள் காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி
கௌமாரம்

நாளும் ஒலிப்பேழையில் 
கேட்டு மகிழ்கின்ற பாடல் இது.


ஓம் சிவ சுப்ரமண்யாய
**

திங்கள், அக்டோபர் 27, 2025

சஷ்டி 6

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
திங்கட்கிழமை

இன்று
கந்தசஷ்டி

ஸ்ரீ முருகப்பெருமான்
தஞ்சை பெரிய கோயில

மதிகெட் டறவாடி மயங்கி அறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப அத்
திதி புத்திரர் வீறடு சேவகனே.. 50

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. 51
கந்தரனுபூதி
நன்றி கௌமாரம் 


நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டிதஸாமீ நமோநம ...
வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ... அருள்தாராய்..

ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...
 வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய 
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ... 
 பெருமாளே..


வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும் வெகுளுறு பசாச கணமும்

வெங்கழு குடன்கொடி பருந்து செம் புவனத்தில் வெம்பசி ஒழிக்க வந்தே

ஆதார கமடமும் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரி எலாம்

அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத் தசை  அருந்திப் புரந்த வைவேல்..

தாதார் மலர்ச் சுனை பழநி மலை சோலை மலை தனிப் பரங்குன்றே ரகம்

தணிகை செந்தூர் இடைக் 
கழி ஆவினன்குடி தடங்கடல் இலங்கை அதனில்

போதார் பொழிற் கதிர் காமத் தலத்தினைப் புகழும்  அவரவர் நாவினிற்

புந்தியில மர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புங்கவன் செங்கை வேலே...
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
*

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க  வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க  செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்..
-: கந்தபுராணம் :-

அனைவருக்கும் நன்றி

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

ஞாயிறு, அக்டோபர் 26, 2025

சஷ்டி 5

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை
சஷ்டி ஐந்தாம் நாள்


ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.. 38

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.. 46
 கந்தரனுபூதி
 நன்றி கௌமாரம்


சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
திகழ் கடப்பந்
தார் கொண்ட பன்னிரு தோள்களும்
தாமரைத் தாள்களும்ஓர்
கூர் கொண்ட வேலும் மயிலும் 
நற்கோழிக் கொடியும் அருட்
கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும் 
என் கண்ணுற்றதே..
-: திரு அருட்பா :-

ஸ்ரீ வள்ளலார் ஸ்வாமிகள் தமது நித்ய வழிபாட்டின் போது தணிகாசலத் திருக்காட்சியை நிலைக்கண்ணாடியில் தரிசித்தார்..

அச்சமயம் பாடிய பாடல்களில் ஒன்று..

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

சனி, அக்டோபர் 25, 2025

சஷ்டி 4


      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை
சஷ்டி நான்காம்  நாள்


சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்காநதி பால க்ருபாகரனே.. 34

நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே..  36
கந்தரனுபூதி


பாதி மதிநதி போது மணிசடை
     நாதர் அருளிய ... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ... மணவாளா

காதும் ஒருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு .... மருகோனே

காலன் எனையணு காமல் உனதிரு
     காலில் வழிபட ... அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ... சிறைமீளா

ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
     சூழ வரவரும் ... இளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனில் ... உறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
 நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

வெள்ளி, அக்டோபர் 24, 2025

சஷ்டி 3

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை
சஷ்டி மூன்றாம் நாள்


காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே. 22

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே.. 24
கந்தரனுபூதி


வசனமிக வேற்றி ... மறவாதே
     மனதுதுய ராற்றி ... லுழலாதே

இசைபயில்ஷ டாக்ஷ ... ரமதாலே
     இகபரசெள பாக்ய ... மருள்வாயே

பசுபதிசி வாக்ய ... முணர்வோனே
     பழநிமலை வீற்ற ... ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி ... மிகவாழ
     அமரர்சிறை மீட்ட ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

வியாழன், அக்டோபர் 23, 2025

சஷ்டி 2

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வியாழக்கிழமை
சஷ்டி இரண்டாம் நாள்


முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே..15

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடணனே.. 21
கந்தரனுபூதி


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து ... வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
     வினைமாதர் தந்தம் ... வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
     கொடிதான துன்ப ... மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
     குறைதீர வந்து ... குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
     வழிபாடு தந்த ... மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
     வடிவேலெ றிந்த ... அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
     மடியாரி டைஞ்சல் ... களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
     அலைவாயு கந்த ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

புதன், அக்டோபர் 22, 2025

சஷ்டி 1

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
புதன் கிழமை
சஷ்டி முதல் நாள்


ஆடும் பரி வேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.. 1

உதியா மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா  அபயா அமரா பதிகாவல சூர பயங்கரனே.. 18
கந்தரனுபூதி


சந்ததம் பந்தத் ... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ... திரியாதே

கந்தனென் றென்றுற் ... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ... றிடுவேனோ..

தந்தியின் கொம்பைப் ... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

திங்கள், அக்டோபர் 20, 2025

தீபாவளி

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 3
திங்கட்கிழமை


இன்று
தீபாவளி


உலகோர்
அனைவருக்கும்
அன்பின் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல்
  வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.. 3/54/1
-: திருஞானசம்பந்தர் :-
-::- -::- -::- -::- -::-

ஓம் ஹரி ஓம் 
நம சிவாய ஓம்
**

ஞாயிறு, அக்டோபர் 19, 2025

கருத்துகள்

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை


கண்ணாடி சரியாக அமையாததாலும் 
வேறு சில அடிப்படை பிரச்னைகளாலும்
எழுத்துப் பணியில் சற்றே தளர்வு..

சின்னச் சின்ன பதிவுகளைத் தவிர்த்து
சிறுகதைகளையோ சமையல் குறிப்புகளையோ தருவதற்கு இயலவில்லை..

எப்போது பிரச்னைகள் தீரும்?
தெரியவில்லை..

இந்நிலையில்
நெஞ்சை நெகிழ்வித்த அன்பின் கருத்துரைகள்
இன்று..

கமலாஹரிஹரன்
(சில மாதங்களுக்கு முன்பு எபி யில் வழங்கிய கருத்து)

வணக்கம் சகோதரரே .

/நான் எபியில் படத்திற்கு கதை என்பதாக அப்பாவின் மகள் என்றொரு கதை எழுதியிருக்கின்றேன்../

மீள் வருகை தந்து தந்த தங்களின் அன்பான தகவல்களுக்கு நன்றி. நீங்கள்தான் எ. பியில் அருமையான பல குடும்பக் கதைகள், அறிவார்ந்த யதார்த்தமான பல கதைகள், பக்தியும், வாய்மையும் நிச்சயம் ஒருநாள் வெற்றியை சந்திக்கும் என்னும்படியான கதைகள் என நிறைய கதைகள் எழுதியிருக்கிறீர்களே..! எல்லாமே நாங்கள் மிக விரும்பி படித்திருக்கிறோம்.

உங்கள் கதைகளை ஆர்வத்துடன் படித்து உங்கள் எழுத்துகளை கண்டு வியக்கும் ஒரு வாசக, வாசகிகளில் நானும் ஒருத்தி. . . இப்போது நீங்கள் குறிப்பிட்ட கதையையும் நான் படித்திருப்பேன். முதல் பாராவை பார்த்தால் நினைவு வந்து விடும். இப்போது உங்களின் கண் பார்வை குறையினால் நீங்கள் அதிகம் எழுதவில்லை. உங்கள் திறமை மிகுந்த எழுத்துக்களை நாங்களும் மிகவும் மிஸ் செய்கிறோம். கூடிய விரைவில் தங்கள் கண்கள் நலமடைந்து பல கதைகளை தாருங்கள் படித்து ரசிக்க காத்திருக்கிறோம். உண்மையில் எங்களுக்கு அதுதான் பொற்காலம். விரைவில் அக்காலம் திரும்பட்டுமென இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலாஹரிஹரன்.

அன்பின் ஸ்ரீராம் அவர்களது பதிவில் எழுதிய கருத்து..

துரை செல்வராஜூ
16/10/25 3:05 PM

நகைச்சுவை துணுக்குகளை தவிர்த்து விட்டேன்...
கண்ணாடியின் தடுமாற்றத்தில்
கைத்தல பேசியில் இவ்வளவு தான் முடிகின்றது..
பதிலளிநீக்கு

பதில்கள்
ஸ்ரீராம்.
16/10/25 3:09 PM

பரவாயில்லை.  'கண்பார்வை கோளாறை சரி செய்து விட்டேன்' என்னும் உங்கள் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன்.

நெல்லைத் தமிழன்
16/10/25 3:38 PM

விரைவில் சரியாகி விடும் துரை செல்வராஜு சார்..
-::-
இப்படியான அன்பின் வார்த்தைகள் 
நெருக்கடியான சூழ்நிலையில் 
ஆறுதலாக இருக்கின்றன..

அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றியும் 
வணக்கமும் என்றும் உரியன..

வாழ்க நலம் 

சிவாய நம ஓம்
**

சனி, அக்டோபர் 18, 2025

கங்கா காவிரி

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***


இன்று
ஐப்பசி முதல் நாள்
சனிக்கிழமை


இன்று சூரியோதயப் பொழுதில் - 
ஈசன்  எம்பெருமானின் கட்டளைப்படி , மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரியுடன் கங்கை  கலப்பதாக ஐதீகம்..

இதனால் காவிரி நதி தீரம் முழுதுமே மேலும் சிறப்புறுகின்றது..

இப்படிக் கலக்கின்ற கங்கை - துலா மாதம் எனும் இந்த ஐப்பசி மாதம் முழுதும் காவிரியுடன் கலந்திருந்து கார்த்திகை முதல் நாள் மாலைப் பொழுதில் விடை பெற்றுக் கொள்கின்றாள்..

காவிரி நதியில் இந்த ஐப்பசி
மாதம் முழுதும் நீராடுவதை மிகுந்த புண்ணியமாகக் கொள்கின்றனர் மரபு சார்ந்த மக்கள்.

காவிரி நதிக் கரையிலுள்ள சிவ வைணவ ஆலயங்கள் அனைத்திலும் ஐப்பசி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன..

நாமும் மங்கல நீராடி புண்ணியப் பலன்களை எய்துவோம்..

காவிரியாள் வாழ்க
கங்கா தேவி வாழ்க!

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**

வெள்ளி, அக்டோபர் 17, 2025

ஜனனி ஜனனி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வெள்ளிக்கிழமை

இன்று
இசைஞானி இளையராஜா அவர்கள் பாடிய
வாலி அவர்களது பாடல்


சிவ ஸக்த்யா யுக்தோ யதி பவதி 
சக்த ப்ரபவிதும் நசே 
தேவம் தேவோ நகலு குசலக ஸ்பந்திது மபி
அதஸ்த் வாம் ஆராத்யாம் ஹரி ஹர 
விரிஞ்சாதிபி ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வ கதமக்ர்த 
புண்யஹ ப்ரபவதி..
-: சௌந்தர்ய லஹரி :-

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்

சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

நின்ற நாயகியே இட பாகத்திலே..

ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ

ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் 
பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் 
சப்த தீர்த்தங்களும்

ஷண் மார்க்கங்களும் 
சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் 
தொழும் பூங்கழலே மலை மாமகளே..

தொழும் பூங்கழலே மலை மாமகளே
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ..

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே

பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்

பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
-::-

பாடல் முழுதும் மனதில் என்றாலும் 
எழுத்துரு ஆக்கத்திற்கு
 நன்றி விக்கி




 நன்றி இணையம்

ஓம் சக்தி ஓம்
**

செவ்வாய், அக்டோபர் 14, 2025

சந்தனம்

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை

 எங்கள் பிளாக் தளத்தில் 
முன்பு எழுதிய கதைகளுள் ன்று இன்றைய பதிவில்..

சின்னச் சின்ன பிழை 
திருத்தங்களுடன்!..

சந்தனம்..
***********

விடியற்காலை.. 
சுப முகூர்த்தம்.. 

ஹோமப்  புகையின் ஊடாக பசுவும் கன்றும் மங்கலகரமாக புது வீட்டுக்குள் வந்தன.. வந்த நேரத்துக்கு ஒன்றுக்கு இரண்டாகச் செய்ததும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.. 

" வீட்டுக்குள்ள பசு சாணி போடறது நல்ல சகுனமாச்சே!.. "

சந்தன பாண்டியன்.. சின்ன வயது தான்.. ஆனால் எல்லாருக்கும் அண்ணாச்சி..

அண்ணாச்சி அவரது மனைவி ரெண்டு பிள்ளைகள் - கழுத்தில் மாலைகளுடன் ஹோம குண்டத்தின் முன்பாக விழுந்து வணங்கினார்கள்..

பெரியவர்கள் அட்சதை தூவினார்கள்.. பெண்கள் குலவையிட்டனர்..

பக்கத்தில் ஆறேழு வருடங்களாக சும்மா கிடந்த மனை.. திடுதிப்பென்று முகூர்த்தம்.. மஞ்சள் குங்குமத்துடன் அஸ்திவாரக் கல்.. விறுவிறு.. என்று வேலைகள் நடந்தன.. இன்றைக்கு மாவிலைத் தோரணங்களுடன்  வண்ண வண்ண விளக்கொளியில் குளித்துக் கொண்டிருந்தது வீடு..

சந்தன பாண்டியன் அண்ணாச்சிக்கு  மார்க்கெட்டில் பெரிய மளிகை.. நாணயம் நம்பிக்கைக்கு பெயர் பெற்ற கடைகளில் அண்ணாச்சியின் மளிகையும் ஒன்று.. கடும் உழைப்பாளி.. நேர்மையான மனுஷன்..  வாடிக்கையாளர்கள் எல்லாருக்குமே அழைப்பிதழ்..
குடும்பத்தினருடன் வாசலில் நின்று கொண்டு அன்பான  வரவேற்பு.. நெல்லை மண்ணின் வாசம்..

சொந்தமும் நட்பும் விடியற் காலையில் இருந்தே குழுமியிருக்க - வண்ணத் துணிப் பந்தலின் கீழ் விருந்து உபசாரம்..

பழைமை பாரம்பர்யம், கலை கலாச்சாரம் - என்று, சத்தம் போட்டுக் கொண்டிருந்தாலும் ஆணோ பெண்ணோ வீட்டுக்கு ஒரே ஒரு பிள்ளை என்றாகிப் போன கால சூழ்நிலையில் முகம் பார்த்து உபசரிப்பதற்கான உறவு முறை என்ற வட்டம் இல்லாமல் போனதே அதற்கு எந்த ஒரு விடையும் இல்லைம ..

மிச்சம் மீதி இருந்ததையும்  சூறைத் தேங்காய் போல சிதற அடித்தாயிற்று..

இது போக வேறொரு பிரச்னை..
முன்பெல்லாம் தெருக்களில் அக்கம் பக்கத்து வீடுகளிலும் சரி.. உறவுமுறை வீடுகளிலும் சரி.. விசேஷங்கள் என்றால் -
எல்லாரும் எல்லா வேலைகளையும்  இழுத்துப் போட்டுக் கொண்டு எந்த பேதமும் இன்றி செய்வார்கள்.. இப்போது அப்படி இல்லை..

" என் மகளை வாசல்ல நிக்க வச்சி சந்தனம் கொடுக்க சொன்னீங்களாமே?.. "

" எம் பிள்ளையக் கூப்பிட்டு தண்ணீர் கொடுக்கச் சொன்னீர்களாமே.. அவன் கிரேடு என்னான்னு தெரியுமா?.. "

இப்படி வித விதமான வில்லங்கங்கள் வீட்டுக்குள் புகுந்து புயலைக் கிளப்பும் போது நல்ல மனங்கள் தளர்ந்தே விடுகின்றன..

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனவர்களுள் அண்ணாச்சி சந்தன பாண்டியனும் ஒருவர்..

பந்தல், சமையல்,  பரிமாறுதல்  என்று எல்லாவற்றையும் ஏஜென்சியிடம் கொடுத்து விட்டார்..

அவர்கள் அது அதற்கும் அதற்கேற்ற கட்டணம்  வைத்திருக்கின்றார்கள்.. கொடுத்து விட்டால் போதும்.. எல்லாம் கச்சிதமாக முடிந்து விடுகின்றன.. 

பன்னீர் தெளித்து சந்தனமும் ரோஜாப்பூவும் கொடுப்பதற்கு
அளவெடுத்துச் செய்த மாதிரி
ஆறு பெண் பிள்ளைகள்..
கிருஷ்ணனோடு ஆடும் கோகுலத்துக் கிளிகளைப் போல் அழகு.. பளபளப்பான பாவாடையும் தாவணியும் அழகின் அழகு ..

லட்சணமான பசங்கள் பத்து பேர்... இலையிடவும் தண்ணீர் வைக்கவும் பரிமாறவுமாக..
எல்லாரும் வட நாட்டில் இருந்து வேலை தேடி வந்தவர்கள்..

பந்தி உபசரிப்பு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென பரபரப்பு..

இரண்டாவது பந்தியில் அசோகா வைத்துக் கொண்டிருந்தவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து விட்டான்..

" ஆம்புலன்ஸ்.. ஆம்புலன்ஸ்.. "

எல்லாரும் சத்தம் போட்டார்கள் மயங்கி விழுந்தவனைத் தூக்கிக் கொண்டு சிலர் வாசலுக்கு ஓடினார்கள்..

" எங்கேடா... அந்த ஏஜெண்டு?.. "

" அவந்தான் அப்பவே ஓடிட்டானே!.. "

விருந்துக்கு வந்திருந்தவர் அனைவரையும் பயம் பிடித்துக் கொண்டது.. நானும் எழுந்து ஓடினேன்...

என்ன மொழி?.. ஹிந்தி எனப் புரிந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது..  

" நல்ல நேரத்தில் இது என்ன.. " - என்று எல்லாரிடத்தும் கலக்கம்.. பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் குழப்பம்... அவர்களை ஆசுவாசப் படுத்தியபடி பரிமாறத் தொடங்கினேன்...

சிறிது நேரத்தில் - " பையன் நல்லா இருக்கின்றான்... பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை!.. "
என்றபடி,  பந்தலுக்குள் வந்த அண்ணாச்சி என்னை நெருங்கி - " கொஞ்சம் வாங்களேன் சாமிநாதன்.." - என்றார்..

அவருடன் சென்றபோது அங்கே மருள மருள விழித்துக் கொண்டிருந்தாள் - வரவேற்பு மேஜையில் ரோஜாப்பூ கொடுத்த பெண்..
 
" சாமிநாதன்.. உங்களுக்குத் தான் இந்தி தெரியுமே.. என்ன.. ன்னு கேளுங்க!.. "

வளைகுடா நாட்டில் கற்றுக் கொண்ட பேச்சு வழக்கு பெரும் துணையாக இருந்தது..

விழிகளால் " என்ன?.. " - என்றேன்..

" ஜீ!.. ஆஜ் உஸ்கீ பெஹன் கே ஷாதி.. சிஸ்டர் கலியாணம்.. இஸ்லியே.. "

அண்ணாச்சியிடம் விவரித்தேன்..

அவரது முகம் மாறியது.. என்னை இழுத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு ஓடினார்..

அங்கே கட்டிலில் சோர்வாக படுத்திருந்தான் அந்தப் பையன்.. அவனுக்குத் துணையாக இன்னொருவன்..

" விவரம் கேளுங்க சாமிநாதன்!.. "
கேட்டேன்... சொன்னான்..

" பெயர் ராம் சரண்..  கூட ஒரு தங்கை.. அப்பா இல்லாமல் வளர்ந்த பிள்ளைகள்.. அம்மாவுக்கு கிருஷ்ண மந்திர் கோசாலையில் சாணம் அள்ளுகிற வேலை.. மூன்று வேளையும் சாப்பாடு.. சம்பளமாக சொற்ப தொகை.. இத்துடன் கோசாலைக்கு வருபவர்கள் கொடுக்கும் தானம்... இவ்வளவு தான்.. இங்கே வந்த பிறகுதான் வீட்டு விளக்கு ஓரளவு நன்றாக எரிகின்றதாம்.. இப்போ கூட தங்கச்சிக்கு கன்யா தானம் கிருஷ்ணன் கோயில் நிர்வாகம் தான் செய்யுதாம்...
கொசுறாக வேறொன்றும் வேண்டுகோள்.. "

" வேலை நேரத்துல மயக்கம் போட்டு விழுந்ததுக்காக சம்பளத்தைக் குறைச்சிடாதீங்க.. மகராஜ்!.. "

அண்ணாச்சியின் கண்கள் கலங்கி விட்டன..

இந்தப் பசங்களுக்கும் பொண்ணுகளுக்கும் சுப முகூர்த்த மாதங்கள் தான் கொண்டாட்டம்.. மற்ற மாதங்கள் பிரச்னையானவை..
ஊருக்குப் பணம் அனுப்பணும்.. சமைக்கணும்.. சாப்பிடணும்.. மற்ற தேவைகளும் இருக்கு.. இச்சமயங்களில் துப்புரவு வேலைகள் தான் கைக்கு வரும்..

" இப்போ ஊருக்குப் போய் தங்கச்சியப் பார்க்கிறானா?.. கேளுங்க!.. "

கேட்டேன்...

" ராம்.. ராம்!.." - என்றபடி, அண்ணாச்சியையும் என்னையும் தொட்டுத் தொட்டு கும்பிட்டான்.. விஷயத்தைப் புரிந்து கொண்ட மற்றவனும் கையெடுத்துக் கும்பிட்டான்..

" ஜீ.. ஜீ!.."  - என்றான்..

" இது மளிகைக் கடை வேலைடா.. கஷ்டமா இருக்கும்!.. "

" செய்றேங்க மகராஜ்.. இன்னிக்கே வந்து சேர்ந்துக்கறேன்!.. "

அண்ணாச்சி உருகி விட்டார்..
கஷ்டங்களை அனுபவித்தவர் அல்லவா!..

ராம் சரணுக்கு ரயிலில் டிக்கெட் போடும்படி அண்ணாச்சியின் செல்போனில் இருந்து செய்தி பறந்தது..

" ராம் சரணுக்கு வேற என்ன தெரியும்?.. "

" கம்ப்யூட்டர்.. ல கணக்கு வழக்கு எழுதத் தெரியும்.. "

" ஊருக்குப் போய்ட்டு வந்து என்னைப் பார்!.. "

ராம் சரண் - எனது கைகளைப் பற்றிக் கொண்டு காதருகில் பேசினான்..

" என்னவாம்?.. " 
- அண்ணாச்சியின் கேள்வி..
அவரிடம் தயங்கியபடி சொன்னேன்...

" ரோஜாப்பூ கொடுத்தாளே அந்த சிவத்த பொண்ணு... அவ மேல இவனுக்கு ஒரு இதுவாம்... அவளுக்கும் மகராஜ் இரக்கம் காட்டுங்க!... ன்னு சொல்றான்!.. "

அண்ணாச்சி பலமாகச் சிரித்தார்.. 

அன்பும் இரக்கமும் சந்தனமாகக் கமழ்ந்தன..
***

வாழ்க வையகம்
**

திங்கள், அக்டோபர் 13, 2025

நிவேதனம் 4

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
நான்காம் திங்கள்


புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

அந்த வகையில் இன்று
 தயிர் சாதம்

குழைய வடித்த பச்சரிசி சாதத்தில் 
சரியான அளவு உப்பு சேர்த்து சிறிய கேரட் சிறு துண்டு இஞ்சி இவற்றை மெலிதாக நறுக்கிப் போட்டு
தேவைக்கேற்ப
புத்தம் புதிய தயிரையும் சிறிது வெண்ணெயையும் சேர்த்துக் கிளறி கடலெண்ணெயில் - கடுகு, உளுத்தம் பருப்பு, வற மிளகாய் கறிவேப்பிலையோடு
தாளிதம் செய்து மீண்டும் கிளறி விட்டால் நறுமணம் கமழும் தயிர் சாதம் ...

தயிர் எப்படி!?..

தயிர் சாதத்தை
தளதள என்று செய்வது வழக்கம்.. கொஞ்சம் இறுக்கமாகவும்  செய்து கொள்ளலாம்..

வீட்டில் உறையூற்றப் பெற்ற தயிரோ இரசாயனத் தயிரோ 
அவரவர் விருப்பம்..

தயிரை அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்துக் கொள்வதும் அவரவர் விருப்பம்..

ஓம் ஹரி ஓம்
**

சனி, அக்டோபர் 11, 2025

புரட்டாசி 4

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
நான்காம் 
சனிக்கிழமை


ஸ்ரீநிவாசா
 கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா
கோவிந்தா
பக்த வத்சல
கோவிந்தா
பரம தயாளா
கோவிந்தா..

கோவிந்தா ஹரி
கோவிந்தா
நந்த நந்தன
கோவிந்தா..
கோவிந்தா ஹரி
கோவிந்தா
பாப விமோசன
கோவிந்தா..


இன்றைய பாடல் 


 நன்றி இணையம்


ஸ்ரீ ஸ்ரீநிவாசாய மங்கலம்

ஓம் ஹரி ஓம்
நமோ வேங்கடேசாய
**

வெள்ளி, அக்டோபர் 10, 2025

செங்கோடன்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வெள்ளிக்கிழமை


விழிக்குத் துணை திரு மென்மலர்ப் 
பாதங்கள் மெய்ம்மை குன்றா
   மொழிக்குத் துணை முருகா 
எனும் நாமங்கள் முன்பு செய்த
      பழிக்குத் துணை அவன் பன்னிரு 
தோளும் பயந்த தனி
         வழிக்குத் துணை வடிவேலும் 
செங்கோடன் மயூரமுமே.. 70

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு 
வெற்பனை செஞ்சுடர் வேல்
   வேந்தனைச் செந்தமிழ் நூல் 
விரித்தோனை விளங்கு வள்ளிக்
      காந்தனைக் கந்தக் கடம்பனைக் 
கார்மயில் வாகனனைச்
         சாந்துணைப் போதும் மறவா தவர்க்கு 
ஒரு தாழ்வில்லையே.. 72


மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
   மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
      சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
         நாலா யிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே.. 90
 நன்றி கௌமாரம்
-::-


முருகா முருகா
ஓம் நம சிவாய 
**