நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 27, 2025

சதய விழா

            

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வியாழக்கிழமை

ஐப்பசி சதயத்தன்று
தஞ்சை பெரிய கோயிலில்
நடைபெற்ற நாட்டியாஞ்சலி



காணொளிக்கு
நெஞ்சார்ந்த நன்றி


சிவாய நம ஓம்
**

ஞாயிறு, நவம்பர் 23, 2025

மங்கலம்

  

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
ஞாயிற்றுக்கிழமை


இன்று 
புதியதொரு இல்லத்திற்கு  செல்கின்றோம்...

அனைவரது நல்லாசிகளையும் பிரார்த்தனைகளையும்
வேண்டுகின்றேன்..

இன்றைய பதிவில் இனியதொரு பாடல்

திரைப்படம் 
இருளும் ஒளியும்
பாடல் 
கவியரசர்
இசை
K.V. மகாதேவன்
பாடியிருப்பவர்
P.சுசீலா


 
நன்றி
இணையம்

யாதேவி சர்வ பூதேஷூ 
லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம:

ஓம் நம சிவாய
**

சனி, நவம்பர் 22, 2025

பாயசம்

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை

பாயசம்
(நாலு வகை)


பாயஸான்ன ப்ரியாயை நம

தேவியின் அஷ்டோத்திர நாமங்களில் ஒன்று.

1/ ஷெமாய் பாயசம்
(சேமியா பாயசம்)

தேவையான பொருட்கள்:
சேமியா  200 gr
பால்  500 ml
சர்க்கரை  150 gr
நெய் 2 Tb sp
முந்திரி 150 gr
திராட்சை 50 gr
ஏலக்காய் 5

செய்முறை:

வாணலியில் நெய்யை ஊற்றி
முந்திரி, திராட்சையை  வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

சேமியாவையும்  வறுத்துக் கொண்டு. பாலில் கொதிக்க விடவும்.

முதல் கொதி வந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
இறக்குவதற்கு முன்
 ஏலக்காய் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
அவ்வளவு தான்!..

வங்கத்து ஷெமாய் தான் நம்ம ஊரில் சேமியா..


2/ குறுநொய் பாயசம்
(குறுணைப் பாயசம்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி குறுநொய் 50 gr
ஜவ்வரிசி 25 gr
பசும் பால்  ½ ltr
சர்க்கரை 100 gr
ஏலக்காய் தூள்  சிறிதளவு
நெய்  1 Tb sp
முந்திரி, திராட்சை விருப்பமான அளவு

செய்முறை
பச்சரிசியை கழுவி சிறிது நெய்யில் வறுக்கவும்.
பாலை சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.

அரிசி நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
 குறுநொய் பாயசம் தயார்

விருப்பத்திற்கு ஏற்ப, இதனை
 சிறு தானிய பாயசமாக மாற்றிக் கொள்வது உங்கஎ திறமை..

3/ தேங்காய்ப் பால் பாயசம் 

தேவையான பொருட்கள்:
பச்சரிசி குறுநொய் 150 gr
வெல்லம் 150 gr

தேங்காய்ப்பால்  முதல் நிலை
100 ml
தேங்காய்ப்பால் இரண்டாம்  நிலை  150 ml
ஏலக்காய்த் தூள் சிறிது
நெய் 1Tb sp
முந்திரி திராட்சை 

செய்முறை
அரிசியை சற்று ஊற வைத்து அலசிக் கொள்ளவும்..

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
 
அரிசியுடன் இரண்டாம் நிலை
தேங்காய்ப் பால் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும், முதல் நிலை தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும். ஏலக்காய், முந்திரி திராட்சை சேர்த்துக் கிளறவும்.
நெய் வாசத்துடன்  தேங்காய்ப் பால் பாயசம்
 
பாயசம் இறுக்கமாக இருந்தால் சற்று தளதளப்பாக வைத்துக் கொள்வது உங்கள்
திறமை

4/ சிறு பருப்புப் பாயசம்

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு 450 gr
வெல்லம் 200 gr
தேங்காய்ப் பால்  250 ml
ஏலக்காய்த் தூள் ¼ tsp
நெய் 2 Tb sp
முந்திரி 100 gr
திராட்சை  50 gr
தேவையான அளவு

செய்முறை :
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

பாசிப் பருப்பை சுத்தம் செய்து கொண்டு நெய்யில் வறுத்து சரியான அளவு தண்ணீருடன் வேக வைக்கவும்.

பக்குவமாக வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி இதனுடன் ஊற்றி
  மிதமான சூட்டில் வைத்து சற்றே நீர் வற்றும் போது தேங்காய் பால் சேர்க்கவும்.

'தள தள ' என கொதித்து வருகின்ற போது
 வறுத்த முந்திரி, திராட்சை
ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும்..

நிவேதனமாக சமர்ப்பிக்க ஏற்ற பாரம்பரிய பாயசம்..

சர்க்கரை என்றால் பாரம்பரியம் தான்.. சீனி அல்ல...

இனிப்பு என்றால் 
மகிழ்ச்சி.. இருப்பினும் அளவில் கவனம் தேவை..

நமது பாயசம்  இயற்கை  உணவுகளில் ஒன்று.

நமது நலம்
நமது கையில்

ஓம் சிவாய நம
**

வெள்ளி, நவம்பர் 21, 2025

திருப்புகழ்

           

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வெள்ளிக்கிழமை

இன்று 
திருப்புகழ்


தையதன தானத் ... தனதான

துள்ளுமத வேள்கைக் ... கணையாலே
தொல்லைநெடு நீலக் ... கடலாலே

மெள்ளவரு சோலைக் ... குயிலாலே
மெய்யுருகு மானைத் ... தழுவாயே

தெள்ளுதமிழ் பாடத் ... தெளிவோனே
செய்யகும ரேசத் ... திறலோனே

வள்ளல்தொழு ஞானக் ... கழலோனே
வள்ளிமண வாளப் ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்
-::--::--::-

முருகா முருகா
சிவாய நம ஓம்
**

வியாழன், நவம்பர் 20, 2025

இயற்கை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வியாழக்கிழமை


நாம் நமது பழக்கங்களை திருத்திக் கொள்வதன் மூலமாக  நம்மை நாமே  சரி செய்து கொள்ளலாம்:

அதிகாலையில் எழுங்கள்!

மலம் கழித்து உடலை சுத்தமாக்கிக்  கொண்டு

சூரிய ஒளியை எட்டு மணிக்குள் பெற்றுக் கொள்ளுங்கள்!

தூய காற்றில் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்!

ஓரளவுக்கு வியர்க்கும்படி வேலை அல்லது உடற்பயிற்சி சிறிது நேரம் செய்யுங்கள்..

தினம் இருமுறை சூழ்நிலையை கருத்தில் கொண்டு இயல்பான அல்லது வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்..

மனதில் நல்ல எண்ணங்களுடன்  இருங்கள்..
சூழ்நிலையைச் சார்ந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு மறக்காதீர்கள்..

முடிந்த வரை (சமைக்காத) இயற்கை உணவுகளை மட்டும் உண்ணுங்கள்..

முதலில் சாப்பிட்ட உணவு  செரித்த பிறகு மட்டுமே மீண்டும் சாப்பிடுங்கள்..

தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்!..

மாலை ஆறு மணிக்கு மேல் கைத் தலபேசியின் பயன்பாட்டையும் தொ. கா. நிகழ்ச்சிகளைப்
பார்ப்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள்..
தவிருங்கள்..

உறங்கச் செல்வதற்கு முன்பு சிறிது நேரம் அமைதியாய் இருங்கள. 

தியானம் செய்யுங்கள்! 

சீக்கிரமாக உறங்குங்கள்..
குறைந்த பட்சமாக எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுங்கள்!

இந்தப் பழக்கங்களைத் தவறாமல் கடைபிடித்து வாருங்கள்! 
உங்கள் உடல் நலத்தை நீங்களே உணருவீர்கள்!..

இயற்கை உணவே உண்மையான மருந்து! 

இயற்கையே கனிவான மருத்துவர்! 

இயற்கைச் சூழலே நம்பிக்கையான ஆரோக்கியம்!

நன்றி..
இயற்கை நலம்

நமது நலம்
நமது கையில்..
**

செவ்வாய், நவம்பர் 18, 2025

அங்கும் இங்கும்

            

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
செவ்வாய்க்கிழமை


முருகப் பெருமானின் கல்யாணத் திருக்கோலத்தில் வள்ளி - தெய்வானை என, இரு தேவியருடன் தரிசிக்கின்றோம்..

சரி..
வள்ளி எந்தப் பக்கம்?.. தெய்வானை எந்தப் பக்கம்?..

முருகனை வள்ளி நாயகி தேவகுஞ்சரி சகிதமாகப் பார்க்கும் போது உங்களுக்கு இந்தக் கேள்வி வந்திருக்கிறதா?..

இல்லை எனில் உங்களுக்கு விவரங்கள் ஏற்கனவே தெரிந்திருக்கும் போல் இருக்கிறது.

இருப்பினும், 
மகிழ்ச்சியுடன் இந்தப் பதிவு..

முருகனின் வலப் பக்கம் வள்ளி  இடப் பக்கம் தெய்வானை. அதாவது. வள்ளி இச்சா சக்தியையும், தெய்வானை கிரியா சக்தியையும் குறிப்பவர்கள். 
முருகப் பெருமான் ஞான சக்தி..

வள்ளி இகலோகத்திலும், தெய்வானை பரலோகத்திலும் நம்மை காப்பவர்களாம்.

வள்ளியின் திருக்கரத்தில்  பூவுலகத்தின்  தாமரை மலர் இருக்கிறது. தெய்வானையின் திருக்கரத்தில் தேவலோகத்தின் நீலோத்பல மலர். 

முருகப் பெருமானின் வலக் கண்ணை சூரியனாகவும், இடக் கண்ணை சந்திரனாகவும் சொல்வது மரபு. அவனுக்கு தந்தையைப் போன்று நெற்றிக் கண்ணும் உண்டு.

வலப்புறத்தில் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்கும். அதே போல, இடப்புறத்தில் தெய்வானையின் கையில் இருக்கும் நீலோத்பல மலரும், முருகனின் இடக் கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்கும். 

அதனால், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு  எந்நேரமும் அகலாத துணையாய் அவன் இருப்பான் என்பது ஐதீகம்..

தாமரை மலர் பாரத நாட்டின் தேசிய மலர்.. நீலோத்பல மலர் இலங்கையின் தேசிய மலர்..

Fb ல் கிடைத்ததை என்னளவில் ஒழுங்கு செய்துள்ளேன்..

 நன்றி ஓதிமலை ஆண்டவர்.

சிவாய நம ஓம்
**

திங்கள், நவம்பர் 17, 2025

சரணம் சரணம்..

           

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை முதல் நாள்
திங்கள் கிழமை


சாத்தன் என்ற சொல்லுக்கு காட்டு வழியில் செல்கின்ற வணிகக் கூட்டத்தினைக் காத்து நிற்கின்ற தலைவன் எனப் பொருள் கூறுகின்றனர் ஆன்றோர்...

வழித் துணைவன் வழி காட்டுபவன் என்றும் பொருள் கொள்ளலாம்...

ஸ்ரீ தர்மசாஸ்தா எனும் தெய்வ வடிவும் அவ்வண்ணமே...

ஸ்ரீசாஸ்தா - தமிழில் சாத்தன் எனப்படுகின்றார்..

இத்தகைய சாத்தனை ஈசன் எம்பெருமானின் மகன் என்கின்றார் திருநாவுக்கரசர்..

பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமும் சடையில் வைத்தார் திருப்பயற்றூரனாரே.. 4/32/4
-: திருப்பயற்றூர் தேவாரம் :-


பெண்களைக் காத்தருள்பவர் ஸ்ரீ மகா சாஸ்தா என்று
 இவரைப் போற்றுகின்ற ஸ்ரீ கந்தபுராணம்  - இவரது பொறுப்பில்   இந்திராணியை ஒப்படைத்து விட்டுத் தான் தேவேந்திரன்
 தவம் இயற்ற - சீர்காழிக்குச் சென்றதாக  இயம்புகின்றது...

இவரது முதன்மைத் தளபதி கருப்பசாமி எனப்படும் ஸ்ரீ மகாகாளர்..

பழங்காலத்தில் சாத்தன் சாத்துவன் என்பன சூடும் பெயர்களாக இருந்துள்ளன..

(புலவர் - சீத்தலைச் சாத்தனார்

பெரு வணிகர் மாசாத்துவன்)

சாத்தனூர் சாத்த மங்கலம் என்ற ஊர்ப் பெயர்களும் சிந்திக்கத் தக்கன..

இத்தகைய புகழ் 
பெறும் சாத்தனுக்கு பற்பல திரு வடிவுகள் சொல்லப்பட்டிருக்கின்றன..

அவற்றுள் ஒன்று தான் ஸ்ரீ பூர்ணகலா பொற்கலா தேவியருடன் கூடிய  ஐயனார் திருக்கோலமும்...

காவல் நாயகர் ஸ்ரீ ஐயனார்..

இன்றளவும் நீர்நிலைகளின் காவலர்  ஐயனார் தான்...

ஐயனாரின் யோகத் திருக்கோலமே ஸ்ரீ ஐயப்பன்...

இந்த யோகத் திருக்கோலத்திற்காக பற்பல திருவிளையாடல்கள் நிகழ்ந்துள்ளன..

இப்படி யோக மூர்த்தியாகிய ஸ்ரீ ஐயப்பன் மகர சங்கராந்தியாகிய தை மாதத்தின் முதல் நாளில் ஜோதியாகக் காட்சி தருகின்றார்..

இவரைத் தரிசிப்பதற்கு ஒரு மண்டல காலம் கடும் விரதங்களை மேற்கொள்ள வேண்டும்...

அந்த விரதங்கள் இன்று முதல் தொடங்குகின்றன...

நாமும் நல்ல பழக்க வழக்கங்களுடன் பக்தி நெறியில் நடந்து ஐயனைத் தரிசிப்போம்...


ஓம் 
பூதநாத சதானந்த
சர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நம:

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் 
ஆசாரக் குறைவுகளையும்
பொறுத்துக் காத்து ரட்சித்து அருள் புரிய வேண்டும்.. 

சத்யமான பொன்னு பதினட்டாம் படிகளின் மேல் வீற்றிருக்கும் 
ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஓம் 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
***

சனி, நவம்பர் 15, 2025

காக்க.. காக்க


          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை

இன்றைய
சூழ்நிலை

Thanks Fb

இறைவன் தான்
காக்க வேண்டும்

சிவாய நம ஓம்
**

வெள்ளி, நவம்பர் 14, 2025

ஆலவாய்

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை

திருஞானசம்பந்தர்
சைவத்தை மீட்டெடுக்க திருமறைக்காட்டில் இருந்து
 மதுரையம்பதியை அடைந்தார்... 

பாண்டிமாதேவியும் 
அமைச்சர் குலச்சிறையாரும்
 எதிர்கொண்டு அவரை வரவேற்றனர..

அப்போது
ஞானசம்பந்தப் பெருமான்
 பாடியருளிய திருப்பதிகம்..


மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் 120

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவது இதுவே.. 1

வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்
கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினி ல் இயற்கையை ஒழித்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே..2

செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவும்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே..3

நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே..6

பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுண் ஞான சம்பந்தன் செந்தமிழிவை
கொண்டு
இன்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே..11
திருச்சிற்றம்பலம்
-: திருஞானசம்பந்தர் :-

 நன்றி 
பன்னிரு திருமுறை

திருப்பதிகத்தின் முதல் நடு ஈறு எனப் பாடல்களைக் கொள்வதும் பாராயணத்திற்கு ஒப்பானதே..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், நவம்பர் 13, 2025

ஏரகம்

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வியாழக்கிழமை

இன்று
திரு ஏரகத் திருப்புகழ்
(சுவாமிமலை)


தனதான தத்த தனதான தத்த
     தனதான தத்த ... தனதான

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
     திருமாது கெர்ப்ப ... முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
     திரமாய ளித்த ... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
     மலைநேர்பு யத்தி ... லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
     மணிவாயின் முத்தி ... தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
     முலைமேல ணைக்க ... வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
     மொழியேயு ரைத்த ... குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
     தனியேர கத்தின் ... முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
     சமர்வேலெ டுத்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

ஸ்ரீ சுவாமிநாத சுவாமி

குழந்தைப் பேறின்றி வருந்துகின்ற 
இளம் தம்பதியர்க்கு வரப்ரசாதமான திருப்புகழ் இது..

முருகா முருகா
ஸ்வாமிநாத குருவே சரணம்

சிவாய நம ஓம்
**

செவ்வாய், நவம்பர் 11, 2025

சிறுவாபுரி

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை


தந்ததன தனதான தந்ததன தனதான 
தந்ததன தனதான ... தனதான

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ... வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனு முமையாளு ... மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு ... மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி ... வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
     புந்திநிறை யறிவாள ... வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ... வடிவேலா

தண்தரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய ... முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

இத்திருப்புகழ் பாராயணத்தினால் 
நல்ல மனை, சொந்த வீடு அமையும் என்பது அன்பர்களின் நம்பிக்கை..

முழுக்க முழுக்க
ஆனந்தச் சந்தங்கள்
நிறைந்த திருப்புகழ் இது..

முருகா முருகா
சிவாய நம ஓம்
**

ஞாயிறு, நவம்பர் 09, 2025

சும்மா

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை

சும்மா இரு சொல் அற!..

- என்பது,
முருகப்பெருமான் அருணகிரி நாதருக்கு  அளித்த உபதேசம்...

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான் 
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.. (12)

என்று கந்தர் அனுபூதியிலும் சொல்லப்படுகின்றது..

ஆக,
" சும்மா " என்கிற வார்த்தை முருகப் பெருமான் பேசிய வார்த்தை..

காலங்களைக் கடந்தும் இந்த வார்த்தையின் அழகு மிளிர்கின்றது...

Fb ல் வந்த பகுதி

சும்மா படித்துத் தான் பாருங்களேன்..

பேச்சு வழக்கில் நாம் அடிக்கடி
 பயன்படுத்துகின்ற வார்த்தை - சும்மா..

சும்மா என்றால் என்ன?..

பேச்சு வழக்கு சொல்லாக இது இருந்தாலும், தமிழ் மொழியின் உள்ளே வாங்கப் பட்டிருக்கின்ற வார்த்தை தான்  - சும்மா!..

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் பதினைந்து அர்த்தங்கள் உள்ளன.

வேற்று மொழிகளில் இல்லாத சிறப்பு நாம் அடிக்கடி கூறுகின்ற சும்மா எனும் வார்த்தை ..

1. கொஞ்ச நேரம் சும்மா இரு
( அமைதியாக /Quite)

2. கொஞ்ச நேரம் சும்மா இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறி விட்டு/Leisurely)

3. அவரைப் பற்றி சும்மா சொல்லக் கூடாது
 (அருமை/in fact)

4.இதெல்லாம் சும்மா கிடைச்சது ன்னு
 நினச்சியா?..
 (இலவசமாக/Free of cost)

5. சும்மா கதை அளக்காதே?..
 (பொய்/Lie)

6. சும்மா தான் கெடக்குது.  வேணும்னா நீ எடுத்துக்கோ.. 
(உபயோகமற்று/Without use)

7. சும்மா சும்மா தொல்லை கொடுக்கிறான். (அடிக்கடி/Very often)

8. இப்படித்தான்.. சும்மா பேசிக்கிட்டே இருப்பான்
 (எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை சும்மா வந்தேன்..
(தற்செயலாக/Just)

10. இந்தப் பெட்டியில் எதுவும் இல்லை சும்மா தான் இருக்கின்றது..
(காலி/Empty)

11. சும்மா சொன்னதையே  சொல்லாதே..
(மறுபடியும்/Repeat)

12. பிள்ளைகளிருக்கிற வீட்டுக்கு சும்மா போகக் கூடாது.. (வெறுங் கையோடு/Bare)

13. வேலை இல்லாம சும்மா தான் இருக்கின்றோம்..
 (சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன்  இப்படித் தான் சும்மா ஏதாவது உளறுவான்..
(வெட்டியாக/idle)

15.எல்லாமே  சும்மா தான் சொன்னேன்..
(விளையாட்டிற்கு/ Just for fun)

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த சும்மா என்கிற ஒரு சொல் நாம்  பயன் படுத்துகின்ற இடத்தின் படியும்,   தொடர்கின்ற சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்பது சும்மா இல்லை ஆச்சர்யம்

அமுதே தமிழே நீ வாழ்க!..

( Fb ல் கிடைத்ததை என்னளவில் சீர் செய்திருக்கின்றேன்)

ஓம் நம சிவாய
**

வெள்ளி, நவம்பர் 07, 2025

அன்னாபிஷேகம்

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை

இன்று
அன்னாபிஷேக தரிசனம்


தஞ்சை பெரிய கோயில்






கங்கை கொண்ட சோழீச்சரம்


கும்பகோணம் மகாமகக் குளக்கரை சிவ சந்நிதிகளில் 










தஞ்சையம்பதி

சிங்கப்பூர்


 
நன்றி
மனோகரன், சிவனடியார் திருக்கூட்டம் & Fb


அன்னலிங்கம் போற்றி
அமிர்தலிங்கம் போற்றி

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், நவம்பர் 05, 2025

ஸ்ரீ பஞ்சாட்சரம்

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
புதன் கிழமை

இன்று பௌர்ணமி
அன்னாபிஷேக நாள்


ஸ்ரீ பஞ்சாட்சர பஞ்சகம்

நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ' காராய ' நம சிவாய...

மந்தாகினி சலில சந்தன சர்ச்சிதாய
நந்தீஸ்வர ப்ரமதநாத மகேஸ்வராய
மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை ' காராய ' நம சிவாய...

சிவாய கெளரி வதநாப்ஜ  வ்ருந்த
சூர்யாய தக்ஷத் வர நாஸகாய
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷ்ஹ த்வஜாய  
தஸ்மை ' சி காராய ' நம சிவாய...

வசிஷ்ட  கும்போத்பவ கௌதமார்ய
முநீந்திர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க  வைஷ்வாநர லோச்சனாய
தஸ்மை ' வ காராய ' நம சிவாய...

யக்ஷஸ் வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய  தேவாய திகம்பராய
தஸ்மை ' ய காராய ' நம சிவாய..

பஞ்சாக்ஷரம்  இதம் புண்யம்
ய: படேத் சிவ சந்நிதௌ
சிவலோகம் அவாப்னோதி 
சிவேன ஸஹ மோததே
-:-


2013 ன் மீள்பதிவு

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**