நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 15, 2018

வாழ்க தாயகம்

இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள்
தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள்
அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!..


வந்தே மாதரம்!..

வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்
வந்தே மாதரம்!..

ஸுப்ரஜ் யோத்ஸனா புலகிதயாமினிம்
புல்லகுஸுமித த்ருமதல ஸோபினிம்
சுஹாசினிம் சுமதுர பாஷினிம்
சுகதாம் வரதாம் மாதரம்
வந்தே மாதரம்!..

கோடிகோடி கண்ட கலகல நி னாத கராலே
கோடிகோடி புஜைத்ருத கரகரவாலே 
அபலாகேனோ மா யேதோ பலே
பஹூபல தாரிணீம் நமாமி தாரீணீம் 
ரிபுதல வாரிணீம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா த்வம்ஹி ப்ராணா: சரீரே 
பாஹூதே துமி மா சக்தி 
ஹ்ருதயே துமி மா பக்தி 
தோமராயி ப்ரதிமாகடி மந்திரே மந்திரே!.. வந்தே மாதரம்!..

த்வம் ஹி துர்கா தசப்ரஹரண தாரீணீம் 
கமலாம் கமல தள விஹாரிணீம் 
வாணீ வித்யா தாயினீம் 
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம் 
சுஜலாம் சுபலாம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

ஸ்யாமளாம் ஸரளாம் 
ஸூஸ்மிதாம் பூஷிதாம் 
தரணீம் பரணீம் மாதரம்!.. 
வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..


வந்தே மாதரம்!.. 

தேசத்தின் சுதந்திரப்போராட்ட வேள்வியில் மந்திரமாகப் பொலிந்த சொல்!..

வங்காளத்தின் ஸ்ரீபங்கிம் சந்திர சட்டர்ஜி (1838 - 1894) அவர்கள் எழுதி தாய்த் திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்த இந்த திருப்பாடலில் இருந்தே பிறந்தது.

1896ல் நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்கள் குழுவினருடன் வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
இதுவே  இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்ச்சியாகும். 

ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக ஆகியது வந்தே மாதரம் பாடல்.

ஆங்கிலேய அரசின் தடையையும் மீறி , பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் -  ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி. 
இவர் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களின் அன்பு மருமகள். 

மகான் ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ஆகஸ்டு 7/1906 அன்று துவக்கிய தினசரியின் பெயர் -  வந்தே மாதரம்!.. 

பஞ்சாப் சிங்கம் என்று போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் 1906ல்  லாஹூரில்  ஆரம்பித்த சஞ்சிகைக்குப் பெயர்  -  வந்தே மாதரம்!..

1906  மார்ச் மாதம் வங்காளத்தில் பரிசால் என்ற இடத்தில் தொடங்கிய பரிசால்  பரிஷத் ஊர்வலம் ஆங்கிலேய அரசின் அடக்கு முறைத் தடியடிகளினால் மண்டை உடைபட்டு தொண்டர்கள் இரத்தம் சிந்தி மண்ணில் வீழ - பாதியிலே  நின்று போனது. 

காரணம் அவர்கள் முழங்கிய கோஷம் - வந்தே மாதரம்!..

மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) அவர்களும் அவர் தம் நண்பர்களும் 1905 ல்  கொடி ஒன்றினை வடிவமைத்து  ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் (1907) மாநாட்டில் பறக்க விட்டனர். 

அது - மேலே பச்சையும் இடையே காவியும் கீழே சிவப்பும் கொண்டிருந்தது.

அந்த மூவர்ணக் கொடியின் நடுவில் திகழ்ந்த சொல் -  வந்தே மாதரம்!..

தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் (1943-1945) அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 

அக்காலத்தில் அவருடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.

( தகவல் தொகுப்பில் உதவி - விக்கி பீடியா )

புதிதாகப் பதிவு ஒன்றினை வழங்குதற்கு நேரமில்லை..
எனவே முந்தைய பதிவின் ஒருபகுதி
மீள்பதிவாக மலர்கின்றது..

வந்தேமாதரம் பாடலைக்
கீழேயுள்ள காணொளியில்
கண்டும் கேட்டும் மகிழுங்கள்!..




வந்தே மாதரம்!.. - என்கிற மந்திரத்தை முழங்கியபடியே
தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் 
தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுள் - 

இன்னும் நம் கண்முன்னே திகழ்பவர் - கொடி காத்த குமரன்!..

தேச விடுதலைப் போராட்டத்தில் 
தமது இன்னுயிரைத் தியாகம் செய்த
எண்ணிலடங்காத தியாக சீலர்களை 
மனதார நினைவு கூர்ந்து அவர்களைப் போற்றி வணங்குகின்ற நாள் இது..


அனைவருக்கும் 
சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

வாழ்க பாரதம்..
வெல்க பாரதம்!..
ஃஃஃ

20 கருத்துகள்:

  1. வந்தே மாதரம்! சுதந்திர தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  2. காலை வணக்கமும், சுதந்திர தின நல்வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  3. வந்தே மாதரம் பாடலைக் கேட்டால் அந்தக் கால ரேடியோ நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      விடியற்காலையில் வந்தேமாதரம் பாடலைக் கேட்பதே தனி சுகம்...

      நீக்கு
  4. வந்தே மாதரம்! சுதந்திர தின வாழ்த்துக்கள்.
    சிறப்பான பகிர்வு.
    ஸ்ரீராம் சொல்வது போல் ரேடியோ, தொலைக்காட்சியிலும் வைப்பார்கள். அதை தினம் கேட்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      வாழ்க சுதந்திரம்.. வந்தேமாதரம்..

      நீக்கு
  5. அன்பின் ஜி

    சிறப்பான சரித்திர நிகழ்வுகளை அழகாக விவரித்தமைக்கு நன்றி.

    இனிய சுதந்திர தினவாழ்த்துகள்.

    சட்டர்ஜி பிறந்த வருடம் சரியாக உள்ளதா என்பதை பாருங்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு...

      வாழ்க பாரதம்.. வந்தே மாதரம்..

      நீக்கு
  6. சுதந்திரதின நல்வாழ்த்துகள் ஐயா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      வாழ்க பாரதம்.. வந்தே மாதரம்..

      நீக்கு
  7. காலை வணக்கம்.

    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      வந்தேமாதரம்.. வாழ்க பாரதம்..

      நீக்கு
  8. தேச விடுதலைக்காகவும் மேன்மைக்காகவும் பாடுபட்ட அனைவரையும் போற்றி வணங்கி நினைக்கவேண்டிய நாள் இது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
      அவர் வேறொன்று கொள்வாரோ..

      என்றார் மகாகவி...

      சுதந்திரத்தை வேண்டி நின்றோர் குடும்பங்கள் எல்லாம் அடையாளம் இன்றிப் போயின...

      சுதந்திரத்தின் பயனாக
      அரசியலுக்குள் புகுந்தோர் எல்லாம்
      கோடிகளில் புரள்கின்றனர்...

      என்னே விந்தை...

      இதுதான் எல்லாருக்கும் ஆகும் பயன் போலும்...

      நல்லோர் தமக்கெல்லாம்
      சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார் - ஏற்கனவே எழுதினேனா என்று தெரியலை. வ உ சி அவர்கள் குடும்பத்திற்கு (கப்பலோட்டிய தமிழன்) ஒரு உதவியும் அரசுகள் செய்யலை, அவரை காங்கிரஸ் காரராகப் பார்த்தார்கள். காமராஜ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உதவி போய்ச் சேரலை. ஒவ்வொருவரையும், கட்சி, ஜாதி பார்த்து நம் அரசுகள் சிறுபிள்ளைத் தனமாய் நடந்துகொண்டு, சுதந்திர தினத்துக்கு மிட்டாய் கொடுக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?

      நீக்கு
  9. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. எனது வாழ்த்துக்களும்....



    வாழ்க பாரதம்

    பதிலளிநீக்கு
  11. மீள்பதிவாக இருந்தாலும் எக்காலத்திற்கும் பொருந்தும் பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..