நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..
நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..
நம சிவாய
உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..
மகளிர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளிர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, மார்ச் 08, 2020
சனி, மார்ச் 09, 2019
பெண்மை வாழ்க..
சென்ற பதிவில் -
தாய்மையை - மிக வயதுடையவரை - இந்த இரண்டு கோலத்தையும் விட்டு விட்டீங்களே!.. - என்று அன்பின் திரு நெல்லை அவர்கள் வழங்கிய கருத்துரையின் அடிப்படையில் -
இன்றைய பதிவு மலர்கின்றது...
ஏறத்தாழ நூற்றைம்பது கோப்புகளில் உள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படங்களிலிருந்து பதிவிற்கானவற்றை சேர்த்துக் கொண்டிருக்கின்றேன்..
இவற்றுள்
அவ்வப்போது கிடைக்கும் திருவிழாப்படங்களும்
நான் எடுத்து வைத்துள்ள நிழற்படங்களும் தனியானவை...
இத்தனைக்கும் மேலாக
ஒவ்வொரு நாளும் இணையம் உயிர்ப்புடன் இருக்கும்போதே பதிவை ஒழுங்கு செய்து வெளியிட்டு விடுவது பெருத்த சிரமமாக இருக்கின்றது...
விடியற்காலையிலிருந்து பிற்பகல் மூன்று மணி வரைக்கும் மிக நன்றாக இருக்கும் இணையம் மதியத்துக்குப் பிறகு நள்ளிரவுக்குப் பின்வரை முடிவாகாத கூட்டணி போல் இழுபறியாக இழுத்துக் கொண்டு கிடப்பது தான் பிரச்னை...
முன்பு இரவு வேலை செய்து கொண்டிருந்த போது
எப்போதாவது பிரச்னை இருக்கும்...
இப்போது பகல் பொழுதில் வேலை என்றானதும்
எப்போதுமே இணையம் பிரச்னையாகி விட்டது...
இருந்தாலும்
பிரச்னை இன்றி எதுவுமே இல்லை!.. - என்ற
தேவகோட்டை திடுக்கிடானந்த ஸ்வாமிகளின்
அருள்வாக்கினைக் கேட்டுக் கொண்டேபதிவினை ரசிப்பதற்கு வாருங்கள்!...
மேலை நாட்டில் சாதாரணமாக வழங்கப்படும் சொல் Housewife.. ஆனால்,
நமக்கு அப்படியில்லை..
தமிழ் வழக்கில் இல்லாள் என்பது சிறப்பு..
இல்லாள் என்பதற்கு இணைச் சொல்லாக இல்லான் என்று சொல்லமுடியுமா?.. என்றால் - அது முடியாது..
வாழ வந்த பெண்மைக்கு இல்லாள் என்பது சிறப்பு என்றால்
வாழ்வு கொடுப்பதாக சொல்லப்படும் ஆண்மைக்கு - இல்லான் என்று பெயர் வைத்தால் கேவலமாகி விடும்!...
அந்த அளவிற்கு
வார்த்தையாலே பெண்மைக்குச் சிறப்பை வார்த்தெடுக்கின்றது தமிழ்...
தமிழகத்தில் தமிழைப் படிக்காததால் இன்னும்
என்னென்ன சுகந்தங்களை இழக்கக் காத்திருக்கின்றதோ - இளைய சமுதாயம்!...
![]() |
மாமன் அடிச்சாரோ மல்லிகப் பூ செண்டாலே!.. |
![]() |
நூல் கொண்டு அளக்க வேணும் இவ்வுலகை!.. |
![]() |
சீர் கொண்டு வாழ வேணும் செல்வமே.. |
![]() |
ஒளி கொண்ட பூ முகத்தாள்.. |
![]() |
மடங்கொண்ட மங்கை மனம் |
![]() |
பூ முடித்த பூங்குழலி |
![]() |
வாய்ச் சொற்களுக்கு வாய்ப்பில்லையோ |
![]() |
எல்லாம் சந்தோஷம்.. எங்கும் சந்தோஷம்.. |
![]() |
நல்வழி காட்டும் பெண்மை..ஆனாலும், நாம் கேட்பதேயில்லை.. அதுதான் உண்மை.. |
அன்பின் திரு வெங்கட் நாகராஜ் அவர்களது பதிவில் படித்தேன்...
ஆமைக்கு ஓடு சுமையல்ல... அதே போல
பெண்மைக்கும் வீடு சுமையல்ல!..
ஓடும் வீடும் தான் பாதுகாப்பு...
ஓட்டைத் துறந்தால் அது ஆமை ஆகுமா?...
வீடு தான் நாடு...
வீடு செம்மையானால் நாடும் செம்மையாகும் என்பார்கள்..
பேராண்மை மிக்கவன்.. அவன் அரசன்.. ஆனாலும்
நாட்டுக்குத் தானே தவிர வீட்டுக்கு அல்ல!..
பெருந்தக்க பெண்மை அது தான் - வீட்டுக்கு அரசு.. இல்லத்து அரசி!...
அப்படித்தான் தமிழ் பெண்மையைப் போற்றுகின்றது...
தற்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதி விலக்குகள்..
ஆனாலும் -
பெண்ணால் தான் இல்லமும் உள்ளமும் பெரும் பயனைப் பெறுகின்றன..
பெண் இன்றி எய்தும் புகழொன்று
என்றென்றும் இல்லை இவ்வுலகில்..
அவ்வழி நின்று நாளும் நலந்திகழ்
பெண்மையைப் போற்றுவதில்
பெருமகிழ்வெய்துகின்றேன்...
பெண்மை வாழ்க..
பெண்மை வெல்க..
ஃஃஃ
முத்திரை:
மகளிர் தினம்
இருப்பிடம்:-
குவைத்
வெள்ளி, மார்ச் 08, 2019
பெண்மை வெல்க..
முத்திரை:
மகளிர் தினம்
இருப்பிடம்:-
Kuwait
வியாழன், மார்ச் 08, 2018
பூஜைக்கு வந்த மலர்
தாமரை
பூக்களில் மிக உயர்வான மலர்...
இறைவனின் திருவடித் தாமரை..
- என்று சைவத்திலும் வைணவத்திலும்
மிகச் சிறப்பாகப் போற்றப்படுவது...
எனினும்
மஹாலக்ஷ்மியின் இருப்பிடமாகப் புகழப்படுவது
செந்தாமரை மலர் மன இறுக்கத்தைத் தவிர்க்கும்...
சிந்தை ஒருமுகமாகும்..
செந்தாமரை மலர்களைக் கொண்டு
வழிபாடுகளைச் செய்பவர்கள் இல்லத்தில்
நேர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும்...
திருமுகமும் தாமரை.. திருவிழிகளும் தாமரை...
திருத்தனங்கள் தாமரை.. திருவதனமும் தாமரை..
திருக்கரங்கள் தாமரை.. திருவடிகளும் தாமரை...
இப்படிப் போற்றினால் அது தெய்விகம்...
அப்படியே புகழ்ந்துரைத்தால் அது இல்லறம்..
தெய்வீகமும் இல்லறமும்
தாமரையால் சிறப்பிக்கப்படுவதே சிறப்பு...
தாமரையாள் ஏன் சிரித்தாள்!...
- என்பது கவியரசரின் வியப்பு...
இதற்குமேல் சொல்வதற்கு
ஏதுமில்லை...
***
பூக்களில் மிக உயர்வான மலர்...
இறைவனின் திருவடித் தாமரை..
- என்று சைவத்திலும் வைணவத்திலும்
மிகச் சிறப்பாகப் போற்றப்படுவது...
எனினும்
மஹாலக்ஷ்மியின் இருப்பிடமாகப் புகழப்படுவது
செந்தாமரை மலர் மன இறுக்கத்தைத் தவிர்க்கும்...
சிந்தை ஒருமுகமாகும்..
செந்தாமரை மலர்களைக் கொண்டு
வழிபாடுகளைச் செய்பவர்கள் இல்லத்தில்
நேர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும்...
திருமுகமும் தாமரை.. திருவிழிகளும் தாமரை...
திருத்தனங்கள் தாமரை.. திருவதனமும் தாமரை..
திருக்கரங்கள் தாமரை.. திருவடிகளும் தாமரை...
இப்படிப் போற்றினால் அது தெய்விகம்...
அப்படியே புகழ்ந்துரைத்தால் அது இல்லறம்..
தெய்வீகமும் இல்லறமும்
தாமரையால் சிறப்பிக்கப்படுவதே சிறப்பு...
தாமரையாள் ஏன் சிரித்தாள்!...
- என்பது கவியரசரின் வியப்பு...
இதற்குமேல் சொல்வதற்கு
ஏதுமில்லை...
***
வெண்தாமரை
அன்னை கலைவாணிக்கு உரிய மலர்...
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பவள் - என்பார் மகாகவி..
வெண் தாமரை என்ற உருவகம் நல்லோர் மனமாகும்..
அன்னை கலைவாணிக்கு உரிய மலர்...
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பவள் - என்பார் மகாகவி..
வெண் தாமரை என்ற உருவகம் நல்லோர் மனமாகும்..
வெண் தாமரை மலரும் மன இறுக்கத்தைத் தவிர்த்து
சிந்தையை ஒருமுகமாக வல்லது..
எனினும்
மிகுந்த மருத்துவப் பயன்பாட்டினை உடையது வெண் தாமரை..
மண்பானை நீரில் வெண் தாமரை இதழ்களைப் போட்டு வைத்து
அந்த நீரை குடித்து வந்தால் மூளை பலமடையும் என்பது குறிப்பு...
அந்த நீரை குடித்து வந்தால் மூளை பலமடையும் என்பது குறிப்பு...
பொதுவாக தாமரை இதழ்க் கஷாயத்தினை
வாரம் இருமுறை குடித்து வந்தால்
இரத்த ஓட்டம் சீராகின்றது..
படபடப்பு நீங்குகின்றது..
இதயம் வலிமையடைவதுடன்
இரத்தம் தூய்மையாகின்றது...
முதிர்ந்த தாமரையின் விதைகள்
நரம்பு மண்டலத்திற்கு வலிமை சேர்த்து...
உயிரணுக்களை விருத்தி செய்யவல்லவை
தாமரை இதழ் கஷாயத்தினை
அவ்வப்போது நான் குடித்துக் கொண்டிருக்கின்றேன்
என்பது இங்கே குறிப்பிடத்தக்கது...
முதிர்ந்த தாமரையின் விதைகள்
நரம்பு மண்டலத்திற்கு வலிமை சேர்த்து...
உயிரணுக்களை விருத்தி செய்யவல்லவை
தாமரை இதழ் கஷாயத்தினை
அவ்வப்போது நான் குடித்துக் கொண்டிருக்கின்றேன்
என்பது இங்கே குறிப்பிடத்தக்கது...
***
கொன்றை
சிவபெருமானுக்கு உரிய மலர்...
ஈசனின் திருக்கோலம் தோன்றும் போது
வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்..
- என்று, கசிந்துருகி நிற்கின்றார் அப்பர் பெருமான்...
பன்னிரு திருமுறைகளிலும் பேசப்படுவதுது - கொன்றை..
கேரளத்தின் விஷூ கொண்டாட்டங்களில்
சிறப்பிடம் பெறுவது கொன்றை...
தமிழகம் முழுதும் காணக்கூடியது கொன்றை எனினும்
மலையாள நாட்டின் மலராக சிறப்பிக்கப்பட்டுள்ளது..
சிவபெருமானுக்கு உரிய மலர்...
ஈசனின் திருக்கோலம் தோன்றும் போது
வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்..
- என்று, கசிந்துருகி நிற்கின்றார் அப்பர் பெருமான்...
பன்னிரு திருமுறைகளிலும் பேசப்படுவதுது - கொன்றை..
கேரளத்தின் விஷூ கொண்டாட்டங்களில்
சிறப்பிடம் பெறுவது கொன்றை...
தமிழகம் முழுதும் காணக்கூடியது கொன்றை எனினும்
மலையாள நாட்டின் மலராக சிறப்பிக்கப்பட்டுள்ளது..
கொன்றையில் பலவகைகள் உள்ளன...
கொன்றை மருத்துவ குணமுடையது.. ஆனால்
சித்த வைத்தியர்களின் அறிவுரை மிக முக்கியம்..
***
தும்பை
விநாயகப் பெருமானுக்கு உரிய பூக்களுள்
தும்பையும் ஒன்று...
நீர்ப்பிடிப்புள்ள பகுதிகளில் தாமாகவே வளரக்கூடியது...
நிறைந்த மருத்துவ குணங்களைஉடையது...
வெண்மைக்கு எடுத்துக்காட்டு தும்பைப் பூ...
தும்பை மலர் வேட்டி கட்டி.. - என்றொரு சொல்லாடல்
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படப் பாடல் ஒன்றில் வரும்..
தும்பையின் இலை பூக்களை சாதாரண உப்புடன் சேர்த்து அரைத்து
உடலில் பூசிக் குளித்தால் அரிப்பு நமைச்சல் தேமல்
இவை தொலைந்து போகும் என்பார்கள்...
எனினும்
சித்த வைத்தியர்களின் அறிவுரை மிக முக்கியம்...
***
விநாயகப் பெருமானுக்கு உரிய பூக்களுள்
தும்பையும் ஒன்று...
நீர்ப்பிடிப்புள்ள பகுதிகளில் தாமாகவே வளரக்கூடியது...
நிறைந்த மருத்துவ குணங்களைஉடையது...
வெண்மைக்கு எடுத்துக்காட்டு தும்பைப் பூ...
தும்பை மலர் வேட்டி கட்டி.. - என்றொரு சொல்லாடல்
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படப் பாடல் ஒன்றில் வரும்..
தும்பையின் இலை பூக்களை சாதாரண உப்புடன் சேர்த்து அரைத்து
உடலில் பூசிக் குளித்தால் அரிப்பு நமைச்சல் தேமல்
இவை தொலைந்து போகும் என்பார்கள்...
எனினும்
சித்த வைத்தியர்களின் அறிவுரை மிக முக்கியம்...
***
துளசி
திருத்துழாய் என்று
வைணவத்தில்
வெகுவாகச் சிறப்பிக்கப்படுவது...
துளசி வனத்தில் தான்
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்
திருஅவதாரம் செய்தனள்..
திருத்துழாய் என்று
வைணவத்தில்
வெகுவாகச் சிறப்பிக்கப்படுவது...
துளசி வனத்தில் தான்
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்
திருஅவதாரம் செய்தனள்..
துளசி என்றே
பாரதத்தின் அனைத்து மொழிகளிலும்
அறியப்படுவது..
துளசியும் மிகுந்த
மருத்துவ குணங்களை உடையது..
துளசி தீர்த்தம்
புனிதம் என்று போற்றப்படுவது...
துளசி தீர்த்தம்
சுவாச மண்டலத்தைச் சுத்திகரித்து
சுவாசத்தைச் சீராக்கும்...
துளசி நிறைந்திருக்கும் இடத்திற்கு
விஷ ஜந்துகள் வராது...
மிக முக்கியமான செய்தி
துளசி இலையும் துளசி தீர்த்தமும்
காமத்தைக் கட்டுப்படுத்த வல்லவை...
அதனால் தான் விரத நாட்களில்
துளசி மணி மாலை அணிவதும்
துளசி மணி மாலையை ஸ்பரிசித்து
விரல் கொண்டு எண்ணுவதும்!...
***
தாழை
நான்முகப் பிரம்மனுடன் சேர்ந்து கொண்டு
ஈசனின் முன்பாக பொய் சொன்னதால்
சிவ வழிபாட்டில் விலக்கப்பட்டது - தாழை..
விநாயகர் முருகன் வழிபாடுகளிலும்
இது சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை..
ஆனால் இதன் மீது
அம்பிகை இரக்கம் கொண்டாள்...
நான்முகனுக்கு அஞ்சியே
பொய்யுரைத்தது தாழை..
அதுவன்றி - வேறு பிழை
ஏதும் செய்யவில்லை...
ஆகையால்
தனது திருவடிகளுக்கு அருகில்
இருத்திக் கொண்டாள்...
திருக்கருகாவூர்
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகையின்
திருவடிகளில் தாழம்பூவினை எப்போதும் காணலாம்..
ஈசன் எம்பெருமானுடைய சாபத்தினால்
தாழை வனங்களில் நாகங்கள் கிடக்கும்...
இப்படித் தாழங்காட்டில் பாம்புகள் கிடந்தாலும்
மக்கள் இந்தப் பூவின் மீது கொண்ட ஆசை மாறியதில்லை..
சடங்கான பெண் மஞ்சள் நீராடி
வீட்டுக்குள் வந்ததும்
மங்கல அலங்காரம் செய்யும் போது
சடையில் தாழை மடல்களை வைத்துப்
பின்னுவது பாரம்பர்யம்...
தாழம்பூ வைத்துப் பின்னப்பட்ட சடையுடன்
தன் மகளைக் காணும் தாய் பூரித்து நிற்பாள்...
தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
- என்பது நம் குலப் பெண்களுக்கே உரிய சிறப்பு..
கடற்கரைகளிலும் சற்றே உள் வாங்கிய
ஆற்றங்கரைகளிலும் வளர்வது தாழை...
பொய் சொன்ன குற்றமுடையது ஆனாலும்
இதனுடைய சிறப்புகள் பலவாகும்..
அவற்றை வேறொரு பதிவினில்
காண்போம்..
***
மல்லிகை
இல்லறம்
இந்த மலராலேயே இனியதாகின்றது...
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ!..
- என்று, பூவையர் சூடும் பூ இதுவே!..
விதிவிலக்குகள் ஒன்றிரண்டு
ஆங்காங்கே இருக்கலாம்...
மனதிற்கு மகிழ்ச்சியை அளிப்பதில்
மல்லிகைக்கு நிகர் மல்லிகையே..
மல்லிகைப் பூக்கள் கிடந்த நீரைக் கொண்டு
கண்களைக் கழுவினால் கண் பளிச்சிடுகின்றன..
கண்களில் குறை ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன...
மல்லைகை முல்லை சம்பங்கி மலர்களை
இட்டு வைத்த நீரால்
இளங்கன்னியரை நீராட்டுதல் மரபு...
நிழலில் உலர்த்தப்பட்ட மல்லிகைப் பூக்களை
தேங்காய் எண்ணெயில் இட்டு
அதனை வெயிலில் சூடு செய்து
தலையில் பூசிக் கொள்வது மிக மிக நல்லது..
மல்லிகையே.. மல்லிகையே தூதாகப் போ!..
- என்பது இளங்காதல்...
அதே சமயம் பிரசவித்த பெண்களின்
பால் கட்டு வலியைக் குறைப்பதும் மல்லிகையே...
இல்லறம்
இந்த மலராலேயே இனியதாகின்றது...
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ!..
- என்று, பூவையர் சூடும் பூ இதுவே!..
விதிவிலக்குகள் ஒன்றிரண்டு
ஆங்காங்கே இருக்கலாம்...
மனதிற்கு மகிழ்ச்சியை அளிப்பதில்
மல்லிகைக்கு நிகர் மல்லிகையே..
மல்லிகைப் பூக்கள் கிடந்த நீரைக் கொண்டு
கண்களைக் கழுவினால் கண் பளிச்சிடுகின்றன..
கண்களில் குறை ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன...
மல்லைகை முல்லை சம்பங்கி மலர்களை
இட்டு வைத்த நீரால்
இளங்கன்னியரை நீராட்டுதல் மரபு...
நிழலில் உலர்த்தப்பட்ட மல்லிகைப் பூக்களை
தேங்காய் எண்ணெயில் இட்டு
அதனை வெயிலில் சூடு செய்து
தலையில் பூசிக் கொள்வது மிக மிக நல்லது..
இல்லறத்தில் மோகத்தை விளைப்பது - மல்லிகை ..
- என்பது இளங்காதல்...
அதே சமயம் பிரசவித்த பெண்களின்
பால் கட்டு வலியைக் குறைப்பதும் மல்லிகையே...
அந்தக் காலத் திரைப்படங்களில்
புறம் பொறுக்கும் மைனர்கள்
கையில் மல்லிகைச் சரத்தினைச் சுற்றிக் கொண்டு
திரிவதாகக் காட்டுவார்கள்...
இருந்தாலும்
அக்காலத்தில் பள்ளிகள் தோறும்
வகுப்புக்கு நான்கு பெயர்
மல்லிகா என்றிருக்கும்...
இந்தக் காலத்து மாணாக்கர்களுக்கு
அந்தக் கொடுப்பினை
இல்லாமல் போயிற்று..
மல்லிகைப் பூவும் பேசுதற்கு இனியது..
அதன் பெருமையும் அளப்பரியது...
***
பவளமல்லி
ஸ்ரீஹரிபரந்தாமனுக்கு மட்டுமல்லாது
சிவ வழிபாட்டிற்கும் உரியது - பவளமல்லி...
தேவலோகத்திலிருந்து
இதனுடைய மற்றொரு பெயர் தான் பாரிஜாதம்..
சாஸ்த்ர விதிகளின்படி மண்ணில் உதிர்ந்து கிடக்கும்
பூக்களைக் கொண்டு வழிபாடு செய்தல் கூடாது..
ஆனால்,
மரத்தின் கீழாக உதிர்ந்து கிடக்கும்
பாரிஜாதப் பூக்களைச் சேகரித்து பூஜை செய்யலாம்...
இந்த மரத்தின் வேர்களை நிழலில் உலர்த்தி
இடித்து பல் துலக்கலாம்...
ஈறு தொடர்பான பிரச்னைகள் தீரும்...
மரத்தின் பட்டைகளைக் கொதிக்க வைத்த
நீரைக் குடிப்பதனால் சிறுநீரகம் சுத்தமடைகின்றது...
நீரிழிவு நோயும் மட்டுப்படுகின்றது..
எனினும், தக்க மருத்துவருடைய
மேற்பார்வை அவசியம்...
***
ஸ்ரீஹரிபரந்தாமனுக்கு மட்டுமல்லாது
சிவ வழிபாட்டிற்கும் உரியது - பவளமல்லி...
தேவலோகத்திலிருந்து
இதனுடைய மற்றொரு பெயர் தான் பாரிஜாதம்..
சாஸ்த்ர விதிகளின்படி மண்ணில் உதிர்ந்து கிடக்கும்
பூக்களைக் கொண்டு வழிபாடு செய்தல் கூடாது..
ஆனால்,
மரத்தின் கீழாக உதிர்ந்து கிடக்கும்
பாரிஜாதப் பூக்களைச் சேகரித்து பூஜை செய்யலாம்...
இந்த மரத்தின் வேர்களை நிழலில் உலர்த்தி
இடித்து பல் துலக்கலாம்...
ஈறு தொடர்பான பிரச்னைகள் தீரும்...
மரத்தின் பட்டைகளைக் கொதிக்க வைத்த
நீரைக் குடிப்பதனால் சிறுநீரகம் சுத்தமடைகின்றது...
நீரிழிவு நோயும் மட்டுப்படுகின்றது..
எனினும், தக்க மருத்துவருடைய
மேற்பார்வை அவசியம்...
***
செண்பகம்
இதன் மறுபெயர் தான்
மனோரஞ்சிதம்...
இப்பூவினைக் குறிப்பதற்கு
ஆங்கிலத்தில் சொல் இல்லை என்பது
நமக்குப் பெருமை...
செண்பகம் என்பதுவே Champak
என்று வழங்கப்படுகின்றது..
தேவாரத்தில் பல இடங்களிலும்
பேசப்படும் மலர்களுள் செண்பகமும் ஒன்று...
பெரும்பாலும் இந்தப் பூவைச்
சூட்டிக் கொள்வதில்லை..
ஆனாலும்
இந்தப் பூவின் பெயரைச்
சூடிக் கொள்வதை விரும்பினர்....
ஏழை எளிய மக்கள் இன்புற்று
சூடிக் கொண்ட செண்பகப் பூவின் பெயரை
மாமன்னன் செண்பகப் பாண்டியன்
என்று சூட்டிக் கொண்டு
கூந்தலில் நறுமணம் தேடி
தமிழுக்குப் புகழ் சேர்த்தான்...
மண்ணின் மக்கள் இன்புற்ற பொழுதில்
அம்பிகை பராசக்தி
செண்பகப் பூவையும் அதன் பெயரையும்
ஒருசேர சூட்டிக் கொண்டாள்..
.
- எனத் திருக்கோலங் கொண்டு நின்றாள்...
செண்பக மலர்களை நிழலில் உலர்த்தித் தூளாக்கி
பனங்கருப்பட்டியுடன் கொதிக்க வைத்து
அந்த நீரை தினமும் அருந்தினால்
பார்வை தெளிவு பெறும் என்பார்கள்...
பலவிதமான மருத்துவ குணங்களை உடையது..
இதன் மறுபெயர் தான்
மனோரஞ்சிதம்...
இப்பூவினைக் குறிப்பதற்கு
ஆங்கிலத்தில் சொல் இல்லை என்பது
நமக்குப் பெருமை...
செண்பகம் என்பதுவே Champak
தேவாரத்தில் பல இடங்களிலும்
பேசப்படும் மலர்களுள் செண்பகமும் ஒன்று...
பெரும்பாலும் இந்தப் பூவைச்
சூட்டிக் கொள்வதில்லை..
ஆனாலும்
இந்தப் பூவின் பெயரைச்
சூடிக் கொள்வதை விரும்பினர்....
ஏழை எளிய மக்கள் இன்புற்று
சூடிக் கொண்ட செண்பகப் பூவின் பெயரை
மாமன்னன் செண்பகப் பாண்டியன்
என்று சூட்டிக் கொண்டு
கூந்தலில் நறுமணம் தேடி
தமிழுக்குப் புகழ் சேர்த்தான்...
மண்ணின் மக்கள் இன்புற்ற பொழுதில்
அம்பிகை பராசக்தி
செண்பகப் பூவையும் அதன் பெயரையும்
ஒருசேர சூட்டிக் கொண்டாள்..
.
கோயில்பட்டி நகரில்
ஸ்ரீ செண்பகவல்லி அம்மன்- எனத் திருக்கோலங் கொண்டு நின்றாள்...
செண்பக மலர்களை நிழலில் உலர்த்தித் தூளாக்கி
பனங்கருப்பட்டியுடன் கொதிக்க வைத்து
அந்த நீரை தினமும் அருந்தினால்
பார்வை தெளிவு பெறும் என்பார்கள்...
பலவிதமான மருத்துவ குணங்களை உடையது..
தக்க மருத்துவருடைய மேற்பார்வை அவசியம்
என்பதையும் நினைவில் கொள்ளவும்...
***
இயற்கை வழங்கிய
அருட்கொடைகளுள்
மலர்கள் சிறப்புடையவை...
அவற்றுள் இங்கே சொல்லப்பட்டவை
மிக மிகக் கொஞ்சமே..
தம்மை ஒரு மலராகப் பாவனை
செய்து கொள்வது மங்கையர் தம் மாண்பு...
ஆயினும்,
மங்கையர் தம்மை மாகாளியாய்
முன்னிறுத்திக் கொள்ள வேண்டியதும்
காலத்தின் கட்டாயம் ஆயிற்று..
பூச்சூடி பொட்டு வைத்த
புனிதம் தான் பூவை..
பூ வைத்த பூ
என்று கொண்டாடுவது தமிழ்..
அதுதான் நமது பாரம்பர்யம்..
அந்த இனிய பாரம்பர்யத்தின் வழி நின்று
பெண்மைக்குத் தலை வணங்குகின்றேன்..
அன்பின் இனிய
மங்கையர் தின நல்வாழ்த்துகள்!...
பெண்மை வாழ்க..
பெண்மை வெல்க!..
***
முத்திரை:
மகளிர் தினம்
இருப்பிடம்:-
குவைத்
புதன், மார்ச் 08, 2017
சின்னாத்தா..
பெண் புலியாக உறுமிக் கொண்டிருந்தாள் - அவள்..
எதிரில் அவளுடைய புருஷன்.. கைகள் கட்டப்பட்ட நிலையில்!..
கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றதற்காகப் பிடிபட்டவன்..
எங்க அப்பனும் ஆத்தாளும் இந்த ஆளை நல்லவன்..ன்னு நம்புனாங்க.. நானும் மனசார வாக்கப்பட்டேன்!.. ஏழு மாசமாச்சு நானும் ஒரு ஜீவனை வயித்தில சுமந்து.. அந்த சிசு நல்லா இருக்கணும்.. ஊர்ப்பாவம் எனக்கு வேண்டாம்.. இந்த ஆளை இழுத்துக்கிட்டு போயி ஜெயில்ல போடுங்க.. மனசு திருந்தி வந்தா வரட்டும்.. இல்லேன்னா?...
நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள்..
கூடியிருந்த ஊர் மக்கள் பரிதாபப்பட்டனர்...
அங்கிருந்த பெண்களுள் ஒரு சிலர் ஓடி வந்து அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டார்கள்..
வாயும் வயிறுமா இருக்கறவ.. இந்த மாதிரியெல்லாம் செய்யக்கூடாது...
ஐயா!.. இனி என்ன செய்யலாம்..ன்னு நீங்க தான் சொல்லவேணும்!..
இந்த ஒருதடவை பார்க்கலாம்!..
அந்த ஊரின் பெரிய தனக்காரர் மீசையை முறுக்கிக் கொண்டார்..
சரிங்க.. ஐயா!.. அப்படியே ஆகட்டும்!.. டேய்.. இனியாவது ஒழுங்கா இருக்கப் பாரு!..
அவனுடைய கைகளை அவிழ்த்து விட்டுப் போனார்கள்...
என்னைய மன்னிச்சிடுங்க ஐயா!..
சரி.. சரி.. இன்னையில இருந்து வடகரை தென்னந்தோப்புக்கு நீதான் காவல்.. மட்டை பாளை எல்லாம் உனக்குத் தான்.. கன்னல் விழக்கூடாது.. நூத்துக்கு பத்து காய் உன் கணக்கு!..
ஐயா!.. - விக்கித்து நின்றான்..
சாமீ!.. - ஓடி வந்து காலில் விழுந்தாள் அவனுடைய மனைவி...
நூத்துக்குப் பத்து காய் என்றால் -
அந்தத் தென்னந்தோப்பில் இருநூறு மரங்களுக்கு மேல்!..
வருடத்துக்கு நான்கு வெட்டு..
நான்கு பக்கங்களிலும் குலை தள்ளி நிற்க -
மரத்துக்கு மரம் சராசரியாக எண்பது தேங்காய்கள்!..
அப்படியானால் இருநூறு மரங்களுக்கு?.. அடேங்கப்பா!...
சுந்தரம்!..
ஐயா!.. - காரியக்காரர் ஓடி வந்து நின்றார்..
தோப்புல இவங்களுக்கு நல்லதா வீடு கட்டிக் கொடுங்க!..
ஆகட்டுங்க!..
அப்புறம் என்னக்கா.. நடந்தது!?.. - தாமரை ஆவலுடன் கேட்டாள்..
அவங்க ரெண்டு பேரும் நல்லபடியா தென்னந்தோப்பைப் பார்த்துக்கிட்டாங்க.. அவங்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது...
அவங்க.. அவங்க.. ந்னு சொல்றீங்களே!.. பேரெல்லாம் இல்லையா?..
அந்த குழந்தைக்குப் பெயர் காவேரி.. காவேரியோட அப்பா பழனிவேலு.. அம்மா..
அம்மா பேரு!..
சின்னாத்தா!..
என்னக்கா.. சொந்தக்காரங்களைக் கூப்பிடற மாதிரி இருக்கு?...
சொந்தம் தான்!.. எங்களுக்குச் சொந்தம் தான்!..
என்னக்கா?.. வீட்டில வேலை செய்ய வந்தவங்க..ன்னு சொன்னீங்க!..
ஆமாம்.. தாமரை!.. எங்க தாத்தா சொன்னதால வீட்டுக்கு வேலை செய்ய வந்தவங்க தான்!.. அதுக்கப்புறம் அவங்க எங்களோடயே ஒன்றாகிட்டாங்க!..
அப்ப அவங்களோட பேரு?..
தெரியாது.. எங்க தாத்தா - அவங்களை சின்னாத்தா..ன்னு கூப்பிட்டாங்களாம்.. அதுவே வழக்கமாகிப் போச்சு!.. எல்லாருக்கும் சின்னாத்தா.. தான்!..
ஆச்சர்யமா இருக்கே!..
விடியறதுக்கு முன்னால தொழுவத்தில சாணி அள்ளிட்டு பால் கறக்கிறது அவங்கதான்.. விடிஞ்சதும் கோழிக் கூட்டைத் திறந்து விட்டு கூட்டிப் பெருக்குறது அவங்கதான்.. கேணியில தண்ணி இழுத்து தொட்டியை நிரப்புறது அவங்க தான்!.. கொல்லையில அவரைக்காய் பீர்க்கங்காய்.. ன்னு பறிச்சிக்கிட்டு வந்து சமையல் கட்டுல முன்னுக்கு நிக்கிறதும் அவங்க தான்!..
ஏ.. அம்மாடி!..
எங்க ஆத்தா.. எவ்வளவு சொன்னாலும் இவங்க கேக்க மாட்டாங்களாம்... வீட்ல ரெண்டு மூனு வேலைக்காரங்க இருந்தாலும் எல்லா வேலையையும் உரிமையோட செய்வாங்களாம்!..
காவேரிக்கு எந்த உரிமையில அஞ்சு பவுன் சங்கிலி போட்டீங்க.. அந்த உரிமை எனக்கும் இருக்கு.. இந்த வீட்டுல எல்லா வேலையையும் நாந்தான் செய்வேன்.. என்னை யாரும் தடுக்கக்கூடாது!.. - ன்னு சொல்லிட்டாங்களாம்!...
எங்க அப்பா... அம்மா கல்யாணம் முடிஞ்சு மாலையும் கழுத்துமா நின்னப்போ ஆரத்தி எடுத்தவங்க இவங்க தானாம்!..
மகாகவி பாடின மாதிரி - இங்கு இவளை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!.. - அப்படின்னு.. தாத்தா பாடுவாராம்!..
காவேரிக்கு கல்யாணம் செய்யணும்..ன்னு மயிலாடுதுறையில இருந்து மாப்பிள்ளை கொண்டாந்து -
பத்து பவுன் போட்டு சீர் வரிசையோட அனுப்பி வெச்சிருக்காங்க தாத்தா!..
அதோட இல்லாம அந்தத் தென்னந்தோப்புல அஞ்சு ஏக்கர் காவேரி பேர்.. ல எழுதிக் கொடுத்திருக்காங்க!..
தாத்தா காலமானப்போ - சின்னாத்தா அழுத அழுகையில மூனு நாள் காய்ச்சலா கிடந்துருக்காங்க!..
அந்தக் காலத்தில வீட்டில தானே பிரசவம் எல்லாம்!.. நான் பொறந்தப்ப என்னை பட்டுச் சேலைல தாங்கினவங்க இவங்க தானாம்!...
அக்காவின் கன்னங்களில் கண்ணீர்...
தோளினைத் தொட்டு ஆறுதல் படுத்தினாள் - தாமரை..
என்னக்கா.. சின்னப் புள்ளையாட்டம்!..
அது மட்டுமா.. எனக்குத் தலைக்கு ஊத்தி விட்டு மருந்து உரசிக் கொடுத்து சாம்பிராணிப் புகை போட்டு தூங்க வைக்கிறது எல்லாமே அவங்க தான்!..
தாமரை.. எனக்கு இன்னொரு தாய் தான் - சின்னாத்தா!...
எங்க வீட்டுல... அவங்களோட கால் படாத இடம்.. ன்னா - முன் வாசல் திண்ணை தான்!..
ஏங்..க்கா!..
அந்தத் திண்ணையில இருந்து தான் தாத்தா ஊர்ப் பஞ்சாயத்து எல்லாம் சொல்லுவாங்களாம்.. அவங்க புருசனை தண்டிக்க வேணாம்..ன்னு தீர்ப்பு சொன்னதும் அந்தத் திண்ணையில இருந்து தானாம்!..
ஆகா!..
எனக்கு இது தான் கோயிலு.. ந்னு சொல்லுவாங்க... அப்பேர்ப்பட்ட மகராசி!..
இதெல்லாம் எந்த வகையான நன்றிக்கடன் அக்கா!..
நான் பெரியவளானப்போ - பூச்சேலை பார்த்தவங்க சின்னாத்தா தான்!..
ஏழாம் நாள் தலைக்கு தண்ணி ஊத்தி கன்னத்தில சந்தனம் பூசி குங்குமப் பொட்டு வெச்சி ஆரத்தி எடுத்தப்போ அவங்க கண்ணுல ஆனந்தக் கண்ணீர்!..
எங்க ஆத்தாவையோ எங்க அம்மாவையோ நான் முதல்ல கும்பிடலை... சின்னாத்தா அவங்களைத் தான் முதல்ல விழுந்து கும்பிட்டேன்!..
மகராசியா இருக்கணும் என் ராசாத்தி!.. - ந்னு மனசார வாழ்த்துனாங்க!..
அக்கா.. உடம்பெல்லாம் சிலிர்க்குது!..
என் கல்யாணத்தப்போ அவங்களுக்கு ரொம்பவும் வயசாகி விட்டது.. தளர்ந்துட்டாங்க!... அவங்களைப் பூவைப் போல நாங்களும் பார்த்துக் கிட்டோம்..
தாலி கட்டி முடிஞ்சதும் நானும் அத்தானும் மாலையும் கழுத்துமா சின்னாத்தா கால்..ல விழுந்து கும்பிட்டப்ப..
அவங்களுக்கு கையெல்லாம் நடுங்குது.. பேசறதுக்கு வாய் வரலை...
சேலை முடிச்சில இருந்து ஒன்றரைப் பவுன்..ல மோதிரம்.. அது அத்தானுக்கு.. மடியில இருந்து காசுமாலை .. பன்னிரண்டு பவுன்... மருமகன்... கிட்ட சொல்லி ரகசியமா செஞ்சிருக்காங்க... எங்கழுத்துல போட்டு விட்டு அப்படியே கட்டிப் புடிச்சிக்கிடாங்க..
அஞ்சு நிமிஷம் வரைக்கும் நானும் அவங்களும் கண்ணீர்.. ல கரைஞ்சிக்கிட்டு இருந்தோம்!.. அப்போ அவங்க சொன்னது என்ன தெரியுமா?..
என்னக்கா?.. - கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள் - தாமரை..
உம் புள்ளையக் கொஞ்சிட்டுத் தான் நான் போகணும்.. இந்தக் கிழவிக்கு வரங்கொடு!.. - அப்படினாங்க!...
காலம் குதிரைக் குட்டியாய் ஓடிப் போனது... ஒரு வாரத்துக்கு முன்னாலேயே என்னை ஆஸ்பத்திரியில சேர்த்தாச்சு.. என் ராசாத்திக்கு நான் பேறு பார்க்க முடியலையே..ன்னு அழுதிருக்காங்க!..
அவங்களோட அழுகையப் பார்த்துட்டு ஆஸ்பத்திரிக்கு அழைச்சிக்கிட்டு வந்திருக்காங்க... வயித்துல புள்ளை உருண்டிருக்கு.. புரண்டிருக்கு...ன்னு லேடி டாக்டர் ஏதேதோ சொன்னதும் மாமா அத்தை எல்லாரும் பயந்துட்டாங்க..
சின்னாத்தா தான் விடாப்பிடியா உள்ளே வந்து - என் வயித்தை இப்படியும் அப்படியுமா தடவி விட்டாங்க.. அஞ்சாவது நிமிஷம் தாயும் சேயுமா ஆயிட்டோம்.. லேடி டாக்டரைத் தவிர எல்லாருக்கும் சந்தோஷம்!..
அந்தத் தள்ளாத வயசு..லயும் புள்ளைக்குக் கால் கழுவி குளிப்பாட்டி -
துணி மாத்தி.. அடாடா!...
தாமரை அப்படியெல்லாம் இன்னொரு ஜீவன் கிடைக்கவே கிடைக்காது!..
அக்கா.. பிரமிப்பா இருக்குது.. அக்கா!...
அதுக்கப்புறம் மூனு வருஷம்... ஒரு மத்தியான வேளை.. அந்த உயிர்க்குருவி பறந்து போயிடுச்சு... ஒரு நோய் இல்லை.. நொடி இல்லை..
ஊரே திரண்டு வந்திருந்தது.. உயிர் இருக்கிற வரைக்கும் எந்தத் திண்ணையை கோயில்..ன்னு சொன்னாங்களோ அந்தத் திண்ணையில தான் மாலை மரியாதையோட கிடத்தி வெச்சிருந்தோம்!..
மறுநாள் நடு முற்றத்தில குருத்து ஓலை பந்தல் போட்டு எல்லாம் நல்லபடியா எல்லாம் செஞ்சு அனுப்பி வைத்தோம்..
அக்கா தங்கை இருவர் கண்களிலும் தாரை தாரையாய் நீர்..
தாத்தா கட்டிக் கொடுத்த வீட்டை அப்பா ஓட்டு வீடா மாற்றிக் கொடுத்தாங்க.. ஒரு சமயம் அந்த வீட்டை காவேரிக்கு கொடுத்துட்டு எங்க வீட்டிலேயே இருந்துக்குங்க.. ன்னு சொன்னோம்!..
அதுக்கு சின்னாத்தா என்ன சொன்னாங்க தெரியுமா!..
..... ..... .....!..
அது என் சாமி எனக்குக் கொடுத்தது.. என்னைய மாதிரி ஏழை பாழைகளுக்கு ஆகட்டும்.. அப்படின்னு சொல்லிட்டாங்க!..
எத்தனை நல்ல மனசு அவங்களுக்கு!..
அவங்க இஷ்டப்படியே செய்தோம்..
அவங்க இருந்த வீட்டில தான் இப்போ பொது நூலகம் இருக்கு!..
ஊர்ச் சொத்துக்கு ஆசைப்படுகிற இந்தக் காலத்தில
தனக்குக் கொடையாய்க் கிடைத்த சொத்தையும்
ஊருக்கே கொடுத்த உத்தமி சின்னாத்தா!..
அவங்க புருஷனை அன்பால திருத்துனாங்க எங்க தாத்தா..
அந்த அன்புக்காக எங்க குடும்பத்துக்கே தன்னைத் தியாகம் செஞ்சிட்டாங்க!..
அப்படிப்பட்ட உத்தமிகளோட நாமும் வாழ்ந்தோம்..ங்கறது தான் சந்தோஷம்!..
இனிமேல் இவங்களை மாதிரி நல்லவங்கள்...லாம் பிறப்பார்களா.. அக்கா?..
வேலைக்காரியா வந்து
வில்லங்கமாகிப் போகிற இந்த கால கட்டத்தில்
இப்படியான தியாக தீபங்கள்.. இன்னும் இருக்காங்க!...
அப்படிப்பட்ட தியாக தீபங்களோட வெளிச்சத்தில தான்
உலகம் சுத்திக்கிட்டு இருக்கு!...
எல்லா இடத்திலயும் எல்லா விஷயத்திலயும்
பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகிடுறாங்க!..
அப்படிப்பட்டவங்களுக்கு மத்தியில -
சின்னாத்தா மாதிரியானவங்க தான் குன்றிலிட்ட விளக்கு!..
அந்த விளக்கிற்கு அன்பு தான் ஆதாரம்..
தாமரை!.. இன்றைக்கு மகளிர் தினம்..
அன்புக்கு மறுபெயர் பெண்மை..
அதுதான் மறுக்க முடியாத உண்மை...
இதைப் புரிந்து கொள்ள இயலாத நிலையில்
ஆண்களும் பெண்களுமாக ஆயிரமாயிரம் பேர்..
உண்மைதான் அக்கா!..
எதிரில் அவளுடைய புருஷன்.. கைகள் கட்டப்பட்ட நிலையில்!..
கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றதற்காகப் பிடிபட்டவன்..
எங்க அப்பனும் ஆத்தாளும் இந்த ஆளை நல்லவன்..ன்னு நம்புனாங்க.. நானும் மனசார வாக்கப்பட்டேன்!.. ஏழு மாசமாச்சு நானும் ஒரு ஜீவனை வயித்தில சுமந்து.. அந்த சிசு நல்லா இருக்கணும்.. ஊர்ப்பாவம் எனக்கு வேண்டாம்.. இந்த ஆளை இழுத்துக்கிட்டு போயி ஜெயில்ல போடுங்க.. மனசு திருந்தி வந்தா வரட்டும்.. இல்லேன்னா?...
நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள்..
கூடியிருந்த ஊர் மக்கள் பரிதாபப்பட்டனர்...
அங்கிருந்த பெண்களுள் ஒரு சிலர் ஓடி வந்து அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டார்கள்..
வாயும் வயிறுமா இருக்கறவ.. இந்த மாதிரியெல்லாம் செய்யக்கூடாது...
ஐயா!.. இனி என்ன செய்யலாம்..ன்னு நீங்க தான் சொல்லவேணும்!..
இந்த ஒருதடவை பார்க்கலாம்!..
அந்த ஊரின் பெரிய தனக்காரர் மீசையை முறுக்கிக் கொண்டார்..
சரிங்க.. ஐயா!.. அப்படியே ஆகட்டும்!.. டேய்.. இனியாவது ஒழுங்கா இருக்கப் பாரு!..
அவனுடைய கைகளை அவிழ்த்து விட்டுப் போனார்கள்...
என்னைய மன்னிச்சிடுங்க ஐயா!..
சரி.. சரி.. இன்னையில இருந்து வடகரை தென்னந்தோப்புக்கு நீதான் காவல்.. மட்டை பாளை எல்லாம் உனக்குத் தான்.. கன்னல் விழக்கூடாது.. நூத்துக்கு பத்து காய் உன் கணக்கு!..
ஐயா!.. - விக்கித்து நின்றான்..
சாமீ!.. - ஓடி வந்து காலில் விழுந்தாள் அவனுடைய மனைவி...
![]() |
தாளுண்ட நீரைத் தலையாலே தரும் தென்னை |
அந்தத் தென்னந்தோப்பில் இருநூறு மரங்களுக்கு மேல்!..
வருடத்துக்கு நான்கு வெட்டு..
நான்கு பக்கங்களிலும் குலை தள்ளி நிற்க -
மரத்துக்கு மரம் சராசரியாக எண்பது தேங்காய்கள்!..
அப்படியானால் இருநூறு மரங்களுக்கு?.. அடேங்கப்பா!...
சுந்தரம்!..
ஐயா!.. - காரியக்காரர் ஓடி வந்து நின்றார்..
தோப்புல இவங்களுக்கு நல்லதா வீடு கட்டிக் கொடுங்க!..
ஆகட்டுங்க!..
***
இதெல்லாம் நடந்தது அறுபது வருடங்களுக்கு முன்னால்!..
அக்கா தமிழ்ச்செல்வி அழகாக விவரிக்க -
அவங்க ரெண்டு பேரும் நல்லபடியா தென்னந்தோப்பைப் பார்த்துக்கிட்டாங்க.. அவங்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது...
அவங்க.. அவங்க.. ந்னு சொல்றீங்களே!.. பேரெல்லாம் இல்லையா?..
அந்த குழந்தைக்குப் பெயர் காவேரி.. காவேரியோட அப்பா பழனிவேலு.. அம்மா..
அம்மா பேரு!..
சின்னாத்தா!..
என்னக்கா.. சொந்தக்காரங்களைக் கூப்பிடற மாதிரி இருக்கு?...
சொந்தம் தான்!.. எங்களுக்குச் சொந்தம் தான்!..
என்னக்கா?.. வீட்டில வேலை செய்ய வந்தவங்க..ன்னு சொன்னீங்க!..
ஆமாம்.. தாமரை!.. எங்க தாத்தா சொன்னதால வீட்டுக்கு வேலை செய்ய வந்தவங்க தான்!.. அதுக்கப்புறம் அவங்க எங்களோடயே ஒன்றாகிட்டாங்க!..
அப்ப அவங்களோட பேரு?..
தெரியாது.. எங்க தாத்தா - அவங்களை சின்னாத்தா..ன்னு கூப்பிட்டாங்களாம்.. அதுவே வழக்கமாகிப் போச்சு!.. எல்லாருக்கும் சின்னாத்தா.. தான்!..
ஆச்சர்யமா இருக்கே!..
விடியறதுக்கு முன்னால தொழுவத்தில சாணி அள்ளிட்டு பால் கறக்கிறது அவங்கதான்.. விடிஞ்சதும் கோழிக் கூட்டைத் திறந்து விட்டு கூட்டிப் பெருக்குறது அவங்கதான்.. கேணியில தண்ணி இழுத்து தொட்டியை நிரப்புறது அவங்க தான்!.. கொல்லையில அவரைக்காய் பீர்க்கங்காய்.. ன்னு பறிச்சிக்கிட்டு வந்து சமையல் கட்டுல முன்னுக்கு நிக்கிறதும் அவங்க தான்!..
ஏ.. அம்மாடி!..
எங்க ஆத்தா.. எவ்வளவு சொன்னாலும் இவங்க கேக்க மாட்டாங்களாம்... வீட்ல ரெண்டு மூனு வேலைக்காரங்க இருந்தாலும் எல்லா வேலையையும் உரிமையோட செய்வாங்களாம்!..
காவேரிக்கு எந்த உரிமையில அஞ்சு பவுன் சங்கிலி போட்டீங்க.. அந்த உரிமை எனக்கும் இருக்கு.. இந்த வீட்டுல எல்லா வேலையையும் நாந்தான் செய்வேன்.. என்னை யாரும் தடுக்கக்கூடாது!.. - ன்னு சொல்லிட்டாங்களாம்!...
எங்க அப்பா... அம்மா கல்யாணம் முடிஞ்சு மாலையும் கழுத்துமா நின்னப்போ ஆரத்தி எடுத்தவங்க இவங்க தானாம்!..
மகாகவி பாடின மாதிரி - இங்கு இவளை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!.. - அப்படின்னு.. தாத்தா பாடுவாராம்!..
காவேரிக்கு கல்யாணம் செய்யணும்..ன்னு மயிலாடுதுறையில இருந்து மாப்பிள்ளை கொண்டாந்து -
பத்து பவுன் போட்டு சீர் வரிசையோட அனுப்பி வெச்சிருக்காங்க தாத்தா!..
அதோட இல்லாம அந்தத் தென்னந்தோப்புல அஞ்சு ஏக்கர் காவேரி பேர்.. ல எழுதிக் கொடுத்திருக்காங்க!..
அந்தக் காலத்தில வீட்டில தானே பிரசவம் எல்லாம்!.. நான் பொறந்தப்ப என்னை பட்டுச் சேலைல தாங்கினவங்க இவங்க தானாம்!...
அக்காவின் கன்னங்களில் கண்ணீர்...
தோளினைத் தொட்டு ஆறுதல் படுத்தினாள் - தாமரை..
என்னக்கா.. சின்னப் புள்ளையாட்டம்!..
அது மட்டுமா.. எனக்குத் தலைக்கு ஊத்தி விட்டு மருந்து உரசிக் கொடுத்து சாம்பிராணிப் புகை போட்டு தூங்க வைக்கிறது எல்லாமே அவங்க தான்!..
வீட்டில யாரும் சளி ஜூரம்..ன்னு சொல்லிடக்கூடாது..
அங்கே இங்கே ஓடி பச்சிலைகளைக் கொண்டு வந்து கஷாயம் தான்...
தலை குளிக்க செம்பருத்திச் சாந்து..
மேலுக்குக் குளிக்க கஸ்தூரி மஞ்சள்.. பயத்தமாவு...
முகத்துக்கு பூசிக்க மஞ்சக்கிழங்கு ...
தலைக்கு பொன்னாங்கண்ணித் தைலம் தடவி
தளரத் தளர சடை போட்டு தாழம்பூ மடலை வெச்சி -
நெத்திக்குச் சாந்தும் கண்ணுக்கு மையும் எழுதி விட்டாங்கன்னா -
தேவதையாட்டம் இருப்பேன்!.....
நாளுங்கிழமையும்...ன்னா மருதாணி வச்சி விடுவாங்க... பக்கத்துல உட்கார்ந்து சோறு ஊட்டி விடுவாங்க.. விடியற்காலை..ல எழுப்பி விட்டு கையைப் பாரு.. ராசாத்தி..ன்னு சிரிப்பாங்க..
அப்படியே மருதாணி வாசத்தோட ரத்தினச் சிவப்பா இருக்கும் விரல் எல்லாம்!..
எங்க வீட்டுல... அவங்களோட கால் படாத இடம்.. ன்னா - முன் வாசல் திண்ணை தான்!..
ஏங்..க்கா!..
அந்தத் திண்ணையில இருந்து தான் தாத்தா ஊர்ப் பஞ்சாயத்து எல்லாம் சொல்லுவாங்களாம்.. அவங்க புருசனை தண்டிக்க வேணாம்..ன்னு தீர்ப்பு சொன்னதும் அந்தத் திண்ணையில இருந்து தானாம்!..
ஆகா!..
எனக்கு இது தான் கோயிலு.. ந்னு சொல்லுவாங்க... அப்பேர்ப்பட்ட மகராசி!..
இதெல்லாம் எந்த வகையான நன்றிக்கடன் அக்கா!..
நான் பெரியவளானப்போ - பூச்சேலை பார்த்தவங்க சின்னாத்தா தான்!..
ஏழாம் நாள் தலைக்கு தண்ணி ஊத்தி கன்னத்தில சந்தனம் பூசி குங்குமப் பொட்டு வெச்சி ஆரத்தி எடுத்தப்போ அவங்க கண்ணுல ஆனந்தக் கண்ணீர்!..
எங்க ஆத்தாவையோ எங்க அம்மாவையோ நான் முதல்ல கும்பிடலை... சின்னாத்தா அவங்களைத் தான் முதல்ல விழுந்து கும்பிட்டேன்!..
மகராசியா இருக்கணும் என் ராசாத்தி!.. - ந்னு மனசார வாழ்த்துனாங்க!..
அக்கா.. உடம்பெல்லாம் சிலிர்க்குது!..
என் கல்யாணத்தப்போ அவங்களுக்கு ரொம்பவும் வயசாகி விட்டது.. தளர்ந்துட்டாங்க!... அவங்களைப் பூவைப் போல நாங்களும் பார்த்துக் கிட்டோம்..
தாலி கட்டி முடிஞ்சதும் நானும் அத்தானும் மாலையும் கழுத்துமா சின்னாத்தா கால்..ல விழுந்து கும்பிட்டப்ப..
அவங்களுக்கு கையெல்லாம் நடுங்குது.. பேசறதுக்கு வாய் வரலை...
சேலை முடிச்சில இருந்து ஒன்றரைப் பவுன்..ல மோதிரம்.. அது அத்தானுக்கு.. மடியில இருந்து காசுமாலை .. பன்னிரண்டு பவுன்... மருமகன்... கிட்ட சொல்லி ரகசியமா செஞ்சிருக்காங்க... எங்கழுத்துல போட்டு விட்டு அப்படியே கட்டிப் புடிச்சிக்கிடாங்க..
அஞ்சு நிமிஷம் வரைக்கும் நானும் அவங்களும் கண்ணீர்.. ல கரைஞ்சிக்கிட்டு இருந்தோம்!.. அப்போ அவங்க சொன்னது என்ன தெரியுமா?..
என்னக்கா?.. - கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள் - தாமரை..
உம் புள்ளையக் கொஞ்சிட்டுத் தான் நான் போகணும்.. இந்தக் கிழவிக்கு வரங்கொடு!.. - அப்படினாங்க!...
காலம் குதிரைக் குட்டியாய் ஓடிப் போனது... ஒரு வாரத்துக்கு முன்னாலேயே என்னை ஆஸ்பத்திரியில சேர்த்தாச்சு.. என் ராசாத்திக்கு நான் பேறு பார்க்க முடியலையே..ன்னு அழுதிருக்காங்க!..
அவங்களோட அழுகையப் பார்த்துட்டு ஆஸ்பத்திரிக்கு அழைச்சிக்கிட்டு வந்திருக்காங்க... வயித்துல புள்ளை உருண்டிருக்கு.. புரண்டிருக்கு...ன்னு லேடி டாக்டர் ஏதேதோ சொன்னதும் மாமா அத்தை எல்லாரும் பயந்துட்டாங்க..
சின்னாத்தா தான் விடாப்பிடியா உள்ளே வந்து - என் வயித்தை இப்படியும் அப்படியுமா தடவி விட்டாங்க.. அஞ்சாவது நிமிஷம் தாயும் சேயுமா ஆயிட்டோம்.. லேடி டாக்டரைத் தவிர எல்லாருக்கும் சந்தோஷம்!..
அந்தத் தள்ளாத வயசு..லயும் புள்ளைக்குக் கால் கழுவி குளிப்பாட்டி -
துணி மாத்தி.. அடாடா!...
தாமரை அப்படியெல்லாம் இன்னொரு ஜீவன் கிடைக்கவே கிடைக்காது!..
அக்கா.. பிரமிப்பா இருக்குது.. அக்கா!...
அதுக்கப்புறம் மூனு வருஷம்... ஒரு மத்தியான வேளை.. அந்த உயிர்க்குருவி பறந்து போயிடுச்சு... ஒரு நோய் இல்லை.. நொடி இல்லை..
ஊரே திரண்டு வந்திருந்தது.. உயிர் இருக்கிற வரைக்கும் எந்தத் திண்ணையை கோயில்..ன்னு சொன்னாங்களோ அந்தத் திண்ணையில தான் மாலை மரியாதையோட கிடத்தி வெச்சிருந்தோம்!..
மறுநாள் நடு முற்றத்தில குருத்து ஓலை பந்தல் போட்டு எல்லாம் நல்லபடியா எல்லாம் செஞ்சு அனுப்பி வைத்தோம்..
அக்கா தங்கை இருவர் கண்களிலும் தாரை தாரையாய் நீர்..
தாத்தா கட்டிக் கொடுத்த வீட்டை அப்பா ஓட்டு வீடா மாற்றிக் கொடுத்தாங்க.. ஒரு சமயம் அந்த வீட்டை காவேரிக்கு கொடுத்துட்டு எங்க வீட்டிலேயே இருந்துக்குங்க.. ன்னு சொன்னோம்!..
அதுக்கு சின்னாத்தா என்ன சொன்னாங்க தெரியுமா!..
..... ..... .....!..
அது என் சாமி எனக்குக் கொடுத்தது.. என்னைய மாதிரி ஏழை பாழைகளுக்கு ஆகட்டும்.. அப்படின்னு சொல்லிட்டாங்க!..
எத்தனை நல்ல மனசு அவங்களுக்கு!..
அவங்க இஷ்டப்படியே செய்தோம்..
அவங்க இருந்த வீட்டில தான் இப்போ பொது நூலகம் இருக்கு!..
ஊர்ச் சொத்துக்கு ஆசைப்படுகிற இந்தக் காலத்தில
தனக்குக் கொடையாய்க் கிடைத்த சொத்தையும்
ஊருக்கே கொடுத்த உத்தமி சின்னாத்தா!..
அவங்க புருஷனை அன்பால திருத்துனாங்க எங்க தாத்தா..
அந்த அன்புக்காக எங்க குடும்பத்துக்கே தன்னைத் தியாகம் செஞ்சிட்டாங்க!..
அப்படிப்பட்ட உத்தமிகளோட நாமும் வாழ்ந்தோம்..ங்கறது தான் சந்தோஷம்!..
இனிமேல் இவங்களை மாதிரி நல்லவங்கள்...லாம் பிறப்பார்களா.. அக்கா?..
வேலைக்காரியா வந்து
வில்லங்கமாகிப் போகிற இந்த கால கட்டத்தில்
இப்படியான தியாக தீபங்கள்.. இன்னும் இருக்காங்க!...
அப்படிப்பட்ட தியாக தீபங்களோட வெளிச்சத்தில தான்
உலகம் சுத்திக்கிட்டு இருக்கு!...
எல்லா இடத்திலயும் எல்லா விஷயத்திலயும்
பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகிடுறாங்க!..
அப்படிப்பட்டவங்களுக்கு மத்தியில -
சின்னாத்தா மாதிரியானவங்க தான் குன்றிலிட்ட விளக்கு!..
அந்த விளக்கிற்கு அன்பு தான் ஆதாரம்..
தாமரை!.. இன்றைக்கு மகளிர் தினம்..
அன்புக்கு மறுபெயர் பெண்மை..
அதுதான் மறுக்க முடியாத உண்மை...
இதைப் புரிந்து கொள்ள இயலாத நிலையில்
ஆண்களும் பெண்களுமாக ஆயிரமாயிரம் பேர்..
உண்மைதான் அக்கா!..
***
சின்னாத்தா!..
இவர்களைப் போல இன்னும்
எத்தனை எத்தனையோ மாதரசிகள்!..
அவர்களுக்கெல்லாம் இந்தப் பதிவு சமர்ப்பணம்..
பெண்மை வாழ்க..
என்றென்றும் வாழ்க!..
ஓம் சக்தி ஓம்..
***
முத்திரை:
மகளிர் தினம்
இருப்பிடம்:-
குவைத்
செவ்வாய், மார்ச் 08, 2016
பெண் என்ற பெருஞ்சீர்
அக்கா.. அக்கா...வ்!..
வாம்மா.. தாமரை!... வா.. வா!..
அக்காவுக்கு நல்வாழ்த்துகள்!..
உனக்கும் நல்வாழ்த்துகள்.. டா!..
அத்தான் பிள்ளைகள் எல்லாம் எப்படி.. இருக்காங்க?..
எல்லாரும் சௌக்கியம் தான்!.. உங்க அத்தை.. மாமா.. எல்லாரும் எப்படி?..
நல்லாருக்காங்க.. அக்கா!.. நீங்க எப்போ மாமாங்கத்துக்குப் போனீங்க?..
நாங்க எல்லாரும் கோயில்..ல கொடியேற்றம் ஆனதுமே போய்ட்டு தீர்த்தமாடிட்டு வந்துட்டோம்!..
சோலையப்பன் தெருவுல.. எங்க அத்தைக்கு சொந்தக்காரங்க இருக்காங்க.. அவங்க வீட்டில ரெண்டு நாள் தங்கியிருந்து எல்லா கோயிலுக்கும் போய்ட்டு வந்தோம்...
நல்ல கூட்டம்.. இல்லையா!..
அக்கா.. உங்களுக்கு இது எத்தனையாவது மாமாங்கம்?..
மூன்றாவது மகாமகம்..
அப்போ எனக்கு ஆறு வயசு.. இது இரண்டாவது மகாமகம்!..
நம்ம முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவங்களுக்கு அஞ்சாவது மாமாங்கம்!..
அக்கா.. நானும் பதிவுல படிச்சேன்!.. பெரியவங்களப் பார்க்கிறதே பெருமை!..
தாமரை.. இன்னிக்கு மகளிர் தினமாச்சே.. புதுசா என்ன சேதி இருக்கு?..
என்னக்கா.. இது அநியாயம்?.. டில்லியிலே சின்னப் பெண் ஒருத்திய பாழடிச்சுட்டு உயிரோட தீ வெச்சி கொளுத்தியிருக்கான் ஒரு படுபாவி!.. அவனைத் தேடிக் கண்டு பிடிச்சிருக்காங்களாம்.. இவனாலேயே அந்தப் பொண்ணு பள்ளிக்கூடம் போகாம இருந்திருக்கா.. கொஞ்ச நாளைக்கு முன்னால இந்தப் பிரச்னையினால இவனை உள்ள புடிச்சி போட்டுருக்காங்க.. இப்போ வெளியில வந்ததும் அந்தப் பயல் இந்த மாதிரி நாச வேலை செஞ்சிருக்கலாம்..ன்னு பேசிக்கிறாங்களாம்!..
இவனுக்கும் வாதாட வருவார்கள்.. வசதியானவனா இருந்த சம்பவம் நடந்த அன்னைக்கு ஊர்லயே இல்லை என்பார்கள்.. இல்லேன்னா கொடுக்கிற காசை வாங்கிக்கிட்டு கம்முன்னு கிட .. அப்படிம்பானுங்க!..
நம்ம நாடு அல்லவா!.. என்ன வேணாலும் நடக்கலாம்.. வழக்கு என்ன ஆகுமோ தெரியாது.. அப்படியே கொசு கடிச்ச மாதிரி ஏதாவது தண்டனை கிடைத்தாலும் - போற போக்கில கறவை மாடும் கன்னுக் குட்டியும் வாங்கிக்கச் சொல்லி காசு கொடுத்தாலும் கொடுப்பாங்க!..
அக்கா.. இவனுங்கள வெறி நாயை விட்டு கடிக்க வைக்க கூடாதா? இல்லே.. தெரு நாய்க்கு மாதிரி நறுக்கி விட்டுறக் கூடாதா!..
அதெல்லாம் முடியாதுடா.. தங்கம்.. இது ஜனநாயக நாடு அல்லவா.. இவனுக்கு அதுக்கெல்லாம் உரிமை இருக்கு..ன்னு சொல்லிக்கிட்டு வேற யாராவது கிளம்பி வருவாங்கடா..
அப்ப என்ன தான் முடிவு.. இதுக்கெல்லாம்?..
மாறணும்.. எல்லாமே மாறணும்!.. இல்லேன்னா மாற்றணும்!.. அதுக்கு பெண்களே முன் வர்றதில்லே...
எப்படி..க்கா சொல்றீங்க?..
நேத்து சிவராத்திரி அல்லவா.. மகாராஷ்ட்ராவில நாசிக் நகரில் உள்ள திரயம்பகேஸ்வரர் கோயில் கருவறைக்கு உள்ளே போய் சாமி கும்பிட உரிமை வேண்டும் .. அப்படின்னு பெண்கள் அமைப்பு கூட்டங்கூடி போராடி இருக்கு.. அவங்க கேட்கிறாங்க காசியில விஸ்வநாதரை தொட்டு வணங்கற மாதிரி.. ன்னு!..
ஏங்க்கா!.. அதில என்ன தப்பு?.. நமக்கு அந்த உரிமை இல்லையா.. நாமும் கடவுளோட பிள்ளைகள் இல்லையா?..
இருக்கே.. காசியில இருக்கிற மாதிரி.. இன்னும் பல கோயில்கள்ல.. பெண்கள் தாங்களே சிவலிங்கத்தை நீராட்டி வழிபட உரிமை இருக்கே... அங்கே போய் சந்தோஷமா வழிபடலாமே..
ஏன்.. இங்கேயும் அந்த மாதிரி விட வேண்டியது தானே!..
காசியில விஸ்வநாதரைத் தொட்டு வணங்க ஒரு காரணம் இருக்குற மாதிரி.. திரியம்பகேஸ்வரை தொட்டு வணங்க விடாததற்கும் ஒரு காரணம் இருக்கும்!.. சமய வழிபாடுக்கு நம்பிக்கைகள் தான் அடிப்படை..
அப்போ.. நீங்க என்ன தான் சொல்ல வர்றீங்க?..
தாமரை.. ந்னு - நான் உன் தோளைத் தொடுவேன்.. எல்லாரும் பெண்கள் தான் .. அதுக்காக வேற ஒரு பெண்ணை நீ தொட விடுவாயா?..
அதெப்படி?..
இதெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம் தாமரை.. ஏன்.. இந்த பெண்கள் அமைப்பு எல்லாம் ஒன்னா கூடி பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை உடனே நிறைவேற்றணும் ..ன்னு நாடு முழுக்க பெரிய போராட்டம் நடத்துனா என்ன?.. இதுவரைக்கும் இல்லையே!..
அவங்களுக்கு சபரிமலைக்கு போகணும்.. சிவலிங்கத்தைத் தொட்டுக் கும்பிடணும்.. இந்த மாதிரி விஷயம் தான் பெரிதாக இருக்கின்றது... சபரி மலைக்குப் போறவங்க வீட்டில இருக்கிற பருவப் பெண்களைக் கேட்டுப் பாரு.. நீங்களும் மலைக்குப் போறீங்களான்னு..
கேட்டா?..
ஐயையோ.. அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. அப்படி..ம்பாங்க!..
இந்த மாதிரி சொல்ல வெச்சிருக்கிறது தானே அடக்கு முறை.. ஆணாதிக்கம்!..
அடக்கு முறையாவது.. மடக்கு முறையாவது!.. நாளைக்கு ஐயப்ப சாமியே நேர்ல வந்து - வாங்க எல்லாரும் சபரிமலைக்கு! .. ந்னு கூப்பிட்டால் கூட இந்தப் பொண்ணுங்க சபரிமலைக் காட்டுக்குள்ள போக மாட்டாங்க!..
ஏன்!?..
தாமரை.. நம்ம நாட்டுல.. காட்டுக்குள்ள எத்தனை எத்தனையோ கிராமங்கள்.. அங்கேயும் பெண்கள் இருக்காங்க.. அங்கேயும் அவங்க கும்பிடுகின்ற சாமியும் இருக்கு.. அவங்கள்..ல பத்து பேரை அழைச்சுக்கிட்டு வந்து சபரிமலை காட்டுக்குள்ள போங்க.. ந்ன்னாலும் அவங்க போக மாட்டாங்க!..
ஏங்க்கா!?..
அது தாம்மா.. ரத்தத்தில ஊறிப் போன பக்தி.. பாரம்பர்யம்!..
எத்தனையோ ஊர்கள்..ல முனீஸ்வரன்.. ஐயனார்.. காளியம்மன்..ன்னு ஊருக்கு வெளியே இருக்குற கோயிலுக்கு அந்த ஊரு பொண்ணுங்களே போக மாட்டாங்க..
அங்கே எல்லாம் இந்த அமைப்புங்க போயி போராட வேண்டியது தானே!.. வாங்கடி பொண்ணுங்களா... ந்னு கையைப் புடிச்சு அழைச்சிக்கிட்டு போக வேண்டியது தானே!..
என்னக்கா.. இப்படியும் இருக்குதா!..
ஏன்.. ஆடி மாசமும் தை மாசமும் செவ்வாய் பிள்ளையார்..ன்னு கும்புடுறோமே.. அந்த பூஜைக்கு ஆண்களையும் உள்ளே விடச் சொல்லி - இந்தப் பெண்கள் அமைப்பு போராடலாமே!.. அதுவும் போராட்டம் தானே!..
அக்கா!.. என்ன சொல்றீங்க.. நீங்க?!..
ஏம்மா.. அதிர்ச்சியா இருக்கா!.. நானே வாங்க..ன்னு சொன்னாலும் உங்க அத்தான் வரமாட்டார்.. அவரு..ன்னு இல்லை.. எந்த ஆண் பிள்ளையுமே வரமாட்டாங்க!..
என்னக்கா.. திடீர்..ன்னு இப்படி சொல்லிட்டீங்க!.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குதுக்கா!..
இவங்க எல்லாம் ஒரு நாள் கூத்துக்கு மீசை எடுக்கறவங்க!.. ஆக்க பூர்வமான செயல்பாடுகள்..போராட்டங்கள்.. ல எல்லாம் ஈடுபடவே மாட்டாங்க!...
நாமே நமக்குக் காவலா மாறிடணும்.. மற்றதுகளை நம்பிப் பிரயோஜனம் ஏதும் இல்லை.. சின்னஞ்சிறு பெண் குழந்தைகள்.. ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரையும் பாதுகாக்கிற கேடயமா ஆகிடணும்...
இதெல்லாம் நடக்கக் கூடியதா அக்கா!..
ஏன் நடக்காது?.. ஏம்மா நடக்காது!?..
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்..
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்...
அப்படின்னு மகாகவி கர்ஜிக்கின்றாரே.. கேட்டதில்லையா?..
அக்கா!..
அது மட்டுமா!..
சேயிழைமார் நெஞ்ச மீது - நாம்
சீறும்புலியைக் காணும் போது
தீயதோர் நிலைமை இங்கேது?.. - நம்
தென்னாட்டில் அடிமை நில்லாது!..
அப்படின்னு பாரதியார் சொல்றார்.. அவர் சொல்ற அறிவு..ங்கறது வெறும் ஏட்டுப் படிப்பு அல்ல.. அதுக்கும் மேலே!.. அந்த அறிவை வளர்த்துக் கொள்ள நாம் தலைப்பட்டு விட்டால் - தடைகள் எல்லாம் தானாகவே உடைந்து போகும்!..
அக்கா.. நீங்க உங்க தளத்தில மகளிர் தினத்துக்காக ஏதும் எழுதலையா!?..
இனிமே தான் எழுதணும் தாமரை.. இதோ பார்..
முனைவர் மகேஸ்வரி பாலசந்திரன் .. எழுதுன கவிதையைப் பார்..
யார் அக்கா.. இவங்க?..
கரந்தை தமிழ்ச் சங்க கல்வி நிலையத்தில் பணி.. தமிழார்வம் மிக்கவர்.. இது அவங்களோட பழங்கவிதையாம்.. காலத்துக்குப் பொருந்தி வருவதைப் பார்!..
பாரதியின் இலட்சியக் கனவே!..
முட்டிகளுக்குள் புதைத்துக் கொள்ளவா
உன் பட்டு முகம் படைக்கப்பட்டது?..
நெல்மணிக்குத் தப்பிய நீ
சொல்மணியாய் சுடர் விடத்தான்..
கோழிக் குழம்புக்குத் தப்பிய நீ
கோள்களின் போக்கிற்கு
புதுக்கவிதை விளக்கம் கூறத்தான்..
கள்ளிப் பாலுக்குத் தப்பிய நீ
காலங்களையே மாற்றி அமைக்கத்தான்..
அடுக்களைக்குள் ஆழ்ந்து போன நீ
அடிமைத் தளையைக் களையத்தான்!..
இப்படித்தான் பல கவிகள்
புரட்சிக் கவிகள் எழுதினேன்..
ஆனால், இன்றும்
நான் காண்பது என்னவோ?..
மெத்தப் படித்த அவள்
படித்தும் பதராக..
அடிமையாய்..
போகப் பொருளாய்..
காட்சிப் பதுமையாய்..
அடங்காப் பிடாரி என
அலங்கோலமாய்..
இன்னும்.. இன்னும்..
ஆணுக்குப் பெண் கீழானவளும் அல்ல
அவனுக்கு மேலானவளும் அல்ல..
அவள் வேறானவள்..
பாரதியே...
பெண் முன்னேற்றம்
உன்னெழுத்தின் சாதனைதான்..
ஆனாலும்,
நடக்கும் அநியாயம் கண்டு
கண் கலங்கியிருப்பாய்!..
இன்று நீ இருந்திருந்தால்!..
பெண்கள் தினமாம்..
கொண்டாட்டமாம்!..
மனம் வலிக்கின்றது.
பெண்ணாகப் பிறந்ததற்கு!..
மகத்துவம் மிக்க
என் இனிய சமுதாயமே!..
என்று நீ
அவளை மனுசியாய்
பார்க்கப் போகின்றாய்?..
பெண்ணை
நல்ல தோழியாய்
நல்ல மனைவியாய்
நல்ல அகத்தவளாய்!..
இதுவே போதும் - அவள்
நலமுடன் வளமுடன் வாழ..
வாழ விடு..
வார்த்தையில் அல்ல..
வாழ்க்கையில்..
நிஜத்தில்!..
அருமையா எழுதியிருக்காங்க.. அக்கா!.. மனமார்ந்த பாராட்டுகள்!.. அப்போ நான் புறப்படுகின்றேன்!..
தாமரை.. அதுக்கு முன்னால இந்தாம்மா மோர்!..
ஜில்லுன்னு இருக்கு அக்கா!..
வாம்மா.. தாமரை!... வா.. வா!..
அக்காவுக்கு நல்வாழ்த்துகள்!..
உனக்கும் நல்வாழ்த்துகள்.. டா!..
அத்தான் பிள்ளைகள் எல்லாம் எப்படி.. இருக்காங்க?..
எல்லாரும் சௌக்கியம் தான்!.. உங்க அத்தை.. மாமா.. எல்லாரும் எப்படி?..
நல்லாருக்காங்க.. அக்கா!.. நீங்க எப்போ மாமாங்கத்துக்குப் போனீங்க?..
நாங்க எல்லாரும் கோயில்..ல கொடியேற்றம் ஆனதுமே போய்ட்டு தீர்த்தமாடிட்டு வந்துட்டோம்!..
![]() |
இவங்க தான் தாமரை |
நல்ல கூட்டம்.. இல்லையா!..
அக்கா.. உங்களுக்கு இது எத்தனையாவது மாமாங்கம்?..
மூன்றாவது மகாமகம்..
அப்போ எனக்கு ஆறு வயசு.. இது இரண்டாவது மகாமகம்!..
நம்ம முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவங்களுக்கு அஞ்சாவது மாமாங்கம்!..
அக்கா.. நானும் பதிவுல படிச்சேன்!.. பெரியவங்களப் பார்க்கிறதே பெருமை!..
தாமரை.. இன்னிக்கு மகளிர் தினமாச்சே.. புதுசா என்ன சேதி இருக்கு?..
என்னக்கா.. இது அநியாயம்?.. டில்லியிலே சின்னப் பெண் ஒருத்திய பாழடிச்சுட்டு உயிரோட தீ வெச்சி கொளுத்தியிருக்கான் ஒரு படுபாவி!.. அவனைத் தேடிக் கண்டு பிடிச்சிருக்காங்களாம்.. இவனாலேயே அந்தப் பொண்ணு பள்ளிக்கூடம் போகாம இருந்திருக்கா.. கொஞ்ச நாளைக்கு முன்னால இந்தப் பிரச்னையினால இவனை உள்ள புடிச்சி போட்டுருக்காங்க.. இப்போ வெளியில வந்ததும் அந்தப் பயல் இந்த மாதிரி நாச வேலை செஞ்சிருக்கலாம்..ன்னு பேசிக்கிறாங்களாம்!..
இவனுக்கும் வாதாட வருவார்கள்.. வசதியானவனா இருந்த சம்பவம் நடந்த அன்னைக்கு ஊர்லயே இல்லை என்பார்கள்.. இல்லேன்னா கொடுக்கிற காசை வாங்கிக்கிட்டு கம்முன்னு கிட .. அப்படிம்பானுங்க!..
நம்ம நாடு அல்லவா!.. என்ன வேணாலும் நடக்கலாம்.. வழக்கு என்ன ஆகுமோ தெரியாது.. அப்படியே கொசு கடிச்ச மாதிரி ஏதாவது தண்டனை கிடைத்தாலும் - போற போக்கில கறவை மாடும் கன்னுக் குட்டியும் வாங்கிக்கச் சொல்லி காசு கொடுத்தாலும் கொடுப்பாங்க!..
அக்கா.. இவனுங்கள வெறி நாயை விட்டு கடிக்க வைக்க கூடாதா? இல்லே.. தெரு நாய்க்கு மாதிரி நறுக்கி விட்டுறக் கூடாதா!..
அதெல்லாம் முடியாதுடா.. தங்கம்.. இது ஜனநாயக நாடு அல்லவா.. இவனுக்கு அதுக்கெல்லாம் உரிமை இருக்கு..ன்னு சொல்லிக்கிட்டு வேற யாராவது கிளம்பி வருவாங்கடா..
அப்ப என்ன தான் முடிவு.. இதுக்கெல்லாம்?..
மாறணும்.. எல்லாமே மாறணும்!.. இல்லேன்னா மாற்றணும்!.. அதுக்கு பெண்களே முன் வர்றதில்லே...
எப்படி..க்கா சொல்றீங்க?..
நேத்து சிவராத்திரி அல்லவா.. மகாராஷ்ட்ராவில நாசிக் நகரில் உள்ள திரயம்பகேஸ்வரர் கோயில் கருவறைக்கு உள்ளே போய் சாமி கும்பிட உரிமை வேண்டும் .. அப்படின்னு பெண்கள் அமைப்பு கூட்டங்கூடி போராடி இருக்கு.. அவங்க கேட்கிறாங்க காசியில விஸ்வநாதரை தொட்டு வணங்கற மாதிரி.. ன்னு!..
ஏங்க்கா!.. அதில என்ன தப்பு?.. நமக்கு அந்த உரிமை இல்லையா.. நாமும் கடவுளோட பிள்ளைகள் இல்லையா?..
இருக்கே.. காசியில இருக்கிற மாதிரி.. இன்னும் பல கோயில்கள்ல.. பெண்கள் தாங்களே சிவலிங்கத்தை நீராட்டி வழிபட உரிமை இருக்கே... அங்கே போய் சந்தோஷமா வழிபடலாமே..
ஏன்.. இங்கேயும் அந்த மாதிரி விட வேண்டியது தானே!..
காசியில விஸ்வநாதரைத் தொட்டு வணங்க ஒரு காரணம் இருக்குற மாதிரி.. திரியம்பகேஸ்வரை தொட்டு வணங்க விடாததற்கும் ஒரு காரணம் இருக்கும்!.. சமய வழிபாடுக்கு நம்பிக்கைகள் தான் அடிப்படை..
அப்போ.. நீங்க என்ன தான் சொல்ல வர்றீங்க?..
தாமரை.. ந்னு - நான் உன் தோளைத் தொடுவேன்.. எல்லாரும் பெண்கள் தான் .. அதுக்காக வேற ஒரு பெண்ணை நீ தொட விடுவாயா?..
அதெப்படி?..
இதெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம் தாமரை.. ஏன்.. இந்த பெண்கள் அமைப்பு எல்லாம் ஒன்னா கூடி பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை உடனே நிறைவேற்றணும் ..ன்னு நாடு முழுக்க பெரிய போராட்டம் நடத்துனா என்ன?.. இதுவரைக்கும் இல்லையே!..
அவங்களுக்கு சபரிமலைக்கு போகணும்.. சிவலிங்கத்தைத் தொட்டுக் கும்பிடணும்.. இந்த மாதிரி விஷயம் தான் பெரிதாக இருக்கின்றது... சபரி மலைக்குப் போறவங்க வீட்டில இருக்கிற பருவப் பெண்களைக் கேட்டுப் பாரு.. நீங்களும் மலைக்குப் போறீங்களான்னு..
கேட்டா?..
ஐயையோ.. அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. அப்படி..ம்பாங்க!..
இந்த மாதிரி சொல்ல வெச்சிருக்கிறது தானே அடக்கு முறை.. ஆணாதிக்கம்!..
அடக்கு முறையாவது.. மடக்கு முறையாவது!.. நாளைக்கு ஐயப்ப சாமியே நேர்ல வந்து - வாங்க எல்லாரும் சபரிமலைக்கு! .. ந்னு கூப்பிட்டால் கூட இந்தப் பொண்ணுங்க சபரிமலைக் காட்டுக்குள்ள போக மாட்டாங்க!..
ஏன்!?..
தாமரை.. நம்ம நாட்டுல.. காட்டுக்குள்ள எத்தனை எத்தனையோ கிராமங்கள்.. அங்கேயும் பெண்கள் இருக்காங்க.. அங்கேயும் அவங்க கும்பிடுகின்ற சாமியும் இருக்கு.. அவங்கள்..ல பத்து பேரை அழைச்சுக்கிட்டு வந்து சபரிமலை காட்டுக்குள்ள போங்க.. ந்ன்னாலும் அவங்க போக மாட்டாங்க!..
ஏங்க்கா!?..
அது தாம்மா.. ரத்தத்தில ஊறிப் போன பக்தி.. பாரம்பர்யம்!..
எத்தனையோ ஊர்கள்..ல முனீஸ்வரன்.. ஐயனார்.. காளியம்மன்..ன்னு ஊருக்கு வெளியே இருக்குற கோயிலுக்கு அந்த ஊரு பொண்ணுங்களே போக மாட்டாங்க..
அங்கே எல்லாம் இந்த அமைப்புங்க போயி போராட வேண்டியது தானே!.. வாங்கடி பொண்ணுங்களா... ந்னு கையைப் புடிச்சு அழைச்சிக்கிட்டு போக வேண்டியது தானே!..
என்னக்கா.. இப்படியும் இருக்குதா!..
ஏன்.. ஆடி மாசமும் தை மாசமும் செவ்வாய் பிள்ளையார்..ன்னு கும்புடுறோமே.. அந்த பூஜைக்கு ஆண்களையும் உள்ளே விடச் சொல்லி - இந்தப் பெண்கள் அமைப்பு போராடலாமே!.. அதுவும் போராட்டம் தானே!..
அக்கா!.. என்ன சொல்றீங்க.. நீங்க?!..
ஏம்மா.. அதிர்ச்சியா இருக்கா!.. நானே வாங்க..ன்னு சொன்னாலும் உங்க அத்தான் வரமாட்டார்.. அவரு..ன்னு இல்லை.. எந்த ஆண் பிள்ளையுமே வரமாட்டாங்க!..
என்னக்கா.. திடீர்..ன்னு இப்படி சொல்லிட்டீங்க!.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குதுக்கா!..
இவங்க எல்லாம் ஒரு நாள் கூத்துக்கு மீசை எடுக்கறவங்க!.. ஆக்க பூர்வமான செயல்பாடுகள்..போராட்டங்கள்.. ல எல்லாம் ஈடுபடவே மாட்டாங்க!...
நாமே நமக்குக் காவலா மாறிடணும்.. மற்றதுகளை நம்பிப் பிரயோஜனம் ஏதும் இல்லை.. சின்னஞ்சிறு பெண் குழந்தைகள்.. ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரையும் பாதுகாக்கிற கேடயமா ஆகிடணும்...
இதெல்லாம் நடக்கக் கூடியதா அக்கா!..
ஏன் நடக்காது?.. ஏம்மா நடக்காது!?..
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்..
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்...
அப்படின்னு மகாகவி கர்ஜிக்கின்றாரே.. கேட்டதில்லையா?..
அக்கா!..
அது மட்டுமா!..
சேயிழைமார் நெஞ்ச மீது - நாம்
சீறும்புலியைக் காணும் போது
தீயதோர் நிலைமை இங்கேது?.. - நம்
தென்னாட்டில் அடிமை நில்லாது!..
அப்படின்னு பாவேந்தர் சங்க நாதம் எழுப்புகின்றாரே.. கேட்டதில்லையா?..
அக்கா.. அக்கா.. எங்கேயோ போய்ட்டீங்க.. அக்கா!...
இல்லேம்மா.. கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கும்மா.. டில்லியில இருந்து சான்பிராஸிஸ்கோ வரைக்கும் - பதிநாலாயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் தொலைவு - பதினேழு மணி நேரம் - இடை நில்லாமல் ஏர் இந்தியா விமானத்தை பெண்களே இயக்கி சாதனை செஞ்சிருக்காங்க.. அதுமாதிரி..
அது மாதிரி?..
அது மாதிரி எந்தத் தடையும் இல்லாம எதுக்கும் தயங்கி நிற்காம நாமும் நம்மைச் சேர்ந்தவங்களை நல்லபடியா வெற்றி முனைக்கு சேர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கு.. தாமரை!..
கண்கள் இரண்டில் ஒன்றைக் குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?..
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை அற்றிடும் காணீர்!..
அது மாதிரி?..
அது மாதிரி எந்தத் தடையும் இல்லாம எதுக்கும் தயங்கி நிற்காம நாமும் நம்மைச் சேர்ந்தவங்களை நல்லபடியா வெற்றி முனைக்கு சேர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கு.. தாமரை!..
கண்கள் இரண்டில் ஒன்றைக் குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?..
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை அற்றிடும் காணீர்!..
அப்படின்னு பாரதியார் சொல்றார்.. அவர் சொல்ற அறிவு..ங்கறது வெறும் ஏட்டுப் படிப்பு அல்ல.. அதுக்கும் மேலே!.. அந்த அறிவை வளர்த்துக் கொள்ள நாம் தலைப்பட்டு விட்டால் - தடைகள் எல்லாம் தானாகவே உடைந்து போகும்!..
அக்கா.. நீங்க உங்க தளத்தில மகளிர் தினத்துக்காக ஏதும் எழுதலையா!?..
இனிமே தான் எழுதணும் தாமரை.. இதோ பார்..
முனைவர் மகேஸ்வரி பாலசந்திரன் .. எழுதுன கவிதையைப் பார்..
யார் அக்கா.. இவங்க?..
கரந்தை தமிழ்ச் சங்க கல்வி நிலையத்தில் பணி.. தமிழார்வம் மிக்கவர்.. இது அவங்களோட பழங்கவிதையாம்.. காலத்துக்குப் பொருந்தி வருவதைப் பார்!..
பாரதியின் இலட்சியக் கனவே!..
முட்டிகளுக்குள் புதைத்துக் கொள்ளவா
உன் பட்டு முகம் படைக்கப்பட்டது?..
நெல்மணிக்குத் தப்பிய நீ
சொல்மணியாய் சுடர் விடத்தான்..
கோழிக் குழம்புக்குத் தப்பிய நீ
கோள்களின் போக்கிற்கு
புதுக்கவிதை விளக்கம் கூறத்தான்..
கள்ளிப் பாலுக்குத் தப்பிய நீ
காலங்களையே மாற்றி அமைக்கத்தான்..
அடுக்களைக்குள் ஆழ்ந்து போன நீ
அடிமைத் தளையைக் களையத்தான்!..
இப்படித்தான் பல கவிகள்
புரட்சிக் கவிகள் எழுதினேன்..
ஆனால், இன்றும்
நான் காண்பது என்னவோ?..
மெத்தப் படித்த அவள்
படித்தும் பதராக..
அடிமையாய்..
போகப் பொருளாய்..
காட்சிப் பதுமையாய்..
அடங்காப் பிடாரி என
அலங்கோலமாய்..
இன்னும்.. இன்னும்..
ஆணுக்குப் பெண் கீழானவளும் அல்ல
அவனுக்கு மேலானவளும் அல்ல..
அவள் வேறானவள்..
பாரதியே...
பெண் முன்னேற்றம்
உன்னெழுத்தின் சாதனைதான்..
ஆனாலும்,
நடக்கும் அநியாயம் கண்டு
கண் கலங்கியிருப்பாய்!..
இன்று நீ இருந்திருந்தால்!..
பெண்கள் தினமாம்..
கொண்டாட்டமாம்!..
மனம் வலிக்கின்றது.
பெண்ணாகப் பிறந்ததற்கு!..
மகத்துவம் மிக்க
என் இனிய சமுதாயமே!..
என்று நீ
அவளை மனுசியாய்
பார்க்கப் போகின்றாய்?..
பெண்ணை
நல்ல தோழியாய்
நல்ல மனைவியாய்
நல்ல அகத்தவளாய்!..
இதுவே போதும் - அவள்
நலமுடன் வளமுடன் வாழ..
வாழ விடு..
வார்த்தையில் அல்ல..
வாழ்க்கையில்..
நிஜத்தில்!..
அருமையா எழுதியிருக்காங்க.. அக்கா!.. மனமார்ந்த பாராட்டுகள்!.. அப்போ நான் புறப்படுகின்றேன்!..
தாமரை.. அதுக்கு முன்னால இந்தாம்மா மோர்!..
ஜில்லுன்னு இருக்கு அக்கா!..
அனைவருக்கும் மனமார்ந்த
மகளிர் தின நல்வாழ்த்துகள்..
பெண்மை வெல்க..
என்றென்றும்!..
* * *
முத்திரை:
மகளிர் தினம்
இருப்பிடம்:-
குவைத்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)