நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை
தந்ததன தனதான தந்ததன தனதான
தந்ததன தனதான ... தனதான
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள ... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ... வடிவேலா
தண்தரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
இத்திருப்புகழ் பாராயணத்தினால்
நல்ல மனை, சொந்த வீடு அமையும் என்பது அன்பர்களின் நம்பிக்கை..
முழுக்க முழுக்க
ஆனந்தச் சந்தங்கள்
நிறைந்த திருப்புகழ் இது..
முருகா முருகா
சிவாய நம ஓம்
**

மனதுக்குள்ளே குடியேற, மயில்மேல் அமர்ந்தோனே உன்னை இறைஞ்சுகிறேன்.
பதிலளிநீக்குவருவான் வடிவேலன்
நீக்குதங்கள் அன்பின்
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்