நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2025

சோழேச்சரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை




ஒன்பதாம் திருமுறை

சுருதி வானவனாம் திருநெடு மாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர்சடை முக்கட்
பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருது வாகனனாம் எயில்கள்மூன் றெரித்த
ஏறு சேவகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்டசோ ழேச்சரத்தானே..
-: சித்தர் கருவூரார் :-


வேதங்களை ஓதும் பிரமனாகவும்  நீள்வடிவு எடுத்த திருமாலாகவும் அழகிய வானத்தின் தலைவனாகிய இந்திரனாகவும் சூரிய தேவனாகவும் விரிந்து படர்ந்த சடைமுடியுடன் மூன்று கண்களை உடையவனாகவும் உலகத்தில் உயிர்களைத் தழைப்பிக்கும் அமுதமாகவும் காளை வாகனனாகவும், மும்மதில்களையும் அழித்த
மாவீரனாகவும், இவற்றைத் தவிர வேண்டுவார்க்கு வேண்டும் வடிவத்தில் வரம் அளிப்பவனாகவும் கங்கை கொண்ட சோழேச்சரத்தில் வீற்றிருக்கின்ற ஈசனே விளங்குகின்றான்..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. சோழீச்சர நாதனை வணங்கினோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி

      நன்றியம்மா

      நீக்கு
  2. நமசிவாய...... நல்லதே நடக்கட்டும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி

      நன்றி வெங்கட்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..