நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 24, 2025

கணக்கு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 10
சனிக்கிழமை

Fb யில் வந்த கணக்கு இது.. சற்றே அலங்காரங்களுடன்!..          


நேர்மையான  அலுவலர் அவர்..

அவருக்கு குடும்பச் சொத்தின் மதிப்பாக பல லட்சங்கள் கிடைத்தன...

அதை எதில் முதலீடு செய்வது எப்படி 
முதலீடு செய்வது
என்று அவருக்குப் புரியவில்லை..
கணிதப் பேராசிரியையான
அவரது மனைவி முழுப் பணத்தையும்  பத்திரமாக - தான் வைத்திருந்து தருவதாகச் சொல்லி தன்னிடம் கொடுக்கும்படி கேட்டார்..

அதில் - கணவருக்குத் துளியும்  விருப்பமில்லை.. 

சில நாள் குழப்பத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையில்   சமாதான உடன்படிக்கை ஆயிற்று..

ஒன்பது அதிர்ஷ்ட புள்ளிகள் கொண்ட பட்டியல் கணவரிடம் தரப்பட்டது..

அதன்படி அவர் அதிலிருந்து ஒரு எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்..  

அதை மனைவியின் வழிகாட்டுதலில் கணக்கிட்டு கிடைக்கும் கூட்டுப் புள்ளியின்படி கணவன் மனைவி இருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அதன் சாராம்சம்...

இருதரப்பிற்கும் சம்மதம்..

1.. 2.. 3.. 4.. 5.. 6.. 7.. 8.. 9..

அதன்படி
கணவர் ஒன்பதிற்குள் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்து மனைவி சொன்னபடியே கணக்கிட்டார்..

கணக்கின் முடிவில்
விடையும் வந்தது... 

விடையைக் கண்டு பதறிப் போன கணவர் வேறொரு எண்ணைத் தேர்ந்தெடுத்து கணக்கிட்டார்..

அதுவும் நீர்க்குமிழி ஆயிற்று..

மறுபடியும் வேறொரு எண்ணை முயற்சிக்க -  அதுவும் வாண வேடிக்கை ஆயிற்று..
 
முடிவில் பெட்டிப் பணம் முழுதும் மனைவியின் கைகளுக்கே சென்றது..

எப்படி டா?..

இப்படித் தான்...

நீங்களும் முயற்சித்து முடிந்தால் இருவருக்கும் நல்வழி காட்டலாமே!..

முதலில் பட்டியலில் உள்ள விஷயங்கள் :

1) தான தர்மங்கள்
2) வைரக் கற்கள்
3) தங்க நகைகள்
4) வயலை வாங்கி மனைகளாக்கி விற்றல்
5) புதிய வீடு கட்டுதல்
6) பிரியாணிக் கடைகளுக்காக  கோழிப் பண்ணை 
7) ஒப்பனைப் பொருட்கள் வாங்குதல்
8) சேமிப்பு பாத்திரங்கள்
9) இல்லத்தரசியிடம் ஒப்படைத்து விடுதல்..

ஒன்றிலிருந்து ஒன்பதிற்குள் ஒரு  எண்ணை எடுத்துக் கொள்ளவும்..

அதை மூன்றால் பெருக்கவும்..

வரும் விடையுடன் மூன்றைக் கூட்டவும்..

விடையை மூன்றால் மீண்டும் பெருக்கவும்....

இப்போது இரண்டு இலக்க எண் விடையாய்க் கிடைத்திருக்குமே!..

அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டவும்..

கையில் கிடைத்திருக்கும்
அந்த எண் தான் உங்களது முதலீட்டின் இலக்கு... 

அந்த அதிர்ஷ்ட எண்ணைக் கொண்டு - கையில் உள்ள பட்டியலின்படி  சரியானதைச் செய்ய வேண்டும் -  என்பது உடன்படிக்கை..

எல்லா கணக்கீடுகளும் ஒன்பதில் வந்து முடிந்தது என்பது தான் சிறப்பு..

குளிர்ந்த நீரைக் குடித்தபடியே பணப்பெட்டியின் சாவியை இல்லத்தரசியிடம் கொடுத்தார் கணவர்..

தன் கையில் இருந்த தாளை மீண்டும் ஒரு தரம் பார்த்துக் கொண்டார்..

எல்லாத்துக்கும் - அந்த கணக்கு டீச்சர் தான் காரணம்!..
😁😁😁

ஓம் சக்தி ஓம்

6 கருத்துகள்:

  1. 'கணக்குப் போட்டு காதல் வந்தது' என்கிற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  2. கணவனை மடக்க கணக்குப் பேராசிரியை செய்த திறமை .

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல கணக்கு. மனைவி அதி புத்திசாலி என நீரூபணம் ஆகி விட்டது. பொதுவாக இப்படி கணக்குப் போட்டு வாழ்வதென்பது கடினந்தான். பதிவை (கணக்கை) ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..