நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 4
ஞாயிற்றுக்கிழமை
அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும் என்பது எனது தளத்தின் முழக்கம்...
அதைத் தான் இன்று வரை கடைப்பிடித்து வந்திருக்கின்றேன்..
அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும் என்பதற்கு நாம் உலகில் தெரிந்து கொண்டவைகளும் இந்த உலகிற்கு செய்தவைகளும் நம்மைப் பிறவிகள் தோறும் தொடந்ர்து வரக்கூடியவை என்பதாகவும் பொருள் கொள்ளலாம்...
அவ்வகையில் அனைவரும் பேறு பெற்றவர்கள்...
இரண்டு வருடங்களுக்கு மேலாக நாளொரு பதிவு என்று மலர்ந்திருந்த நமது தளத்தில் இனி அடுத்த சில பதிவுகளைக் கடந்து வாரத்தில் சில பதிவுகள் என்று மலர இருக்கின்றது...
காரணம் எனது உடல் நிலை... இரண்டு முறை சோதித்த பின்னும் கண்களில் பிரச்னை..
ஓரிடத்தில் அறுவை சிகிச்சை என்கின்றனர்... மற்றோரிடத்தில் கண்கள் நன்றாக இருக்கின்றன என்கின்றனர்...
அரசு கண் மருத்துவமனை யிலும் இதுதான் நடந்தது..
மனதில் இருக்கின்ற
அளவு உடலில் தெம்பு இல்லை...
முதற்கட்டமாக கண்களுக்கு சற்றே ஓய்வு தந்தாக வேண்டும்..
அடுத்ததாக பழுதுற்ற கைத்தல பேசியும் ஒத்துழைக்காத இணையமும்...
குவைத்தில் இருந்த போது அறைக்குள் மட்டுமே மாற்றாரிடத்தில்
தன் முனைப்பு என்றதொரு காழ்ப்புணர்ச்சி...
எனினும்
அங்கே தொழில் நுட்பமும் பொருளாதாரமும் நன்றாகத் தான் இருந்தன..
இங்கே ஒன்றும் சொல்வதற்கில்லை..
தஞ்சையம்பதியின் ஆதார வேரில் இருந்தே அன்பின் ஸ்ரீராம் அவர்களது எங்கள் பிளாக் தளத்தில் கவிதைகளுடன் ஒரு நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள்
எழுதினேன்.. அவையனைத்தும் மகிழ்வுடன் எபியில் பதிவு செய்யப்பட்டன...
நான் எனது கதை கவிதைகளில் எந்த புறம்பான சொல் எதையும் சொன்னது இல்லை...
குறிப்பாக மங்கலம் அல்லாத சொல்..
நானென்ன அங்கிருந்து பொன்னையும் பொருளையுமா எதிர்பார்த்தேன்!..
அன்பின் உற்சாகம்..
அந்த உற்சாகத்தைக் கெடுத்தது ஒரு கருத்து..
அதற்குப் பிறகு...
அதையெல்லாம் விட்டு விடுவோம்..
வெகு தொலைவிற்கு வந்தாயிற்று..
இவ்வேளையில் அன்பின் ஸ்ரீராம், சித்திரச் செல்வர் கௌதம் ஜி, அன்பின் நெல்லை, அன்பின் கில்லர் ஜி, அன்பின் வெங்கட் நாகராஜ், அன்பின் துளசிதரன் மதிப்புக்குரிய கீதா சாம்பசிவம் அக்கா அவர்கள் மதிப்புக்குரிய கோமதி அரசு, மதிப்புக்குரிய கமலா ஹரிஹரன், மதிப்புக்குரிய சகோதரி கீதா ரங்கன் மதிப்புக்குரிய மாதேவி, மதிப்புக்குரிய பானுமதி வெங்கடேஸ்வரன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..
பதிவுகளைக் குறைத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை தான்..
இருப்பினும், உடல் நலன் முக்கியம்..
அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்திப்போம்..
நலமே வாழ்க..
ஓம் சிவாய நம
**
செல்வாண்ணா... எங்கள் தளத்தையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். சளித் தொந்தரவு, காய்ச்சல் முற்றிலும் குணமாகி விட்டதா? கண்களுக்கு தேவையான ஓய்வு கொடுங்கள். தேவையின் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குகண்களுக்கு தேவையான ஓய்வு கொடுக்கத் தான் இந்த முயற்சி..
நீக்குதங்கள் அன்பின் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
உங்கள் மனவருத்தம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். அவை எல்லாம் மனங்களை பொறுத்தது. நான் காரணமாயிருந்திருப்பின் மன்னிப்பைக் கோருகிறேன். பொதுத்தளம் என்று வந்தபின், நம் படைப்பை பொதுவில் வைத்தபின் ஒவ்வொருவர் கருத்து ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதனால் வருத்தம் அடையாத மனம் இறைவன் அருள வேண்டும்.
பதிலளிநீக்குயார் மீதும் வருத்தமில்லை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
துரை அண்ணா முதலில் உங்கள் உடல் நலம் முக்கியம். அதைக் கவனித்துக் கொள்ளுங்கள். அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் செய்வது நலமே.
பதிலளிநீக்குஅண்ணா ஒரே ஒரு கருத்திற்காக ஏன்? ஒரே ஒரு கருத்தை விட்டு, மத்தவங்களை நினைச்சா நேர்மறை இல்லையா?
எங்களில் யார் அப்படியான கருத்தைச் சொல்லியிருந்தாலும் அதற்காக எல்லோர் சார்பிலுமே ஸாரி சொல்லிக் கொள்கிறேன் எங்கள் எல்லோரையும் குறிப்பிட்டிருந்தாலும்...
கீதா
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி சகோ
உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குமுடிந்த போது எல்லாம் பதிவு போடுங்கள்.
கண் பரிசோதனை செய்து மருத்துவர் சொல்வதை கேளுங்கள்.
நாம் எழுதுவது நமுக்கு மகிழ்ச்சி தருவதால் தான். வருத்தமான மன நிலையை எழுத்து மாற்றும்.
மனதையும், உடலையும் நன்கு பார்த்து கொண்டு மீண்டும் உற்சாகமாக எழுத ஆரம்பிக்கலாம்.
நாம் எழுதுவது நமக்கு மகிழ்ச்சி தருவதால் தான். வருத்தமான மன நிலையை எழுத்து மாற்றும்
நீக்குஉண்மை உண்மை..
தங்கள் அன்பின் வருகையும்
கருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றியம்மா
உடல் நலம் முக்கியம். வாரம் ஓரிரு பதிவுகள் என்பதில் தவறிவ்லை. கண் பிரச்சனை உடல் பிரச்சனை விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபின்னூட்டங்களை ரொம்ப சீரியஸா அணுகக் கூடாது. சில நேரம் கோபம் மனவருத்தம் வரலாம் ஆனால் எதையும் கடந்து போகணும்.
உண்மை தான்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும்
கருத்துரையும் மகிழ்ச்சி..
நெல்லை அவர்களுக்கு நன்றி
உங்கள் பகிர்வுகள் காத்திரமானவை. படித்து அறிந்து மகிழ்கிறோம்.மிக்க நன்றி.
பதிலளிநீக்குஉடல் நலம் முக்கியம் முதல் அதில் கவனமாக இருங்கள்.முடிந்த போது எழுதுங்கள்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
தங்களது அன்பினுக்கு
நன்றி மாதேவி