நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 2
வெள்ளிக்கிழமை
எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா! - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!..
காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை
தோளசைத் தங்கே நடம்புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!..
அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!..
- பாவேந்தர் -
ஃ
ஓம் சக்தி ஓம்
சிவாய நம ஓம்
**
பாவேந்தர் கவி மூலம் நீண்ட நாள் மறந்திருந்த ஒரு TMS பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள். உடல்நிலை தேவலாமா? காய்ச்சல் சரியாகி விட்டதா?
பதிலளிநீக்குசளியும் தலைப் பாரமும் மட்டுமே...
நீக்குசரியாகி விடும்
தங்கள் அன்பின் வருகையும்
கருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
"எங்கெங்குகாணினும் சக்தியடா"......
பதிலளிநீக்குபாமாலை பாடி வணங்கினோம்.
உங்கள் உடல் விரைவில் நலம் அடையட்டும். வெந்நீர் ஆவி பிடிப்பது சுகம்தரும் என நினைக்கிறேன்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் பிரார்த்தனையும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி