நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 14, 2025

சப்தஸ்தானம் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 31
புதன்கிழமை


இரண்டு நாட்களாக உடல் நலக் குறைவு..

நேற்று முற்பகலில் காய்ச்சல் சற்று தணிந்ததும் திருநெய்த்தானம் ஸ்ரீ நெய்யாடியப்பர் திருக்கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு தரிசனம்...

படங்கள்
தஞ்சையம்பதி




















மாப்பிள்ளை நந்தீசனின் பல்லக்கு காவிரியில் இருந்து கரையேறியதும் திரு ஐயாறப்பர் ஸ்வாமியை  நெய்யாடியப்பர் எதிர் கொண்டு அழைத்தார்.. எதிர் சேவையை அடுத்து திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி என அனைத்து பலலக்குகளும் கரையேறின..

ஆயிரக்கணக்கான அன்பர்கள் கண்டு மகிழ்ந்திருக்க மாலை  ஐந்து மணியளவில் அனைத்து பலலக்குகளும்
திரு ஐயாற்றை நோக்கிப் புறப்பட்டன..

எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடி என்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ.  6/38/7
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

10 கருத்துகள்:

  1. உடல் நலக்குறைவுடனேயே க்‌ஷேத்திராடனமா? உடல் நலத்தில் கவனம் வையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பெற்ற சந்தோஷம்...

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. படங்கள் யாவும் சிறப்பு. ஓம் சிவாய நம ஓம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. உடல் நலம் இல்லாதபோதும் தரிசனத்துக்கு சென்று நாம் காணபல படங்களும்
    தந்துள்ளீர்கள்நன்றி.

    நீங்கள் நலமாக இருக்க ஐயாறப்பர், நம்பீசன் அருள்புரிவாராகுக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  4. நாவுக்கரசர் பதிகத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
    பல்லக்கு தரிசனம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  5. எதனால் காய்ச்சல்? உணவுப் பிரச்சனையா? நீங்கள் உடல் நலம் இல்லாதபோதும் நேரில் சென்றிருந்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. சப்த ஸ்தான விழாவிற்கு நேரில் சென்றிருந்தேன்...

      தேர்த் திருவிழா அன்று வெயிலின் கொடுமையால் குளிர்ந்த நீரைக் குடித்த அதனால் வந்தது வினை..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு
      நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..