நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
முதல் வெள்ளி
இன்று
ஸ்ரீஅகத்தியர்
நமக்காக இயற்றி அருளிய
கீர்த்தனம்
பாடியிருப்பவர்
ஸ்ரீமதி சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்
ஸ்ரீ சக்ர ராஜ
சிம்ஹாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
(ஸ்ரீசக்ர)
(புன்னாக வராளி)
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலகம் முழுதும் எனது அகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி
(நாதநாமக்ரியை)
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழல் எனத் தொடர்ந்த முன் ஊழ் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி
(சிந்து பைரவி)
துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா…அகிலாண்டேஸ்வரி
(ஸ்ரீசக்ர)
மிக்க நன்றி..
இணையத்தில் கேட்பதற்கான இணைப்பு
ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
**
அருமையான பாடல். பெரும்பாலும் எல்லா பெண்களும் மனனம் செய்திருக்கும் பாடல். என் பாஸும் பாடுவார்.
பதிலளிநீக்கு