நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 23, 2025

வெள்ளி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 9
வெள்ளிக்கிழமை


நன்றென்று, தீதென்று நவிலும் இவ்விரண்டனுள்,  
நவின்றதே உலகில் உள்ளோர் நாடுவார் ஆதலின்
நானுமே அவ்விதம் நாடினேன் நாடினாலும்
இன்றென்று சொல்லாமல் நினது திரு உள்ளம் அது இரங்கி 
அருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன்
மெய்யான மொழி இஃதுன் இதயம் அறியாதுண்டோ
குன்றம் எல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள்
குமார தேவனை அளித்த குமரி மரகத வருணி
விமலி பைரவி கருணை குலவு கிரி ராச புத்ரி
மன்றல் மிகு நந்தன வனங்களில் சிறை அளி முரல
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே!..

மறி கடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும் 
மாதிரக் கரி எட்டையும் மா நாகம் ஆனதையும்
மா மேரு என்பதையும் மா கூர்மம் ஆனதையும் ஓர்
பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈரேழையும்,
புத்தேளிர் கூட்டத்தையும் பூமகளையும் திகிரி மாயவனையும்
அரையில் புலி ஆடை உடையானையும்
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப்
பழைமை முறைமை தெரியாத நின்னை
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
மொழிகின்றதேது சொல்வாய்
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள் வாமி அபிராமியே!..

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே நின்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.. 13
-: அபிராமி பட்டர் :-

ஓம் சக்தி ஓம்

ஓம் சிவாய நம 
**

4 கருத்துகள்:

  1. காத்தருள்வாய் தேவி, பராசக்தி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. அம்மன் பாமாலை அருமை பாடி வணங்கினோம்.

    "புவனம் பதின்னான்கையும் காத்தவளே" அம்மா உன்பாதம் அடைக்கலம் காத்தருள்வாய் அனைவரையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..