நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 18, 2023

தமிழ் தந்தானை..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

புரட்டாசி முதல் நாள் 
 திங்கட்கிழமை

இன்று
ஸ்ரீ விநாயக சதுர்த்தி

சென்ற ஆண்டு உவரிக்குச் 
சென்றபோது எழுதிய பாட்டு இது..

உடல் நிலை தளர்வாக இருந்த நேரத்தில் 
உற்சாகமளித்ததும் உறுதுணையாக 
இருந்ததும் இந்த வரிகள்.. 

அந்த வகையில் 
மீண்டும் அதே பாடல்..


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்திதருஞ் சித்திதருந் தான்..
-: பழந் தமிழ்ப்பாடல் :-
*

ஓரானைக் கன்று என 
வந்தானை போற்றி
சிவசக்தி வலம் செய்து 
நின்றானை போற்றி..

மாமேரு மலைதனில்
மலர்ந்தானை போற்றி
மா பாரதம் தன்னை 
வரைந்தானை போற்றி..

அன்றமரர் துன்பங்கள்
தீர்த்தானை போற்றி
ஔவைக்கு அருந்தமிழ்
தந்தானை போற்றி..

காவேரி கடுஞ்சிறை
விடுத்தானை போற்றி
கைதொழ எல்லாமும்
கொடுத்தானை போற்றி..

அரங்க மாநகர் தனைத்
தந்தானை போற்றி
ஆங்கொரு குன்றிலே
அமர்ந்தானை போற்றி..

தேவாதி தேவர் தொழ
நின்றானை போற்றி
தேவாரம் தனை மீட்டுத் 
தந்தானை போற்றி..

அச்சிறுத்தருள் செய்த
அழகானை போற்றி
ஆயிரத்தெழுவருடன்
வந்தானை போற்றி..

புன்கூரில் குளமொன்று
புரிந்தானை போற்றி
புறம்பயத்தில் தேனோடு
பொலிந்தானை போற்றி..

மருதீசர் மலைக் குன்றில்
மிளிர்ந்தானை போற்றி
உப்பூரில் வெயில் தனில்
அமர்ந்தானை போற்றி..

அமுதென்று அமரர்க்கு
ஆனானைப் போற்றி
கந்தனுக்கு வள்ளிதனைத்
தந்தானை போற்றி..

கும்பமுனி கும்பிடக்  
குளிர்ந்தானை போற்றி
குறை தீர்த்து குலங்காத்து
நிறைந்தானை போற்றி..

ஸ்ரீ வாதாபி கணபதி
வாதாபி தனை வென்று
வந்தானை போற்றி
வளர்பிறை அதனுடன்
நின்றானை போற்றி..

ஓங்கார ரூபமாய்
ஒளிர்ந்தானை போற்றி
ஓலமிட்டொரு குரல்
விளித்தானை போற்றி..

கலங்காமல் உயிர்தனைக்
காத்தானை போற்றி
கருதியே வந்தார்க்கு
கதியானை போற்றி..

செவிகேட்டு செந்தமிழ்
மகிழ்ந்தானை போற்றி
விதிமாற்றி விளக்கேற்றி
வைத்தானை போற்றி..

ஞானமே வடிவாக
வந்தானை போற்றி
தானமே தவமாக
இருந்தானை போற்றி..


கோள்வினை எல்லாமும்
தீர்த்தானைப் போற்றி
நாளெலாம் நல்வினை
சேர்த்தானை போற்றி..

கல்லானைக் கவியென்று
வளர்த்தானை போற்றி
பொல்லானை பொறுத்தருள்
புரிந்தானை போற்றி..18

போற்றியே போற்றி எனப்
போற்றிடு மனமே..
போற்றியே போற்றி என
வாழ்த்திடு மனமே..
**

அனைவருக்கும்
விநாயக சதுர்த்தி
நல்வாழ்த்துகள்
***
 
ஓம் கம் கணபதயே நம:

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. சிறப்பான போற்றி அகவல். நானும் வாசித்ததில் விநாயகர் சதுர்த்தி களைகட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  2. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  3. தங்கள் கவிதை மிக அருமை. அந்த கவிதையை பாடி பிள்ளையாரை வணங்கி கொண்டேன்.
    தினமும் வாழ்த்தி மகிழ்வோம்.

    பதிலளிநீக்கு
  4. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
    தங்கை குடும்பம் வந்து விட்டார்கள், அதனால் இப்போதுதான் வாழ்த்து சொல்ல முடிந்தது.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான கவிதை. முன்னர் படித்த நினைவு. விநாயகன் அனைவருக்கும் அனைத்து நலங்களூம் அருளட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..