நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 31, 2017

வாழ்வும் வளமும்



பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப்
பசு மிக நல்லதடி பாப்பா..


வா.. வா.. ஒத்தைக்கு ஒத்தை.. வாடா.. வா!.


வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுது வரும் மாடு..
அண்டிப் பிழைக்கும் அந்த ஆடு - இதை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!..






பால் குடிக்கிற நேரத்தில பாட்டு வேறயா!..
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு
அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப் பசு - பாலை 
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி..




பாரம்பர்ய ஓங்கோல் பசு
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு..
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்துனைக் காப்பதென் பாடு!..


சொக்கருக்கு அங்கயற்கண்ணி
தோள்கொடுத்து மாலையணிந்து
மதுரையிலே ஊர்வலம் போக
வாங்கி வந்த காளையடா!..






வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!..

ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
அன்பினில் உற்றது..
அனைத்தும் நிறையப் பெற்றது!..
உயிருள் உணரத் தக்கது..
உய்யும்வழி அருளத் தக்கது!..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!.. 
***

திங்கள், மே 29, 2017

ஆரூரின் ஆழித்தேர்

ஆரூர்...

திருஆரூர்..

கோயில் ஐவேலி.. குளம் ஐவேலி - என்பது சிறப்பு..


பூங்கோயில் எனப்படும் திருக்கோயிலும்
கமலாலயம் எனப்படும் திருக்குளமும்
ஐவேலி எனும் பரப்பளவை உடையவை என்பது சிறப்பு..

ஒரு வேலி என்பது சுமார் ஆறரை ஏக்கர் பரப்பளவு..

ஐவகை பூதங்களில் மண்ணின் பகுப்பாகத் திகழ்வது ஆரூர்...

ஈசன் எம்பெருமான் புற்றின் வடிவமாகத் திகழ்கின்றனன்..

வன்மீக நாதன் - புற்றிடங்கொண்டார் என்பன திருப்பெயர்கள்..

விடங்கத் திருத்தலங்கள் ஏழினுள் முதலாவதானது திருஆரூர்..


சோழர்களின் ஆதியான தலைநகர்...

சோழ மன்னர்கள் முடி சூட்டிக் கொள்ளும்
திருவூர்கள் ஐந்தனுள் திரு ஆரூரும் ஒன்று..

ஏனையவை - தில்லை, உறையூர், காவிரிப்பூம்பட்டினம், திருச்சேய்ஞலூர்..

மாமன்னர்களாகிய முசுகுந்த சக்ரவர்த்தியும் சிபி சக்ரவர்த்தியும்
ஆட்சி செய்ததாக ஐதீகம்..

மனுநீதிச் சோழன் - தன் மகனைத் தேர்க்காலில் இட்டு
பசுவிற்கு நீதி வழங்கிய திருத்தலம்...


அப்பர் பெருமானின் நெஞ்சை விட்டு நீங்காதத் திருத்தலம் - திரு ஆரூர்..

ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்
அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்..

- என்று, ஆரூர் ஆழித்தேரினையும் ஐயன் எம்பெருமானையும் போற்றுகின்றார் - திருநாவுக்கரசர்..

வீதிகள்தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள் ஒளிதோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதியாரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.. (4/21)

- என, அப்பர் பெருமான் திருஆரூரில் நிகழ்ந்த திருஆதிரைத் திருநாளை வர்ணிக்கும் போது திருஆரூரின் அனைத்துத் திருவிழாக்களும் கண் முன் தோன்றுகின்றன..


ஆதிரைத் திருநாள் மட்டுமல்லாமல் திருஆரூரில் நிகழும் அனைத்து திருவிழாக்களிலும் இந்திரன் முதலான வானவரும் சித்தர்களும்
மக்களுடன் மக்களாகக் கலந்து கொள்கின்றார்கள் என்பது ஐதீகம்...

அது மட்டுமல்லாமல் - ஒவ்வொரு நாளும் மாலையில் ஸ்ரீ தியாக ராஜரின் சந்நிதியில் நிகழும் அந்தி வழிபாட்டின் போது இந்திரன் முதலான வானவரும் சித்தர்களும் கலந்து கொண்டு தரிசிக்கின்றனர்..

அவர்களை ஒழுங்கு செய்யும் வண்ணமாகவே -
சந்நிதியில் நந்தியம்பெருமான் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்..



மிக உயரமான திருத்தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல..
தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவதும் இதுவே!..

ஆழித் தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார் முதற்கொண்டு சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என ஏழு அடுக்குகளையும் கொண்டது..

திருத்தேரின் நான்காவது நிலையில் - சிம்மாசனத்தில்
ஸ்ரீ தியாகராஜ சுவாமி அல்லியங்கோதையுடன் வீற்றிருப்பார்..

தேர் பீடம் 31 அடி உயரமும் 31 அடி அகலமும் கொண்டது.
மூங்கில்களைக் கொண்டு முழுமையாக அலங்கரிக்கப்படும்போது,
தேரின் உயரம் 96 அடியாக இருக்கும்.



தேரை அலங்கரிக்க அதிக அளவில் மூங்கில் கம்பங்களும்,
மூவாயிரம் மீட்டர் அளவுக்கு தேர் அலங்காரச் சீலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆழித்தேர் நானூறுக்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது..

தேரின் உச்சியில் ஒரு மீட்டர் உயரத்திலான கலசம் பொருத்தப்பட்டிருக்கும்.


தேரின் முன்புறத்தில் - பிரம்மன் சாரதியாக வீற்றிருக்க
நான்கு வேதங்களை முன்னிறுத்தும் குதிரை பொம்மைகள்..

தவிரவும் வண்ணமயமான பொம்மைகள் பலவும் தேரில் அணிசெய்கின்றன...

தேரின் கட்டுமானத்திற்கு 500 கிலோ எடையுடைய சீலைகள்
பல நூறு கிலோ எடையுடைய கயிறுகள், 5 டன் எடையுடைய மூங்கில் கழிகள் மற்றும் பனை மரத்தின் சப்பைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆழித் தேரில் 425 அடி நீளமுடைய இரட்டை வடகயிறுகள் பொருத்தப்பட்டுள்ளன...

ஆழித் தேரின் ஒவ்வொரு சக்கரமும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது..



அந்தக் காலத்தில் யானைகளை வைத்து முட்டித் தள்ளி ஆழித்தேரை நகர்த்தியுள்ளனர்.

தற்போது மக்கள் வடம் பிடித்து இழுப்பதுடன், பின்புறத்தில் இரண்டு புல்டோசர் எந்திரங்கள் மூலமாக சக்கரங்கள் உந்தித் தள்ளப்படுகிறது.

முன்பெல்லாம் ஏராளமான முட்டுக் கட்டைகளை கொண்டு வந்து,
தேர் சக்கரங்களில் போட்டு தேரை நிறுத்துவர்.

தற்போது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் தயாரித்தளித்த
ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் கொண்டு தேர் இயக்கப்படுகின்றது...

1988 ம் ஆண்டு இந்த தேரின் சக்கரங்களுக்கு இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டதால், எளிதாக இழுக்க முடிகின்றது...

பெருஞ்சிறப்புகள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டு திகழும்
திருஆரூரில் இன்று காலை ஆழித்தேரோட்டம் நிகழ்கின்றது...


பல்லாயிரக் கணக்கில் அடியார்கள் குழுமியிருக்கின்றனர்..

ஆழித்தேர் கட்டுமானப் பணிகளின் படங்களை வழங்கியோர்
சிவனடியான் உழவாரத் திருப்பணிக்குழுவினர்..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இன்னும் சிறுபொழுதில்,
ஆரூரா.. தியாகேசா!.. - எனும் பெருமுழக்கத்தால் விண்ணதிர இருக்கின்றது..

நாமும் அவ்வண்ணமாக சிந்தித்திருப்போம்!..

வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்குந் தண்புனல் சூழ்திரு ஆரூரான்
இளைக்கும் போதெனை ஏன்றுகொளுங் கொலோ..(3/45) 
-: திருஞானசம்பந்தர் :-

கரையுங் கடலும் மலையும் 
காலையும் மாலையும் எல்லாம்
உட்ரையில் விரவி வருவான்
ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவர் தானவர்க் கெல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூரவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்..(7/73) 
-: சுந்தரர் :-

ஓங்கி உயர்ந்தெழுந்து நின்ற நாளோ
ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த
தக்கன்தன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு
நில்லாயெம் பெருமானே என்றங்கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
வளர்ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.. (6/34) 
-: திருநாவுக்கரசர் :-

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி..

ஆரூரா.. தியாகேசா..
தியாகேசா.. ஆரூரா..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்.. 
***

ஞாயிறு, மே 28, 2017

அதோ அந்த ஆப்பிள் - 2

கலோரிகள் குறைவாக இருப்பது - ஆப்பிள் பழத்தில்!..

அதனால், கொழுப்பினைக் கரைப்பதற்கும் குறைப்பதற்கும் ஆப்பிள் உதவுகின்றது - என்கின்றார்கள்...

தொடர்ந்து ஆப்பிள் பழத்தினை உண்டால் -

நினைவாற்றல் அதிகரிக்கின்றது...
நரம்பு சம்பந்தமான பிணிகள் விலகுகின்றன..
ரத்த அழுத்தம் சீராக இருக்கின்றது..

ஆகவே,
இதய நோய்கள் அணுகுவதில்லை...
அத்துடன் - புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது..

என்றெல்லாம் ஆப்பிள் பழத்தின் நன்மைகள் பட்டியலிடப்படுகின்றன...

Apple Juice
இத்தகைய நலன்களையெல்லாம் எண்ணியவாறு
ஆப்பிள் பழத்தைக் கையில் எடுத்தால் -

அதன் வழவழப்பும் மினுமினுப்பும் திகைக்கச் செய்கின்றன...

பழத்தின் மீதான மெழுகுப் பூச்சு வெளிப்படையாகவே தெரிகின்றது...

இருபதாண்டுகளாக Catering நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றேன்.. இங்கே
நாளொன்றுக்கு சராசரியாக இரண்டாயிரம் பழங்கள் கையாளப்படுகின்றது..

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் -
நூறு பழங்களை உடைய பெட்டியைப் பிரித்தால்
குறைந்த பட்சமாக பத்துப் பழங்களாவது அழுகியிருக்கும்..

இப்போதெல்லாம் பழங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன..
ஒரு பழங்கூட சேதமாக இருப்பதில்லை..

எப்படி இவையெல்லாம் சேதம் ஏதும் இல்லாமல்
ஆயிரக்கணக்காக மைல் தொலைவினைக் கடந்து வருகின்றன!?..

இந்த இடத்தில் தான் நவீன விஞ்ஞானம்
ஆப்பிள் பழ உற்பத்தியாளர்களுக்குக் கை கொடுக்கின்றது...

இங்கே - வளைகுடா நடுகளைப் பொறுத்தவரை -
விற்பனைக்காக முன்னிறுத்தப்படும்
பச்சைக் காய் கனிகள் முதல் உலர் தானியங்கள் வரை
குளிர் சாதன வசதியுடைய அறையில் தான் வைக்கப்படவேண்டும்...

இவற்றுக்கே இப்படியென்றால் -
இறைச்சி முட்டை மீன் வகையறாக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்..

Cavendish Bananas

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வரக்கூடிய வாழைப்பழங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக கெட்டுப் போகாமல் சில்லென்ற சூழ்நிலையில்
எந்த ஒரு கேடும் இன்றி சர்வ சாதாரணமாகக் கிடக்கின்றன..

எந்த ஒரு கேடும் இன்றி சர்வ சாதாரணமாகக் கிடக்கும்
இந்த வாழைப் பழங்கள் மனிதனுக்குக் கேடு விளைவிக்கின்றன என்கின்றனர்..

ஏனெனில், இந்த வாழைப் பழங்கள் மரபணு மாற்றப்பட்ட
கேவண்டிஷ் (Cavendish) வகைகளாகும்...

மரபணு மாற்றப்பட்ட கேவண்டிஷ் வாழைப் பழங்களைப் பற்றி
தனியாக ஒரு பதிவு எழுதக் கூடிய அளவுக்கு விஷயங்கள்..

அதே சமயம் நம்முடைய நாட்டிலிருந்து வரக்கூடிய பாரம்பர்ய வாழைப் பழங்கள் சில்லென்ற சூழ்நிலையில் இருந்தாலும் ஒரு சில நாட்களில் கறுப்பாகி விடுகின்றன...

பூவன் பழம்

நேந்திரம் பழம்

பாரம்பர்ய வாழைப்பழங்கள், மரபணு மாற்றப் பெற்றவை -
இவையிரண்டில் - எதனை நல்லதாகக் கொள்வது?...

ஆப்பிள் பழங்கள் பல்வேறு வகையாக நம் முன் கொட்டிக் கிடக்கின்றன..

ஆப்பிள் பழங்களும் நலம் தரக்கூடியவை தான்...
ஆனால், இன்றைய கால சூழ்நிலையில்
அந்நியப் பொருட்களின் மீதான மோகம் தலைவிரித்தாடுகின்றது...

உண்மையிலேயே எது நல்லதென்று அறியாமல் தடுமாறுகின்றோம்..

அதனாலேயே,
ஆப்பிள் கலாசாரம் நம் மீது திணிக்கப்பட்டது.. அல்லது -
நாமே வலிந்து நம் முதுகில் ஏற்றிக் கொண்டோம்..

Apple Pie 
Apple Sauce

நம்மை விடவும் -
ஆப்பிளை பலவகையில் கொண்டாடுகின்றனர் - மேலை நாட்டினர்...

பலவகையான பக்குவங்களில் ஆப்பிள் அவர்களது உணவு மேஜையில்!...

முழுப்பழத்தை உண்பதோடு சாறெடுத்துக் குடிக்கின்றனர்... அத்துடன் -
அனலில் வேக வைத்தும் நீரில் குழைய வைத்தும் வெயிலில் உலர வைத்தும் உண்டு மகிழ்கின்றார்கள்...

Apple Tarte
என்றாலும், ஆப்பிள் பழங்களின் மீது பூசப்பட்டிருக்கும் மெழுகைப் பற்றி அறிந்து கொள்ள - இதோ தகவல்கள் - இணையத்திலிருந்து !..

It is a fact that apple fruits are coated with wax, but the wax that is generally used is edible one and is safe to consume. However, some unscrupulous producers can coat apples with petroleum-based waxes that are harmful for human health.
Apples have natural wax coating on their surface, you can observe this when you pluck an apple from a tree and rub it with your hands. The whitish kind of powder that sticks to your palms is the natural wax on the surface of apple fruit. Likewise, when you scratch an artificially waxed apple, you will see a thin layer peeling off.
Apples are coated with wax for several reasons, like preservation, reduce loss of water, increase visual freshness and of course, replace the natural wax, because cleaning and processing of apples results in the loss of natural wax coat. This practice is very common, especially in supermarkets. 

Thin layer of wax is coated on apples, either by dipping, brushing or spraying with edible waxes like Carnauba or Shellac that are completely safe to consume and are not harmful. This edible wax is not digested, but is passed out through the digestive system.
On the other hand, some unscrupulous producers use the harmful petroleum-based waxes for coating of apples. If an apple looks very glossy and shiny, it is to be suspected. To avoid harmful wax coat, it is advisable to buy apples from markets and places where apples are grown. The chances that the farmers have not waxed apples will be good here. It is also a better idea to buy the dull apples that are fresh, without any kind of artificial coating.
More importantly, it is always a good practice to clean apples with lukewarm water thoroughly before eating. Also, you may use a paper towel with some vinegar (acetic acid) to wipe the apple before washing. Another obvious way to avoid harmful wax of apple fruits is to remove the entire peel, but you might lose on certain vitamins and also the crispiness of the peel. 

Waxing Materials
The waxing materials used depend to some extent on regulations in the country of production and/or export; both natural waxes (sugar-cane, carnaubashellac,resinor) or petroleum-based waxes (usually proprietary formulae) are used. 

Wax may be applied in a volatile petroleum-based solvent but is now more commonly applied via a water-based emulsion. Blended paraffin waxes applied as an oil or paste are often used on vegetables.

Glazing Agent:
A glazing agent is a natural or synthetic substance that provides a waxy, homogeneous, coating to prevent water loss and provide other surface protection for the substance.



Apples are coated with wax for several reasons, like preservation, reduce loss of water, increase visual freshness and of course, replace the natural wax, because cleaning and processing of apples results in the loss of natural wax coat. This practice is very common, especially in supermarkets. Thin layer of wax is coated on apples, either by dipping, brushing or spraying with edible waxes like Carnauba or Shellac that are completely safe to consume and are not harmful. This edible wax is not digested, but is passed out through the digestive system.
On the other hand, some unscrupulous producers use the harmful petroleum-based waxes for coating of apples. If an apple looks very glossy and shiny, it is to be suspected. To avoid harmful wax coat, it is advisable to buy apples from markets and places where apples are grown. The chances that the farmers have not waxed apples will be good here. It is also a better idea to buy the dull apples that are fresh, without any kind of artificial coating.
More importantly, it is always a good practice to clean apples with lukewarm water thoroughly before eating. Also, you may use a paper towel with some vinegar (acetic acid) to wipe the apple before washing. Another obvious way to avoid harmful wax of apple fruits is to remove the entire peel, but you might lose on certain vitamins and also the crispiness of the peel.

In addition to fruit, some vegetables can usefully be waxed, such as cassava; vegetables commonly waxed include cucumbers, and green tomatoes. 

A distinction may be made between storage wax, pack-out wax (for immediate sale) and high-shine wax (for optimum attractiveness) 
இந்நிலையில் -
ஆப்பிள் பழத்தினால் நோயாளிகளின் எண்ணிக்கையும் 
மருத்துவ மனைகளின் எண்ணிக்கை குறைந்து போனதா?..
- என்பதை எல்லாம் சிந்திக்க நமக்கு உரிமை இருக்கின்றது...

இப்போதெல்லாம், தமிழ் வழி ஊடகங்கள் -
ஆப்ரிகாட் சாப்பிடுங்கள்.. அவகாடோ சாப்பிடுங்கள்!..
ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுங்கள்.. ப்ளூபெர்ரி சாப்பிடுங்கள்!..

- என்று ஆரம்பித்திருக்கின்றன..

இவையெல்லாம் - 
மக்களின் மன மயக்கம் ஒன்றினையே விரும்புபவை!..

ஆப்பிளும் மற்றவைகளும் தருகின்ற நலன்களை விடவும்
நன்மைகளைத் தருகின்ற பழங்கள் மிகுந்திருக்கின்றன நம் நாட்டில்..


எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது அங்காடிகளில் கிடைக்கும் பழங்களில் குறிப்பாக ஆப்பிள் திராட்சை போன்றவைகளை நன்றாக நீரில் கழுவி விட்டு உண்பதே சாலச் சிறந்தது...



இன்றளவும் - உடல் நலக்குறைவுற்றவர்களைக் காணச் செல்வது என்றால்
ஆப்பிள் பழங்களுடன் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம்...

உண்ணும் பொருட்களின் மீது - கடுமையான தரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் நாடுகளின் வரிசையில் நம் நாடு இல்லை!..

அப்படியே நடைமுறைப்படுத்தினாலும் அவற்றைத் தூக்கிப் போட்டுவிட்டு
தம்முடைய இயற்கைக் குணம் ஒன்றையே செயல்படுத்தும்
அரசு அலுவலர்களையும் வணிகர்களையும் நாம் கொண்டிருக்கின்றோம்..

இயற்கையைக் கொடுத்தவன் இறைவன்..
அதை அடுத்துக் கெடுத்தவன் மனிதன்!..

எனவே,
நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில்
நமக்குத் தான் மிகுந்த கவனம் வேண்டும்!..

ஆயிரம் தான் இருந்தாலும், நம்முடைய - 
மாங்கனி, நாவற்பழம், இலந்தைப்பழம், 
நெல்லிக்கனி, விளாம்பழம் இவற்றுக்கு 
ஈடாக வேறொன்றில்லை என்பதே எண்ணம்!..

பாரம்பர்யம் மிக்க நம் நாட்டின் கனிவகைகள்
நம்முடைய நலத்தைக் காக்கும் என்பதே திண்ணம்!..

நலம் நம் கையில்..
வாழ்க நலம்!.. 
***