நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

நந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 04, 2024

கோலாகலம் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 22
வியாழக்கிழமை


இப்போது நடுப்பகல் 1: 30.
அன்னதானத்தில் தயிர் சோறு மட்டும் பெற்றுக் கொண்டு திருக்கோயிலை நோக்கி நடந்தேன்..

கரையேறிய இடத்தில் இருந்து திருக்கோயில் கொஞ்ச (அறுநூறு மீட்டர்) தூரம் தான்..








கொடி மரம்
கொடி மரத்தருகில் இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.. 

கோபுரத்தின் அருகிருந்து தரையில் ஒளிபடுமாறு மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்ததால் அந்த அழகைப் படமெடுக்க இயலவில்லை..

திருக் கோயிலின் சில காட்சிகள் - இங்கே..







தகிக்கின்ற வெயிலைப் பொருட்படுத்தாமல்
திருக்கல்யாண மண்டபத்தின் அருகிலும்
கோயிலின் எதிர்ப்புறத்தில் கொள்ளிடக்கரைப் படிக்கட்டுகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இடம் பிடித்து அமர்ந்திருந்தனர்..




நந்தீசனுக்கும் சுயம்பிரகாஷிணி தேவிக்கும் கல்யாண விசேஷங்கள் முன்னிரவு ஏழு மணியளவில் தொடங்கி எட்டரை மணியளவில் நிறைவடைந்தன.. 




கோயிலின் எதிரில் கொள்ளிடக் கரையில் நின்று அங்கே அமைக்கப்பட்டிருந்த காட்சித் திரையில் கண்டு இன்புற்றோர் ஏராளமானோர்.. அவர்களில் நானும் ஒருவன்..





மாங்கல்ய தாரணம் மங்கல ஆரத்திக்குப் பின் ஸ்வாமிகள் திருவீதி எழுந்தருளினர்.. தரிசித்து திருநீறு பெற்றுக் கொண்டு ஒன்பதரை மணியளவில் பேருந்து வழி தஞ்சைக்குப் புறப்பட்டோம்..


வைபவங்கள் நிறைவுற்ற பின்
கோயிலின் இருதிசையிலும் இரண்டு கிமீ தொலைவுக்கு ஜன நெரிசல் அலை பாய்ந்து கொண்டிருந்தது.. 

கீழுள்ள படங்கள் நன்றி காவிரிக்கோட்டம்












காலையில் பல்லக்குடன் நடந்து  திருமழபாடிக்குச் சென்று திருக்கல்யாணம் கண்டு  - இரவு பத்தரை மணியளவில்
நல்ல விதமாக இல்லத்திற்கு வந்து சேர்ந்தோம்..

நந்தீசர் திருவடிகள் போற்றி
சுயம்பிரகாஷிணி திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஏப்ரல் 03, 2024

கோலாகலம் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 21
புதன்கிழமை

கடந்த பங்குனி ஐந்தாம் நாள் (18/3) திங்கட்கிழமை அதிகாலை - கரந்தை  ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சூர்ய பூஜை தரிசித்து விட்டு அங்கிருந்து பேருந்தில் திரு ஐயாறு, திருநெய்த்தானம், கடுவெளி வழியாக வைத்யநாதன் பேட்டை பிரிவு சாலை..
அங்கிருந்து ஒன்றரை கிமீ நடந்தால் வைத்ய நாதன் பேட்டை..


வைத்யநாதன் பேட்டைக்குச் சென்று அங்கிருந்து ஒன்றரை கிமீ கொள்ளிடப் பெருநதியில் நடந்தால் வடகரையில் திருழபாடி..
  
திரு ஐயாற்றில் இருந்து பல்லக்குகள் வந்து கொண்டிருந்தன.. 

ஆதீன கட்டளை மடத்தின் தம்பிரான் ஸ்வாமிகள் அடியார் சூழ பல்லக்குகளுடன் நடைபயணமாக வந்து கொண்டிருந்தார்..

வாருங்கள்
அவர்களுடன் பயணிப்போம்..
இப்போது நேரம் காலை 10:15 மணி..


வைத்யநாதன் பேட்டைக்குச் செல்லும் வழியில்..








வைத்யநாதன்பேட்டை கிராம மண்டகப்படியில் வரவேற்பு..




கொள்ளிடத்தின் தெற்குக் கரையில் அமைந்துள்ள அம்மன் கோயில்..



கொள்ளிடத்தின் தெற்குக் கரை வழியே கொள்ளிடப் பெருநதிக்குள் இறங்குகின்ற பல்லக்கு..


கொள்ளிடப் பெருநதிக்குள் -  நடைவழிக்கு இதமாக
பலநூறு ரூபாய் மதிப்புள்ள
வைக்கோலை பரப்பி வைத்திருந்தனர் ஊர் மக்கள்..



இப்போது நேரம் பகல் 11:15 மணி..

நீர் கொண்ட மேகம் எதுவும் சூரியனைச் சூழ்ந்திருக்க வில்லை..  

கொதித்துக் கிடந்தது கொள்ளிடத்து மணல்.. 

ஆனாலும் மக்கள்  கொள்ளிட ஆற்றில் நடைவழியாக பரப்பி வைத்திருந்த வைக்கோல் -  கால்களுக்கு இதமாக இருந்தது..




கொள்ளிடப் பெரு நதியைக் கடப்பதற்கு 
ஏதுவாக டிராக்டர்..



கணுக்காலுக்கு மேலாகத் தவழ்ந்த தண்ணீரைப் பல்லக்கு கடக்கின்ற காட்சி










திருமழபாடி எதிர்சேவை

ஸ்ரீ நந்திகேசர்

இப்போது நடுப்பகல் 12:45

அனைவரையும் 
எதிர்கொள்வதற்காக திருமழபாடியில் இருந்து
ஸ்ரீ சுந்தராம்பிகையும் ஸ்ரீ வைத்யநாதப் பெருமானும் ஆற்றுக்குள் எழுந்தருள - கூடியிருந்த மக்களிடையே ஆரவாரம்..

கரையேறும் இடத்தில் பெரிய அளவில் அன்னதானம்..
அங்கிருந்து கோயில் அரை கிமீ..

அடுத்து கல்யாண கோலாகலம்..
**
நந்திகேசன்
திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***