திருஞான சம்பந்தப்பெருமான் தமது திருப்பதிகத்தில்
குறித்தருளும் திருநாட்களுள் மாசி மகமும் ஒன்று...
பற்பலத் திருக்கோயில்களில் மாசி மகத்தை அனுசரித்து
திருவிழாக்கள் நிகழ்ந்துள்ளன..
தல புராணங்களின் படி பிரம்மதேவன் தொடக்கி வைத்த
திருவிழாக்கள் - ப்ரம்மோத்ஸவங்கள்..
மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தை அனுசரித்து நிகழும்
திருவிழாக்கள் - மகோத்ஸவங்கள்..
மாசித் திருவிழாவின் படங்களை நண்பர்கள் வழங்கியுள்ளனர்..
அவற்றுள் சில இன்றைய பதிவில்...
படங்களை வழங்கிய உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்...
குறித்தருளும் திருநாட்களுள் மாசி மகமும் ஒன்று...
பற்பலத் திருக்கோயில்களில் மாசி மகத்தை அனுசரித்து
திருவிழாக்கள் நிகழ்ந்துள்ளன..
தல புராணங்களின் படி பிரம்மதேவன் தொடக்கி வைத்த
திருவிழாக்கள் - ப்ரம்மோத்ஸவங்கள்..
மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தை அனுசரித்து நிகழும்
திருவிழாக்கள் - மகோத்ஸவங்கள்..
மாசித் திருவிழாவின் படங்களை நண்பர்கள் வழங்கியுள்ளனர்..
அவற்றுள் சில இன்றைய பதிவில்...
படங்களை வழங்கிய உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்...
![]() |
ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி - திருப்பரங்குன்றம் |
![]() |
ஸ்ரீ சண்முக நாதன் - சங்கரன்கோயில் |
![]() |
ஸ்ரீ அண்ணாமலையார் |
![]() |
ஸ்ரீ உண்ணாமுலை நாயகியுடன் அண்ணாமலையார் |
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
தழைத்த சடையார் விடையொன் றேறித் தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்தங்கு உறங்குஞ் சாரல் அண்ணாமலையாரே.. (1/69)
- : திருஞானசம்பந்தர் :-
![]() |
ஸ்ரீ கும்பேஸ்வரர் |
![]() |
ஸ்ரீ மங்களாம்பிகை |
![]() |
ஸ்ரீ ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகி |
![]() |
ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி |
![]() |
காவிரியில் தீர்த்தவாரி |
![]() |
ஸ்ரீ அக்னீஸ்வரர் - கஞ்சனூர் |
![]() |
ஸ்ரீ கற்பகாம்பாள் - கஞ்சனூர் |
![]() |
ஸ்ரீ திருச்சோற்றுதுறை நாதர்- திருச்சோற்றுத்துறை |
![]() |
ஸ்ரீ அன்னபூரணி - திருச்சோற்றுத்துறை |
கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.. (7/94)
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்:-
![]() |
ஸ்ரீ கோடீஸ்வரஸ்வாமி கொட்டையூர் |
![]() |
ஸ்ரீ பந்தாடு நாயகி கொட்டையூர் |
கருமணிபோல் கண்டத்து அழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக் குன்றன்ன பரமன் கண்டாய்
வருமணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணி போல் அழகமரும் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே...( 6/73)
-: திருநாவுக்கரசர் :-
![]() |
ஸ்ரீ கஜசம்ஹார மூர்த்தி - வழுவூர்.. |
![]() |
ஸ்ரீ அகோர மூர்த்தி - திருவெண்காடு |
பற்றவன் கங்கை பாம்பு மதியுடன்
உற்றவன் சடையான் உயர் ஞானங்கள்
கற்றவன் கயவர் புரம் ஓரம்பால்
செற்றவன் திருவெண்காடு அடை நெஞ்சே..(5/49)
-: திருநாவுக்கரசர்:-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ