நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 16
வியாழக்கிழமை
அன்னாபிஷேக நாளாகிய சனிக்கிழமை இனியதொரு நாளாக அமைந்தது..
அன்று காலையில் அன்பின் திரு நெல்லை அவர்களுடன் சந்திப்பு..
திரு ஆதனூர் தலத்தில் பவித்ரோத்ஸவ தரிசனம் முடித்து விட்டு அங்கிருந்து கண்டியூருக்கு வந்திருந்தார்..
அவருடன் தஞ்சை மாமணிக் கோயில்கள், தஞ்சபுரீஸ்வரம், தாழமங்கை, புள்ளமங்கை, கபிஸ்தலம், ஒப்பிலியப்பன் கோயில், திருச்சேறை ஆகிய திருக்கோயில்களைத் தரிசித்தது மகிழ்ச்சி..
கூடலூர் ஜகத் ரட்சகப் பெருமாள் கோயிலில் உச்சி கால நடையடைப்பு..
நாச்சியார் கோயிலில் சந்திர கிரஹணத்தை முன்னிட்டு நடையடைப்பு.. இதனால் சந்நிதி தரிசனம் செய்வதற்கு இயலவில்லை..
வாகன சாரதியாக கும்பகோணம் திரு. வெங்கடேசன்..
நல்ல மனிதர். அறப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர்..
இனிமையான பயணம்
மாலையில் குடந்தை ரயில் நிலையத்தில் நிறைவு பெற்றது..
பெங்களூர் விரைவு வண்டியில் அன்பின் திரு நெல்லை அவர்கள் புறப்பட்ட பிறகு - குடந்தை மகாமகக் குளக்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேக தரிசனம் செய்து விட்டு தஞ்சைக்குத் திரும்பினேன்..
இனியதொரு நாளை வகுத்துத் தந்த இறைவனுக்கு நன்றி.. நன்றி..
தஞ்சை மாமணிக் கோயில்
மணிக்குன்றப்
பெருமாள் சந்நிதி
தஞ்சபுரீஸ்வரம்
குபேரன் வழிபட்ட திருக்கோயில்
திரு புள்ளமங்கை
ஸ்ரீ ஆலந்துறையார்
கோயில் தரிசனம்
கலைக் கோயில்களின் வரிசையில்
புள்ளமங்கை கோயிலுக்கு
எனத் தனியிடம் உண்டு..
திருக்கூடலூர்
திவ்ய தேச ராஜகோபுர தரிசனம்
ஹரியொடு ஹரனும்
இலங்கிடும் தலங்கள்
தரிசனம் செய்திடத்
துலங்கிடும் நலங்கள்.
***
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***