நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

பிரதோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 19, 2020

சிவ தரிசனம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
நேற்று பிரதோஷம்..
சனி மஹா பிரதோஷம்..

தஞ்சை பெரிய கோயிலில்
மிகச் சிறப்பாக நடைபெறுவதை
அனைவரும் அறிந்திருப்பீர்கள்..

திருக்கோயிலுக்கு
இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்
இரண்டு கி.மீ . தொலைவுக்கு
போக்குவரத்து நெரிசலாகி விடும்.

ஆனால் தற்போதைய ஊரடங்கினால்
பக்தர்கள் திரள் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

நேற்றைய நிகழ்வுகள் Fb ல்
கிடைத்தவை..
வலையேற்றிய ன்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..






இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..
-: திருநாவுக்கரசர் :-


உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவ லிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே!..
-: திருமூலர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

ஞாயிறு, ஜூன் 14, 2015

பிரதோஷம்

இன்று பிரதோஷம்!..

சமீபகாலமாக சிவாலயங்களில் நிகழ்வுறும் வைபவங்களுள் சிறப்பிடம் பெறுவது - பிரதோஷம்!..

அல்லல் அனைத்தையும் அகற்றுவது பிரதோஷ வழிபாடு - என அன்பர்கள் போற்றிக் கொண்டாடுகின்றனர்.


நாம் - நமது வாழ்வில் எத்தனை எத்தனையோ குற்றங்குறைகளைச் செய்து கொண்டேயிருக்கின்றோம்.. அதே சமயம் தெரிந்தோ தெரியாமலோ சில நன்மைகளையும் செய்து விடுகின்றோம்..

நன்மைகளுக்குப் பலன் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும்,

இலகுவான குற்றங்கள் - இறைவன் சந்நிதியில் மன்னிக்கப்படுகின்றன. 

அவை மன்னிக்கப்படும் நேரம் தான் - பிரதோஷம் எனப்படும் மாலை நேரம். 

பிரதோஷம் எனில் குற்றமற்றது என்பர் சான்றோர்.

சமய நெறிமுறைகளில் - மாலை வேளையில் கோயிலுக்குச் செல்லும்படி வற்புறுத்தப்படுவது - அதனால் தான்!..

பிரதோஷ வேளையில் முப்பத்து முக்கோடி தேவரும் - நான்முகப் பிரம்மனும் ஸ்ரீ ஹரிபரந்தாமனும் சிவபெருமானை வணங்கி நிற்பதாக ஐதீகம்.


மூப்பும் சாக்காடும் இல்லாத வாழ்வினை விரும்பிய தேவர்கள் - அவர்களாகவே - பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க முனைந்தனர்.

முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது..

தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி - ஸ்ரீ ஹரிபரந்தாமன் ஆமை எனத் திருவுருவங்கொண்டு மந்தர மலையைத் தாங்கியருளினன்.

இந்த வைபவத்தைத் தான்,

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே..

- என்று சிறப்பித்து ஏத்துகின்றார் - இளங்கோவடிகள்.

இந்த இரண்டாவது முயற்சியின் முடிவில் - ஆலகால நஞ்சு தோன்றியது.

ஆலகாலத்தின் பிடியிலிருந்து தப்பிக்க - சிவபெருமானிடம் அடைக்கலமாகி நின்றனர்.

எம்பெருமான் - அந்த நஞ்சினை தாமே - தமது கண்டத்துள் அடக்கி ஆருயிர்களுக்கு அடைக்கலம் அளித்தார்.

நஞ்சுண்டதால் களைத்தவரைப் போல நடித்து - அண்டசராசரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி - பின் அதனின்று மீண்டாற்போல,

அம்பிகையுடன் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தி - அகில உலகங்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியருளினார்.


இந்த நிகழ்வினை - சைவ சமயக்குரவர்களான,

அப்பர் ஸ்வாமிகளும்,
திருஞான சம்பந்த மூர்த்தியும்,
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளும்,
மாணிக்கவாசகப் பெருமானும் -
தேவார - திருவாசகத் திருமுறைகளில் பாடிப் பரவுகின்றனர்.

வடங்கெழு மலைமத்தாக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங் கண்டு பல்தேவரஞ்சி
அடைந்து நும் சரணமென்ன அருள் பெரிதுடையராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே!.. (4/65)
அப்பர் ஸ்வாமிகள்.

பின்னரும் -

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புண்ர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோண்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என்சென்னியதே!.. (5)

- என்று, அம்மையப்பனின் நித்ய கல்யாண சௌந்தர்யத்தினைப் போற்றிப் புகழ்ந்துரைக்கின்றார் - அபிராமபட்டர்.



அமாவாசை மற்றும் பௌர்ணமிக்குப் பின் - திரயோதசி எனும் பதின்மூன்றாம் நாள் தான் - பிரதோஷ நாள்.

தேய்பிறைச் சதுர்த்தி - சனிக்கிழமையன்று அன்று அமைந்தால்,
சனி மகாபிரதோஷம் என சிறப்புடன் அனுசரிக்கின்றனர்.

பிரதோஷ வேளை -  ஐந்து வகையாக குறிப்பிடப்படுகின்றது..

தினமும் மாலை வேளை -  நித்ய பிரதோஷம்.
வளர்பிறை (சுக்லபட்சம்) - பக்ஷ பிரதோஷம்.
தேய்பிறை (கிருஷ்ண பட்சம்)- மாத பிரதோஷம்.
தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை - மகா பிரதோஷம்.
சர்வமும் ஈசனிடம் ஒடுங்கும் காலம் - பிரளயப் பிரதோஷம்.


பிரதோஷ வேளையில் - நந்தியம்பெருமானுக்கு - நல்லெண்ணெய், திரவியம், பால், தயிர், பன்னீர், இளநீர், திருநீறு, பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள், சந்தனம் - ஆகிய மங்கலங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.

இதேவேளையில் கருவறையில் - இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் நிகழும்.

புது வஸ்திரத்துடன் - மலர்மாலையும் அருகம்புல் மாலையும் சாற்றப்படும்.

மலர்களாலும் வில்வதளங்களாலும் அர்ச்சனை நிகழ்த்தப்படும்.

நிறைவாக இறைவனுக்கும் இறைவிக்கும் நந்திக்கும் ஏககாலத்தில் மகா தீப ஆராதனை நிகழும்.


பிரதோஷ வழிபாட்டில் உணர்த்தப்படுவது அன்பும் அடக்கமும் ஆகும்.

இறைவனின் எதிரில் அமர்ந்திருக்கும் தன்மையே - இதனை உணர்த்தும்.

சைவ சமயத்தில் முதற்குருவாக உணர்த்தப்பட்டவர் நந்தியம்பெருமான்.

அனைத்தையும் கற்றறிந்தவர் - நந்தியம்பெருமான். எண்ணாயிரங்கோடி முறை பஞ்சாட்சர மந்திரத்தினை ஜபித்தவர்.

எம்பெருமான் அம்பிகையுடன் ஏகதேசமாக வீற்றிருந்து உபதேசிக்கும் ஞானானந்த விஷயங்களை - அவர்களுடைய அனுமதியுடன் உலக நன்மைக்காக மற்ற மகரிஷிகளுக்கும் சித்தர்களுக்கும் உரைத்து அருள்பவர்.

பிரதோஷ வேளைகளில் - நந்தியம்பெருமானுக்கும் மூலஸ்தானத்தினுள் விளங்கும் சிவமூர்த்திக்கும் ஏக காலத்தில் தீபஆராதனை நிகழ்வதே சிறப்பு.

இந்த பிரதோஷ நாட்களில்  விரதம் அனுசரிப்பவர்களும் உள்ளனர்.

அதிகாலையில் எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட்டு, பகல் முழுவதும் உபவாசம் இருந்து  இயன்றவரை - தேவார திருமுறைகளைப் பயின்று பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று  வழிபடுதல் மரபாக உள்ளது.

பற்பல நன்மைகளை அளிப்பதால் பிரதோஷ வழிபாடுகளில் மக்கள் மிகுந்த நாட்டம் உடையவராக இருக்கின்றனர்.

சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடகாலத்திற்கு இறைவழிபாடு செய்த புண்ணியமும்,

சனிப் பிரதோஷத்தன்று வழிபட்டால் ஐந்து வருட காலத்திற்கு சிவவழிபாடு செய்த புண்ணியமும் கிடைக்கும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

அதிலும்,

நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே - சிவலிங்கத்தைக் கண்டு,
தரிசனம் செய்வது புண்ணியம் என்றும்,

நந்தியின் காதில் நமது கஷ்டங்களைச் சொன்னால் -
அவையெல்லாம் தீரும் - என்றும் சொல்லப்படுகின்றது..

இந்த வார்த்தைகளால் உந்தப்படுகின்ற பாமரர்கள் - நந்திக்குப் பின்னால் முட்டி மோதிக் கொள்வதை - சிவாலயங்களில் காணலாம்..

அவையெல்லாம் சாதாரணமாக - செய்யக்கூடியவை அல்ல!..

இப்படியெல்லாம் செய்வது சிவ அபராதம்.. - என்கின்றனர் ஆன்றோர்கள்.

சிவாலயத்தில் தரிசனம் செய்வதற்கே நிறைய விதிமுறைகள் உள்ளன.

அவைகளைப் பற்றி வேறொரு இனிய சந்தர்ப்பத்தில் பேசுவோம்..


பிரதோஷ காலத்தில்  அபிஷேக ஆராதனைகள் பூர்த்தியானவுடன் சந்திரசேகர மூர்த்தி அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் ஆலய திருச்சுற்றினுள் வலம் வருவதைத் தரிசிக்கலாம்.

திரயோதசி நாளில் சூர்ய அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும்  அஸ்தமனத்துக்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் - ஆக ஏழரை நாழிகைப் பொழுது தான் பிரதோஷம்.

ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள், எனில் மூன்றே முக்கால் நாழிகை என்பது 90 நிமிடங்கள் - ஒன்றரை மணி நேரம் - ஆகும்.

ஆக,  ஏழரை நாழிகைப் பொழுது என்பது மூன்று மணி நேரம்.

இந்த ஏழரை நாழிகைப் பொழுது - சிவாலயத்தில் இருப்பதனால் - 
மனித வாழ்வினைச் செம்மைப்படுத்தும் சனைச்சரனின் அன்பும் அருளும் நமக்கு எளிதில் கிட்டும்.

சனைச்சர மூர்த்தி ஒரு ராசியைப் பீடித்திருப்பது ஏழரை வருடங்களுக்கு. ஒவ்வொரு ராசியிலும் சனி பகவானுடைய ஆட்சிக் காலம் இரண்டரை ஆண்டுகள்.

இவருடைய  ஆட்சிக் காலத்தில் தான் - நாம் ஒவ்வொரு கோயிலாகத் தேடி ஓடுகின்றோம்.

சிவ வழிபாடு செய்யும்படித் தூண்டுவதில் - 
ஸ்ரீசனைச்சரனுக்கு தனியானதொரு ஆனந்தம். 

ஏழரைச் சனியோ, அஷ்டமச் சனியோ - எதுவானாலும் - மாலை வேளையில் ஏழரை நாழிகைப் பொழுது - சிவ சன்னதியில் இருக்கப் பழகி விட்டால், சனைச்சரனின் அருள் வழித்துணையாய்  நம்முடன் வருவதை உணரலாம்.

ஆன்மாக்களின் அழுக்கை அடித்துத் துவைத்து வெளுத்து பக்குவப்படுத்தி இறைவனிடம் அனுப்புவதே சனைச்சர மூர்த்தியின் நோக்கம்!.

எப்படி என்றால் துன்பங்களின் எல்லை ஆலய வழிபாடு.

ஆலய வழிபாட்டின் நோக்கம் மனந் தூய்மை எனும் வாய்மை.

தூய்மையும் வாய்மையும் நந்தியின் அம்சங்கள்.

நம்மிடையே புழங்கி வரும் ஒரு சொற்றொடர் - 
நந்திபோல் குறுக்கே நிற்காதே!.. - என்பது.

குறுக்கே நிற்பவரா - நந்தி?..

குறிப்பாக நிற்பவர் - நந்தி!..

அர்த்தத்தை அனர்த்தமாக்கிக் கொள்வதில் நம்மவர்களுக்கு மகிழ்ச்சி..

அன்பு , அடக்கம், தூய்மை, வாய்மை - ஆகிய அனைத்தும் ஒருங்கே நிறையப் பெற்றவர் - நந்தியம்பெருமான்.

நந்தியம்பெருமான் வாகனம் மட்டுமன்றி -
ஈசனின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்.

அதிகார நந்தி எனும் விசேஷமான பதவி அவருடையது.

இந்த அம்சத்தில் நந்திதேவருக்கு நெற்றிக்கண்ணும், மழுவும் தண்டமும் சிவபெருமானால் வழங்கப்பட்டுள்ளது.


பிரளய காலத்தில் அம்பிகை உள்பட எல்லாரும் எல்லாமும் எம்பெருமானிடம் ஒடுங்கிவிட -

அப்போதும் அடக்கத்துடன் - ஐயனின் எதிரில் -

'' என் கடன் பணி செய்து கிடப்பதே!...'' 

எனத் தாழ்ந்து பணிந்து அமர்ந்திருப்பவர் நந்தியம்பெருமான் ஒருவரே!...

அப்போது -

தன்னந்தனியராக இறைவன் ஊழித்தாண்டவத்தினை நிகழ்த்துவது நந்தியம் பெருமானின் சிரசில்!..

அதன் பின்னரே இறைவனிடமிருந்து சக்தி வெளிப்பட்டு - சக்தியும் சிவமுமாக  இணைந்து ஆனந்தத் தாண்டவம் நிகழ்கின்றது.

பொங்கிப் பூரித்து - பெருகி வழியும் அமிர்த வெள்ளத்தில் -
அகில புவனங்களும் அண்ட சராசரங்களும் உற்பத்தி ஆகின்றன.

இப்போது இதைப் பொருத்திப் பாருங்கள்....

அன்பும் தூய்மையும் - நந்தியின் புற அழகு.
அடக்கமும் வாய்மையும் - நந்தியின் அக அழகு.


ஆலய வழிபாட்டினால் நம் மனம் செம்மையாகி -
புறந்தூய்மையும் அகந்தூய்மையும் அடையப் பெற்றால் -

நாம் யார்?..

நம் சிரசின் மேல் இறைவன் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்துவது எப்போது?..
நாமும் நந்தி என நலம் பெறுவோமேயானால்.. அப்போது!..

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்..

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்..

திருவள்ளுவப்பெருமான் கூறும் இந்த நெறிகளைக் கைக்கொண்டாலே - 
பிறவி எனும் பெருங்கடலின் ஆழம் குறைந்து விடும்.

நாம் எளிதாகக் கரை சேர்ந்து விடலாம்..
நாமும் நந்தியாகி விடலாம்!..

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு 
அபாயம் ஒரு நாளும் இல்லை..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
திருச்சிற்றம்பலம்!..
* * * 

சனி, மார்ச் 09, 2013

சனிப் பிரதோஷம்

இன்று பிரதோஷம். 

நிகழும் நந்தன வருட மாசி மாதத்தில் இரண்டாவது சனிப் பிரதோஷம். 

நல்ல நாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பயனைத் தரும். காலத்திற்கும் நேரத்திற்கும் அதிக வலிமையுண்டு என்பார்கள். 

'' ஞாலம் கருதினும் கை கூடும் காலம் 
கருதி இடத்தாற் செய்யின் ''  

- என்று திருக்குறள் வழி காட்டுகின்றது.

எனவே நல்ல நேரத்தில் செய்யும் காரியங்களுக்கு நல்ல பயன் கிட்டும். இறைவனை எப்பொழுதும் வழிபட வேண்டும் எனினும் நல்ல நேரத்தில் நாளும் கோளும் பொருந்தி வருகின்ற நாட்களில் மனம் ஒன்றி வழிபட்டால், பலமடங்கு உயர்ந்த நல்ல பயன்கள் விளையும் என்பதும் கேட்டது கேட்டபடி கிடக்கும் என்பதும் அன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 

இத்தகைய நாட்களில் மனம் நிறைந்த அன்புடன் இறைவனை வழிபாடு செய்பவர்கள் சகல பாவங்களிலிருந்தும் நீங்கி - பெருநலன்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை. 

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் என - இருமுறை பிரதோஷம் நிகழும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை நேரம் மட்டும்தான். திரயோதசி நாளில் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும்  பிரதோஷ காலமாகும்.

அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு -  தேவர்களும் அசுரர்களும் செய்த பிழையினால் விளைந்த - ஆலகால நஞ்சினை உண்டார் சிவபெருமான்.  ஈசன் நஞ்சினை உண்ட பொழுது, மேலிட்ட அன்பினால் அம்பிகை தன் வளைக்கரத்தினால் வருடி விட, நஞ்சு கண்டத்திலேயே  பொலிந்து நின்றது. 

பிரதோஷ காலத்தில் தான் நந்திதேவரின் கொம்புகளுக்கு இடையில் நர்த்தனமாடி அருள் புரிந்தார். 

தாயும் நீயே!... தந்தையும் நீயே!...
அதனால் நாம் நன்றி மறவாமல் பிரதோஷ காலத்தில் சிவாலயத்திற்குச் சென்று நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்து சிவபெருமானையும் அம்பிகையையும் வழிபடுதல் வேண்டும்.

பிரதோஷ தினத்தன்று வழிபடும்போது சோம சூக்த பிரதட்சணம் செய்வது சிறப்பு.

சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு, இடப்புறமாகச் சென்று சண்டிகேசுவரரை வணங்கி, அங்கிருந்து வந்த வழியே திரும்பி வந்து, நந்தியம்பெருமானை வணங்கி, வலப்புறமாகச் சென்று அபிஷேக தீர்த்தம் வழியும் கோமுகி வரை வந்து, மீண்டும் வந்த வழியே திரும்பி நந்தியம்பெருமானின் பின் நின்று மூலஸ்தானத்தில் சிவபெருமானை நோக்கி வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வலம் செய்து வணங்கும் முறை தான் சோம சூக்த பிரதட்சணம் எனப்படும். 

இப்படி பிரதோஷ தினத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்து வணங்கிட நன்மைகள் விளைகின்றன என்கிறார்கள் மெய்யன்பர்கள். 


பிரதோஷ காலத்தில் சிவாலயத்திற்குச் சென்று நந்தியம்பெருமானை - சுத்தமான நீரால் நீராட்டி, நல்லெண்ணெய் காப்பு செய்து, திரவியப்பொடி, மஞ்சள் பொடி, திருநீறு, இளநீர், பால், தயிர், தேன், நெய், பஞ்சாமிர்தம், சர்க்கரை, சந்தனம் - இவற்றால் பெருமானுக்கு அபிஷேகம் செய்வித்து,

நல்ல வஸ்திரங்களை  அணிவித்து  நறுமணமுள்ள மலர்களைச் சூட்டி அலங்கரித்து பழங்கள் சித்ரான்னங்களை -  அன்புடன் சமர்ப்பித்து,

மங்கள வாத்யங்களை முழக்கி, தேவார திருவாசகப் பண்ணிசைத்து - தூப தீப ஆராதனைகளுடன் வணங்கி ,

குறைகளை நீக்கிக் குறையாத நிறைவினை தரும் இறைவழிபாட்டினை முறையாக மேற்கொண்டு - எல்லா நற்பேறுகளையும்  எய்துவோமாக!..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்..

'' திருச்சிற்றம்பலம் ''

சனி, பிப்ரவரி 23, 2013

பிரதோஷம்

இந்த மாசி மாதத்தின் வளர்பிறை திரயோதசியும் தேய்பிறை திரயோதசியும்  முறையே - பிப்ரவரி-23 மற்றும் மார்ச்-9 ஆகிய நாட்களில் சனிக்கிழமையில் நிகழ்வுறுகின்றன.

பிரதோஷ வழிபாடு செய்யும் அன்பர்கள் இதனை மகாபிரதோஷம் என சிறப்பிக்கின்றனர்.


பிரதோஷ வேளை -  ஐந்து வகையாக குறிப்பிடப்படுகின்றது..

தினமும் மாலை வேளை -  நித்ய பிரதோஷம்.
வளர்பிறை (சுக்லபட்சம்) - பக்ஷ பிரதோஷம்.
தேய்பிறை (கிருஷ்ண பட்சம்)- மாத பிரதோஷம்.
தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை - மகா பிரதோஷம்.
சர்வமும் ஈசனிடம் ஒடுங்கும் காலம் - பிரளயப் பிரதோஷம்.

ிர்காகியாம் - நம் வாழ்வில் எத்ை எத்ையுற்றங்ைச் செய்ொண்டிருக்ின்றோம்.ே சம் ெரிந்ெரியாமோ சில ன்மைகையும் செய்ிடின்றோம். நன்மைகுக்குப் பன் கிடைப்பு ஒருபுறம் இருந்ாலும் -

இலுவானுற்றங்கள்  இறைவன் ன்னிியில் மன்னிக்கப்பும்  ேரம்ான் பிரதோஷை. பிரதோஷம் என்றால் ுற்றற்று என்பாகும். (ம்  - ுற்றம்). அதால்ன் - ு ச ஆசாரங்கில், ாலை நேரத்ில் கோயிலுக்குச் சென்று விபுவு என்பு வியுறத்ப் புகின்று. 

ிர ையில் முப்பத்ு முக்கோடி ேவர்கும் , பிரம்மா, விஷ்ணஆகியோரும் ெருமானை வங்குவாக ீகம். பிரதோஷேளையில் ிவெருமானுக்கும் அவு வாகாகிய நந்திம் பெருமானக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின். 


எண்ணெய், ிரியம், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர், திருநீறு, பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம்  இவைகால் அபிஷேகம் செய்தின் வில்வம்ற்றும் நறுமிக்க மலர்கள் மற்றும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்வர். 

நந்திம்பெருமானக்கு விசேஷமாக அருகம்புல் மால சாற்றி அர்ச்சனை செய்வது வழக்கம். ிறைவாக -

நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின்ே  மூலவரான சிவலிங்கத்திற்கு  மதீபாராதனை நடக்கும்  அப்ப நந்தியின் இ கொம்புகளுக்கிடையே தீபாராதனைத் தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

அனைத்தையும் கற்றிந்தவர் நந்தீஸ்வரர். எல்லாம் அறிந்திருந்தாலும் நந்தியம்பெருமான் மிகவும் அடக்கமானவர். சிவபெருமானின் எதிரில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும். பிரதோஷ வழிபாட்டில் உணர்த்தப்படுவது அன்பும் அடக்கமும் ஆகும். 


ந்ியம்பெருமான் ான் ைவ சத்ில் ற்குருவாக உணர்த்ப் ுபர். எம்பெருமான் அம்பிகையுடன் வீற்றிுந்ு உபேசிக்கும் அருட் கத்ுக் அவுடைய அனுமியுடன் - உல நலுக்காக ற்றுனிவர்குக்கும் சித்ர்குக்கும் உபேசித்ுள்பர்.

இந்த பிரதோஷ நாட்களில்  விரதம் அனுசரிப்பவர்களும் உள்ளனர்.

அதிகாலையில் எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட்டு, பகல் முழுவதும் உபவாசம் இருந்து  இயன்றவரை - தேவார திருமுறைகளைப் பயின்று பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று  வழிபடுதல் மரபாக உள்ளது.

பற்பல நன்மைகளை அளிப்பதால் பிரதோஷ வழிபாடுகளில் மக்கள் மிகுந்த நாட்டம் உடையவராக இருக்கின்றனர்.



சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருட காலம் இறைவழிபாடு செய்த ுண்ணியம், சனிப் பிரதோஷத்தன்று வழிபட்டால் ஐந்து வருட காலம் வழிபாடு செய்த புண்ணியமும் கிடைக்கும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.


''சிவாய நம''  என்று சிந்தித்திருப்போர்க்கு 
அபாயம் ஒரு நாளும் இல்லை...''

திருச்சிற்றம்பலம்!..
* * * 

வெள்ளி, பிப்ரவரி 22, 2013

திருப்பதிகம் - 05

ஓம் நமசிவாய!..


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்

திருத்தலம் 
திருஐயாறு 

இறைவன் - ஸ்ரீஐயாறப்பர்
அம்பிகை - ஸ்ரீஅறம் வளர்த்தநாயகி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி


-: தலப்பெருமை :-

வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி எனும் ஐந்து நதிகள் அணி செய்யும் திருத்தலம்.

நந்தியம்பெருமான் சிலாத முனிவருக்கு மகனாகப் பிறந்து திருமழபாடியில் திருமணம் கொள்ள  - மணமக்களை எதிர்கொண்டழைக்கும் சப்தஸ்தானம் எனும் ஏழூர் திருவிழா நடைபெறும் திருத்தலம்.

திருநாவுக்கரசருக்கு ஆடி அமாவாசை தினத்தன்று ஈசன் திருக்கயிலாயக் காட்சி நல்கிய திருத்தலம்.


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்.
ஆறாம் திருமுறை - திருப்பதிக எண் - 38

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம்  ஆனாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

நோக்கரிய திருமேனி உடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாயம் ஆனாய் நீயே
தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

வானுற்ற மாமலைகள் ஆனாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மட வாள் பங்கன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்சம்  உண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை உடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா உலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் அடிபரவ நின்றாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோள்விட் டெரியாடல் உகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

ஆரு மறியா இடத்தாய் நீயே
ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே
ஒண்டா மரையானும் மாலுந் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 
  
திருச்சிற்றம்பம்!..
* * *