நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 21
வியாழக்கிழமை
திருக்கார்த்திகை தீபத்தன்று திருஅண்ணாமலை
திருக்காட்சிகள்..
அன்பின் கீதா அக்கா அவர்களுக்காக
இந்தப் பதிவு..
காணொளியாளர்க்கு
நெஞ்சார்ந்த நன்றி..
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.. 1/10/1
-: திருஞானசம்பந்தர் :-
மத்தனை மதயானை உரித்த எஞ்
சித்தனைத் திரு அண்ணா மலையனை
முத்தனை முனிந்தார் புர மூன்றெய்த
அத்தனை அடியேன் மறந்துய்வனோ.. 5/4/3
-: திருநாவுக்கரசர் :-
விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்..
(திருஅம்மானை 10)
-: மாணிக்கவாசகர் :-
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***