நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஏழூர் பல்லக்குகள் இன்றும் தொடர்கின்றன..
(விடாது கருப்பு!.. என்பது உண்மை தானோ!..)
என்ன செய்வது?... எல்லாப் படங்களையும் நீங்கள் பார்த்துத் தான் ஆக வேண்டும்!..
திருநெய்த்தானம் கோயிலுக்குள் பல்லக்குகள் கடைக் காலில் நிறுத்தப் பட்டிருப்பதைக் காணலாம்..
நண்ணியொர் வடத்தி னிழல் நால்வர்முனி வர்க்கன்று
எண்ணிலி மறைப் பொருள் விரித்தவர் இடஞ்சீர்த்
தண்ணின்மலி சந்த கிலொடு உந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண் திருவையாறே.. 2/32/4..
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***