நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 18, 2025

ஞாயிறு

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 4
ஞாயிற்றுக்கிழமை
 

அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும் என்பது எனது தளத்தின் முழக்கம்... 

அதைத் தான் இன்று வரை கடைப்பிடித்து வந்திருக்கின்றேன்..

அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும் என்பதற்கு நாம் உலகில் தெரிந்து கொண்டவைகளும் இந்த உலகிற்கு செய்தவைகளும்  நம்மைப் பிறவிகள் தோறும் தொடந்ர்து வரக்கூடியவை என்பதாகவும் பொருள் கொள்ளலாம்...

அவ்வகையில் அனைவரும் பேறு பெற்றவர்கள்...

இரண்டு வருடங்களுக்கு மேலாக நாளொரு பதிவு என்று மலர்ந்திருந்த நமது தளத்தில் இனி அடுத்த சில பதிவுகளைக் கடந்து வாரத்தில் சில பதிவுகள் என்று மலர இருக்கின்றது...

காரணம் எனது உடல் நிலை... இரண்டு முறை சோதித்த பின்னும் கண்களில் பிரச்னை.. 

ஓரிடத்தில் அறுவை சிகிச்சை என்கின்றனர்... மற்றோரிடத்தில் கண்கள் நன்றாக இருக்கின்றன என்கின்றனர்...

அரசு கண் மருத்துவமனை யிலும் இதுதான் நடந்தது..
மனதில் இருக்கின்ற
அளவு உடலில் தெம்பு இல்லை...

முதற்கட்டமாக கண்களுக்கு சற்றே ஓய்வு தந்தாக வேண்டும்..

அடுத்ததாக பழுதுற்ற கைத்தல பேசியும் ஒத்துழைக்காத இணையமும்...

குவைத்தில் இருந்த போது அறைக்குள் மட்டுமே மாற்றாரிடத்தில்
தன் முனைப்பு என்றதொரு காழ்ப்புணர்ச்சி...

எனினும்
அங்கே தொழில் நுட்பமும் பொருளாதாரமும் நன்றாகத் தான் இருந்தன..

இங்கே ஒன்றும் சொல்வதற்கில்லை.. 
தஞ்சையம்பதியின் ஆதார வேரில் இருந்தே அன்பின் ஸ்ரீராம் அவர்களது எங்கள் பிளாக் தளத்தில் கவிதைகளுடன் ஒரு  நூற்றுக்கும் மேற்பட்ட  கதைகள் 
எழுதினேன்.. அவையனைத்தும் மகிழ்வுடன் எபியில் பதிவு செய்யப்பட்டன...

நான் எனது கதை கவிதைகளில் எந்த புறம்பான சொல் எதையும் சொன்னது இல்லை... 

குறிப்பாக மங்கலம் அல்லாத சொல்..

நானென்ன அங்கிருந்து பொன்னையும் பொருளையுமா எதிர்பார்த்தேன்!..

அன்பின் உற்சாகம்..

அந்த உற்சாகத்தைக் கெடுத்தது  ஒரு கருத்து.. 

அதற்குப் பிறகு...

அதையெல்லாம் விட்டு விடுவோம்..

வெகு தொலைவிற்கு வந்தாயிற்று..

இவ்வேளையில் அன்பின் ஸ்ரீராம், சித்திரச் செல்வர் கௌதம் ஜி, அன்பின் நெல்லை, அன்பின் கில்லர் ஜி, அன்பின் வெங்கட் நாகராஜ், அன்பின் துளசிதரன் மதிப்புக்குரிய கீதா சாம்பசிவம் அக்கா அவர்கள் மதிப்புக்குரிய கோமதி அரசு, மதிப்புக்குரிய கமலா ஹரிஹரன், மதிப்புக்குரிய சகோதரி கீதா ரங்கன் மதிப்புக்குரிய மாதேவி, மதிப்புக்குரிய பானுமதி வெங்கடேஸ்வரன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..

பதிவுகளைக் குறைத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை தான்.. 

இருப்பினும், உடல் நலன் முக்கியம்..

அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்திப்போம்..

நலமே வாழ்க..

ஓம் சிவாய நம
**