நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
யாவருக்குமாம் பசுவினுக்கு ஒருவாயுறை..
என்பது திருமூலர் அருளிய
திருமந்திரம்..
பசு எனில் நம் வீட்டுப் பசு அல்ல..
ஆதரவற்றுத் தெருவில்
திரியும் அப்பாவி உயிர்கள்..
அப்படியான பசுவிற்குக்
கொடுப்பது கொடையெனில்
பசுவே கொடுப்பதற்கு
என்ன பெயர்?..
பசித்த வயிற்றில்
உணவு தெய்வம்
பாலை வனத்தில்
தண்ணீர் தெய்வம்..
என்றார் கவியரசர்..
பசிக்கான
உணவு மட்டும் அல்ல!..
பசியறிந்து
உண்ணக் கொடுப்பவரும்
கொடுப்பதுவும்
தெய்வம் தான்!..
கீழுள்ள காணொளி
எதையெல்லாம்
உணர்த்துகின்றது?..
தாய்மையைச்
சக்தி என்பது நமது மரபு..
ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ