நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கார்த்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார்த்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 13, 2024

திருக்கார்த்திகை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 28
வெள்ளிக்கிழமை

தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்



இன்று 
கார்த்திகை தீபம்


இறைவன்
ஸ்ரீ அண்ணாமலையார்
அம்பிகை
ஸ்ரீ உண்ணாமுலையாள்



திருஞானசம்பந்தர் அருளிச் செய்த 
திருப்பதிகம்

முதல் திருமுறை
திருப்பதிக எண் 10

உண்ணாமுலை உமையாளொடும் 
உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை 
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் 
மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை 
வழுவாவண்ணம் அறுமே.  1 

தேமாங்கனி கடுவன்கொள 
விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை 
சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் 
அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி 
நினைவார்வினை யிலரே.  2 

வெம்புந்திய கதிரோன்ஒளி 
விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் 
அண்ணாமலை அதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ 
குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் 
அடிபேணுதல் தவமே.. 11


இரண்டாம் திருமுறை
திருப்பதிக எண் 69

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் 
 புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று 
  மூவர்க்கருள் செய்தார்
தூமாமழைநின்ற திரவெருவித் தொறுவின் 
  நிரையோடும்
ஆமாம் பிணைவந் தணையுஞ்சாரல் 
 அண்ணாமலையாரே.  1

எனைத்தோரூழி யடியாரேத்த 
  இமையோர் பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் 
  நிமலருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன் 
  கைமேல்குழல்ஊத
அனைத்துஞ் சென்று 
  திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.  6

அல்லாடரவம் இயங்குஞ்சாரல் 
 அண்ணாமலையாரை
நல்லார் பரவப் 
  படுவான்காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடலான 
  பத்தும் இவைகற்று
வல்லாரெல்லாம் வானோர் 
  வணங்க மன்னிவாழ்வாரே.. 11



திருநாவுக்கரசர் 
அருளிச் செய்த
திருப்பதிகம்

ஐந்தாம் திருமுறை
திருப்பதிக எண் 4

வட்ட னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு அண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.. 1

மத்த னைம்மத யானையு ரித்தவெஞ்
சித்த னைத்திரு அண்ணா மலையனை
முத்தனை முனிந் தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.. 3

அரக்க னையல றவ்விரல் ஊன்றிய
திருத்தனைத் திரு அண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ.. 10


ஐந்தாம் திருமுறை
திருப்பதிக எண் 4

பட்டி ஏறுகந் தேறிப் பலஇல்லம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே..1

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.. 5

மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையு நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின் அண் ணாமலை கைதொழப்
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.. 10


மாணிக்கவாசகர் 
அருளிச் செய்த
திருவாசகம்

எட்டாம் திருமுறை
திரு அம்மானை 

பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.. 2

விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்..  10
திருச்சிற்றம்பலம் 
 நன்றி
பன்னிரு திருமுறை



அண்ணாமலைக்கு அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், டிசம்பர் 12, 2024

தீப கார்த்திகை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 27
வியாழக்கிழமை


தீபக்கார்த்திகையை முன்னிட்டு
சிறப்புப் பதிவு..


















தீப மங்கல ஜோதி நமோ நம

ஓம் ஹரி ஓம் 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், நவம்பர் 18, 2024

சோமவாரம் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 3
திங்கட்கிழமை

முதல் சோமவாரம்

சகல சிவாலயங்களிலும்
நூற்று எட்டு
 சங்குகளால் அபிஷேகம்
நடத்தப்படுகின்ற நாள்..


இன்றைய
தரிசனம்
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்.,
தஞ்சாவூர்


ஸ்வாமி
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்



தேவர்களுக்கு தஞ்சம் அளித்துக் காத்தருளிய இத்தலத்தில்
குபேரன் வழிபாடு செய்து  மீண்டும் செல்வங்களைப் பெற்றதாக தல புராணம்..









அஷ்ட லக்ஷ்மி
மண்டபத்தில் குபேர தரிசனம்










இத்தலத்தில் 
ஸ்ரீ ஐயப்பனுக்கு நேர் எதிராக நவக்கிரகங்கள்..


ஸ்வாமி அவர்களை அடக்கி ஆள்வதாகவும் தோஷங்களை விலக்குவதாகவும் ஐதீகம்


ஸ்ரீ சிவவாக்கிய சித்தர்
**

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. 4/11/8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***