நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி
வெள்ளிக்கிழமை
ஏகாதசியும் கிருத்திகையும்
இன்று
திருநாவுக்கரசர் தேவாரம்
வேத நாயகன்
வேதியர் நாயகன்
மாதின் நாயகன்
மாதவர் நாயகன்
ஆதி நாயகன்
ஆதிரை நாயகன்
பூத நாயகன்
புண்ணிய மூர்த்தியே. . 5/100/1
வேதங்களுக்கும் வேதியர்க்கும் நாயகன்.
உமாதேவியின் நாயகன்.
பெருந்தவம் உடைய முனிவர்களுக்கும் நாயகன்..
ஆதி நாயகன் என்றாகி, ஆதிரை என்ற விண்மீனுக்கும் - பஞ்ச பூதங்களுக்கும் நாயகன் ஆகிய புண்ணியமூர்த்தியே சிவபெருமான்..
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் நம சிவாய
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..