நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 24, 2013

சங்கடஹர சதுர்த்தி

இன்று (24/8) மஹா சங்கடஹர சதுர்த்தி!.. 


நம் வாழ்வில் எத்தனை எத்தனையோ சங்கடங்கள்!.. 

பிறரால் வருவதும் உண்டு. நமக்கு நாமே -  விலை கொடுத்து வாங்கிக் கொள்வதும் உண்டு!.. 

அனைத்தையும் நீக்கி சர்வ மங்கலங்களையும் அருள வல்லது சதுர்த்தி விரதம்!.. 

அதிலும் -  ஆவணி மாத தேய்பிறைச் சதுர்த்தி  மிகவும் சிறப்பான - மஹா சங்கட ஹர சதுர்த்தி - என்கின்றனர் ஆன்றோர். 


காலையில் விரதம் ஏற்று உபவாசம் இருந்து விநாயகப் பெருமானை திரிகரண சுத்தியுடன் தியானித்து - இரவில் பெருமானை பூஜை  செய்து - நிவேதனத்தை அருந்தி விரதத்தினை நிறைவு செய்யவேண்டும். 

வனத்தில் தன்னை விட்டுப் பிரிந்த நளனை  - அடைய வேண்டி தமயந்தி, சங்கடஹர சதுர்த்தி விரதத்தினை அனுஷ்டித்ததாகவும்,

வனவாச காலத்தில் பாண்டவர்க்கும் திரெளபதிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினை ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசித்ததாகவும் - கூறுவர்.

அவ்வண்ணம் - நாமும் கணபதியின் கழலடிகளைச் சிந்திப்போம்!..

ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ கணேச பஞ்ச ரத்னம்.

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம்
கலாதரா வதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமி தம் விநாயகம். 

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமஸ் ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்.

ஸமஸ்த லோகசங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோ தரம்வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்.

அகிஞ்ச நார்த்தி மார்ஜநம் சிரந்த நோக்தி பாஜநம்
புராரி பூர்வநந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம்.

நிதாந்த காந்த தந்தகாந்தம் அந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீந மந்தராய க்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவ தம் விசிந்தயாமி ஸந்தகம்.


மஹாகணேச பஞ்சரத்ன மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோக தாம தோஷதாம் ஸுஸா ஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமா ஹி தாயரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத்: 
 
நூற்பயன்:
அதிகாலைப் பொழுதில் மஹாகணபதியை இதயத்தில் கொண்டு தியானம் செய்பவர்கள் விரைவிலேயே எல்லாப்பிணிகளிலிருந்தும் நீங்கி - நலம் பெறுகின்றார்கள். நல்ல அறிவையும், நன்மக்களையும், நீண்ட ஆயுளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று, நீடூழி வாழ்வார்கள்!.. 

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை!..
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நமஹ:

14 கருத்துகள்:


  1. சங்கட ஹர சதுர்த்தி குறித்த தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. சங்கடஹர சதுர்த்தி அறிந்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!..

      நீக்கு
  3. மகா சங்கட ஹர சதுர்த்தி அன்று ஆதி சங்கரர் எழுதிய
    கணேச பஞ்ச ரத்தினத்தை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    எத்தனையோ முறை சொல்லி இருந்தாலும், இன்றும் ஒரு முறை
    நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்களுக்காக வினாயகப்பெருமானிடம் எனது வேண்டுதலை சமர்ப்பித்து
    அவரது வாழ்நாள் எல்லாம் பொன்னாளாக அருள் புரியுமாறு வேண்டி இந்த பதிகத்தை நானும் பாடுவேன்.

    இதோ பாடுகிறேன்.

    யூ ட்யூபில் பதிவானபிறகு அதற்கான தொடர்பு தருகிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா!.. தங்கள்து வருகைக்கு மிக்க நன்றி!.. தங்களது குரல் வழியே - பஞ்ச ரத்தினத்தைக் கேட்கவும் பிரியப்படுகின்றோம்!..

      நீக்கு


  4. http://www.youtube.com/watch?v=LI4fmB-YQCM


    இங்கே கேட்கலாம்.
    http://www.youtube.com/watch?v=LI4fmB-YQCM

    இங்கேயும் கேட்கலாம்.

    www.menakasury.blogspot.com
    சொல்லப்போனால் எங்கேயும் கேட்கலாம்.
    எல்லோர் இதயத்துக்கு உள்ளேயும் கேட்கலாம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாருடைய இதயத்திற்கு உள்ளேயும் கேட்கலாம்!.. சத்தியமான வார்த்தைகள்!..

      நீக்கு
  5. சர்வ மங்கலங்களையும் அருள வல்லது சதுர்த்தி விரதம்!

    அருமையான ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ கணேச பஞ்ச ரத்னம்.
    பற்றிய சிறப்புப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. வணக்கம். தங்களுடைய வருகை கண்டு மகிழ்ந்தேன். தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. சங்கடஹர சதுர்த்தசியின் மகிமையினை உணரும்பதஈருன்தது பதிவு.
    நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  7. எல்லாருடைய இதயத்திற்கு உள்ளேயும் கேட்கலாம்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. தனபாலன்!.. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..