நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 26, 2025

சிவ சிவ

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மகா சிவராத்திரி

மாசி 14 
புதன்கிழமை


திருநாகேஸ்வரம்

இறைவன் 
ஸ்ரீ நாகேஸ்வரர்
ஸ்ரீ சண்பகாரண்யேஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ பிறையணி வாணுதலாள்
ஸ்ரீ குன்றமுலை நாயகியாள்

பாம்புகளின் அரசனாகிய நாகராஜன் தனது சாபம் நீங்குவதற்காக
சிவராத்திரியின் முதற்காலத்தில் திருக்குடந்தை 
ஸ்ரீ நாகேஸ்வரன் கோயிலில் வழிபட்ட பின்னர்
 இரண்டாம் காலத்தில் வழிபட்ட திருத்தலம்..

மூன்றாம் காலத்தில்
திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் ஆலயத்திலும்
நான்காம் காலத்தில் 
திருநாகை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் ஆலயத்திலும் வழிபட்டதாக ஐதீகம்..
**

திருநாவுக்கரசர் அருளிச்செய்த திருப்பதிகம்

நான்காம் திருமுறை
அறுபத்தாறாம் திருப்பதிகம்


கச்சைசேர் அரவர் போலுங் 
  கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும் 
  பேரரு ளாளர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி 
  இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  1

வேடுறு வேட ராகி 
  விசயனோ டெய்தார் போலுங்
காடுறு பதியர் போலுங் 
  கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந் 
  தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  2

கற்றுணை வில்ல தாகக் 
  கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும் 
  புலியதள் உடையார் போலுஞ்
சொற்றுணை மாலை கொண்டு 
  தொழுதெழு வார்கட் கெல்லாம்
நற்றுணை ஆவர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  3

கொம்பனாள் பாகர் போலுங் 
  கொடியுடை விடையர் போலுஞ்
செம்பொனார் உருவர் போலுந் 
  திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை யாளும் 
  இறைவனே என்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  4 


கடகரி உரியர் போலுங் 
  கனல்மழு வாளர் போலும்
படவர அரையர் போலும் 
  பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக் 
  கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  5  

பிறையுறு சடையர் போலும் 
  பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும் 
  மால்மறை யவன் தனோடு
முறைமுறை அமரர் கூடி 
  முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  6  

வஞ்சகர்க்கு அரியர் போலும் 
  மருவினோர்க்கு எளியர் போலுங்
குஞ்சரத்து உரியர் போலுங் 
  கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று 
  வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  7 


போகமார் மோடி கொங்கை 
  புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும் 
  வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும் 
  பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  8  

கொக்கரை தாளம் வீணை 
  பாணிசெய் குழகர் போலும்
அக்கரை அணிவர் போலும் 
  ஐந்தலை அரவர் போலும்
வக்கரை அமர்வர் போலும் 
  மாதரை மையல் செய்யும்
நக்கரை உருவர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  9  

வின்மையாற் புரங்கள் மூன்றும் 
  வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர் தங்கள் 
  தலைவர்க்குந் தலைவர் போலும்
வன்மையால் மலையெ டுத்தான் 
  வலியினைத் தொலைவித் தாங்கே
நன்மையால் அளிப்பர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.. 10
திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

1 கருத்து:

  1. திருச்சிற்றம்பலம். நாக ஈஸ்வரனார் நம்மையெல்லாம் காக்கட்டும். நாதன் தாள் வாழ்க நமச்சிவாயமே...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..