நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 21, 2023

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 5
செவ்வாய்க்கிழமை


கந்த சஷ்டி ஆறாம் நாளை முன்னிட்டு அருகிருக்கும் அரசூர் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயிலில் சனிக்கிழமை காலை யாக பூஜையுடன் மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது..











தஞ்சையில் கரந்தை  எனப்படும் தொன்மையான தலமாகிய கருந்திட்டைக்குடியின் ஸ்ரீ வசிஷ்டேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் சூரசங்காரம் சிறப்புடன் நடைபெற்று மறுநாள் ஞாயிறன்று மாலை ஆறு மணிக்கு மேல் யாகபூஜையுடன் ஸ்ரீ சுப்ரமணியர் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.. 

திரளான பக்தர்கள் தரிசிக்க -  ஆயிரம் பேருக்கு மேல் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது..









திருக்கல்யாண விருந்து

ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்   
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்  
தன்கடன்னடி யேனையுந் தாங்குதல்  
என்கடன்பணி செய்து கிடப்பதே..
-: திருநாவுக்கரசர் :-
**
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வெற்றிவேல்..
      வீரவேல்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கருந்திட்டைக்குடியில்்நடந்த சூரசம்ஹார நிகழ்வு படங்கள் நன்று.

    ஆயிரம் பேர்களுக்கு மேலா? பக்தி உணர்வை வளர்ப்பதில் எஓயில்களுக்கும் அங்கு நடைபெறும் விழாக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. /// பக்தி உணர்வை வளர்ப்பதில் கோயில்களுக்கும் அங்கு நடைபெறும் விழாக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. கருத்தட்டாங்குடி, கருந்திட்டைக்குடி இரண்டும் ஒரே ஊர்ப் பெயர்களா? சூர சம்ஹாரப் படங்கள் சிறப்பு. எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. தொலைக்காட்சி மூலம் சில ஊர்களின் திருக்கல்யாண வைபவங்களைப் பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்தட்டாங்குடி, கருந்திட்டைக்குடி இரண்டுமே ஒன்று தான்..

      கருந்திட்டைக்குடி என தேவாரத்தில் உள்ளது.

      கருத்தட்டாங்குடி பேச்டு வழக்கில்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா ..

      நீக்கு
  4. அப்பர் பாடலை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
    முதல் படம் எங்கள் வீட்டில் இருக்கிறது. சாரின் இஷ்ட தெய்வம்.
    விழாக்கள் படங்கள் அருமை.
    சில கோயில்களின் முருகன் வள்ளி, தெய்வானை திருமணத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
    கருந்திட்டை கோயில் முன்பு பார்த்து இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் தரிசனம்
      கோடி புண்ணியம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  5. கருந்திட்டைப் பகுதி சம்ஹாரப் படங்கள் நன்றாக இருக்கின்றன துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  6. சூரசம்ஹாரம், திருக்கல்யாணப் படங்கள் அருமை.

    முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..