நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 10, 2018

மார்கழிக் கோலம் 26

தமிழமுதம்

எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..(392) 
***
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 26


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன 
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே 
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே 
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்...
*

தித்திக்கும் திருப்பாசுரம்



திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கண்டேன்
என்னாழி வண்ணன் பாலின்று..(2282)
-: பேயாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருவலிதாயம் (பாடி)


இறைவன் - ஸ்ரீ வலிதாய நாயகன்
அம்பிகை - ஸ்ரீ ஜகதாம்பிகை



தலவிருட்சம் - பாதிரி
தீர்த்தம் - பரத்வாஜ தீர்த்தம்

தேவகுருவாகிய பிரகஸ்பதியின்
மகனாகிய பரத்வாஜர் வழிபட்ட திருத்தலம்

அவருக்கு ஏற்பட்ட சாபம் நீங்குதற்காக
வலியன் எனப்படும்
கரிக்குருவியாக வடிவம் கொண்டு
சிவபூஜை செய்தார் என்பது தலபுராணம்..

வள்ளி தேவயானையுடன் திருமுருகன்
ஸ்ரீ தேவகுரு பிரகஸ்பதி - வியாழன்
பரத்வாஜரைத் தொடர்ந்து
அவரது தந்தையாகிய பிரகஸ்பதியும்
இங்கே சிவ வழிபாடு செய்தமையால்
குரு ஸ்தலம் என விளங்குகின்றது.. 

ஸ்ரீ ராமபிரான், லக்ஷ்மணன், ஆஞ்சநேயர்
வணங்கிய திருத்தலம்..


ஸ்ரீ காலபைரவர்
இதய நோய் உடையவர்கள் வழிபாடு செய்ய
நலம் விளைகின்றது என்பது
பக்தர்களின் நம்பிக்கை...

சென்னையில் அம்பத்தூருக்கு அருகில்
அமைந்துள்ளது பாடி..
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

ஒற்றையேறதுடை யான் நடமாடியோர் பூதப் படைசூழப்
புற்றில்நாகம்அரை யார்த்துழல்கின்ற எம்பெம்மான் மடவாளோடு
உற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும் வலிதாயம்
பற்றிவாழும்அது வேசரணாவது பாடும் அடியார்க்கே..(1/3) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருஅம்மானை
திருப்பாடல்கள் 15 - 16



சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்...

ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.. 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***




9 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு சகோ!!!

    மாலே மணிவண்ணனையும், ஜகதாம்பிகை அம்மையையும், ஸ்ரீவலிதாயநாயகன் அப்பனையும் தரிசனம் கண்டோம்!!! படங்கள் அருமை!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. தேவகுரு பிரகஸ்பதியின் மகன் பரத்வாஜர் (பரத்வாஜ முனிவர்??) என்பதை உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன்...என் மகனின் அஃபிஸியல் பெயர் பரத்வாஜ்! பரத்வாஜ மினிவர் விமான ஸாஸ்திரம் எழுதியவர் என்பதால் அப்பெயரைச் சூட்டினார்கள் எங்கள் புகுந்த வீட்டில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான தரிசனம்.

    தொடரட்டும் மார்கழி சிறப்பு பதிவு.

    பதிலளிநீக்கு
  4. பாடல்களைக் கண்டேன், அருமை. திருவலிதாயம் சென்றதில்லை ஐயா. செல்லவுள்ள கோயில் உலா பட்டியலில் சேர்த்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. இன்றைய பாடல்களும், படங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  6. பல சிறப்பான தகவல்களுடன்....

    ஆலி இலை கண்ணனை தரிசித்தேன்....

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா!
    கார்முகில் வண்ணனையும் திருவலிதாயத்தில் வீற்றிருக்கும்
    எம் பெருமானையும் பிராட்டியையும் அவர் குமாரரையும்
    காலபைரவரையும் கண்ணாரக் கண்டு தரிசித்தேன்.
    திருவலிதாயத் திருத்தல மஹிமைகளையும் அறிந்துகொண்டேன்.

    மிகச் சிறப்பு ஐயா!
    நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. இன்றும் வந்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  9. நேற்றைய தரிசனம் இன்று... இன்றிய தரிசனம்? அதையும் இன்றே முடித்து விடுவோம்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..