நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 18
செவ்வாய்க்கிழமை
உணவுத் திருவிழா 2
இன்று புளிப்புச்சுவை
உணவில் நிகழும்
மாற்றங்களுக்கு புளிப்புச் சுவையே காரணமாகின்றது..
இது அதிகமாயின், தாக உணர்வை அதிகரிக்கும்.
பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற இன்னல்களை உண்டாக்கும். உடல் தளரச் செய்யும்..
(நன்றி விக்கி)
எலுமிச்சை, புளிச்சக் கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது..
எலுமிச்சை சாதம்
தேவையானவை :
சீரகச் சம்பா சோறு 2 Cup
எலுமிச்சம் பழம் 2
மஞ்சள் தூள் 1⁄2 tsp
பச்சை மிளகாய் 2
பெருங்காயம்ஒரு சிட்டிகை
வறுத்த வேர்க்கடலை கையளவு
தாளிக்க :
நல்லெண்ணெய் தேவைக்கு
கடுகு - 1⁄2 tsp
உளுத்தம்பருப்பு - 1 tsp
கடலைப் பருப்பு - 1⁄2 tsp
சீரகம் - 1⁄2 tsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு பிழிந்து விதைகளை நீக்கி விட்டு சிறிது நீர் விட்டு உப்பு, மஞ்சள் சேர்த்துக் கலக்கி வைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெயைக் காய வைத்து, இவற்றுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
பெருங்காயம் மஞ்சள் தூள் உப்பு - போட்டு எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து தாளிப்பில் ஊற்றிக் கொதிக்க விடவும்..
எலுமிச்சையின் சாறு கொதித்ததும் இறக்கி -
எடுத்து வைத்திருக்கும் சோற்றை, மேலும் சிறிது நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைத்து சில நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்..:
புளியோதரை :
புளியோதரை செய்யும் போது சற்றே குழைய வடித்த சாதத்துடன் இறுக்கமான புளிக் காய்ச்சலைக் கலந்து விருப்பமான வேர்க் கடலையையோ முந்திரியையோ வறுத்துப் போட்டு நல்லண்ணெய் தளர விட்டுக் கிளற வேண்டியது..
அவ்வளவே...
ஆனாலும்,
வேறு வேறு பக்குவங்களும் நிலவுகின்றன..
(இங்கே, உணவின் படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை.. காரணம் பிறகு சொல்கின்றேன்.. ஆனாலும் நன்றி..)
உணவுத் திருவிழா எனச் சொல்லி விட்டு அரைத்த மாவைத் தானே!?... - என்று நினைக்க வேண்டாம்..
அரைக்கப்பட்ட மாவு தான்..
சுவையையும் சுவை சார்ந்த உணவையும் தன்மைகளையும் குறிப்பதே இதன் நோக்கம்..
உணவில் புளிப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.. முயற்சிக்கவும்..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)
நமது நலம்
நமது கையில்
சிவாய நம ஓம்
***