நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
புதன் கிழமை
இன்று
இயல்பான இனிதான பாடல் ஒன்று
சின்னஞ்சிறு பெண் போலே
சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே
ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்
(சின்னஞ்சிறு)
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)
மின்னலைப் போல் மேனி
அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள்
எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு
பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக
நர்த்தனம் ஆடிடுவாள்..
(சின்னஞ்சிறு)
-::-
பாடல்
சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர
உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை: T.R. பாப்பா
நன்றி இனையம்
-:-
ஓம் சக்தி ஓம்
**

அருமையான பாடல். அந்த நேரத்தில் சட்சட்டென சில பாடல்கள் சீர்காழியாரைப் பாடவைத்து வெளியாயின. எல்லாப் பாடல்களுமே கேட்டு ரசிக்கத்தக்கவை. மனதில் என்றும் நிறைந்தவை.
பதிலளிநீக்கு