நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை
சஷ்டி நான்காம் நாள்
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்காநதி பால க்ருபாகரனே.. 34
நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே.. 36
கந்தரனுபூதி
பாதி மதிநதி போது மணிசடை
நாதர் அருளிய ... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ... மணவாளா
காதும் ஒருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு .... மருகோனே
காலன் எனையணு காமல் உனதிரு
காலில் வழிபட ... அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு ... சிறைமீளா
ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் ... இளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனில் ... உறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்
ஓம் சிவ சுப்ரமண்யாய
**


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..