நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 28, 2025

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 14
வெள்ளிக்கிழமை


தானா தானா தானா தானா 
தானா தானத் ... தனதானா

ஊனே தானா யோயா நோயா
     லூசா டூசற் ... குடில்பேணா

ஓதா மோதா வாதா காதே
     லோகா சாரத் ... துளம்வேறாய்

நானே நீயாய் நீயே நானாய்
     நானா வேதப் ... பொருளாலும்

நாடா வீடா யீடே றாதே
     நாயேன் மாயக் ... கடவேனோ

வானே காலே தீயே நீரே
     பாரே பாருக் ... குரியோனே

மாயா மானே கோனே மானார்
     வாழ்வே கோழிக் ...
கொடியோனே

தேனே தேனீள் கானா றாய்வீழ்
     தேசார் சாரற் ... கிரியோனே

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...
பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

ஊன் பொருந்திய இவ்வுடலே நான்தான் என்று நினைத்து, 
முடிவில்லாத நோயாளனாய், அழிவுள்ளதும், ஊஞ்சலைப் போல் மாறி மாறி வருகின்றதுமான இத்தேகத்தை விரும்பி,

நூல்களைப் படித்தும் வம்பு  செய்கின்ற சமய வாதச் செயல்களில் ஈடுபடாமலும், உலக ஆசாரங்களில் கட்டுப்படாமல் உள்ளம் வேறுபட்டு

நானே நீயாக நீயே நானாக உன்னிடம் ஒன்றுபட்டு 
பலவகையான வேதப் பொருள் கொண்டு 
உன்னை விரும்பி வீடுபேற்றை
அடையாதவனாக நாயேன் முடியக் கடவேனோ?..

விண், காற்று, தீ, நீர், பூமி எனும் ஐந்து பூதங்களாக விளங்கி,
இவ்வுலகுக்கு உரியவனாகத் திகழ்பவனே..

என்றும் நிலைத்திருக்கின்ற பெரியவனே எமையாளுகின்ற அரசனே
மான் போலும் அழகிய வள்ளிக்கும் 
தேவயானைக்கும் கணவனே
கோழிக் கொடியை உடையவனே..

தேனாக இனிப்பவனே தேனாறு எனும் நீண்ட காட்டாறு பாய்கின்ற
ஒளி நிறைந்த குன்றக்குடி மலையில் அமர்ந்தவனே..
ஈசன் மகனே செவ்வேள் முருகனே அழகனே தலைவனே..

 தேவனே தேவர்களின் பெருமாளே...

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

8 கருத்துகள்:

  1. ஓம் முருகா... ஓம் நமச்சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அருணகிரிநாதரின் இன்றைய திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் நன்றாக உள்ளது. முருகா சரணம். 🙏
    முத்துக் குமரா சரணம். 🙏
    கந்தா சரணம். 🙏
    கார்த்திகேயா சரணம். 🙏. பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  3. திருப்புகழ் பாடலை பாடி விளக்கத்தை படித்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  4. குன்றக்குடியில் அமர்ந்த குமரா உன்பாதம் பணிகின்றோம் காப்பாய் எம்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..