நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 23
வெள்ளிக்கிழமை
ஸ்ரீ பிரஹந்நாயகி
சிவராத்திரி தரிசனம்
தஞ்சை திருப்புகழ்
தந்தன தானன ... தனதான
அஞ்சன வேல்விழி ... மடமாதர்
அங்கவர் மாயையி ... லலைவேனோ
விஞ்சுறு மாவுன ... தடிசேர
விம்பம தாயரு ... ளருளாயோ
நஞ்சமு தாவுணு ... மரனார்தம்
நன்கும ராவுமை ... யருள்பாலா
தஞ்சென வாமடி ... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ... பெருமாளே.
-: அருணகிரிநாதர் :-
பதிவில்
தஞ்சை முருகப்பெருமானின்
திருக்கோலங்கள்
மை பூசிய வேலைப் போல விளங்குகின்ற கண்களை உடைய அழகிய
பெண்களிடத்தில் மயக்கம் கொண்டு அவர் பின்னே அலைவேனோ?
அதனின்று நான்
விடுபட்டு மிகுந்த புகழுடன்
விளங்குகின்ற உனது திருவடிகளைப்
போற்றுவதற்கு -
உனது திருவருளை எனக்கு வழங்கக் கூடாதோ?.
நஞ்சினை அமுதாக உட்கொண்ட சிவபெருமானுடைய
திருமகனே உமாதேவி பெற்றருளிய பாலனே..
நீயே சரணம் - எனக் கொண்ட அடியார்கள் வாழ்வதற்கென
தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே...
முருகா முருகா
முருகா முருகா
ஓம் சிவாய நம ஓம்
**
சிவனும், சிவபாலனும் நம்மைக் காக்கட்டும். ஓம் முருகா... ஓம் நமச்சிவாய...
பதிலளிநீக்குதங்கள் அன்பினுக்கு நன்றி.
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்
பெருவுடையார் தரிசனம் பெற்று மகிழ்ந்தோம். அனைவரையும் அவனருள் காக்கட்டும்.
பதிலளிநீக்குதஞ்சை முருகா உன்பாதம் சரணம்.
தங்கள் அன்பினுக்கு நன்றி.
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி